ராஜீவ் காலை மர்மங்கள்!

ராஜீவ்காந்தி கொலையில் இரண்டு சதித் திட்டங்கள் அடங்கியிருக்கின்றன.

1. ராஜீவ்காந்தியை திட்டமிட்டு கொன்றது.

2. கொலை நடந்தவுடனேயே கொஞ்சம்கூடத் தாமதிக்காமல் ‘"விடுதலைப் புலிகள்தான் கொன்றார்கள்'’என பழி போட்டது.

Advertisment

1991-ஆம் ஆண்டு மே மாதம் 21-ஆம் தேதி இரவு 10.30 மணியளவில் ராஜீவ்காந்தி கொல்லப்பட்டார். மறுநாள் 22-ஆம் தேதி P.T.I.செய்தி நிறுவனம் மூலம் எல்லாப் பத்திரிகைகளுக்கும் ‘ராஜீவ்காந்தியை விடுதலைப்புலிகள் கொலை செய்துவிட்டார்கள்’ என்று செய்தி கொடுத்து, அந்தப் பொய்ச் செய்தியை திட்டமிட்டுப் பரப்பியவர் அன்று சட்ட அமைச்சராக இருந்த ஈ.ஒ.ஆ. உளவாளியான சுப்பிரமணியசாமி.

ஓர் உண்மையான புலன்விசாரணை தொடங்கப்படாத நிலையில், இவர் முந்திக்கொண்டு எந்த ஆதாரமும் இல்லாத நிலையில் விடுதலைப் புலிகள் மீது பழியைத் தூக்கிப்போட்டது ஏன்?

rajivgandhi

Advertisment

அன்று அவருக்கு இருந்த நெருக்கடியும், அவசரமும்தான் காரணம். உடனடியாக யார்மீதாவது பழியைப் போட்டுவிட வேண்டும் என்கிற அவரின் அவசரத்திற்குத் துணையாக சந்தர்ப்ப சூழ்நிலைகள் அமைந்திருந்ததால், விடுதலைப் புலிகளைக் கை காட்டிவிட்டால் நம்பும்படியாக இருக்கும் எனும் நிலைமை அன்று இருந்தது. அதைப் பயன்படுத்தி, ஆரிய இனத்திற்கே உள்ள சாணக்கிய அணுகு முறையில் ‘புலிகள்தான்’ என்கிற நச்சுக் கருத்தைப் பரவவிட்டார். "அதோ... திருடன் ஓடுகிறான்'’என்று திருடாத ஒருவனைக் கைகாட்டித் துரத்திச் சென்று, உண்மையான திருடன் தப்பித்துக்கொள்வதுபோல, விடுதலைப்புலிகளை கைகாட்டிவிட்டு அவர் தப்பித்துக்கொள்ள நினைத்தார்.

அப்போது இலங்கை பாதுகாப்புத்துறை அமைச்சர் ஒருவர், ‘"புலிகள்தான் ராஜீவ்காந்தியை கொன்னாங்க' என துப்புக் கொடுத்ததாக சுப்பிரமணியசாமி சொன்னார். இவ்வளவு பெரிய இந்தியாவின் அமைச்சருக்கு, இலங்கையிலிருந்துதான் துப்புச் சொல்வார்களாம். என்ன கேவலம். இலங்கை அமைச்சர் துப்புச் சொன்னால் எப்படியிருக்கும்? புலிகளை கோர்த்துவிடத்தானே செய்வார். "இதுதான் வேலிக்கு ஓணான் சாட்சி' என்பது.

அந்தச் சமயத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த வாழப்பாடி ராமமூர்த்தியும் “"விடுதலைப்புலிகளை வைத்து ராஜீவ்காந்தியைக் கொலை செய்தது தி.மு.க.தான்'’ என்று ஒரு விஷமத்தனமான செய்தியைப் பரப்பி, சுப்பிரமணியசாமிக்குத் துணைபோனார். நாடு முழுக்க தி.மு.க.வுக்கு எதிராகத் தாக்குதல் நடத்த ஏற்பாடு செய்தார். அந்த தவறான பிரச்சாரம் காரணமாக அப்போது நடந்த தேர்தலில் அ.தி.மு.க. மாநிலத்திலும், காங்கிரஸ் மத்தியிலும் ஆட்சிக்குவர வழி வகுத்தது.

ன்றுவரை எனக்கு விளங்காத மர்மம் என்னவென்றால்... இந்தியாவின் பிரதமராக இருந்த ஒருவர், வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக வர வாய்ப்புள்ள ஒருவர், தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொள்ள தமிழ்நாட்டுக்கு வருகிறார். பெரிய தலைவரான அவர் கலந்துகொள்ளும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தை, சென்னைக்கு வெளியே, ஸ்ரீபெரும்புதூரில், யாருக்கும் எட்டாத ஓர் இடத்தில் ஏன் நடத்த வேண்டும்?

மேடைக்குச் செல்லும் அந்த தலைவருடன் தமிழ்நாட்டின் மிக முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் அவருடன் செல்ல வில்லையே?குறிப்பாக வாழப்பாடி ராமமூர்த்தி. தேசியத் தலைவருடன் மாநிலத் தலைவர்... ராஜீவ்காந்திக்கு மிக நெருக்கமாக வாழப்பாடி ராமமூர்த்தி இருந்திருக்க வேண்டாமா?

