கையாடல்... கொலை மிரட்டல்... தமிழக பா.ஜ.க.வில் குஸ்தி!

ss

ழை விட்டாலும் தூவானம் விடவில்லை என்பதுபோல தமிழ்நாட்டில் தேர்தல் முடி வடைந்த பின்னரும்கூட, பா.ஜ.க.வுக்குள் தேர்தல் பணத்தைச் சுருட்டியது தொடர்பான பிரச்சனை கள் ஓய்ந்தபாடில்லை. விருதுநகர் பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மதுரை, திருமங்கலம் பா.ஜ.க.வினரிடையே, தேர்தல் செலவுக்காக பா.ஜ.க. தலைமை கொடுத்த 40 லட்சத்தை பா.ஜ.க. நிர்வாகிகள் சுருட்டியதாக மாவட்ட நிர்வாகி களுக்கு எதிராக பரபரப்பான போஸ்டர் ஒட்டுமளவுக்கு பிரச்சனை பூதாகரமாகியுள்ளது. இதுகுறித்து திருமங்கலம் பா.ஜ.க. முக்கிய நிர்வாகி நம்மிடம், "2024 பாராளுமன்றத் தேர்த-ல் அ.தி.மு.க.விலிருந்து விலகித் தனித்து கூட்டணி யமைத்து களம்கண்ட பா.ஜ.க., தமிழகத்தில் போட்டியிட்ட தொகுதிகளில் வாக்கு சத விகிதத்தை அதிகரிப்பதற்காக, ஒரு தொகுதிக்கு 20 கோடி என்று நிர்ணயித்து, தேர்தல் செலவுக்காக டெல்லி தலைமையிடமிருந்து நிதி வந்துள்ளது. இந்த நிதியை, ஒவ்வொரு தொகுதி மாவட்டச் செயலாளர்களுக்கும் பிரித்துக் கொடுத்துவிடு வார்கள். அவர்கள், அத்தொகையில் ஒரு பகுதியை, அம்மாவட்டத்திலுள்ள பூத்களின் ஏஜென்டுகள் வரைக்கும் பிரித்துக் கொடுப்பதோடு, இன்னொரு பகுதியை, மோடி, அமித்ஷா உள்ளிட்ட வி.ஐ.பி.க்கள் தமிழ்நாட்டுக்கு பிரச்சாரத்துக்கு வரும்போது செலவழிப்பதற்கென ஒதுக்கிவிடு வார்கள். இந்த செலவுக்கணக்கை ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சக்தி யுவகேந்திராவின் பொறுப்பாளர்களிடம் ஒப்படைப்பார்கள்.

bjp

விருதுநகரைப் பொறுத்தவரை, பா.ஜ.க. நேரடியாகக் காங்கிரஸை எதிர்ப்பதால் தீவிரமாக வேலை செய்ய வேண்டுமென்று அறிவுறுத்தப் பட்டிருந்தது. ஆனால் இங்கே நிர்வாக ரீதியில் 600 பூத் கமிட்டி போடுவதற்குப் பதிலாக, 300 பூத் கமிட்டியை மட்டும் போட்டுவிட்டு, பொய்க் கணக்கு காட்டி பாதித்தொகையைச் சுருட்டியது தான் பா.ஜ.க.வினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, பா.ஜ.க. வாட்ஸப் குரூப்பில் நிர்வாகிகள் "எனக்கு பணம் வரவில்லை, உனக்கு பணம் வரவில்லை' என்று பதிவிட, அப்படியென்றால் யாரு

