பிட்சுகளின் தாகத்திற்கு தமிழர் ரத்தம்!
வெள்ளையர்கள் காலடி வைத்த நிலத்தையெல்லாம் அடிமைப்படுத்தினார்கள். அங்கே இயற்கை வளங்களை சுரண்டி முடித்துவிட்டு ‘சுதந்திரம் கொடுக்கிறோம்’ என்ற பெயரில் வெளியேறினார்கள். அப்படி வெளியேறியபோது, அங்கெல்லாம் ஓயாத பிரச்சினைகளை உருவாக்கிவிட்டுத் தான் போனார்கள். கலவரக் காடுகளாக மாற்றிவிட்டுத்தான் வெளியேறினார்கள். இயற்கையாகவே ஒன்றாக இல்லாத... பல்வேறு தேசிய இனங்கள் வாழ்ந்த நிலப்பரப்புகளை, தங்களின் நிர்வாக வசதிக்காக ஒரே தேசமாக்கினார்கள். வெளியேறும்போது அப்படியே விட்டுவிட்டுப் போனார்கள். அதனால்தான் பெரும்பான்மை இனங்களின் கைகளில் சிறுபான்மை இனங்கள் அடிமைப்பட நேர்ந்தன. சிறுபான்மை இனங்களின் கைகளில் பூட்டப்பட்ட விலங்குகளின் சாவிகள் வெள்ளைக்காரன் கையிலிருந்து, பெரும்பான்மை இனத்தவர்களின் கைகளில் போய்ச் சேர்ந்தது. அதனால் சிறுபான்மை இன மக்களுக்கு வெள்ளையர் இழைக்காத அநீதிகளைக்கூட பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஆட்சியாளர்கள் கொடுக்கத் துவங்கினார்கள். இன்றும் பல நாடுகளில் சிறுபான்மை இன மக்கள் இரண்டாம்தரக் குடிமகன்களாகவே நடத்தப்பட்டுவருகிறார்கள். அந்த வகையைச் சேர்ந்ததுதான் இந்தியாவும், இலங்கையும்.
இந்தியா இயற்கையின் அமைப்பில் ஒரே தேசமில்லை. பல்வேறு தேசிய இன மக்கள் வாழும் பல்வேறு தேசங்களின் கூட்டமைப்பு. ‘அனைத் திந்தியா’ என்ற சொல்லாட்சியே அதற்குச் சான்று. இந்தியாவில் எல்லா தேசிய இனங்களும் சமமாக நடத்தப்படவில்லை. இந்தி பேசுகின்ற பெரும்பான்மை மக்களின் ஆதிக்கம்தான் தொடர்ந்து நடைபெறுகிறது. இந்தியாவில் எத்தனையோ நதிகள் பாய்கின்றன. ஆனால்... ஒருபக்கம் வெள்ள நிவாரணப் பணி நடக்கிறது; இன்னொருபக்கம் வறட்சி நிவாரப்பணி நடக்கிறது. இந்த நிலைமை ‘இந்தியா ஒரே தேசம்’ என்பதற்கான அடையாளம்தானா?
கங்கையைக் காவிரியோடு இணைக்க வேண்டும் என்ற குரல் இன்றல்ல, நேற்றல்ல; நேருவின் காலத்திலேயே ஒலித்தது. அதற்கு உத்திரப்பிரதேச நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றாகக்கூடி அன்றைய பிரதமர் நேருவிடமே எதிர்ப்புத் தெரிவித்தார்கள். "We dont want to share the sacret water of river Ganges with the Dravidian's south" என்று கடுமையாக தங்கள் மறுப்பைத் தெரிவித்தார்கள். இந்திய தேசத்தின் ஒட்டுமொத்த தேசிய வருமானம் வடக்கேதான் செலவழிக்கப்பட்டது. “பக்ராநங்கல் அணைக்கு பயன்படுத்திய சிமெண்ட்டை வைத்து ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தியாவின் தெற்கே கன்னியாகுமரிவரை கிழக்குக் கடற்கரைச் சாலையை அமைத்திருக்க முடியும்’என மிகச் சிறந்த பொருளாதார நிபுணர் ஒருவர் சொன்னார்.
(இமாச்சலபிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் சட்லஜ் நதியின் குறுக்கே, 226 மீட்டர் உயரம் கொண்ட பக்ராநங்கல் அணை உள்ளது. 51,825 மீட்டர் நீளமும், 9,34 பில்லியன் கன மீட்டர்கள் கொள்ளளவும் இந்த அணை கொண்டுள்ளது. நாட்டின் இரண்டாவது பெரிய நீர்த்தேக்கமாக உள்ளது. இந்த அணை இந்தியாவில் பஞ்சாப் மற்றும் இமாச்சலுக்கு இடையே உலக நாடுகளே கண்டு வியக்கும்படி, ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய அணையாக இது உள்ளது.)
