நெருங்கிவந்த விடுதலையை தடுத்தபடை!
இந்திய-இலங்கை ஒப்பந்தப்படி எதுவும் நடைபெறவில்லை. இதைக் கண்டித்தே திலீபன் உண் ணாவிரதமிருந்து உயிர் நீத்தான். உலகத்தில் அற வழியில் போராகிடுறவர்களில் தமிழர்களுக்கு இணை எவரும் இல்லை என்பதற்குச் சாட்சி திலீபன். அவன் மரணத்தை தடுத்து நிறுத்த அரசுகளும், அமைதிப்படையும் முன்வர வில்லை. அதேபோல இன்னொரு துயரமும் நடந்தது.
1987 அக்டோபர் 2-ஆம் நாள்... திரிகோணமலைக்கும், மட்டக் கிளப்புக்கும் புலிகளின் தளநாயகர்களாக இருந்த புலேந்திரன், குமரப்பா உள்ளிட்ட 17 பேர்கள் இந்தியாவி லிருந்து இலங்கைக்குப் படகில் சென்றபோது, இலங்கை கடல் எல்லைக்கு அப்பால்.. அதாவது இந்திய பகுதியில் இருந்தபோதே.... எல்லை தாண்டி வந்து, அவர்களைக் கைது செய்தது இலங்கை ராணுவம். அவர்களை கொழும்பு கொண்டு செல்ல ஆர்வம் காட்டியது இலங்கை ராணுவம். அப்படிச் செய்தால்... அவர்கள் குப்பி கடித்து மாண்டு போகலாம். அதனால் பின்விளைவுகள் மோசமாகலாம் என்பதால் 17 பேர்களையும் கொழும்பு கொண்டுசெல்வதைத் தடுக்க அமைதிப்படையின் மேஜர் ஜெனரல் ஹரிகிரட் சிங், ஊ.ர.ஃபெர்ணாண்டஸ் என்கிற தளபதியை அனுப்பி, அவர்களைப் பாதுகாக்க உத்தர விட்டார்.
இருந்தும் அதுலத் முதலி, பின்னணியில் இந்தியத் தூதர் தீட்சித் இருந்துகொண்டு, பலாலியிலிருந்து கொழும்புவுக்கு விமானம் மூலம் 17 பேர்களையும் கொண்டு செல்ல ஏற்பாடு செய்ததால்... 17 பேர்களும் சயனைட் குப்பி கடித்திருக்கிறார்கள். இந்திய மருத்துவக் குழு மூலம் ஹரிகிரட் சிங் எவ்வளவோ முயற்சித்தும், 12 பேர்கள் இறந்தே போனார்கள். புலேந்திரனும், குமரப்பாவும் இரண்டு மடங்கு சயனைட்டை விழுங்கி உயிரை மாய்த்துக் கொண்டார்கள்.
இந்திய அரசும், இந்திய ராணுவத் தின் அமைதிப் படையும் நினைத்திருந்தால், இந்த துயரத்தைத் தடுத்திருக்கலாம். ஆனால் தமிழீழ சுதந்திரத்தைக் கெடுக்க வந்த அமைதிப்படை அதை எப்படிச் செய்யும்?
இந்தியாவின் பாதுகாப்புக்கு திரிகோணமலையை உள்ளிட்ட தமிழ் ஈழப்பகுதிகளை தங்கள் வசமாக்குவது. அதற்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களை அழித்தொழிப்பது.... இவைதான் இந்தியாவின் நோக்கம். அதனால் ஒரு பதற்றமான சூழலை உருவாக்கி, தங்களை எதிர்ப்பவர்களுக்கு எதிராகப் போர் தொடுத்து, அவர்களை அழித்துவிடுவது என்ற திட்டத்திற்கு, 12 போராளிகளின் மரணத்தைப் பயன் படுத்திக்கொள்ள நினைத்திருக்கிறார்கள்.
திரிகோணமலை, மட்டக்கிளப்பு மற்றும் தமிழ் ஈழத்தின் எல்லாப் பகுதிகளிலும் மக்கள் கிளர்ச்சி செய்யத் துவங்கினார்கள். அதை அடக்குவது என்ற சாக்கில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரைத் தொடங்கியது இந்திய அமைதிப்படை.