ழை விட்டாலும் தூவானம் விடவில்லை என்பதுபோல தமிழ்நாட்டில் தேர்தல் முடி வடைந்த பின்னரும்கூட, பா.ஜ.க.வுக்குள் தேர்தல் பணத்தைச் சுருட்டியது தொடர்பான பிரச்சனை கள் ஓய்ந்தபாடில்லை. விருதுநகர் பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மதுரை, திருமங்கலம் பா.ஜ.க.வினரிடையே, தேர்தல் செலவுக்காக பா.ஜ.க. தலைமை கொடுத்த 40 லட்சத்தை பா.ஜ.க. நிர்வாகிகள் சுருட்டியதாக மாவட்ட நிர்வாகி களுக்கு எதிராக பரபரப்பான போஸ்டர் ஒட்டுமளவுக்கு பிரச்சனை பூதாகரமாகியுள்ளது. இதுகுறித்து திருமங்கலம் பா.ஜ.க. முக்கிய நிர்வாகி நம்மிடம், "2024 பாராளுமன்றத் தேர்த-ல் அ.தி.மு.க.விலிருந்து விலகித் தனித்து கூட்டணி யமைத்து களம்கண்ட பா.ஜ.க., தமிழகத்தில் போட்டியிட்ட தொகுதிகளில் வாக்கு சத விகிதத்தை அதிகரிப்பதற்காக, ஒரு தொகுதிக்கு 20 கோடி என்று நிர்ணயித்து, தேர்தல் செலவுக்காக டெல்லி தலைமையிடமிருந்து நிதி வந்துள்ளது. இந்த நிதியை, ஒவ்வொரு தொகுதி மாவட்டச் செயலாளர்களுக்கும் பிரித்துக் கொடுத்துவிடு வார்கள். அவர்கள், அத்தொகையில் ஒரு பகுதியை, அம்மாவட்டத்திலுள்ள பூத்களின் ஏஜென்டுகள் வரைக்கும் பிரித்துக் கொடுப்பதோடு, இன்னொரு பகுதியை, மோடி, அமித்ஷா உள்ளிட்ட வி.ஐ.பி.க்கள் தமிழ்நாட்டுக்கு பிரச்சாரத்துக்கு வரும்போது செலவழிப்பதற்கென ஒதுக்கிவிடு வார்கள். இந்த செலவுக்கணக்கை ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சக்தி யுவகேந்திராவின் பொறுப்பாளர்களிடம் ஒப்படைப்பார்கள்.

bjp

விருதுநகரைப் பொறுத்தவரை, பா.ஜ.க. நேரடியாகக் காங்கிரஸை எதிர்ப்பதால் தீவிரமாக வேலை செய்ய வேண்டுமென்று அறிவுறுத்தப் பட்டிருந்தது. ஆனால் இங்கே நிர்வாக ரீதியில் 600 பூத் கமிட்டி போடுவதற்குப் பதிலாக, 300 பூத் கமிட்டியை மட்டும் போட்டுவிட்டு, பொய்க் கணக்கு காட்டி பாதித்தொகையைச் சுருட்டியது தான் பா.ஜ.க.வினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, பா.ஜ.க. வாட்ஸப் குரூப்பில் நிர்வாகிகள் "எனக்கு பணம் வரவில்லை, உனக்கு பணம் வரவில்லை' என்று பதிவிட, அப்படியென்றால் யாருக்குத்தான் பணம் கொடுத்தார்கள்? என்று கேள்விவர, மேற்கு மாவட்ட செயலாளர் சின்னசாமி, தேர்தல் பொறுப்பாளர் வெற்றிவேல், மாவட்ட தலைவர் சசிகுமார் உள்ளிட்டோர் அவர்களுக்குள் பங்குபிரித்து, ஆட்டையைப் போட்டது தெரிய வந்ததால்தான் தைரியமாக, திருமங்கலம் நகர் முழுவதும் 'பணம் எங்கே? தலைமையே நட வடிக்கை எடு!' என்று போஸ்டர் ஒட்டுமளவுக்கு போய்விட்டது. தற்போது போஸ்டர் ஒட்டியவர் களை ரவுடிகளை வைத்து மிரட்டுகிறார்கள். இதுதொடர்பாக, பா.ஜ.க. ஊடகப்பிரிவு தலைவர் காளிதாஸ், தென்மண்டல ஐ.ஜி.யிடம் பாதுகாப்பு கேட்டு மனு கொடுக்குமளவுக்கு போய்விட்டது. பா.ஜ.க. மா.த.வுக்கும் தகவல் தெரிந்தும் இதுவரை அவர் கண்டு கொள்ளவே யில்லை. இவரைப் போன்ற பொய் முகங்களால் ஈர்க்கப்பட்டு பா.ஜ.க.வில் இணைந்தவர்களெல்லாம், அகில இந்திய அளவில் பா.ஜ.க. தோற்றால் இக்கட்சியிலிருந்து வெளியேறிவிடுவார்கள்'' என்று கொந்தளித்தார்.

