எம். நிர்மலா இராமதாஸ், வானூர்
எதிர்க்கட்சி செயல்பாடுகளில் அ.தி.மு.க. பின்தங்கி இருப்பது போன்ற மாயத்தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது’என்று ஓ.பி.எஸ். கூறியிருக்கிறாரே?
மாயத் தோற்றம் காட்டும் பா.ஜ.க.வை தோளிலிருந்து இறக்கிவிட்டுவிட்டு, நியாயமான களச் செயல்பாடுகளால் தன் வேகத்தை காட்ட வேண்டியது அ.தி.மு.க.தான். இல்லை யென்றால், மாயமே நியாயமாகிவிடும்.
தே.மாதவராஜ், கோயமுத்தூர் 45
உத்தரப்பிரதேசத்தில் கலவரம் செய்தவர்கள் வீட்டை புல்டோசரை கொண்டு இடிக்கிறார்களே?
பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் அரசுக்கு எதிராக உரிமைக் குரல் கொடுப்பவர்களின் வீடுகளையும் அவர்களுக்கு சொந்தமான கட்டடங்களையும் புல்டோசரை வைத்து இடிக்கும் கொடூரக் கலாச்சாரம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இதில், காவி உடுத்திய முதல்வர் யோகி ஆதித்யானந்தா ஆளும் உத்தரபிரதேசம் முதலிடம் பெற்றுள்ளது. நபிகள் நாயகம் பற்றி பா.ஜ.கவின் நூபுர் சர்மா பேசிய கருத்துகளுக்கு எதிரான போராட்டத்தை தூண்டி விட்டதாகக் கூறி, முஸ்லிம்களின் வீடுகளை, விதிகளை மீறி கட்டிய கட்டடங்கள் என்று கூறி புல்டோசரை விட்டு இடித்துத் தள்ளியுள்ளது யோகியின் பா.ஜ.க. அரசு. உத்தரபிரதேசத்தில் அட்டகாசம் செய்யும் புல்டோசர்கள், இந்திய எல்லைக்குட்பட்ட பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி அமைத்திருக்கும் திடீர் கிராமங்களை இடித்துத் தள்ளுமா எனக் கேட்கிறார்கள் உண்மையான தேசபக்தர்கள். தேசபக்தி என்ற பெயரால் அரசியல் வியாபாரம் செய்பவர்களிடம் அதற்கு பதில் இல்லை.
பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர்-தேனி
"மொழிக்கான உரிமைகளைப் பெறுவதில் தமிழர்களைப்போல் தெலுங்கர்கள் அனைவரும் தங்கள் மொழிக்காக ஒன்றுபட வேண்டும்" என உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி. ரமணா கூறி உள்ளது குறித்து?
"கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் உன் உதிரத்தில் உதித்து வந்தது ஆயினும், ஆரியம் போல் உலக வழக்கு ஒழிந்த அழிந்து சிதையா உன் சீரிளமைத் திறம் வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே' என்று மனோன்மணியம் காப்பியத்தில் பாடினார் பேராசிரியர் சுந்தரனார். தமிழ் மொழியிலிருந்து கிளைத்த மொழிதான் தெலுங்கு. அதன் மீது சமஸ்கிருதம் ஏற்படுத்திய தாக்கத்தால், ஏராளமான வடசொற்கள் கலந்துவிட்டன. தாய் மொழி மீது தெலுங்கு மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பற்று இருந்தாலும், தங்கள் மொழி மீது ஏவப்படும் ஆதிக்கத்தை எதிர்ப்பதில் மற்ற மொழியின ருக்கு முன்னோடியானவர்கள் தமிழர்கள். தொல்காப்பியம், திருக்குறள், சங்க