இதையும் மேஜர்ஜெனரல் ஹரிகிரட் சிங்கே குறிப்பிடுகிறார்...
The IPKF Personnel did not Know Exactly What their mission was in Sri Lanka because at one stage, they were told to protect the LTTE Since the IPKF had Arrived on the Island as a friend to fulfill the aspirations of the tamils. But then, In a sudden turnaround, The IPKF was told that It was required to train its guns on the LTTE to whom the IPKF then become an enemy (The Intervention in Sri Lanka page: 75)
ஹரிகிரட் சிங் மேலும் சொல்கிறார்....
On 8 October 1987 Gen.Sundarji visited IPKF Head quarters at Palaly and ordered me to adopt the hard option against LTTE, the IPKF from being a Peacekeeper had to suddenly adopt an offensive stance. (The Intervention in Sri Lanka page: 77)
எல்லாமே நாடகத்தில் காட்சிகள் மாறுவது போல மாறியிருக்கின்றன. விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தவிர மற்ற எல்லாப் போராளி இயக்கங்களும் வியாபார இயக்கங்களாகவே இருந்திருக்கின்றன. உலகின் பெரிய ராணுவப்படை யில் நான்காவது படையான இந்திய ராணுவத்திற்கு, அய்ந்தாம் படையாக இருந்திருக்கின்றன.
"வேலேறு படத் தேளேறு மாய்ந்தாற் போல'’என்று சொல்வார்கள்; அப்படி இலங்கை இனவெறி அரசின் சர்வாதிகாரக் கொடுமையிலிருந்து மீளவிருந்த தருணத்தில்; வாய்க்குக் கொண்டுபோன சோற்றைத் தட்டிப் பறித்தது போல இந்திய அமைதிப்(?) படை, ஈழ சுதந்திரத்தைத் தடுத்தது! 1987-ல் எதிர்பார்த்த ஈழ விடியல் இன்னும் விடியாமலே இருக்கிறது.
கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு
"செய்யும் செயல் வேறாகவும், சொல்லும் சொல் வேறாகவும் உள்ளவரின் நட்பு, ஒருவனுக்குக் கனவிலும் துன்பம் தருவதாகும்' என்றார் வள்ளுவர். இந்தியா என்ன சொன்னது? என்ன செய்தது? தமிழர்களை ஓயாத குண்டு வீச்சுக்கு இடையில் எந்நேரமும், ‘யாருடைய உயிர் போகுமோ? நாளை என்ன ஆகுமோ?’ என்று நிம்மதி இழந்து, நித்திரை இழந்து, வாழ்வே தண்டனையாக மாறிப்போய், தங்கள் சொந்த மண்ணை- வீட்டை- வாசலை- சொந்த பந்தங்களை விட்டுப் பிரிந்து அகதி களாக- அனாதைகளாக, அகிலமெங்கும் அலைந்து திரிய வைத்ததில் இந்தியாவுக்கு அப்படி என்னதான் லாபமோ?
1987-ஆம் ஆண்டு ஜெயவர்த்தனே தலை மையிலான இலங்கை அரசு ஆட்டம் காணத் தொடங்கியிருந்தது. 1983-ஆம் ஆண்டிலிருந்து நடந்து வந்த விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் இலங்கை இனவாத அரசு இறங்கு முகமாகத்தான் போய்க்கொண்டிருந்தது. தொடர்ந்து நான்கு ஆண்டுகள் ஓயாத போர். ஓயாத வேட்டுச் சத்தம். ஒவ்வொரு நாளும் இலங்கை ராணுவ வீரர்கள் செத்துக்கொண்டி ருந்தார்கள். ஓர் ராணுவத்திற்கு இருக்க வேண்டிய தார்மீக பலம் அடியோடு கெட்டுப் போயிருந்தது. பலபேர் ராணுவத்திலிருந்தே தப்பி ஓடினார்கள். பலபேர் மனநோயாளிகளாக மாறிப் போனார்கள்.
இந்த நிலையில் வான் வழித் தாக்குதல் கைகொடுக்கும் என்று அதையும் நடத்திப் பார்த் தார்கள். ஆனால் பொடியன்கள் ஏவுகணைகளைச் செலுத்தி, அதையும் முறியடித்தார்கள்.