பா.ஜ.க. ஊடகப் பிரிவு தலைவர் காளி தாஸிடம் கேட்டோம். "எல்லாமே பொய்க்கணக்கு. எல்லோரும் இதுக்கு உடந்தை. நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு தீவிரமாக பணியாற்றிவந்தேன். விருதுநகர் நாடாளுமன்ற அமைப்பாளர் வெற்றிவேலும், மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிகுமாரும், மாநிலத் தலைமையி-ருந்து தேர்தல் பணிக்காகக் கொடுத்த நிதியை முறையாகப் பயன்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு மேற்கு மாவட்டம் முழுவதும் பெரிய அளவில் வெடித்தது. ஒரு தரப்புக்கு மட்டும் பணம் கொடுத்துவிட்டு மற்றவர்களுக்கு கொடுக்காததால், பாதிக்கப்பட்டவர்கள் போஸ்டர், பதிவுகள்மூலம் குற்றம்சாட்டியுள்ளனர். இதற்கு நான் தான் காரணமென்று நினைத்து, என்னை கொலை செய்யப்போவதாக ராஜரத்தினம், வெற்றிவேல், சசிகுமார் ஆகியோர் தொடர்ந்து மிரட்டல் விடுகின்றனர். என்மீது அவனியாபுரம் போலீசிலும் பொய்யாக புகாரளித்துள்ளனர். மேலும், வெற்றிவேலுடைய நண்பரும் மாநில பட்டியல் அணி செயலாளருமான கீரைத்துறை சரவணன் எனது வீட்டு முகவரியை விசாரித்ததோடு, எனது தினசரி நடவடிக்கைகள் குறித்த விவரங்களையும் சேகரித்துள்ளார். இதையடுத்து எனக்கு கடந்த இரு நாட்களாக அவனியாபுரம் காவல்நிலையத்திலிருந்து போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து எங்கள் மாநில தலைவரிடம் சொல்லியும் இதுகுறித்து அவர் யாரிடமும் விசாரித்ததாகத் தகவலில்லை. என் உயிருக்கு குறிவைத்துள்ளார்கள் சார்'' என்றார் பதட்டமாக.

dd

போஸ்டர் ஒட்டியதாக கொலைமிரட்டலை எதிர்கொண் டுள்ள திருமங்கலம் கள்ளிக்குடி பா.ஜ.க. நிர்வாகி ரவி நம்மிடம், "சார் நான் போஸ்டர் ஒட்ட வில்லை. ஆனால் நான் தூண்டித் தான் போஸ்டர் ஒட்டியதாகத் தவறாகப் புரிந்துகொண்டு என்னை மிரட்டுகிறார்கள். எல்லா பிராடு வேலையையும் தலைமையி-ருப்பவர்கள் செய்துவிட்டு, என்னைப் போன்ற அப்பாவிகளை மிரட்டுகிறார்கள். முத-ல் 600 பூத் கமிட்டி உண்மையாக இருக்கிறதா? அதில் பாதிக்குமேல் பொய்க்கணக்கு தான்! யாருக்கும் செலவே செய்யாமல் பணத்தைச் சுருட்டியதுதான் நிஜம் சார். தலைவர்கள் வருகையின்போது செலவழிப் பதற்கும், வோட்டு கேன்வாஸிங்கிற்கும் டெல்- தலைமையி-ருந்து கொடுத்த பணம் எல்லாத் தையும் சுருட்டிவிட்டார்கள் சார். எப்படி இருந்த கட்சி இப்படி ஆகிருச்சே சார்''’என்றார். இங்கு மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுக்கவே இதேபோல் பணத்தை ஆட்டையைப் போட்ட விவகாரங்கள் வரிசைகட்டி நிற்கின்றன.

