திருவண்ணாமலை மாவட்டம் திருவத்திபுரம் நகராட்சியின் நகரமன்ற தலைவராக தி.மு.க.வை சேர்ந்த மோகனவேலும், துணைத்தலைவராக குல்சாரும் இருந்தனர். நகர்மன்ற நிதியில் ஊழல் செய்வதில், கமிஷன் பெறுவது போன்றவற்றில் சேர்மனுக்கும்- வைஸ் சேர்மனுக்கும் இடையே போட்டாபோட்டி. வைஸ் சேர்மனுக்கு தரப்பட்ட நெருக்கடியால் தனது உடல்நிலையை காரணம்காட்டி குல்சார் தனது பதவியை கடந்த ஏப்ரல் மாதம் ராஜினாமா செய்துவிட்டார்.
காலியாக இருந்த வைஸ் சேர்மன் பதவிக்கு கடந்த வாரம் தேர்தல் அறிவிக்கப்பட்டது. 27 கவுன்சிலர்களைக் கொண்ட நகராட்சியில் தி.மு.க.விடம் 19 கவுன்சிலர்களும், அ.தி.மு.க. 3, பா.ம.க. 2, காங்கிரஸ் 1, சுயேட்சைகள் 2 என்ற கணக்கில் உள்ளனர். ஆளும்கட்சி தி.மு.க. வேட்பாளர் சுலபமாக வெற்றிபெறுவார் என்பதால் தி.மு.க. தலைமை 4-வது வார்டு கவுன்சிலர் கல்பனாவை அறிவித்தது.
தலைமையே அறிவித்தபின் அவருக்கு எதிராக யாரும் போட்டியிடமாட்டார்கள் என எதிர்பார்த்த நிலை யில் தி.மு.க.வை சேர்ந்த 7-வது வார்டு கவுன்சிலர் பேபிராணி மனு செய்தார். தேர்தல் முடிவில் தி.மு.க. வின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் கல்பனா 8 வாக்குகளை மட்டுமே வாங்க, போட்டி வேட் பாளர் பேபிராணி 19 வாக்குகள் வாங்கி வெற்றி பெற்று வைஸ் சேர்மனாகி யுள்ளார். இது திரு வண்ணாமலை வடக்கு மாவட்ட தி.மு.க.வில் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
இதுகுறித்து கவுன் சிலர்கள் சிலரிடம் பேசிய போது, "வைஸ்சேர்மன் தேர்தல் மட்டுமல்ல சேர் மன் தேர்தலின்போதும் இப்படித்தான் நடந்தது. தி.மு.க. தலைமை, நகரமன்ற தலைவர் வேட்பாளராக வழக்கறிஞர் விஸ்வ நாதனை அறிவித்தது. அவரை எதிர்த்து தி.மு.க. ந.செ.வாக இருந்த மோகனவேல் மனுதாக்கல் செய்து வெற்றிபெற்று சேர்மனானார். இப்போது வைஸ் சேர்மன் தேர்தலில் தலைமை அறிவித்த வேட்பாளர் தோற்கடிக் கப்பட்டு போட்டி வேட் பாளர் வெற்றிபெற்றுள் ளார்'' என்கிறார்கள்.
தி.மு.க. நிர்வாகிகளிடம் விசாரித்தபோது, "கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, செய்யார் தொகுதியில் யாரை வேட்பாளராக நிறுத்த லாம் என தலைமை தெற்கு மா.செ. எ.வ.வேலுவிடம் ஆலோசனை நடத்தியபோது, டாக்டர் மகேந்திரனை வேட்பாளராக்கலாம் என முடிவுசெய்து வைத்திருந்தார். இதனையறிந்த வடக்கு மா.செ. தரணிவேந்தன், முன்னாள் சேர்மன் சம்பத்தை வேலுவிடம் அனுப்பி, மகேந்திரனுக்கு சீட் தந்தால் கட்சி நிர்வாகிகள் யாரும் வேலை செய்யமாட்டாங்க, அவர் தோற்றுவிடுவார் எனச் சொல்லவைத்தார். யாருக்கு சீட் தரலாம் என தரணிவேந்தனிடம் வேலு கேட்டபோது, செய்யார் ஒ.செ. ஜோதிக்கு தரலாம் என ரெக்கமண்ட் செய்தார் தரணிவேந்தன். அதன்படியே ஜோதி வெற்றிபெற்று எம்.எல்.ஏ. வானார்.
