மலைக்கோட்டை மாநகரான திருச்சி, கிளுகிளு கோட்டையாக மாறி வருகிறது. காரணம், இங்கு அசுரகதியில் முளைத்துவரும் பலான மசாஜ் கிளப்புகள்தான். போதாக்குறைக்கு மதுவில் கிடைக்கிற போதை போதாதென்று கஞ்சா, அபின், ஹெராயின் போன்ற போதைப் பொருட்களும் களமிறங்கி திருச்சியைத் தள்ளாடவைத்து வருகின்றன.
இதுகுறித்த ஏடாகூடச் செய்திகள் நம் காதுக்கு வந்தபடியே இருக்க, என்னதான் அங்கே நடக்கிறது என்று களமிறங்கினோம்.
நாம், நமக்குத் தெரிந்த ஏரியா நண்பர் ஒருவரிடம் இது குறித்துக் கேட்டபோது... "உண்மைதாங்க. திருச்சி மாநகரில் மட்டும், சத்திரம் பேருந்து நிலையம், தில்லைநகர், கருமண்டபம், கே.கே.நகர், சாஸ்திரி ரோடு, உறையூர், மத்திய பேருந்துநிலையம், ஸ்ரீரங்கம்னு அனைத்து பகுதிகளிலும் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மசாஜ் நிலையங்கள் இப்ப செயல்படுது. பல மசாஜ் நிலையங்கள் அனுமதி வாங்கிக் கொண்டு செயல்பட்டாலும், கிளுகிளு சமாச்சாரத்தையும் தந்து கஸ்டமர்களை கிறங்கவைத்து கல்லா கட்டிக்கிட்டிருக்காங்க. சிலர் அனுமதியாவது வெங்காயமாவதுன்னு எதுவுமே இல்லாமல், உடல் வியாபாரம் செய்துக்கிட்டு இருக்காங்க.
இப்படிப்பட்ட மசாஜ் நிலையங்கள், தங்கள் தொடர்பு எண்களை தனியார் டெலிகாம் சேவை வழங்கும் லொகண்டோ, ஜஸ்ட் டயல் போன்ற செயலி மூலம் பதிவு செய்துக்கறாங்க. அந்த செயலியில் உள்ளே நுழைந்து, நாம் மசாஜ் சென்டர்களைத் தேடினாலே போதும், அதுபற்றிய செய்திகள் தானாகவே நம்முடைய எண்ணை பதிவு செய்துக்கிட்டு, அந்தந்த மாவட்டத்தில் உள்ள மசாஜ் சென்டர்களுக்கும் அனுப்பிவிடும். நாம் மசாஜ் சென்டர்களை தேடி முடிப்பதற்குள் அந்தந்த மசாஜ் சென்டர்களிடம் இருந்து நமக்கு அழைப்பு வரும். அதன் மூலமாகத்தான் பலரும் அவர்களுக்கு கஸ்டமர் ஆகறாங்க''’என்றவர், ஒரு செயலி எண்ணை நம் போனில் தரவிறக்கம் செய்து டச் பண்ணிக் காட்டினார்.
அடுத்த ஒருமணி நேரத்துக்குள் பல மசாஜ் சென்டர்களில் இருந்து நம்மை தொடர்பு கொண்டார்கள். "சார் இந்த ஏரியாவில் எங்கள் மசாஜ் சென்டர் இருக்கிறது' என்று அழைத்தார் கள். லொகொண்டா டெலிகாம் சேவையில் பதிவு செய்திருந்த ஒரு மசாஜ் சென்டரில் இருந்து பேசிய ஒரு பெண்ணின் குரல், கொக்கி போட்டுக் கிறக்கக் குரலால் அழைத்தது.