இந்தி மொழி ஆதிக்கம்; பொருளாதார ஏற்றத்தாழ்வு, தமிழர்களை இரண்டாம் தரக் குடிமக்களாக கருதும் ஆதிக்க மனோபாவம் அத்தனையும் முன்போல் இல்லாவிட்டாலும் இன்றும்கூடத் தொடர்ந்து இருந்துகொண்டு தானிருக்கின்றன. ‘இல்லை’ என்று எவரும் சொல்ல முடியாது. தமிழ்நாட்டுக் கட்சிகளின் தயவு டெல்லிக்கு தேவை என்பதால் டெல்லி அவ்வப்போது அனுசரித்துப் போகிறது.
இலங்கையில் பேரினவாதத்தின் கோரப்பற் கள் தமிழினத்தைக் கடித்துக் குதறுவது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. "தமிழ் ஈழ தேசம்' என்பது தான் மிகவும் பூர் வீகமான தேசம். தமிழர்கள் மட்டுமே ஒட்டுமொத்த இலங்கையின் பூர்வ குடி மக்கள்., ஆதி குடிமக்கள். சிங்களர்கள் வந்தேறிகள். வந்தேறிகளின் இனம் பெருகத் தொடங்கியது. இனப்பெருக்கத்திற்கு ஏற்றபடி வாழ்கின்ற நிலப்பரப்பையும் பெரிதாக ஆக்கிக்கொண்டது.
(இந்தியாவிலும் ஆரிய இனம் வந்தேறிய இனம்தான். அதிகபட்சம் ஐயாயிரம் அல்லது ஆறாயிரம் ஆண்டுக்கு உட்பட்ட காலத்தில்தான் இந்தியாவுக்குள் ஆரிய இனம் வந்திருக்க முடியும்.)
இலங்கையைப் பொறுத்தவரை ஓர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சிங்கள இனம் குடியேறி... இன்று பேரினமாகப் பெருகி இருக்கிறது. இந்தியாவைப் போலவே இலங்கையை ஆண்ட வெள்ளையன் தன் ஆட்சி வசதிக்காக இலங்கையை ஒன்றாக்கினான். 1948-ஆம் ஆண்டில் இலங்கைக்கு விடுதலை கொடுத்த வெள்ளையன், தமிழினத்தை சிங்கள இனத்தின் அடிமை இனமாக விட்டு விட்டுத் தான் வெளியேறினான். வெள்ளைக்காரன் காலத்தில் இல்லாத மோசமான கொத்தடிமைத்தனம் தமிழர்கள் மீது திணிக்கப்பட்டது. இலங்கையில் எல்லாமே சிங்களமயமாக்கப்பட்டன. தமிழினம் எல்லா வகையிலும் ஒடுக்கு முறைக்கு ஆளாக்கப்பட் டது. ஒரே மொழி, ஒரே மதம், ஒரே இனம் ஆதிக் கம் பெறும் நிலை உருவானது. இதற்கு எதிராக தமிழர்கள் "அறவழிப் போர்' நடத்தினார்கள்.
ஈழத்து காந்தி என்ற பெருமைக்குரிய தந்தை செல்வா அவர்கள் தமிழர்களின் உரிமைக்கு அமைதியான வழியில் குரல் கொடுத்துப் பார்த்தார். பயனற்றுப் போனது. ஈழ விடுதலையை தேர்தல் அறிக்கையில் முன்னிறுத்தி, "தமிழர் ஐக்கிய முன்னணி' போட்டியிட் டது. 17க்கு 17 இடங்களிலும் வெற்றி பெற்றது. மக்கள் தீர்ப்பாவது... மகேசன் தீர்ப்பாவது என்று சிங்களப் பேரின வாத ஆட்சி, அந்தத் தீர்ப்பை குப்பை மேட்டிலே தூக்கிப் போட்டது.
சிங்கள இனத்தில் செங்கிஸ்கான்கள் தலை எடுக்க ஆரம்பித்தார்கள். புத்த பிட்சுகளின் தாகத்துக்கே கூட தமிழர்களின் ரத்தம் தேவைப்பட்டது. இந்தியா வில் தோன்றிய மகான் புத்தன், இலங்கையில் மாமிச பட்சினியாக மாறிப் போனான். துப்பாக்கியே துரைத்தனம் செய்தது. சிறீலங்கா அரசின் செங்கோல் துப்பாக்கிதான் என்று ஆகிப்போனது.