பா.ஜ.க.வில் கடந்த சில ஆண்டுகளாக, கொலை, கொள்ளை குற்றச்சம்பவங்களில் தொடர் புடையவர்கள், வழக்குகளி-ருந்து தப்புவதற்காக கட்சியில் இணைந்தனர். அப்படியானவர்கள், கட்சித்தலைமையி-ருந்து தரப்பட்ட பணத்தை சுருட்டிக்கொண்டதாக, பல்லாண்டுகளாகக் கட்சிக்காக உழைத்தவர்கள் குமுறுகிறார்கள். பா.ஜ.க. வாட்சப் குரூப்களிலும், "கட்சிக்காக பல்லாண்டுகளாக உழைத்த எங்களுக்கு மே-டத்தி-ருந்து கொடுக்கப்பட்ட பணத்தை வழங்கவேயில்லை' என்று பரபரப்பு ஆடியோக்கள் சுற்றவிடப்படுகின்றன. அந்த ஆடியோக்கள் அனைத்தின் மையப்புள்ளியாக, கட்சி மே-டம் அளித்த தேர்தல் செலவுக்கான பணத்தை உரிய முறையில் செலவழிக்காமல், பெரும்பகுதியை மாவட்ட அளவிலான நிர்வாகிகள் ஆட்டையைப் போட்டது தொடர்பானதாகவே இருக்கின்றது. இப்படி ஆடியோ வெளியிட்டவர்களுக்கும், ஆடியோவில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கும் இடையே தான் தமிழ்நாடு முழுக்க பா.ஜ.க.வில் அடிதடியாகி காவல்துறையில் ஆங்காங்கே புகார்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

ff

சென்னை, பெரம்பூர் தெற்கு மண்டல தலைவர் பிரபா, பெரம்பூர் மத்திய மண்டல தலைவர் கஸ்தூரி, திரு.வி.க. நகர் மண்டல தலைவர் முரளி ஆகியோருக் கெதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. ஒரு பூத்துக்கு ரூ.8,000 என்ற கணக்கில் மே-டம் கொடுத்த பணத்தில், 3,000 வரை சுருட்டியதாகவும், இப்படியாக, மண்டலத் தலைவர்கள் சுமார் 2 லட்சம் ரூபாய்வரை கையாடல் செய்துள்ளதாகக் குற்றம்சாட்டி யுள்ளனர். பெரம்பூர் தெற்கு மண்டல பகுதியை சேர்ந்த மாவட்ட செயற்குழு உறுப்பினர் வேல்ராஜ், பிரச்சாரத்துக்கு வந்தவர்களுக்கு பிரியாணியும் கொடுக்கவில்லை, பணமும் கொடுக்கவில்லை என்பதாக ஆடியோ வெளியிட்டது வைரலாகியிருக்கிறது. இதே பணச்சுருட்டல் விவகாரம் தொடர்பாக, அண்ணாநகர் வடக்கு மண்டல தலைவர் ராஜ்குமாரை, மத்திய வர்த்தகப்பிரிவு செயலாளர் மூர்த்தி என்பவர் கடுமையாகத் தாக்கியதில், இதுதொடர்பாக இருதரப்பும் அமைந்தகரை போலீசில் புகாரளித்துள்ளனர். இதில், ராஜ்குமாருக்கு அண்ணாநகர் வடக்கு மண்டல தலைவர் பதவி கொடுத்ததால், கட்சியில் சீனியரான மூர்த்திக்கும் அவருக்குமிடையே ஏற்கெனவே உட்கட்சி மோதல் இருந்தது தெரியவந்துள்ளது.

