எம்.ஜி.ஆரின் கலையுலக வாரிசு!
எங்களுடைய மாவட்டத்துக்காரர் தம்பி கே.பாக்யராஜ். திரைக்கதை அமைப்பதில் மிகத் திறமையானவர். எளிமையாகவும், அதேசமயம் வலிமையாகவும் காட்சிகளை அமைப்பார். பாக்யராஜ் இயக்கி நடித்த "டார்லிங் டார்லிங் டார்லிங்' படம்தான் நான் அவருக்கு பாடல் எழுதிய முதல் படம். அது ஒரு அழகான டூயட் பாடல்.
"அழகிய விழிகளில் அறுபது கலைகளும் எழுதிய திருமகளே' என்ற பல்லவிதான் அவருக்காக நான் எழுதிய முதல் பாட்டு.
நடிகர், கதாசிரியர், திரைக்கதாசிரியர், வசனகர்த்தா, தயாரிப்பாளர், பத்திரிகை ஆசிரியர் என பன்முகத்தன்மையுடன்... பெரும் வெற்றிகளைக் குவித்த பாக்யராஜ், சென்னை வந்த புதிதில் என்னிடம் கொஞ்சநாள் உதவியாளர்போல பணியாற்றினார்.
"நீ சிரித்தால் நான் சிரிப்பேன்' என்கிற படம் ஒன்றில் பணியாற்றியிருக்கிறார் பாக்யராஜ். அந்தப் படம் தொடங்கின வேகத்திலேயே நிறுத்தப்பட்ட நிலையில்... என்னைத்தேடி வந்தார். அவருடைய கையெழுத்து அச்சுப் பதித்ததுபோல மிக அழகாக இருந்தது. அந்தச் சமயம் நான் புரட்சித்தலைவர் அண்ணன் எம்.ஜி.ஆரின் "பல்லாண்டு வாழ்க' படத்திற்கு பாட்டெழுதுவதற்காக கிளம்பினேன். பாக்யராஜையும் என்னுடன் அழைத்துச் சென்றேன். நான் பாடலுக்கான வரிகளைச் சொல்லச் சொல்ல... அதை அழகாக எழுதினார்.
அப்போதே நான் பாக்யராஜின் திறமையை ஓரளவு கணித்திருந்தேன். என் கணிப்பு பொய்க்கவில்லை. ""எனது கலையுலக வாரிசு'' என புரட்சித் தலைவராலேயே அடையாளம் காட்டப்படுகிற அளவிற்கு பாக்யராஜ் வளர்ச்சி கண்டார்.
"முந்தானை முடிச்சு' படம் அசுரத்தனமாக வெற்றிபெற்று... பாக்யராஜின் செல்வாக்கை பலமடங்கு உயர்த்தியது. அந்தப் படத்தில் நான் ஒரு பாடலை எழுதினேன்.
வாயாடியான குறும்புக்காரி தன் நண்பர்களிடம் தனக்கு வரப்போகிற கணவன் எப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும் என்பதைச் சொல்வதாக அ
எம்.ஜி.ஆரின் கலையுலக வாரிசு!
எங்களுடைய மாவட்டத்துக்காரர் தம்பி கே.பாக்யராஜ். திரைக்கதை அமைப்பதில் மிகத் திறமையானவர். எளிமையாகவும், அதேசமயம் வலிமையாகவும் காட்சிகளை அமைப்பார். பாக்யராஜ் இயக்கி நடித்த "டார்லிங் டார்லிங் டார்லிங்' படம்தான் நான் அவருக்கு பாடல் எழுதிய முதல் படம். அது ஒரு அழகான டூயட் பாடல்.
"அழகிய விழிகளில் அறுபது கலைகளும் எழுதிய திருமகளே' என்ற பல்லவிதான் அவருக்காக நான் எழுதிய முதல் பாட்டு.
நடிகர், கதாசிரியர், திரைக்கதாசிரியர், வசனகர்த்தா, தயாரிப்பாளர், பத்திரிகை ஆசிரியர் என பன்முகத்தன்மையுடன்... பெரும் வெற்றிகளைக் குவித்த பாக்யராஜ், சென்னை வந்த புதிதில் என்னிடம் கொஞ்சநாள் உதவியாளர்போல பணியாற்றினார்.
