அமைதிப் படையை அதிரவைத்த பொடியன்கள்!
இந்திய-இலங்கை ஒப்பந்தம் சம்பந்தமாக விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரான தம்பி பிரபாகரனுடன் கலந்து பேசுவதற்காக, தம்பியை அழைத்திருந்தார் ராஜீவ்காந்தி.
28.07.1987 அன்று டெல்லியில் பேச்சுவார்த்தை நடந்தது. ராஜீவ்காந்தி, தம்பி மற்றும் புலிகளின் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கம் ஆகியோருடன் இந்திய உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர். முதல்நாள் பேச்சுவார்த்தை நடந்தபோதே... புலிகள் அமைப்பை எளிதாக எடைபோட்டுப் பேசியிருக்கிறார் ராஜீவ்காந்தி.
"after all you are two thousand Boys" எனச் சொல்லி புலிகளின் படைபலத்தையும் இளக்காரம் செய்திருக்கிறார் ராஜீவ்காந்தி.
மறுநாள்... 29.07.1987- அன்றும் ’பேச்சுவார்த்தை தொடரும்’ என தம்பியிடம் அறிவித்தனர். இதனால் தம்பி டெல்லி அசோகா ஹோட்டலில் 518-ஆம் எண் அறையில் காத்திருந்தார்.
பேச்சுவார்த்தை எப்போது தொடங்கும் என தம்பி பிரபாகரன் காத்திருக்க... எவ்வித முன்னறிவிப்பும் செய்யாமல், பேச்சுவார்த்தை ரத்து எனவும் சொல்லாமல், அதே நாளில் இலங்கை சென்ற ராஜீவ்காந்தி, கொழும்புவில் வைத்து ஜெய வர்த்தனேவுடன் இந்திய- இலங்கை ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார்.
இந்த நிகழ்வுதான், இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் மீதும், இந்திய அரசின் நடவடிக்கைகள் மீதும் விடுதலைப் புலிகளுக்கு பெருத்த சந்தேகம் ஏற்பட மிக முக்கிய காரணமாக அமைந்துவிட்டது.
"இனியும் இவர்களை நம்பமுடியுமா?'’ என்கிற சந்தேகத்தை புலிகளுக்கு ஏற்பட்டதைப்பற்றி இந்திய அமைதிப்படையின் தளபதி ஹரிகிரட் சிங் சொன்னதை இங்கே பார்ப்போம்....
First Secretary in the Indian High Commission in colombo conveyed to Prabakaran that Rajiv Gandhi was waiting to meet him to discuss certain issue prior to signing the Accord. Prabakaran was delighted to receive this message and Agreed to leave for New Delhi.
On his arrival in new delhi, Prabakaran had Preliminary discussions with the Prime Minister on 28 July, 1987, He was Lodged in room 518 of the Ashoka, Hotel and awaited for another meeting with the Prime Minister, unaware that the latter was already in Colombo negotiating an agreement for which. J.N. Dixit, India's high Commissioner in Sri Lanka had laid the ground, the Indian Prime Minister's visit was telecast live, And watching it the LTTE Leaders felt betrayed (The Intervention in Sri Lanka Page : 26)
உண்மையில் ராஜீவ்காந்தி எதார்த்தமானவ ராக நடந்துகொள்ளவில்லை.
நாம் நினைத்தபடி தமிழ் ஈழப்பகுதியை இந்தியாவின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் என்றால்... விடுதலைப் புலிகள் அதற்குச் சம்மதிக்க மாட்டார்கள்’ என்பதை இந்தியா நன்றாகவே தெரிந்து வைத்திருந்தது. அதனால்தான் விடுதலைப் புலிகளை ஒதுக்கிவிட்டு... முடிந்தால் ஒழித்துக்கட்டி விட்டுத்தான் தங்களது நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று கருதினார்கள்.
72 மணி நேரம் அல்லது 7 நாட்களில் விடுதலைப் புலிகளை ஒழிக்கும் காரியம் நிகழ்ந்துவிடும் என்று நம்பினார்கள். இதை ஹரிகிரட் சிங், தான் அப்படிக் கணித்ததாக ஒப்புக்கொள்ளவில்லை. ஒருக்கால் சுந்தர்ஜியின் கணிப்பாக இருந்திருக்கக்கூடும்.