அந்த நேரத்தில் ஜெயவர்த்தனேவுக்கு எதிராக எழுந்து நின்றது ஓயட எனப்படும் "ஜனதா விமுக்தி பெரமுனா' கட்சி. இதனால் ஜெயவர்த்த னேவின் ஆட்சி கவிழ்க்கப்படும், கலைக்கப்படும் என்ற கலக்கம் உருவானது. அந்த நிலை ஏற்பட் டால், "ஜே.வி.பி.' ஆட்சியைக் கைப்பற்றி விடும்! தமிழர் நிலமான வடக்கையும், கிழக்கையும் விடு தலைப் புலிகள் தங்கள் வசம் எடுத்துக் கொண்டு, தமிழ் ஈழவிடுதலையை அறிவித்துவிடுவார்கள். இப்படிப்பட்ட ஒரு சூழல் அன்று அமைந் திருந்தது.
இன்னும் கொஞ்ச காலம் கடந்திருந்தால், ஹரிகிரட் சிங் சொன்னபடி தமிழ் ஈழம் விடுதலை பெற்று, புலிகளின் ஆளுகைக்கு வந்திருக்கும். யுத்தகளத்தில் நின்று போராடி, இரத்தம் சிந்திப் போராடி ஈழ விடுதலையை விடுதலைப் புலிகள் வென்றெடுக்கவிருந்த நேரத்தில், அமைதிப் படையை அனுப்பி, தமிழ் ஈழ விடுதலையை ராஜீவ்காந்தி தடுத்தார், கெடுத்தார். வேறேன்ன அவரால் சாதிக்கப் பட்டது?
ஜெயவர்த்தனேவுக்கு ராஜீவ்காந்தி எழுதிய கடிதத்தைப் பற்றிச்...
(சொல்கிறேன்)
_______
இல்லறக் கனவு!
ரகுவரன், அமலா, சரிதா உள்ளிட்டவர்கள் நடிப்பில், ஆர்.சி.சக்தி இயக்கிய படம் ‘ "கூட்டுப் புழுக்கள்'. அனுராதா ரமணன் எழுதிய கதை. இளம்பெண்ணின் இல்லறக் கனவாக சரிதா பாடுவதாக, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில், பி.சுசீலா பாடிய என் பாடல் இதோ...
பல்லவி:
இந்த மல்லிகை பூவுக்கு கல்யாணம்
குளிர் மார்கழி பனியில் ஊர்கோலம்
சொல்ல துடிக்கின்ற சந்தோசம்
அந்த சுகம் கூட ஒரு வகை சங்கீதம்
சரணம்-1:
வாவென அழைத்திடும் பள்ளியறை
என்னை நில் என்று தடுத்திடும் நாணத்திரை
பால் கொண்டு நிலம் பார்த்துச் செல்வேன்
விரல் பட்டதும் முகம் மூடிக் கொள்வேன்
ஆடும் இடை பாடும் தினம் கூடும் சுகம்
இதம் இதம்
தேகம் அதன் பாவம் தரும் மோகம் அதில்
வரும் வரும்
சரணம்-2:
தாயென சொல்லிடும் இன்ப நிலை
பெண்ணை தடுமாறச் செய்திடும் பாசவலை
சேய் கண்டு தினம் போதை கொள்ளும்
எந்தன் தெய்வம் எனை அள்ளிக் கொள்ளும்
பாசம் புது நேசம் வந்து வீசும் மனம்
நிதம் நிதம்
பாவை என்னும் பூவை அவர் நாளும் தொட
பதம் பதம்
(பாட்டுக் கச்சேரி தொடரும்)
______________
திருத்தம்!
கடந்த 2020, டிசம்பர் 30-2021-ஜனவரி 1 நக்கீரன் இதழில், "கடலூர் மாவட்ட சீட் ரேஸ்' கட்டுரையில், விருத்தாசலம் தொகுதி நிலவரத்தில், முன்னாள் எம்.எல்.ஏ. குழந்தை தமிழரசனின் மகள் டாக்டர் பல்லவி என்பதை டாக்டர் சங்கவி முருகதாஸ் எனவும், சிதம்பரம் தொகுதி நிலவரத்தில் செந்திலின் மாமனார் ராஜேந்திரன் என்பதை, கதிரவனின் மாமனார் ராஜேந்திரன் எனவும் திருத்தி வாசிக்கும்படி வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
-(ஆர்.)