"நீ சிரித்தால் நான் சிரிப்பேன்' என்கிற படம் ஒன்றில் பணியாற்றியிருக்கிறார் பாக்யராஜ். அந்தப் படம் தொடங்கின வேகத்திலேயே நிறுத்தப்பட்ட நிலையில்... என்னைத்தேடி வந்தார். அவருடைய கையெழுத்து அச்சுப் பதித்ததுபோல மிக அழகாக இருந்தது. அந்தச் சமயம் நான் புரட்சித்தலைவர் அண்ணன் எம்.ஜி.ஆரின் "பல்லாண்டு வாழ்க' படத்திற்கு பாட்டெழுதுவதற்காக கிளம்பினேன். பாக்யராஜையும் என்னுடன் அழைத்துச் சென்றேன். நான் பாடலுக்கான வரிகளைச் சொல்லச் சொல்ல... அதை அழகாக எழுதினார்.
அப்போதே நான் பாக்யராஜின் திறமையை ஓரளவு கணித்திருந்தேன். என் கணிப்பு பொய்க்கவில்லை. ""எனது கலையுலக வாரிசு'' என புரட்சித் தலைவராலேயே அடையாளம் காட்டப்படுகிற அளவிற்கு பாக்யராஜ் வளர்ச்சி கண்டார்.
"முந்தானை முடிச்சு' படம் அசுரத்தனமாக வெற்றிபெற்று... பாக்யராஜின் செல்வாக்கை பலமடங்கு உயர்த்தியது. அந்தப் படத்தில் நான் ஒரு பாடலை எழுதினேன்.
வாயாடியான குறும்புக்காரி தன் நண்பர்களிடம் தனக்கு வரப்போகிற கணவன் எப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும் என்பதைச் சொல்வதாக அமைந்த அந்தச் சூழலுக்கு நான் எழுதிய பாடல்...
பல்லவி:
நான் புடிக்கும் மாப்பிள்ளைதான் / நாடறிஞ்ச மன்மதன்தான் / நான் போடுற கோட்டுக்குள்ள- கட்டுப்பட்டு / வாழணும் வீட்டுக்குள்ள / நான் கைக்கட்டி வாய்பொத்தி நில்லுன்னா நிக்கணும் டோய் / அடடடட....
சரணம்-1:
மூஞ்சிய தூக்காம காஞ்சிப்புரப்பட்டு / வாங்கிக் கொடுக்கணும் டோய் / ராத்திரி ஷோவுக்கு டூரிங்கு டாக்கீஸு / கூட்டிட்டு போகணும் டோய் / சாமத்தில கால் வலிச்சா / நீவிவிட கத்துக்கணும் / சேவல் கோழி கூவும் முன்னே / வாசலையும் கூட்டணும் டோய் / ஆக மொத்தத்தில் பொண்டாட்டி / நீயில்ல மாப்பிள்ளை டோய் / டும் டும் டும்...
சரணம்-2:
மாமான்னு கூப்பிட்டா ஏமான்னு கேட்காம / தாப்பாள போடணும் டோய் / மானுன்னு தேனுன்னு மல்லிகை பூ வச்சு / மாருல சாய்க்கணும் டோய் / ஆம்பிள்ளதான் பெத்துக்கணும் / ஆரிராரோ பாடிக்கணும் / ஊர் உலகம் மெச்சும்படி / ராணி என வச்சுக்கணும் / ஒரு வப்பாட்டி கிப்பாட்டி / வைக்காம பாத்துக்கணும் / ஆமாமமா...
ஒருநாள் பாக்யராஜ் அழைப்பின்பேரில் அவரது வீட்டில் சந்தித்தேன். வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது... ""என்னோட அடுத்த படத்துக்கு நானே மியூஸிக் பண்ணலாம்னு முடிவெடுத்திருக்கேன்'' என்றார். வாழ்த்துகளை தெரிவித்தேன். சொன்னபடியே "இது நம்ம ஆளு' படத்திற்கு இசையமைத்தார். இதில் நான் பாடல்களை எழுதினேன். முதன்முதலாக அவர் பாடிய பாடலையும் நான் எழுதினேன்.
