மாவலி பதில்கள்

ss

பி.மணி, வெள்ளக்கோவில்

உலக பட்டினி நாடுகளின் பட்டியலில் அண்டை நாடுகளை விட இந்தியா மோசமாக இருப்பதாக புள்ளிவிபரம் கூறுகிறதே?

மோடி அரசு இந்தப் புள்ளிவிவரம் பொய்யானவை என்று புறக்கணிக்கிறது. சரி, உண்மையான புள்ளிவிவரம் என்ன என்று கேட்டால் "அது நம்மிடம் இல்லை' என்கிறது. "கஞ்சி குடிப்பதற்கிலார் அதன் காரணங்கள் இவையென அறியவுமிலார்' என்கிற பாரதியின் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன.

ff

நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி

அரசு பள்ளிகளில் வார இறுதியில் சினிமா காட்டப்படுவது குறித்து?

கற்றலைவிட கேட்பது சிறந்தது. கேட்பதை விட காண்பது சிறந்தது. பாடப் புத்தகத்தில் சொல்லிக் கொடுக்கப்பட்ட வீரபாண்டிய கட்ட பொம்மன், கப்பலோட்டிய தமிழர், ராஜராஜ சோழன், மதுரை வீரன், கண்ணகி, உமர் முக்தார் ஆகியோரைப் பற்றி, சினிமாவில் இடம்பெற்ற காட்சிகள் மக்கள் மனத்தில் தெளிவாகப் பதிந் துள்ளது. வரலாறு மட்டும

பி.மணி, வெள்ளக்கோவில்

உலக பட்டினி நாடுகளின் பட்டியலில் அண்டை நாடுகளை விட இந்தியா மோசமாக இருப்பதாக புள்ளிவிபரம் கூறுகிறதே?

மோடி அரசு இந்தப் புள்ளிவிவரம் பொய்யானவை என்று புறக்கணிக்கிறது. சரி, உண்மையான புள்ளிவிவரம் என்ன என்று கேட்டால் "அது நம்மிடம் இல்லை' என்கிறது. "கஞ்சி குடிப்பதற்கிலார் அதன் காரணங்கள் இவையென அறியவுமிலார்' என்கிற பாரதியின் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன.

ff

நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி

அரசு பள்ளிகளில் வார இறுதியில் சினிமா காட்டப்படுவது குறித்து?

கற்றலைவிட கேட்பது சிறந்தது. கேட்பதை விட காண்பது சிறந்தது. பாடப் புத்தகத்தில் சொல்லிக் கொடுக்கப்பட்ட வீரபாண்டிய கட்ட பொம்மன், கப்பலோட்டிய தமிழர், ராஜராஜ சோழன், மதுரை வீரன், கண்ணகி, உமர் முக்தார் ஆகியோரைப் பற்றி, சினிமாவில் இடம்பெற்ற காட்சிகள் மக்கள் மனத்தில் தெளிவாகப் பதிந் துள்ளது. வரலாறு மட்டுமின்றி, வாழ்க்கையையும் அதன் சவால்களையும் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் தன்மை நல்ல திரைப்படங்களுக்கு உண்டு. குழந்தைகளுக்காகவே தயாரிக்கப்பட்ட படங்களைத் திரையரங்குகளில் சிறப்புக் காட்சி களாக வெளியிட்டு, அந்த ஊரில் உள்ள பல பள்ளி களின் மாணவர்களைக் குறைந்த கட்டணத்தில் அழைத்து வந்து பார்க்கச் செய்த காலம் உண்டு. அது அவர்களுக்கு காணொலிப் பாடமாக அமைந்ததுடன், மகிழ்ச்சியான அனுபவமாகவும் அமைந்தது. "அதிசய மிருகங்களும் அற்புதப் பறவைகளும்' என்ற மொழிமாற்ற ஆவணத் திரைப் படத்துக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டு, குடும்பத்தா ருடன் குழந்தைகள் சென்று பார்க்க வகை செய்யப் பட்டது. அன்றைக்கு ஒரு ரூபாய் என்றிருந்த டிக்கெட், இந்தப் படத்திற்கு 50 பைசதாதான். இப்படிப் பல படங்கள் அன்றைய மாணவர்கள் பார்க்கும் வாய்ப்பு அமைந்தது. காலப்போக்கில் தியேட்டர்களும் குறைந்துவிட்டன. அதிலே சிறுவர்களுக்கான படங்களும் குறைந்துவிட்டன. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காட்சிவழிப் பாடம் தடைப்பட்டது. தனியார் அமைப்புகள் சில இத்த கைய முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு சிறுவர்களுக்கான திரைப்பட நிகழ்வுகளை நடத்துவது வழக்கம். தமிழ் ஸ்டூடியோ அமைப்பை உருவாக்கி நடத்திவரும் அருண் மிகச் சிறப்பான முறையில் சிறுவர் திரைப்பட விழாக்களை முன் னெடுத்துள்ளார். அவரது நிகழ்வில் திரையிடப் பட்ட படங்களில் ஒன்று ஈட்ண்ப்க்ழ்ங்ய் ர்ச் ஐங்ஹஸ்ங்ய். காலத்தின் தேவையையும், அதற்கேற்ற கட்டமைப் பையும் உருவாக்குவதில் அக்கறை செலுத்தும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியும் துறையின் அதிகாரிகளும் மேற்கொண்ட முயற்சியினால் அதே திரைப்படம் அரசுப் பள்ளிகளில் திரையிடப்பட்டு, அது குறித்து விளக்க உரையை வல்லுநர்கள் நிகழ்த்தியுள்ளனர். தொடர்ந்து தங்க் க்ஷஹப்ப்ர்ர்ய் என்ற படமும் திரையிடப் படுகிறது. தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வி, உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கை மற்ற மாநிலங்களைவிட அதிகம். அவர்களின் திறமை மேம்படுத்தும் வகையில் புதிய புதிய பயிற்சி உத்திகள் மேற் கொள்ளப்பட வேண்டும். வார இறுதியில் படங்கள் திரையிடல் என்பது நல்ல முயற்சி. இதே முயற்சி மற்ற செயல்களிலும் தொடர வேண்டும்.