அந்த கூட்டத்திற்கு ஜி.கே.மூப்பனாரும் சென்றிருந்தார். அவர் ராஜீவின் அருகே நிற்கவில்லையே என்று கேட்க முடியாது. காரணம்... முண்டியடித்துக்கொண்டு தலைவர்கள் பக்கத்திலே நிற்பது மூப்பனாரின் இயல்பு இல்லை. ஆனால் வாழப்பாடி ராமமூர்த்தி அப்படி இல்லையே. அவர் ஏன் தன் தலைவருடன் தனக்கு இருக்கும் நெருக்கத்தைக் காட்டிக்கொள்ள, ராஜீவின் அருகில் நிற்கவில்லை?

ராஜீவ்காந்தி கொல்லப்பட்டவுடன், அவரின் உடலை தேடுவதை விட்டுவிட்டு, தேர்தலுக்காக ராஜீவ்காந்தி கொண்டுவந்திருந்த பணத்தை மட்டும் தேடி, ஓடிப்போய் எடுத்துக் கொண்டாரே வாழப்பாடி ராமமூர்த்தி.

ராஜீவ்காந்தி கொலைசெய்யப்படுகிறார். கொலை செய்தவளும் செத்துப் போனாள். புகைப்பட நிபுணர் அரிபாபு செத்துப்போனார். ராஜீவின் மெய்க்காப்பாளர்கள் செத்துப்போனார்கள். காங்கிரஸ் தலைவர்கள் யாருமே உயிரிழக்கவில்லையே? அவர்கள் சாக வேண்டும் என நான் நினைக்கவில்லை.

தேசியத் தலைவர்களுடன் நெருங்கி நிற்கும் இயல்புப்படி, ராஜீவ்காந்தியுடன் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் நெருங்கி நின்றிருந்தால், அவர்களில் ஓரிருவ ராவது ராஜீவுடன் சேர்ந்து உயிரை இழந்திருப்பார்களே. ஏன் அது நடக்க வில்லை?

தங்களைச் சாவு தழுவாமல் தள்ளி நின்றுகொண்டார்கள்.

தமிழகத் தலைவர்கள் ராஜீவை விட்டு விலகி நின்றது தற்செயலா? இல்லை... விஷயம் தெரிந்தே விலகி நின்றார்களா?

ஒரு தலைவர் எந்தத் தொகுதியில் பிரச்சாரம் செய்கிறாரோ... அந்தத் தொகுதியின் தங்கள் கட்சி வேட்பாளரை மக்களுக்கு அறிமுகம் செய்வார். அப்படிப் பார்த்தால்... ஸ்ரீபெரும்புதூர் தொகுதியின் வேட்பாளர் மரகதம் சந்திரசேகர். அந்த அம்மையாராவது வேட்பாளர் என்ற முறையில் ராஜீவுடன் நின்றிருக்க வேண்டாமா?

தான் ராஜீவை நெருங்கினால் தன்னை சாவு நெருங்கும் என்பதாக ஜோதிடக்காரன் அவரிடம் சொல்லி வைத்தானா?

நான் உறுதியாக நம்புகிறேன்.... நடக்கப்போகிற விபரீதம்பற்றி மரகதம் சந்திரசேகருக்கு முன்கூட்டியே தெரிந்திருக்கிறது. கொலை செய்த தணுவுக்கும், மரகதம் சந்திரசேகர் குடும்பத்திற்கும் நெருக்கமான தொடர்பு இருந்திருக்கிறது. மரகதம் சந்திர சேகரின் மகள் வயிற்றுப் பேத்தி, ‘ஆன்ட்டி’ என தணுவை உறவு கொண்டாடுகிற அளவிற்கு நெருக்கம் இருந்திருக்கிறது. காங்கிரஸ் பிரமுகர்கள் ஒருவர்- இருவருக்காவது முன்கூட்டியே தெரியாமல் ராஜீவ்காந்தி கொலை நடந்திருக்க வாய்ப்பே இல்லை.

நரசிம்மராவ் பிரதமரான கதையைச்...

(சொல்கிறேன்

______________

காமத்துப் பாலில் பாலாபிஷேகம்!

rr

விஜயகாந்த், பாண்டியன், ஸ்ரீகாந்த், சிவச்சந்திரன், கே.ஆர்.விஜயா, ஸ்ரீவித்யா, நளினி, விஜி உட்பட சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட பிரபலங்கள் நடிப்பில், கே.சங்கர் இயக்கத்தில் வந்த பக்திப் படம் "நவக்கிரக நாயகி'. இதில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில், பாண்டியன்-நளினி காதல் பாடலாக நான் எழுதிய பாடல் இது. வாணி ஜெயராம் பாடியிருந்தார். படத்தில் ஒரு பல்லவி மட்டுமே இடம்பெற்றது.

பல்லவி:

காற்றுக்குப் பாட்டுச் சொன்னது யார் யார் யார்?

ஆற்றுக்குப் பாதை சொன்னது யார் யார் யார்?

மேகத்தில் மின்னல் தந்தது யார் யார் யார்?

மோகத்தை நெஞ்சில் வைத்தது யார் யாரோ....

சரணம்:

செவ்வரி ஓடும் கருவிழி ஓரம்

நான் உன்னைக் காணக் காண

செவ்வானம் ஆகும்

என் தேகம் எங்கும் இன்ப

சங்கீதம் பாடும் ஆஆஆஹாஆஆ

அந்தியில் மெல்ல அர்ச்சனை செய்ய

காமத்துப் பாலில் நித்தம் பாலாபிஷேகம்

கை வைத்த பக்கமெல்லாம்

அமுதாபிஷேகம்

(பாட்டுக் கச்சேரி தொடரும்)