அகிம்சை வழியும், அறவழியும் தமிழர்கள் தங்களைத் தாங்களே அழித்துக்கொள்ளும் தற்கொலை மார்க்கங்கள் என்று உணரவேண்டிய காலகட்டம் வந்தது. அகிம்சை தங்களை பாதுகாக்காது, அறவழி தங்களை பாதுகாக்காது என்று அழுத்தம் திருத்தமாக அறிந்து கொண்ட பின்னர், ஆயுதம் ஒன்று மட்டும்தான் இனி நமக்குக் காவல்; நமது இனத்துக்குக் காவல் என்ற முடிவுக்கு தமிழ் இளைஞர்கள் வரநேர்ந்தது.
சிங்கள ராணுவம் எந்த நேரமும், காரணமே இல்லாமல் தமிழர்களை வேட்டையாடும், கொலை செய்யும். அப்படிப்பட்ட தருணத்தில்... 5-12-1976 அன்று இலங்கை நாடாளுமன்றத்தில் தந்தை செல்வா பேசினார்..
We have completely abandoned the federal concept; We have decided to separate, If we don't separate we can never win back our lost rights, we will try in every way to set up a separate state. This is certain as the voice of my people. I tell this to Srilanka and the world from this house,we know this is not an easy task, we know it is a difficult path, But either We must get out the rule of the signhalese or perish, This is our ideal" (chelva's speech in Srilankan Parliament on 5-12-1976) என்று முழக்கமிட்டார் தந்தை செல்வா.
அகிம்சை வழி, அறவழி, அதிகாரப் பகிர்வு என்பதெல்லாம் அர்த்தமற்றுப் போயின என்பதற்கு அவரது உரையே சாட்சி. தமிழச்சிகளின் கற்பைச் சூறையாடும் காட்டுமிராண்டித் தனம் தமிழிளைஞர்களின் ரத்தத்தைக் கொதிக்கவைத்தது. ‘"ஆஹாவென்றெழுந்தது பார் யுகப் புரட்சி'’’ என்று பாரதி பாடினானே, அப்படி விடுதலைக்கு ஆயுதப் புரட்சி அவசியமானது. உலகத்தின் எந்த மூலையிலும் நடந்திராத கொடுமைகள் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்டன. தமிழ் இளைஞர்கள் சிறைக்குள் அடைக்கப்பட்டனர்; சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டனர். குட்டிமணி, ஜெகன், தங்கத்துரை ஆகிய மூன்றுபேரும் 1974-ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டு கொழும்புவிற்கு அனுப்பப்பட்டார்கள். சிறைச்சாலையில் அவர்களுக்கு ஏற்பட்ட சித்ரவதைக் கொடுமைகளைக் கேட்டால் நாகரிக உலகம் சிங்கள அரசின் முகத்தில் காரித்துப்பும். சித்ரவதையின் கடைசி எல்லையாக அவர்கள் சிங்களக் காடையர்களால் வெட்டிச் சாய்க்கப்பட்டனர். சிறைச்சாலை ஒன்று மட்டும்தான் உலகத்திலேயே பாதுகாப்பான இடம். ஆனால் அந்த சிறைச்சாலையே தமிழர்களைக் கொல்லும் கொலைக் களமாக மாறிப்போனது. நாக்கை அறுத்தார்கள்; கண்களைத் தோண்டினார்கள்; ‘"இங்கு தமிழர்களின் இறைச்சி விற்கப் படும்'’என்று பலகையில் எழுதி தொங்கவிட்டார்கள். ’"புத்தம் சரணம் கச்சாமி'’ என்பது பொய்யாகிப் போனது. ‘"ரத்தம் வழியும் கச்சாமி'’ என்றாகிப்போனது. லண்டன் பி.பி.சி. நிருபர் அந்த நேரத்தில் கொழும்பு சென்று ஒரு புத்த பிட்சுவைச் சந்தித்தாராம். அவரிடம் தமிழர்கள் கோரமாக கொல்லப்பட்டது குறித்து... Don't you think killing a Man is sin? ("மனிதர்களைக் கொல்வது பாவமில் லையா?') என்று கேட்டிருக்கிறார் நிருபர். அதற்கு "Yes killing a Man is sin but killing a Tamil is not sin" ("மனிதனைக் கொல்வது பாவம்; தமிழனைக் கொல்வது பாவமல்ல' என்றாராம் அந்த புத்த பிட்சு.
போதி மரத்துப் புத்தன் சிங்களவனுக்கு உபதேசித்த புத்த தத்துவம் இதுதானா?
ஒரு சந்நியாசியே இப்படி நினைக்கிறானென்றால்... ராஜபக்சேக்கள் எப்படி நினைத்திருப்பார்கள்.
உலகத் தமிழர் நிலையை பற்றிச்....
(சொல்கிறேன்)