இந்த விவகாரம் குறித்து நன்கறிந்த அந்த பிரமுகர்... "இந்த மசாஜ் சென்டர்களில் பவுடர் மசாஜ், ஆயில் மசாஜ், க்ரீம் மசாஜ் என்று பல வெரைட்டி இருக்கு. அதோட ஒருவர் மசாஜ், இருவர் சேர்ந்து செய்யும் மசாஜ், அரை நிர்வாண மசாஜ், முழு நிர்வாண மசாஜ்னு ஆளை ஒருமாதிரி பண்ணிடுவாங்க. ஒவ்வொரு மசாஜிற்கும் ஒவ்வொரு ரேட். ஆரம்பமே 2 ஆயிரம்தான். அதற்கு மேல் 10 ஆயிரம் வரை இருக்கு. ஒரு மசாஜ் நிலையத்துக்கு போனதும், டெபாசிட்டா 1000 ரூபாயைக் கட்டச் சொல் வாங்க. அதைக் கட்டினவுடன் பொண்ணுங் களைக் காட்டுவாங்க. அவங்கள்ல ஒருத்தரை செலக்ட் பண்ணினோம்னா, அந்தப் பொண்ணுடன் நம்மைத் தனியறையில் தள்ளிவிடுவாங்க. நாம் அணிந்துகொள்ள ஒரு பிளாஸ்டிக் அண்டர் வேரைக் கொடுப்பாங்க. அதை அணிந்து கொண்டு அவர்கள் விரித்திருக்கும் பிளாஸ் டிக் விரிப்பில் படுத்துக்க வேண்டியதுதாம். அதுக்கப்புறம்... மசாஜ் ஆரம்பிக்கும். அதிலேயே சூடேத்திடுவாங்க. இந்த நேரத்தில், ஒவ்வொரு விசயத்துக்கும் இவ்வளவுன்னு ரேட் பேசி, அந்த பொண்ணுக அடுத்த கட்டத்துக்குப் போகும்''’என்று ஜொள் வடிய விவரித்தார்.
மசாஜ் சென்டர் ஊழியர் ஒருவரிடம் விசா ரித்தபோது, "ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 30 பேர் வருவார்கள். அதில் ஒருவருக்கு அதிக பட்சமாக 1 மணி நேரம் உள்ளே இருக்க அனுமதி. ஒருசில மசாஜ் சென்டர்களில் எல்லாத்துக்கும் அனுமதியுண்டு. உடல்ரீதியா சேரணும்னா அதுக்கு கூடுதல் ரேட். அதேபோல் ஸ்பெஷல் கஸ்டமர்கள், நன்கு அறிமுகமான அதிகாரிகள், காவல்துறையினர், புரோக்கர்கள் இவங்கள மாதிரி ஆளுங்களுக்கு எந்தத் தடையும் எப்போதும் இல்லை. அவங்க என்ன வேணும்னாலும் செய்யலாம்''’என்றவர்...
ஒரு மசாஜ் சென்டரில் பணியாற்றும் பெண்கள், அடிக்கடி வேறு வேறு மசாஜ் நிலையங்களுக்கு மாறிக்கிட்டே இருப்பாங்க. போலீசாரின் தொல்லை இல்லாததால் திருச்சியில் நிறைய மசாஜ் நிலையங்கள் இருக்கு. இப்ப திருச்சியில் முதலிடம் வகிக்கும் ஸ்ரீ திவ்யா ஆயுர்வேதிக் ஸ்பாதான் பேமஸ். அதற்கு எந்தவித அனுமதியும் இல்லை. அங்கேயும் காவல்நிலையத்திற்கு சென்று சேரவேண்டிய மாமூல், சரியாக போயிடுது. அதனால் போலீ ஸின் ஆசிர்வாதம் அதுக்கு இருக்கு. மாமூல் தராமல் யாரும் ஏமாத்த முடியாது. எப்போதும் அவங்க கண்காணிப்பு வளையத்திற்குள் இருக்கும் இந்த மசாஜ் சென்டர்களில் சில போலீஸ் அதிகாரிகளும் பார்ட்னரா இருக்காங்களாம்''’என்றார் கிசுகிசுப்பாக.
மன்மதப் பிடியில் இருந்து திருச்சியை யார் காப்பாற்றுவது?