துயரத்தில் துணை நின்ற தம்பி!
ஊருக்கும், உலகத்துக்கும்... பிரபாகரன் போருக்கு அஞ்சாத மாவீரன். ஆனால் எங்களுக்கு அவர் செல்லப்பிள்ளை.
பிணையில் மதுரையில் தங்கியிருந்த தம்பி பிரபாகரனும், புதுக்கோட்டையில் தங்கியிருந்த இராகவனும் அன்று வீட்டிற்கு வந்தார்கள். கூடவே பேபியும் வந்திருந்தார்.
"அப்புறமென்ன... “சித்தப்பா வர்றார்'’என என் பிள்ளைகளும், ’"தம்பி வருகிறார்'’’என நானும், “"பிள்ளைகள் வருகிறார்கள்'’ என என் மனைவி தமிழரசியும் அடைந்த மகிழ்ச்சியில் வீடே அமர்க்களப் பட்டது.
தம்பிக்குப் பிடித்த கணவாய் மீன் வாங்கி வந்து சமையல் செய்து வைத்தார் என் மனைவி. நாங்கள் ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். இராகவன் திடீரென எங்கோ கிளம்பிப்போனார். சாப்பாடு நேரம் கடந்தும் அவர் வரவில்லை. எல்லோ ருக்கும் நல்ல பசி. மீன் குழம்பு வாசம் பசியை கூடுதலாக்கியது.
""அண்ணி... ஏதாவது பைக் கிடைத்து விட்டால் போதும், ராகவன் ஊர்சுற்றுவார். நாம சாப்பிடலாம் அண்ணி''’என என் மனைவியிடம் சொன்னார் தம்பி. வழக்கம்போல கூடத்தில் வட்டமாக அமர்ந்து உணவருந்தினோம்.
சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த பின்... வழக்கம்போல தம்பி தங்கும் தோழர் நெடுமாறன் வீட்டிற்கு தம்பியும், பேபியும் கிளம
துயரத்தில் துணை நின்ற தம்பி!
ஊருக்கும், உலகத்துக்கும்... பிரபாகரன் போருக்கு அஞ்சாத மாவீரன். ஆனால் எங்களுக்கு அவர் செல்லப்பிள்ளை.
பிணையில் மதுரையில் தங்கியிருந்த தம்பி பிரபாகரனும், புதுக்கோட்டையில் தங்கியிருந்த இராகவனும் அன்று வீட்டிற்கு வந்தார்கள். கூடவே பேபியும் வந்திருந்தார்.
"அப்புறமென்ன... “சித்தப்பா வர்றார்'’என என் பிள்ளைகளும், ’"தம்பி வருகிறார்'’’என நானும், “"பிள்ளைகள் வருகிறார்கள்'’ என என் மனைவி தமிழரசியும் அடைந்த மகிழ்ச்சியில் வீடே அமர்க்களப் பட்டது.
தம்பிக்குப் பிடித்த கணவாய் மீன் வாங்கி வந்து சமையல் செய்து வைத்தார் என் மனைவி. நாங்கள் ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். இராகவன் திடீரென எங்கோ கிளம்பிப்போனார். சாப்பாடு நேரம் கடந்தும் அவர் வரவில்லை. எல்லோ ருக்கும் நல்ல பசி. மீன் குழம்பு வாசம் பசியை கூடுதலாக்கியது.
""அண்ணி... ஏதாவது பைக் கிடைத்து விட்டால் போதும், ராகவன் ஊர்சுற்றுவார். நாம சாப்பிடலாம் அண்ணி''’என என் மனைவியிடம் சொன்னார் தம்பி. வழக்கம்போல கூடத்தில் வட்டமாக அமர்ந்து உணவருந்தினோம்.
சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த பின்... வழக்கம்போல தம்பி தங்கும் தோழர் நெடுமாறன் வீட்டிற்கு தம்பியும், பேபியும் கிளம்பினார்கள். நெடுமாறன் வீடு, எங்கள் வீட்டுக்குப் பின்புற வீதியில்தான் இருந்தது.