பல்லவி:
பச்சமல சாமி ஒன்னு
உச்சிமல ஏறுதுன்னு
எடுடா தம்பி மேளம் - கொஞ்சம்
எதமா போடு தாளம்
என்னச் சொல்லி குத்தமில்ல
யாரும் இங்கே சுத்தமில்ல
நாட்ட பாத்துத்தான் ரூட்ட மாத்துனேன்
சரணம்-1:
காவேரியின்னும் கங்கையின்னும் பேர வெச்சான்
ஆனாலும் அந்த தண்ணி ரெண்டும் ஒண்ணுதான்
ஆளாளுக்கொரு ஜாதி இங்கே சொல்லி வெச்சான்
ஆனாலும் நம்ம ஜாதி எல்லாம் ஒண்ணுதான்
பாண்டியிலே நம்ம பாரதியார் இருந்தார்
பக்கத்திலே ஒரு தாழ்ந்தவனை அழைச்சார்
பூணுலத்தான் நீ போடுன்னா
எல்லாரும் ஐயருன்னு வெளுத்து வாங்கினார்
சரணம்-2:
பால் போல ஒரு வெள்ள நிறம் கள்ளுக்குண்டு
நாய் போல பல குள்ள நரி கூட்டம் உண்டு
யார் வாழ்க்கையிலும் அந்தரங்க பந்தல் உண்டு
ஓர் நாளில் அது அம்பலத்தில் வந்ததுண்டு
கட்டுக்கட்டா திருநீரை பட்டை அடிப்பான்
விட்டுப்புட்டா அவன் ஊர கொள்ளை அடிப்பான்
என் வேஷத்தால் ஊர் மாறணும்
குனிஞ்சு கெடந்தவங்க நிமிர்ந்து நடக்கவே
ரட்சித்தலைவரின் மறைவுக்குப்பின் அ.தி.மு.க. இரண்டுபட்டிருந்த நேரத்தில் பாக்யராஜும் அரசியல் அரங்கில் பரபரப்பை உண்டாக் கினார். அரசியல் கட்சி ஒன்றையும் தொடங்கினார். மிகச்சிறந்த படைப்பாளி... ஜனரஞ்சகமான கலைஞன் பாக்யராஜ் அரசியல் கட்சி தொடங்கி யிருக்ககூடாது என்பதே என் நிலைப்பாடாக இருந் தது. பாக்யராஜின் அரசியல் பரபரப்பு நேரத்தில் "இது நம்ம ஆளு' படம் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றது. அந்தப் படத்தில் காதல் ரசம் பொங்கும் பாடல் ஒன்றையும் எழுதியிருந்தேன்.
பல்லவி:
பெண்:
அம்மாடி இது தான் காதலா
அட ராமா இது என்ன வேதமோ
ஆண்:
நெஞ்சுக்குள்ளே ஏதோ ராகம்
கேட்குது
கண்ணு ரெண்டும் தானா
தாளம் போடுது
குழு:
கொட்டுங்க கொட்டுங்க கும்மிய கொட்டுங்க
நேரம் நல்ல நேரம்
ஒரு கூர சேல மாலையோடு நாளை
வந்து சேரும்
சரணம்-1
கன்னம் அழகிய ரோசாப்பூ / கண்ணில் சிரிக்குது ஊதாப்பூ / உதட்டில் உதிரும் தேன் முல்லை பூ / அஞ்சி ஒதுங்குது மாராப்பு / இன்னும் எதுக்கிந்த வீராப்பு / அணைக்க சிவக்கும் ஆவாரம்பூ / அடி சித்திரமே பட்டு சேலைய கட்டுச்சி / தேவதை பாதங்கள் பூமியை ஒட்டுச்சு / உன் பத்து விரல்களும் மேனியில் பட்டுச்சு / பட்டஇடங் களில் குங்குமம் கொட்டுச்சு / நித்தம் இரவினில் வித்தை படிக் கையில் / ரசிச்சு பழகும் அழகு / அள்ளி அணைக்கையில் / அந்தி விளக்கினில் / விழியில் எனக்கு கடிதம் எழுது
சரணம்-2:
ஆடிப் பறக்குற பாவாடை / மூடி மறைக்கிற மேலாட / இரண்டும் எனக்கு நீயாகணும் / நீந்தி குளிக்கிற நீரோட / நெஞ்ச தழுவுற பூமால / இரண்டும் எனக்கு நீயாகணும் / இந்த அல்லி குளத்துல மீனும் குதிக்குது / தண்ணி தழும்புது தாளமடிக்குது / ஒரு முல்லை வனத்துல வண்டு பறக்குது / பூவ திறக்குது கள்ளைக் குடிக்குது / கொட்டி கொடுக்கணும் கட்டில் சுகம் அது / விடியும் வரைக்கும் இருக்கும் / கட்டிப் பிடித்தகை விட்டு பிரிந்ததும் / அடுத்த இரவின் வரவை நினைக்கும்
கட்டில் ராஜசபை கூடி காலை வரை நீண்டதாக கற்பனையை படரவிட்டு... இதே படத்திற்கு நான் எழுதிய பாட்டு...
பல்லவி:
காம தேவன் ஆலயம் / அதில் காதல் தீபம் ஆயிரம் / இருவரின் தோளில் மாலை / இரவினில் ராஜ லீலை / தேவகானம் கேட்கும் அழகிய...
