அந்த மாவீரன் எங்கள் செல்லப்பிள்ளை!

ன்றை இழந்துதான் ஒன்றைப் பெறவேண்டும். எதையும் இழக்காமல் எல்லாவற்றையும் பெற முடியாது.

பொதுவாக என் வாழ்க்கை என்பது போராட்டங்களும், துன்பங்களுமே நிறைந்ததாகும். என் தனிவாழ்வும் அப்படித்தான்... என் பொதுவாழ்வும் அப்படித்தான். நான் நீண்டகாலம் அரசியல் வாழ்வு நடத்தியவன். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களோடு 22 ஆண்டு காலம் மிகநெருக்கமாக இருந்தவன். ஆனால் நான் அரசியலில் சிலர் அனுபவிக்கின்ற சுகபோகங்களை விரும்பியதில்லை. நான் அப்படியான அரசியல்வாதியாக என்றுமே இருந்ததில்லை. என்னால் அப்படி இருக்க முடியவில்லை.

pulavar

Advertisment

அரசியல்வாதியாக இருந்தும்... நான் நானாகவே இருந்த தால்தான், நான் பிறரின் அன்பிற்கும், அபிமானத்திற்கும்... குறிப்பாக தமிழீழ விடுதலை இயக்கத் தம்பிகளின் மதிப்பிற்குரியவனாக, மாவீரன் பிரபாகரனே... “"அண்ணன்'’ என்று என்மீது அன்பு காட்டும் அளவிற்கு... என் மனைவி, அந்தத் தம்பியை "கொழுந்தன்'’ என பாவிக்கிற அளவிற்கு... என் பிள்ளைகள் அவரை ‘"சித்தப்பா'’என உறவு கொண்டாடுகிற அளவிற்கு அபிமானத்தைப் பெற முடிந்தது.

தம்பி பிரபாகரனுக்காக... அவருக்கு மிகவும் பிடித்த கணவாய் மீன்களை தேடிப்பிடித்து வாங்கிவந்து சமைத்துத் தந்த என் மனைவி தமிழரசி... அவரை பிள்ளையைப் போல் பாவித்து உணவளித்த என் மனைவி, முதன்முதலில் தம்பி பிரபாகரனைப் பார்த்தபோது... ஒருவித அச்சத்தில் உடல் வியர்த்துப் பதட்டமானார்.

ஒருநாள்....

Advertisment

நானும், என் மனைவியும் வெளியே சென்றுவிட்டு மாலை நேரத்தில் வீடு திரும்பியபோது... வரவேற்பறையில் இருந்த சோபாவில் பேபி அமர்ந்திருந்தார். பக்கத்தில் ஒருவரும் அமர்ந்திருந்தார். நான் பேபியிடம் பேசிக்கொண்டே அவருடன் வந்திருந்தவரைப் பார்த்தேன்... எனக்குள் ஆனந்த அதிர்ச்சி ஏற்பட்டது.

"தம்பீ'’எனச் சொல்லியவாறு அவரை தழுவிக்கொண்டேன்.

அதற்குள் என் மனைவி வீட்டின் கூடத்திற்குள் சென்றுவிட்டார். தம்பியை அறிமுகப்படுத்தும்விதமாக கூடத்திற்கு அழைத்துச் சென்று... "இவர்தான் தம்பி'’என்று என் மனைவிக்கு அறிமுகப்படுத்தினேன்.

என் மனைவிக்கு உடம்பெல்லாம் வேர்த்துப்போனது. தட்டுத்தடுமாறி... தம்பிக்கு “வணக்கம்’சொன்னார். தம்பி சிரித்துக்கொண்டே... “""வணக்கம் அண்ணி''’என்றார்.

தம்பி பிரபாகரனைப் பார்த்து என் மனைவி பதட்டமானது ஏன்?’ என குழம்பிப்போன நான்... தம்பியை சோபாவில் அமரவைத்துவிட்டு, சமையலறைக்குச் சென்று என் மனைவியிடம் விசாரித்து ஒரு விஷயத்தை தெரிந்துகொண்டேன்.

"பிரபாகரன் சற்றும் யோசிக்காமல் யாரையும் சுட்டு விடுவார்'’என்றொரு கட்டுக்கதையை என் மனைவியிடம் யாரோ சொல்லியிருக்கிறார்கள். அதுதான் அவரின் அதிர்ச்சிக்கு காரணம் என்பதைத் தெரிந்துகொண்டு... "அதெல்லாம் தவறான செய்தி'’’ எனச் சொன்னதுடன்... தம்பியின் அருமை, பெருமை பற்றிக் கொஞ்சம் சொல்லி ஆசுவாசப்படுத்தினேன்.

தம்பி பிரபாகரன், வழக்கொன்றிற்காக ஜாமீனில் மதுரையில் தங்கியிருந்தார். மதுரையிலிருந்து தம்பி சென்னைக்கு வரும்போதெல் லாம் எங்கள் வீடு அமர்க்களப்பட்டுப் போகும்.