"இராகவனை இன்னும் காணோமே... ஒரு பாத்திரத்துல கணவாய் மீனை மட்டுமாவது போட்டு இவங்ககிட்ட கொடுத்துவிடலாம். ராகவன் வந்தா சாப்பிட்டுக்கட்டும்'’என என் மனைவி என்னிடம் சொல்ல... பால்கனிக்குச் சென்று பார்த்தோம். பிரபாகரனும், பேபியும் நடந்து போய்க்கொண்டிருந்தார்கள்.
"தம்பி'’என்று அழைத்தேன். திரும்பி வந்தார்கள்.
""தம்பி.... இராகவன் இங்க வந்தா சாப்பிடட்டும். சாப்பிடாம அங்க வந்தார்னா... மீன் மட்டுமாவது சாப்பிடட்டும். ஒரு பாத்திரத்துல மீன் போட்டுத் தரவா?''’என என் மனைவி கேட்க...
""கொடுங்க அண்ணி நான் கொடுத்துடுறேன்''’என்றார் தம்பி.
மீனை ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொடுக்கவும், அதை வாங்கிக்கொண்டு... மறுபடி தெருவில் இறங்கி நடந்தார்கள்.
காத்திருந்து... மீன் உணவு வைத்த பாத்திரத்தை வாங்கிக்கொண்டு, தெருவில் இறங்கி பள்ளிக்குச் செல்லும் சின்னப் பிள்ளைபோல தம்பி நடந்துபோனதை பால்கனியிலிருந்து பார்த்தோம்.
"குழந்தை மாதிரி இருக்கும் இவரப் பார்த்தா... கண்டவுடன் சுடுற கொடுமைக்காரர்னு சொன்னாங்க?'’’என என் மனைவி வியந்துபோனார்.
1986-ஆம் ஆண்டு அக்டோபர் 29-ஆம் நாள்... எங்கள் வீட்டில் ஒரு பெரும் துயரம் ஏற்பட்டது.
என் மகள் கண்ணகி தீ விபத்தில் இறந்துபோனாள்.
சுடுகாடு வரை என் கைகளைப் பிடித்துக்கொண்டு ஆறுதலாக நடந்தே வந்ததுடன்... நாங்கள் நிலைகுலைந்து போன அந்த நேரத்தில்... தம்பி பிரபாகரன் இரண்டு நாட்கள் எங்களோடு தங்கியிருந்து எங்களைத் தேற்றி னார்.
என் மகள் இறந்த சில நாட்களில்... 22-11-1986 அன்றுதான் தம்பி உண்ணாநோன்பு போராட் டத்தில் ஈடுபட்டிருந்தார். அப் போது அவர் இந்திரா நகரில் தங்கியிருந்தார். எங்கள் மகளை இழந்த துன்பம் எங்களை வாட்டிக்கொண்டிருந்த நிலை யிலும்... நானும், என் மனைவியும் சென்று தம்பியைப் பார்த்துவிட்டு வந்தோம்.
தம்பி பிரபாகரன் ஈழம் செல்ல தயாராகிக்கொண்டிருந்த காலக்கட்டத்தில்... ஒருநாள் என் மகன், ""சித்தப்பா... நீங்க நாட்டுக்குப் போகும்போது என்னையும் அழைத்துக்கொண்டு போங்க. நானும் உங்களோடு சேர்ந்து விடுதலைப்போரில் ஈடுபடணும்''’ என்றான்.
""நீங்கள் என்னுடன் வந்துவிட்டால் அப்பாவையும், அம்மாவையும் யார் பார்த்துக் கொள்வார்கள்? என்னோடு வரக்கூடாது... இங்குதான் இருக்க வேணும்''’என்று அன்புக் கட்டளையிட்டார் தம்பி.
