என்.இளங்கோவன், மயிலாடுதுறை.
"தேர்தல் முடிவுகள் மோடி கன்னத்தில் கொடுக்கப்பட்ட இறுக்கமான அறை' என்று கூறுகிறாரே நிர்மலா சீதாராமன் கணவர் பரக்கலா பிரபாகர்?
தெளிவாக கன்னத்தில் அறையப்பட்டவரே, பஞ்சாப்காரர்களை சூசகமாக தீவிரவாதிகள் என்று திரும்பவும் சொல்லிவிட்டுப் போகிறார். தேர்தல் முடிவுகளால் கன்னத்தில் அறைவிழுந்து என்ன பயன்? திரும்பவும் மோடிதானே பிரதமர்! கூட்டணிக் கட்சிகளுக்கு லாலிபாப்பைக் கொடுத்து, அவர்கள் கவனம் அதிலிருக்கும்போது வேண்டிய திசைகளுக்கு ஆட்சியை இட்டுச்செல்ல பா.ஜ.க. முயற்சிக்கும்.
நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி.
நிதிஷ் ஒரு பிரதமர் மெட்டீரியல் என ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் கூறியிருப்பது பற்றி?
அதற்கென்ன செய்ய, மொத்தமுள்ள மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகள்தானே நிதிஷ் கட்சி ஜெயித்திருக்கிறது. மற்றபடி, தனது அறிக்கைகளால் நிதிஷ் மனதைக் குழப்பி பா.ஜ.க.வை இக்கட்டுக்கு ஆளாக்குவதுதான் நோக்கமென்றால், பேசிவிட்டுப் போகட்டும். பா.ஜ.க. பாடு...… நிதிஷ் பாடு.
எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்
10 ஆண்டுகளுக்குப் பிறகும் காங்கிரஸôல் 100 ரன்களைத் தொடமுடியவில்லை.. கடந்த 3 லோக்சபா தேர்தல்களில், அவர்களின் மொத்த இடங்கள்.. இந்த தேர்தலில் மட்டும், நாங்கள் வென்ற தொகுதிகளைவிட குறைவாக உள்ளது என்ற மோடியின் பேச்சு..?
மூன்று தேர்தல்களிலும் சேர்த்து, இந்த முறை பா.ஜ.க. வென்ற 240 இடங்களைக்கூட ஜெயிக்காத காங்கிரûஸ ஏன் பா.ஜ.க. பொருட்படுத்தவேண்டும்? இந்தத் தேர்தல் முழுக்க பிரச்சாரத்தில் மோடி, காங்கிரஸ்... காங்கிரஸ் என ஏன் கூக்குரலிடவேண்டும்? 100 இடங்கள்கூட பிடிக்காத காங்கிரஸின் முன்முயற்சியில்தான் பா.ஜ.க. தனி மெஜாரிட்டி பிடிக்கமுடியாமல் போனது. இந்த ஐந்தாண்டுகளுக்கும் மோடியின் நெஞ்சில் நீங்காத வலியாகத் திகழும் காங்கிரஸ்.
வாசுதேவன், பெங்களூரு
பரீட்சை ஹாலில் எழுதும்பொழுது நினைவுக்கு வராத விடைகள், முடிந்து வெளியே வந்ததும் வரிசைகட்டி வருகின்றதே?
பரீட்சை ஹாலில் டென்ஷனாக இருப்பீர்கள்… விடை நினைவுக்கு வராது. வெளியில் வந்ததும் ரிலாக்ஸôக இருப்பீர்கள்… விடை நினைவுக்கு வரும். பரீட்சை ஹாலிலே ரிலாக்ஸôக இருக்குமளவுக்கு தெளிவாகப் படித்துவிட்டு வந்தால் விடை மறக்காது.
எம். சண்முகம், கொங்கணபுரம்
மீண்டும் மோடி?
ஆமாம், மீண்டும் மோடிதான். முந்தைய இரு முறையும் தனி நாயகன். இந்த முறை துணை கதாநாயகர்கள் சிலருக்கும் திரையைப் பகிர்ந்தாகவேண்டும். ஆக்சன், காமெடி, சென்டிமெண்ட் அனைத்தையும் அமித்ஷாவும் மோடியுமே பார்த்துக்கொண்டிருந்தது மாறி, துணை கதாநாயகர்கள் ஆசைப்பட்டால் அவர்களுக்கும் பாட்டு, வசனமெல்லாம் இடம்பெறுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். படம் ஹிட்டானால் துணை கதாநாயகர்களுக்கும் பெயர் கிடைக்கும். ப்ளாப்பானால், மொத்த அவப்பெயரும் மோடியின் தலையில்.
மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்
சீமான் சுயபரிசோதனை செய்துகொள்வாரா?
ஓட்டு சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. மாநில கட்சி அந்தஸ்து கிடைத்திருக்கிறது. பிறகெதற்கு சுயபரிசோதனை செய்துகொள்ளவேண்டும்? கூட்டணி வைத்து தேர்தலை சந்திப்பதைக் குறித்து நீங்கள் கேள்வி கேட்டிருந்தால், அது அவரது கட்சித் தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்குமான பிரச்சனை. தேவையெனில், அவரை அவர்கள் வலியுறுத்துவார்கள். மேடையில் அடித்துவிடப்படும் சீமானின் பேச்சு குறித்து சுயபரிசோதனை செய்துகொள்வாரா என்று கேட்டீர்களானால், அந்தப் பேச்சுதான் அவரிடம் இளைஞர்களை ஈர்த்துவருகிறது. அந்தப் பேச்சுதான், பலரையும் அவரிடமிருந்து விலக்கியும் வைக்கிறது. அதில் மாற்றம் வருமா என்பது சந்தேகம்தான்!
சி. அமலா, விழுப்புரம்
நீட் தேர்வில் கருணை மதிப்பெண் அளித்ததை எதிர்த்து மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனரே?
என்.சி.ஆர்.டி. பாடப்புத்தகங்கள் மாற்றம், சில தேர்வு மையங்களில் தேர்வு நேரத்துக்கு முன்பே விடைத்தாள்கள் வாங்கப்பட்டதற்காக கருணை மதிப்பெண் என தேசிய தேர்வு முகமை விளக்கமளித்துள்ளது. ஆனால், காசு கொடுத்து மருத்துவக் கல்லூரியில் சேர்பவர்கள் நீட் தேர்வில் இயற்பியல், உயிரியல், வேதியியலில் 0 மதிப்பெண் பெற்றாலும் அவர்களுக்கு இடம் உண்டு என்றபோதே நீதி செத்துவிட்டது. காசுக்கு தனி நீதி என்ற பிறகு அவர்களிடம் வாதிடுவதை விட்டு, இந்தியாவின் ஒட்டுமொத்த மாணவர்களும் ஒன்றுதிரண்டு எதிர்ப்புக் குரல் கொடுக்கவேண்டும்.