எஸ்.எஸ். காலனி காவல் நிலையம். ஜூலை 10, இரவு 11 மணி. தொலைபேசி ஒலிக்கிறது. எடுத்துப் பேசிய இன்ஸ்பெக்டர் பரபரப்பாகிறார். காவலர்கள் சகிதம் பைபாஸ் ரோட்டிலுள்ள மசாஜ் ஸ்பாவுக்கு விரைகிறார். அதிரடியாக உள்ளே நுழையும் காவல்துறை, உள்ளே அரைகுறை உடையில் 4 பெண்கள், இரண்டு ஆண்களை கையும்காமமுமாகப் பிடிக்கிறது; பிடிபட்ட ஆண்களெல்லாம் வயதான பெருசுகள்.

"ஐயா நாங்க உடம்புவலின்னு மசாஜுக்கு வந்தோம், எங்களை விட்ருங்க...'’’என பெரிய இடத்து சிபாரிசு போன்கால்களைப் போட்டு, இன்ஸ்பெக்டரிடம் கொடுத்து தப்பித்தோம்… பிழைத்தோமென காரில் பறக்கிறார்கள். அடுத்ததாக வானமாமலை நகர் பங்களாவுக்கு போலீஸ் விரைகிறது. அங்கேயும் போலீஸைக் கண்டு கிளுகிளு அழகிகளும் கஸ்டமரும் அதிர்ச்சியாகும் காட்சிகள்தான். மசாஜ் எனும் பேரில் மஜா தொழில் செய்ததாக ஜீவா, பிரியதர்ஷனி, ரங்கராஜ், அருண்குமார், அரவிந்த், சுபா என ஆறுபேரை கைது செய்கிறார்கள்.

madurai-massage

பொறியில் இரை விழுவது தெரிந்ததும் உஷாரான போலீஸ், தூக்கத்தையும் பொருட்படுத்தாமல் அடுத்த ரெய்டுக்குத் தயாராகிறது. எஸ்.எஸ்.காலனி ஆயுர் கேர் சென்டருக்குள் போலீஸ் நுழைய, ஆயுர்வேதத்தின் பெயரில் ஆபாசவேதம் போதித்துக்கொண்டிருந்த கனிமொழி, ஆனந்தி, சகிதாபேகம், சசிகுமார் ஆகியோரை கைதுசெய்ததுடன் ஸ்வைப் மெஷின், 46 செல்போன்கள், 40 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்கிறது.

Advertisment

என்னதான் நடக்கிறது சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில். மசாஜ் சென்டர் கலாச்சாரம் பெருகிவருவது ஏன் என போலீசாரிடமே கேட்டோம்...

""கடந்த ஐந்துவருடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட மசாஜ் சென்டர்கள் வந்திருக்கின்றன. குறிப்பாக ஆயுர்வேத கிளினிக் என்று போர்டு மாட்டிவிட்டு, சந்தேகம் வராதமாதிரி விபச்சார தொழில் செய்கின்றனர். மசாஜ் ஸ்பா, பியூட்டி மசாஜ், கேரள மசாஜ் என வாடிக்கையாளர்களை ஈர்க்க விதவிதமாக பேர்வைத்துக்கொள்கிறார்கள். தற்போதைய ரெய்டில் 11 பேரைக் கைது செய்துள்ளோம். இவர்களில் பாதிப் பேர் பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்திலிருந்து டூரிஸ்ட் விசாவில் வந்தவர்கள். இவர்களுக்கு நாளொன்றுக்கு நான்காயிரத்திலிருந்து ஏழாயிரம் வரை சம்பளம். பார்ட்டிகள் மனம் குளிர்ந்து தனிப்பட்ட முறையில் கொடுக்கும் டிப்ஸ்களும் இவர்களுக்குத்தான்.

madurai-massage

Advertisment

சிலசமயம் மசாஜுக்கு மட்டும் வரும் வாடிக்கையாளர்களின் பாலியல் ஆசையைத் தூண்டி, சம்மதிக்கும் நபர்களிடமிருந்து செக்ஸுக்கு தனி கட்டணம் பிடுங்கிக்கொள்வார்கள். இதுபோன்ற சென்டர்களைத் தொடர்பு கொள்வதற்கென்றே தனி செயலிகள் உள்ளன. மதுரையில் அண்ணாநகர், கே.கே.நகர், திருநகர், லேக் ஏரியா, விளாங்குடி, சாந்தி நகர் போன்ற நகர்களிலும் இந்த வேலை நடப்பதாக சந்தேகிக்கிறோம். விரைவில் ரெய்டு நடக்கும்''’என்றார் இன்ஸ்பெக்டர் சங்கர்கண்ணன்.

ரெய்டுநடந்த வானமாமலை நகரைச் சேர்ந்த முருகன் நம்மிடம், “""நான்கூட ஆயுர்வேத க்ளினிக்னுதான் நினைச்சுருந்தேன். வயசுப்பசங்களைவிட, பணக்காரப் பெருசுக காரில் போவதும்வருவதுமா இருந்ததால சந்தேகம் வரலை. வேலைசெய்யும் பெண்கள் எல்லாம் பர்மா, சீனாக்காரங்க போல தெரிஞ்சுச்சு. விவரம்தெரிஞ்ச யாரோதான் போலீஸுக்கு போன் போட்டிருக்கணும்''’என்றார்.

சரி, அண்ணாநகர் மசாஜ் சென்டர்களில் ஒன்றுக்கு நாமே வாடிக்கையாளர் வேடத்தில் போய் விசாரிக்கலாமென களமிறங்கினால், அனைத்து சென்டர்களும் பூட்டப்பட்டுக் கிடந்தன. அடுத்த ரெய்டு நம்ம இடத்துல இருக்கலாம் என்கிற சந்தேகத்தில் பலர் அறிவிக்காத விடுமுறையை செயல்படுத்தியிருந்தனர். ம்... ம்...… என்னத்தச் சொல்ல,… ஒரு தாய்லாந்துக் கிளியிடம் மசாஜ் செய்துகொள்ள நமக்கு அதிர்ஷ்டம் இல்லை.

-அண்ணல்