தம்பி, தனது நாட்டுக்குச் சென்று சிலகாலம் சென்றபின்... தம்பி இறந்துவிட்ட தாக வதந்தி பரவியது. ஓரிரு பத்திரிகையில் செய்திகளும் வந்தது. அதைப் படித்ததும் அதிர்ச்சியான என் மகன் புகழேந்தி, ஒரு கேனில் பெட்ரோலை நிரப்பிக்கொண்டு தலைமைச் செயலகம் சென்றான். பெட் ரோலை தன்மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றான். காவல்துறையினர் அவனை கைது செய்துகொண்டு போனார்கள்.
1993-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30-ஆம் நாள் என் மகன் புகழேந்தியின் வாரிசு பிறந்தான். நான் மருத்துவமனையில் குழந் தையை எடுத்து என் மடியில் வைத்துக் கொண்டு... “"திலீபன்... திலீபன்.... திலீபன்'’என மூன்று முறை அழைத்தேன். குழந்தையை தன் மடியில் வைத்துக்கொண்ட என் மனைவி... “"தம்பி... தம்பி... தம்பி...'’’என அழைத்தார்.
உண்ணாநோன்பிருந்து உயிர்நீத்த ஈழப்போராளி திலீபன் பெயரைத்தான் வைத்தேன் பேரனுக்கு. பள்ளிக்கூடத்தில் அவன் பெயர் திலீபன். வீட்டில் அவனை ‘“"தம்பி'’ என்றே அழைத்து மகிழ்ந்தோம்.
1995-ஆம் ஆண்டு பிப்ரவரி 5-ஆம் நாள். எங்கள் மகன் புகழேந்தி விபத்தில் சிக்கியதால்... மீண்டும் நாங்கள் மீளமுடியா துயரம் ஒன்றிற்கு நாங்க ஆளானதைச்...
(சொல்கிறேன்)
___________
தாய்மைக் குரல்!
ஸ்ரீதர் இயக்கத்தில், கே.ஆர்.ஜி. தயாரிப்பில், சுஜாதா, ராஜேஷ், இளவரசி, சுரேஷ் உள்ளிட்டவர்கள் நடித்த படம் ‘"ஆலய தீபம்.'
கதைப்படி பிரபலமான நடிகை மகாலட்சுமியும், அவளின் கணவனும் பிரிந்து வாழ்கிறார்கள். அவர்களின் மகள் ராதா அப்பாவுடன் வாழ்கிறாள். மகா லட்சுமி தன் அம்மா என்பது தெரியாம லேயே அவளின் தீவிர ரசிகையாக இருக் கிறாள் ராதா. உண்மை தெரியவரும்போது.... உணர்வுகள் பொங்குமே. தன் மகள் மீதுள்ள பிரியத்தையும், மகளே தனக்கு தாயாக மாறி தாலாட்டுப் பாடவேண்டும் என்பதையும், மகளின் கல்யாணம் குறித்தும் தாய்மை பொங்கப் பாடுகிறாள்.
மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில், வாணிஜெயராம் குரலில் ஒலித்த... நான் எழுதிய பாடல் இதோ...
பல்லவி:
ஆகாயம் காணாத சூர்யோதயம்
எந்நாளும் தேயாத சந்ரோதயம்
மகளாய் பிறந்ததோ...
உயிராய் கலந்ததோ!
சரணம்-1:
தாலாட்டு உனக்காக நான் பாடினேன்
தாயன்பில் எனக்காக நீ பாடம்மா
உன்பாட்டு தேன் உண்டு பசியாறுவேன
நான் உந்தன் மடிமீது இளைப்பாறுவேன்
சரணம்-2:
இளங்கோவும் காணாத என் கண்ணகி
எழில் கொஞ்சும் ஆட்டத்தில் பொன்மாதவி
நான் வாழ்ந்த வரலாறு நீதானம்மா
நான் எனறும் நீ என்றும் வேறேதம்மா
சரணம்-3:
அம்மா உன் கல்யாணநாளும் வரும்
ஆனந்தம் பாடாதோ நாதஸ்வரம்
உனை வாழ்த்த தென்பாண்டி சங்கம் வரும்
கண்ணே என் இரு கண்ணில் கங்கை வரும்
(பாட்டுக் கச்சேரி தொடரும்)