தம்பி வருகிற சேதியைக் கேள்விப்பட்டவுடனேயே... என் மகன் புகழேந்தி, "எங்க சித்தப்பா வர்றார்... எங்க சித்தப்பா வரப்போறார்...'’என பைத்தியம் பிடித்தவனைப்போலக் கத்துவான். தம்பி மீது அவனுக்கு அத்தனை பாசம். என் மகள் கண்ணகியும் தன் தோழிகளிடம், “"இன்னைக்கு எங்க சித்தப்பா வர்றார்'’’ என பெருமை பொங்கச் சொல்வாள்.

என் மனைவியும் தம்பிக்குப் பிடித்த கணவாய் மீன் உள்ளிட்ட உணவு வகைகளைச் சமைப்பார். தம்பி வந்ததுமே... நாங்கள் எல்லாருமே வீட்டின் நடுக் கூடத்தில் வட்டமாக உட்கார்ந்து உணவருந்து வோம்.

நாட்கள் செல்லச் செல்ல... தம்பியை, உண்மையாகவே என்னுடன் பிறந்த தம்பியைப் போல் நானும், தனது உண்மையான கொழுந்தனைப்போல என் மனைவியும் மனதில் எண்ணிக் கொண்டோம். நாங்கள் பாவித்த உறவு முறையைப் பின்பற்றி எங்கள் பிள்ளைகளும் சொந்த சித்தப்பாவாகவே பிரபாகரனை பாவித்தனர்.

என் மகன் புகழேந்தி, தம்பியின் மடியில் படுத்துக்கொண்டு... “"சித்தப்பா... சித்தப்பா...'’’ என்று அவரின் கன்னத்தைக் கிள்ளுவான்.

"ஏண்டா அவரை தொல்லை பண்ற?'’’ என என் மனைவி திட்டினால்... “""சின்னப்பிள்ளைதானே.... அதான் என்னோடு விளையாடுறார்... விடுங்கள் அண்ணி''’’ என்பார் தம்பி.

கண்டவுடன் சுடுகின்ற கோபக் காரர் பிரபாகரன்’என்கிற எண்ணத்தை மாற்றிக்கொண்டு, தம்பி மீது தாய்ப்பாசம் காட்டத்தொடங்கினார் என் மனைவி.

ஊருக்கும், உலகத்துக்கும்... பிரபாகரன் போருக்கு அஞ்சாத மாவீரன். ஆனால் எங்களுக்கு அவர் செல்லப்பிள்ளை.

எங்கள் குடும்பத்தின் தாங்கமுடியா துயரத்தில் தம்பி பிரபாகரனும் பங்கெடுத்ததைச்....

(சொல்கிறேன்)

படம் உதவி: ஞானம்

____________

காதல் கூட்டணி!

sivakumar

"ஆஸ்கார் மூவீஸ்' எம்.பாஸ்கர் எழுதி, தயாரித்து, இயக்கிய படம் "பன்னீர் நதிகள்'’

சிவக்குமார், அமலா நடிப்பில், சங்கர்-கணேஷ் இசையில் வந்த இப்படத்தில்... நான் எழுதிய, மலேசியா வாசுதேவன்-வாணி ஜெயராம் குரலில் ஒலித்த பாடல் இது.

காதல் உள்ளங்களின் உடற் கூடலையும், அரசியல் தேர்தலின் கூட்டணியையும் இணைத்து சில உதாரணங்களை இந்தப் பாடலில் கையாண்டேன். இதோ... பாடல்...

பல்லவி:

முத்தம் என்னும் நாவலின் இன்பம் என்ன

மோகம் என்னும் பாடலின் சந்தம் என்ன

பத்து விரல் கோலத்தின் வண்ணம் என்ன

பள்ளியறை பாடத்தின் அர்த்தம் என்ன

எங்கே என் சொர்க்கம் இங்கே உன் பக்கம்

உன் கண்ணோரம் செந்தூரக் கோலம்

சரணம்-1:

காதல் என்னும் தேசம் எங்கள் தேசம் ஆகும்

அதில் நாள்தோறுமே இடைத் தேர்தல்களே

கையும் கையும் ஒன்றில் ஒன்று கூட்டுச்சேரும்

இரு கன்னங்களில் இதழ் சின்னங்களே

மாலை நேரம் நம் மன்றம் கூடும்

மையல் ராகம் நம் கண்கள் பாடும்

வரி மீது வரி போடு இதழ் மீதிலே

சரணம்-2:

கண்ணில் பாதி சொல்லில் பாதி மெல்லப்பேசு

பிறர் கேட்காமலும் நமை பார்க்காமலும்

கள்ளில் பாதி முள்ளில் பாதி உந்தன் பார்வை

ஒன்றில் காதல் வரும் ஒன்றில் காயம் படும்

கன்னம் போடும் உன் கள்ளப்பார்வை

என்றும் தேவை உன் இன்பச்சேவை

தினம் தோறும் இனி வேண்டும் சுகவேதனை

(பாட்டுக் கச்சேரி தொடரும்...)