இலக்கியங்கள், சைவ-வைணவத் திருமுறைகள், வள்ளலாரின் திருவருட்பா உள்ளிட்ட அனைத்துமே வடமொழியிலிருந்து தமிழைக் காத்த படைப்புகள்தான். சுதந்திர இந்தியாவில் சமஸ்கிருதத்துடன் இந்தியிடமிருந்தும் தமிழைக் காக்க வேண்டியிருந்தது. இந்தியாவில் உள்ள மற்ற மொழிக்காரர்கள் இதைப் புரிந்துகொள் வதற்கு அரை நூற்றாண்டுக்கு முன்பே தமிழர்கள் புரிந்துகொண்டார்கள். போராடி னார்கள். தாய்மொழியைக் காத்தார்கள். அப்போது, மற்ற மாநிலத்தவர்கள் தமிழர் களைத் தேசவிரோதிகள் போல சித்தரித்ததும் உண்டு. ஆனால், அரை நூற்றாண்டு கழித்து இந்தியாவில் உள்ள பல மாநிலத்தவர்களும் இந்தி -சமஸ்கிருத ஆதிக்கத்திற்கு எதிராகக் குரல் கொடுக்கத் தொடங்கிவிட்டனர். இந்தி பெல்ட் எனப் படும் மாநிலங் களிலேயே அந்தந்த வட் டார மொழி யினர் தங்கள் தாய்மொழியைக் காப்பதற்கு ஆயத்தமாகி விட்டனர். இவர்கள் அனைவருக்கும் முன்னோடி யானவர்கள் தமிழர்கள். அதைத்தான் தெலுங்கர்களிடம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நினைவுபடுத்தி யிருக்கிறார்.
இரா.அமிர்தவர்ஷினி, புதுச்சேரி
ரிஷிகளாலும் முனிவர்களாலும் சனாதன தர்மத்தின் ஒளியால்தான் இந்தியா உருவாக்கப்பட்டது” என்ற ஆளுநர் ஆர்.என் ரவியின் கருத்து பற்றி?
இதற்கு சரியான பதில் கருத்து சொல்லியிருப்பவர் தி.மு.க எம்.பி.யான டி.ஆர்.பாலு. ரிஷிகள்-முனிவர்கள் பற்றிப் பேசிய ஆர்.என்.ரவி, "சோமநாதர் கோவில் சொத்துகளை அழித்து கந்தகார், பெஷாவர் நகரங்களை கஜினி முகமது உருவாக்கினார். அந்த நகரங்கள் அமெரிக்க குண்டுகளால் தகர்க்கப்பட்டதிலிருந்து சனாதன தர்மத்தின் வலிமையை அறியலாம்'' என்றார். அதற்குப் பதிலளித்த டி.ஆர்.பாலு, “"மனிதனை நான்கு வர்ணமாகப் பிரித்து, அதில் உயர்வு தாழ்வு கற்பித்து, சலுகையிலும் தண்டனையிலும்கூட சாதி வேற்றுமையை நிலைநிறுத்திய சனா தன காலத்தின் மேல் பிரிட் டிஷ் ஆட்சியின் சட்டக் குண்டுகள் வீசப்பட்டு 200 ஆண்டுகள் ஆகி விட்டன''’என்று ஒரே போடா கப் போட்டு விட்டார்.
பி.மணி, குப்பம் -ஆந்திரா
நாடு சுதந்திரம் அடைந்ததில் தமிழகம் ஆற்றிய பங்கு எவ்வளவு?
பிரிட்டிஷாருக்கு எதிரான முதல் முழக் கமும் இந்த மண்ணிலிருந்துதான் கேட்டது. பிரிட்டிஷார் வழங்கும் சுதந்திரம் எவர் கையில் போய் சிக்கும் என்ற எச்சரிக்கை குரலும் இந்த மண்ணிலிருந்துதான் ஒலித்தது. இவை இரண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் நடந்த உண்மை வரலாற்றை மறைப்பதே அன்றும் இன்றும் ஆட்சியில் இருக்கும் தேசபக்த வேடதாரிகளின் வேலை யாக இருக்கிறது.
நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி
மதுரை ஆதீனம் எல்லை மீறி பேசி வருகிறாரே?
சாமியார்கள் எல்லாம் துறந்தவர்கள். அதில் சிலர் வெட்கம், மானம், சூடு, சொரணை போன்றவற்றையும் சேர்த்து.