உண்மைதான்; இந்தியாவின் பாதுகாப்பு ஒன்றை மட்டுமே மனதில் வைத்து, தமிழ் ஈழப் பிரதேசத்தை இந்தியா தன் முழுக் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதை, எக்காரணம் கொண்டும் புலிகள் ஏற்கமாட்டார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. வெள்ளைக்காரனுக்கு அடிமையாய் இருந்த காலம் போய்; சிங்களவனுக்கு அடிமையாய் இருக்கும் காலமும் போய்; இந்தியப் பேரரசுக்கும் அடிமைகளாக தமிழ் மக்கள் அடங்கிக்கிடக்க வேண் டிய நிலை வந்தால்... அதை எதிர்ப்பதைத்தான் விடுதலைப் புலிகள் லட்சியமாகக் கொள் வார்களே தவிர; ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
விடுதலைப் புலிகள் பற்றிய ஹரிகிரட் சிங்கின் மதிப்பீட்டை யும், இந்த நேரத் தில் நாம் நினைத் துப் பார்க்க வேண் டும். 1991-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஹரிகிரட் சிங் பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில் விடுதலைப் புலிகள் பற்றிய அவரின் மதிப்பீட்டை நாம் காணமுடியும்.
நிருபரின் கேள்வி: How is it that the LTTE Managed to Sting Like Scorpions? How would you describe the opposition that you battled with?
ஹரிகிரட் சிங் பதில்: The LTTE is a terrorist force to reckon with, very well trained, equipped with the most Modern of small arms, wireless facilities, anti-tank and anti-personnel mines, they have AK-47 and 5.56 assault rifles. Later they were also found developing Missile technology - they are absolutely uncompromising in their aim to achieve Eelam
(The Intervention in Sri Lanka Page : 147 )
தமிழ் ஈழப்பகுதியை அடக்கி ஆள நினைக்கும் இந்தியாவின் ‘காலனி ஆதிக்க கனவை’ தொடக்கத்திலேயே தம்பி பிரபாகரன் எதிர்த் தார். ஆனால் புலிகள்பற்றி மிகத் தாழ்வான எண்ணத்தையே கொண்டிருந்தார் ராஜீவ் காந்தி. ‘உலகிலேயே பெரிய படைகளில் நான்காம் படை நமது படை; இந்தியப் படையை வைத்துப் பார்க்கும்போது இந்தப் பையன்கள் அற்பமானவர்கள்’ என்றுதான் அவர் கருதி இருந்தார். பொடியன்கள் எத்தனைபேர்கள் என்பது முக்கியமல்ல; எத்தகைய போர்க்குணம் கொண்டவர்கள் என்பதுதான் முக்கியம் என்பதை ராஜீவ்காந்தி தன் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை.
இந்தியாவின் பாதுகாப்பிற்காகத் தமிழ் ஈழத்தைத் தங்கள் காலடியில் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற முயற்சிக்கு முட்டுக் கட்டையாக விடுதலைப் புலிகள் இருந்தார்கள் என்பதால், அவர்களை அடியோடு ஒழித்துக் கட்டிவிடுவது என்ற முடிவுக்கு ராஜீவ்காந்தி வந்தார்.
அதனால்தான்....
யாழ்ப்பாணம் மருத்துவக் கல்லூரியில் வைத்து புலிகள் தலைவர் தம்பி பிரபாகரனை கைது செய்யவோ... முடியாவிட்டால் சுட்டுக் கொல்லவோ உத்தரவிட்டார் ராஜீவ். அதைப்பற்றிச்....
(சொல்கிறேன்)
____________
ஆகாசம் போலத் தாய்ப்பாசம்!
கலைஞரின் பூம்புகார் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், முரளி, ராதிகா உள்ளிட்டோர் நடிப்பில், மணிவண்ணன் இயக்கத்தில் வந்த படம் ‘புயல் பாடும் பாட்டு’. இளையராஜா இசையில், சித்ரா குரலில் வந்த எனது பாடல் இதோ...
கண்ணான கண்ணே கண்ணீர் ஏன் இங்கே
அன்பான நெஞ்சே சந்தோஷம் எங்கே
தாய் பாடும் ராகம் நான் பாடும் நேரம்
சரணம்-1
போதை தேடிப் போகும் நெஞ்சில்
ஞான தீபம் ஏறுமா
ஓடும் நீரில் போடும் கோலம்
கண்ணில் வந்து தோன்றுமா
மேற்கில் காலை தோன்றாது
மின்னல் மாலை ஆகாது
தோளோடு தாங்கி தாலாட்டுப் பாடி
ஆளாக்கும் உள்ளம் என்னென்ன எண்ணும்
உன்னை நான் கேட்கும் கேள்வி ஒன்றுதான்
சரணம்-2
கண்கள் மூட நேரம் இன்றி
பிள்ளை தூங்கப் பாடுவாள்
காற்று வந்து தீண்டும் என்று
சேலை கொண்டு மூடுவாள்
அன்பு கொண்ட தாய்ப் பாசம்
எல்லை இல்லா ஆகாசம்
நோயோடு வாழும் தாய் வாழ வேண்டும்
நீடூழிக் காலம் நீ வாழ வேண்டும்
உன்னை நான் அன்பு கொண்டு வாழ்த்தினேன்
(பாட்டுக் கச்சேரி தொடரும்)