நகர்ப்புற தேர்தலின்போது திருவத்திபுரம் நகரமன்ற தலைவருக்கு, எம்.எல்.ஏ. ஜோதியும், மா.செ. தரணிவேந்தனும் இணைந்து வழக் கறிஞர் விஸ்வநாதனை சேர்மன் வேட்பாளராகவும், பேபிராணியை வைஸ் சேர்மன் வேட்பாளராகவும் அறிவிக்கச் செய்தனர். திருவத்திபுரம் ந.செ.வாக இருந்த மோகனவேல், கவுன்சிலராக வெற்றிபெற்றுள்ள தன்னை சேர்மன் வேட்பாளராக அறிவிக்காமல் விஸ்வநாதனை அறிவித்ததன் பின்னணியில் எம்.எல்.ஏ. ஜோதி உள்ளார் என்பதனை அறிந்து, தலைமை அறிவிப்பை மீறி சேர்மனுக்கு நின்றதுடன், அ.தி.மு.க., பா.ம.க. கவுன்சிலர்களை தன்பக்கம் இழுத்து வெற்றிபெற்று சேர்மனானார். தலைமை அறிவித்த வைஸ் சேர்மன் வேட் பாளர் பேபிராணி, கவுன்சிலர்கள் ஒவ்வொரு வருக்கும் தலா 1 லட்சம் தந்தார். "நீ எம்.எல்.ஏ ஆதரவாளர்தானே உன்னை வெற்றி பெறவிட மாட்டேன்' என சேர்மன் மோகனவேல், கவுன்சிலர் குல்சாரை வைஸ் சேர்மன் வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெறவைத்தார். தலைமை அறிவித்த இரண்டு வேட்பாளர்களும் தோல்வியடைந்தனர். இதில் அவமானப்பட்ட மா.செ. தரணிவேந்தனும், எம்.எல்.ஏ. ஜோதியும் மோகனவேலிடம் இருந்த ந.செ. பதவியைப் பறித்து வழக்கறிஞர் விஸ்வநாதனிடம் கொடுத்தனர்.
தி.மு.க. உட்கட்சி தேர்தலின்போது, மா.செ. தரணிவேந்தனை காலி செய்து தான் மா.செ.வாகலாம் எனக் காய் நகர்த்தினார் எம்.எல்.ஏ. ஜோதி, இதற்கு வந்தவாசி எம்.எல்.ஏ. அம்பேத்குமாரும் ஆதரவு தந்தார். இதனால் தரணிவேந்தன்- ஜோதி இருவரும் முட்டிக் கொண்டனர். அமைச்சர் வேலு ஆதரவு தரணிவேந்தனுக்கு இருந்ததால் ஜோதி கனவு நிறைவேறவில்லை. செய்யார் தொகுதியில் ஜோதிக்கு எதிரான சேர்மன் மோகனவேலுவுக்கு ஆதரவு தரத்துவங்கினார் மா.செ. நகராட்சியில் கமிஷன் பிரிப்பதில் மோகனவேல் - குல்சார் இடையே மோதல் ஏற்பட்டு இரு தரப்பும் ஊழல் புகார்கள் கூறிக்கொண்டிருந்தனர். மோகனவேல், மா.செ.விடம் கூறி அமைச்சர் மூலமாக குல்சாரை ராஜினாமா செய்யவைத்தார்கள். வைஸ் சேர்மனுக்கு நடைபெற்ற தேர்தலில் சேர்மன், மா.செ இருவரும் இணைந்து கல்பனாவை நிறுத்தினார்கள். எம்.எல்.ஏ. ஜோதி பேபிராணியை நிறுத்தினார், இதில் பேபிராணி வெற்றிபெற்றார். இது கல்பனா - பேபிராணி இடையே நடைபெற்ற மோதல் இல்லை. எம்.எல்.ஏ. - மா.செ., சேர்மன் தரப்பினருக்கு இடையே நடைபெற்ற மோதல்'' என்றார்கள்.
வடக்கு மாவட்ட தி.மு.க.வில் நடக்கும் கோஷ்டிப்பூசலால் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது ஆரணி, போளுர் என இரண்டு தொகுதிகளில் தோல்வியைச் சந்தித்தது. வரும் எம்.பி. தேர்தலில் என்ன நடக்குமோ தெரியவில்லை என புலம்புகிறார்கள் தொண்டர்கள்.