சி. கார்த்திகேயன், சாத்தூர்

"இளங்கலை பட்டம் இரண்டாம் ஆண்டிலும் தமிழ் கட்டாயம்' என தமிழக உயர்கல்வித்துறை உத்தரவு?

தமிழ் படிக்காமலே தமிழ்நாட்டில் பட்டம் பெற்றுவிட முடியும் என்கிற அவல நிலை ஒரு காலத்தில் இருந்தது. அதனால்தான் சமச்சீர் பாடத்திட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை தமிழ்ப் பாடம் கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், ஜெ. ஆட்சியில் அது முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. பள்ளிகளில் தமிழ் புறக்கணிக்கப்பட்டது போலவே, கல்லூரிகளில் பி.ஏ., பி.எஸ்.ஸி, பி.காம் உள்ளிட்ட இளங்கலைப் படிப்புகளிலும் தமிழ்ப் பாடம் கைவிடப்படுவது தொடர்ந்தது. அந்த நிலை மாறவும், பட்டப் படிப்பிலும் தமிழ் தொடரும் வகையிலும், இரண்டாம் ஆண்டிலும் தமிழ் கட்டாயம் என உயர் கல்வித்துறை உத்தர விட்டுள்ளது. மிக முக்கியமான இந்த உத்தரவு முழுமையாக செயல்படுத்தப்பட வேண்டும்.

தே.மாதவராஜ், -கோயமுத்தூர்

சமீபகாலமாக மருதுபாண்டியர், வீரபாண்டிய கட்டபொம்மன், ராஜராஜசோழன் போன்ற மன்னர்களை அரசியல்வாதிகள் கையில் எடுத்துக்கொண்டுள்ளது பற்றி?

ஜனநாயக அரசியல் செய்து அதிகாரத்தைப் பெற நினைப்போருக்கு முடியாட்சிக் கால மன்னர்களின் வரலாறும் அதிலும் குறிப்பாக அவர்களைத் தங்கள் சாதி என கொண்டாடு வோரின் வாக்குகளும் அவசியமாக இருக்கின்றன. அதனால் ஒவ்வொரு மன்னருக்கும் ஒவ்வொரு சமுதாய அமைப்பும் சாதிச்சான்றிதழ் அளிக்கின் றன. அதை ஓட்டுகளாக மாற்றுவதற்காக அரசியல் வாதிகளும் படாதபாடுபடுகிறார்கள்.

nkn221022
இதையும் படியுங்கள்
Subscribe