சரணம்-1:
பன்னீர் பூவில் இவள் தேகம் - அதை / பார்க்க பார்க்க வரும் மோகம் / கண்கள் காதல் கதை பேசும் - அவை / காம பாணங்களை வீசும் / நெஞ்சனை பஞ்சணை இடக் கூடாதோ / கொஞ்சிடும் அஞ்சுகம் உன்னை தேடாதோ / தத்தி வந்த தத்தை கிளி / முத்தம் இட்டு முத்துக் குளி / சொர்க்கத்துக்கு எந்தவழி / சொல்லி தந்தேன் மெல்ல படி / இன்னும் இன்னும் என்று மனம் / ஏங்கும் ஏக்கம் கண்ணில் தெரியுது
சரணம்-2:
கட்டில் ராஜசபை கூடும்- அது / காலை வேளை வரை நீளும் / தொட்டால் கை நழுவி போகும் - இந்த / தோகை தேகம் லயம் ஆகும் / ஒத்திகை நித்தமும் இனி பார்க்காதோ / சித்திர முத்திரை இதழ் கேட்காதோ / பஞ்சு மெத்தை இட்டுக் கொள்ள / பத்துவிரல் தொட்டுக் கொள்ள / நித்தம் உன்னை உச்சரிக்க / முத்தம் எனும் அச்சடிக்க / மெட்டிச் சத்தம் மெட்டுச் சொல்ல / பாடவேண்டும் நூறு கவிதைகள்
நோய் காரணமாக மரணத்தை எதிர்கொள்ளவிருக்கும் இளம்பெண் அவள். அவளுக்கு விரைவில் நிகழவிருக்கும் மரணம்... அவளைச் சுற்றி இருப்பவர்களின் மனதில் பெரும் வலியை ஏற்படுத்துகிறது. அவளோ... மிக உற்சாகமாக மரணத்தை எதிர்கொள்ள தயாராக இருப்பதோடு... மற்றவர்களின் மனவலிக்கு ஆறுதலும் சொல்கிறாள்.
பாக்யராஜின் "சுந்தரகாண்டம்' படத்தில் இப்படி ஒரு சூழ லுக்கு நான் பாடல் எழுதினேன்... இயற் கையின் விதிகளுக்கு எதுவும் தப்புவ தில்லை என்கிற தத்துவார்த்தத்தை எளிய உதாரணங் களுடன் இந்தப் பாடலில் பிரதிபலித்தேன்.
தொகையறா:
பட்டுபூச்சி வாழ்க்கை அது எட்டு நாள் தானே..
பறந்து வரும் ஈசலுக்கு ஒரு நாள் தானே....
அவை பறக்கலையா.. சிறகு விரிக்கலையா...
வாழ்வை..
ரசிக்கலையா...
பல்லவி:
பூங்குருவி பாடுது / சுப ராகம் தேடித்தான் / உங்க சோகம் மாறத்தான் / வாழ்க்கையே ஒரு வரவு செலவு / வந்ததே ஒரு வரவுதான்... / பூமியில் வந்த கணக்கு முடிஞ்சி / போகிறோம் அது செலவுதான்...
சரணம்-1:
கண்ணிமைக்கும் வேளை / வானவில்லின் வாழ்க்கை / அத எண்ணி வானவில் அழவில்லை.. / அழகிய கோலம் கெடவில்லை.. / நூலுமில்லை அங்கே / வாலுமில்லை இங்கே / பறக்குது இன்றொரு காத்தாடி.. / பாடுது ஆனந்த கூத்தாடி / இன்று யார்... இனி நாளை யார் / இது நீ சொன்னது... / இன்று நான்... இனி நாளை யார் / பதில் யார் சொல்வது... / அச்சமும் துக்கமும் வீணே / சொன்ன நீயே அழலாமா?
சரணம்-2:
பூப்பதொரு காலம் / காய்ப்பதொரு காலம் / இலையுதிர் காலம் இப்போது / எனக்கிது வந்தால் தப்பேது / காலம் தந்த ஓலை / வந்ததிந்த வேளை / நடக்கட்டும் காலத்தின் ராஜாங்கம் / எனக்கு இனி வீடு ஆகாயம் / சூரியன் அந்த சந்திரன் / அவை தான் வாழ்வது.. / பூமியில் வந்த யாவுமே / ஒரு நாள் போவது.. / பட்டினத்தார் அவர் போல / புவி மேல நாம் வாழ...
ரஜினி படங்களுக்கு பாடல் எழுதிய அனுபவங்களைச்...
(சொல்கிறேன்)
படம் உதவி: ஞானம்