பா.ஜ.க. இத்தனை ஆண்டுகளாக எவ்வளவோ தேர்தல்களை எதிர்கொண்டுள்ளது. எத்தனையோ தலைவர்கள் இக்கட்சியின் தமிழகத் தலைமைப் பொறுப்புக்கு வந்துள்ளனர். ஆனால் தற்போது தான் பா.ஜ.க. தலைமை முதல், கீழ்மட்டத்தி-ருக்கும் நிர்வாகிகள்வரை அனைவர் மீதும் பணத்தை உரிய முறையில் செலவழிக்காமல் போ-க்கணக்கு காட்டி சுருட்டியதான புகார்கள், சென்னை பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நிறைய குவிந்தவண்ணம் உள்ளன. பண விவகாரத்தில் பா.ஜ.க. மாநிலத் தலைமையே சரியில்லாத சூழ-ல், கீழ்மட்டத்தில் நடக்கும் பணச்சுருட்டல், அடிதடிகள் குறித்து கண்டு கொள்ளும் நிலையில் தலைமை இல்லை. இந்நிலையில், தமிழகமெங்கும் பா.ஜ.க. நிர்வாகிகளிடமிருந்து வரக்கூடிய கையாடல்... கொலை மிரட்டல் புகார்கள் குறித்து விசாரிப்பதாகச் சொல்-யிருந்த பா.ஜ.க. மா.த., அது தொடர்பான நிர்வாகிகள் கூட்டத்தை அறிவிப்பதும், ரத்து செய்வதுமாக இருக்கிறார். தேர்தல் ரிசல்ட் வந்தபின்னர் தமிழக பா.ஜ.க.வில் மேல்மட் டத்தி-ருந்து, கீழ்மட்டம் வரை பெரிய அளவில் நிர்வாகிகள் மாற்றம் இருக்குமென்று கூறப்படுவதால் பா.ஜ.க. நிர்வாகிகள் பரபரப்பில் உள்ளனர்.

-அண்ணல் & கீரன்

__________________

கோடியில் விலை பேசிய கேடிகள்!

dd

கரூர் மாவட்டம் வெள்ளியணை, ஜெகதாபி, மாணிக்கபுரம் உள்ளிட்ட கிராமங்களில் விலையுயர்ந்த மாணிக்கம், மரகதம், நீலக்கற்கள் கிடைப்பதாக பல ஆண்டுகளாகக் கூறப்படுகிறது. இந்த கற்களைத் தேடியெடுக்கும் மக்கள், அவற்றை இடைத்தரகர்கள் மூலம் விற்பனை செய்து அவ்வப்போது வருமானம் பார்த்துவருகிறார்கள்.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பாளையத்தை அடுத்த அய்யனாகவுண்டனூரை சார்ந்த லட்சுமணன், கோட்டாநத்தத்தை சார்ந்த மாணிக்கம், அய்யம்பாளையத்தை சேர்ந்த மணிவேல் ஆகிய மூவரும் சேர்ந்து திண்டுக்கல் மாவட்டம் பாளையத்தை சார்ந்த பாஞ்சா- அம்மாள் என்பவரிடமிருந்து மாணிக்கக்கல் வாங் கியதாகக் கூறியுள்ளனர். இக்கற்களை வாங்க, 8 பேரை, ஏமூர் -கத்தாளபட்டி ரோட்டிலுள்ள ஒரு வீட்டிற்கு வரவழைத்து, ஒரு மாணிக்கக் கல்-ன் விலை 150 கோடி ரூபாய் என விலை பேசியுள்ளனர். இந்நிலையில், சந்தேகப்படும்படி யாக 11 பேர் அந்த வீட்டில் இருப்பதையும், பேசிக்கொள்வதையும் தெரிந்துகொண்ட அப்பகுதி மக்கள், வெள்ளியணை காவல்நிலை யத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசாரின் விசாரணையில், படிகக்கல்லை மாணிக்கக்கல் எனக்கூறி மோசடியாக விற்க முயன்றது தெரியவந்தது. அக்கல்லைக் கைப்பற்றியதோடு, திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மூவரையும் கைதுசெய்து கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கரூர் கிளைச் சிறையில் அடைத்தனர்.

-துரை.மகேஷ்

nkn040524
இதையும் படியுங்கள்
Subscribe