நாயகன் அனுபவத் தொடர் (25) - புலவர் புலமைப்பித்தன்

lak

தமிழ்ச் சங்கத்தில் பாடாத கவிதை!

"அன்னக்கிளி' இரட்டை இயக்குநர்களான தேவராஜ்- மோகன் இயக்கத்தில், சரத்பாபு, ஸ்ரீப்ரியா, வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடிப்பில் வந்த படம் "கண்ணில்தெரியும் கதைகள்.' இந்தப் படத்திற்கு பின்னணி இசையை இளையராஜா அமைத்தார். பாடல்களுக்கான மெட்டுக்களையும், இசையையும், ஒரு பாடலுக்கு ஒரு இசையமைப்பாளர் என்கிற விகிதம் ஐந்து இசையமைப் பாளர்கள் இசைத்தனர்.

கே.வி.மகாதேவன், ஜி.கே.வெங்கடேஷ், சங்கர்-கணேஷ், இளையராஜா மற்றும் அகத்தியர் ஆகியோர் இசையில்... இளையராஜாவின் மெட்டுக்கு நான் எழுதிய பாடல் மிகவும் பிரபலமானது. அடுத்தடுத்த வார்த்தை விளையாடல் நிறைந்த பாடலாக அது அமைந்தது.

பல்லவி:

நானொரு பொன்னோவியம் கண்டேன் எதிரே

இளமை... இளமை.

இனிமை... இது புதுமை

நானொரு பொன்னோவியம் கண்டேன் எதிரே

போதை தரும்... நாதசுரம்

பாடிடும் செந்தேன் மழை உந்தன் மொழியோ?

பார்வையில் ஆயிரம் கவிதைகள் எழுதிடும் அபிநயம்

நானொரு பொன்னோவியம் கண்டேன் எதிரே

சரணம்-1:

பார்வை அழைப்ப தும் பாவை தவிப்பதும் / ஏனடி ஏனடி பைங்கிளியே? / மேகலை வாட்டியது / அதை மேனியில் காட்டியது / சிறு ஊடல் விளையாடல் / ஒரு கூடல் உறவாடல் / குறி போடல் சுவை தேடல் / கவி பாடல் / புது வித அனுபவமே / அறிமுகம் அனுபவம் அது சுகம் / அழகன் மடியில் எனது உலகம்

சரணம்-2:

மாலை வரும் வரும் / மாலை தரும் தரும் / மாவிலை பின்னிய தோரணங்கள் / மங்கல வாத்தியங்கள் / எங்கும் எங்களின் ராஜ்ஜியங்கள் / ஒரு வானம் கரு மேகம் / மழை போலும் மலர் தூவும் / மயில் ஆடும் குயில் கூவும் / இவை யாவும் திருமண எதிரொலிகள் / முதல் முதல் இரவென வருவது / மகிழ மனது நெகிழ வருக

சரணம்-3:

தந்தோம் தனம் தனம் தந்தோம் தனம்

தமிழ்ச் சங்கத்தில் பாடாத கவிதை!

"அன்னக்கிளி' இரட்டை இயக்குநர்களான தேவராஜ்- மோகன் இயக்கத்தில், சரத்பாபு, ஸ்ரீப்ரியா, வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடிப்பில் வந்த படம் "கண்ணில்தெரியும் கதைகள்.' இந்தப் படத்திற்கு பின்னணி இசையை இளையராஜா அமைத்தார். பாடல்களுக்கான மெட்டுக்களையும், இசையையும், ஒரு பாடலுக்கு ஒரு இசையமைப்பாளர் என்கிற விகிதம் ஐந்து இசையமைப் பாளர்கள் இசைத்தனர்.

கே.வி.மகாதேவன், ஜி.கே.வெங்கடேஷ், சங்கர்-கணேஷ், இளையராஜா மற்றும் அகத்தியர் ஆகியோர் இசையில்... இளையராஜாவின் மெட்டுக்கு நான் எழுதிய பாடல் மிகவும் பிரபலமானது. அடுத்தடுத்த வார்த்தை விளையாடல் நிறைந்த பாடலாக அது அமைந்தது.

பல்லவி:

நானொரு பொன்னோவியம் கண்டேன் எதிரே

இளமை... இளமை.

இனிமை... இது புதுமை

நானொரு பொன்னோவியம் கண்டேன் எதிரே

போதை தரும்... நாதசுரம்

பாடிடும் செந்தேன் மழை உந்தன் மொழியோ?

பார்வையில் ஆயிரம் கவிதைகள் எழுதிடும் அபிநயம்

நானொரு பொன்னோவியம் கண்டேன் எதிரே

சரணம்-1:

பார்வை அழைப்ப தும் பாவை தவிப்பதும் / ஏனடி ஏனடி பைங்கிளியே? / மேகலை வாட்டியது / அதை மேனியில் காட்டியது / சிறு ஊடல் விளையாடல் / ஒரு கூடல் உறவாடல் / குறி போடல் சுவை தேடல் / கவி பாடல் / புது வித அனுபவமே / அறிமுகம் அனுபவம் அது சுகம் / அழகன் மடியில் எனது உலகம்

சரணம்-2:

மாலை வரும் வரும் / மாலை தரும் தரும் / மாவிலை பின்னிய தோரணங்கள் / மங்கல வாத்தியங்கள் / எங்கும் எங்களின் ராஜ்ஜியங்கள் / ஒரு வானம் கரு மேகம் / மழை போலும் மலர் தூவும் / மயில் ஆடும் குயில் கூவும் / இவை யாவும் திருமண எதிரொலிகள் / முதல் முதல் இரவென வருவது / மகிழ மனது நெகிழ வருக

சரணம்-3:

தந்தோம் தனம் தனம் தந்தோம் தனம் தனம் / என்றொரு மெல்லிசை கேட்பதென்ன / அது என்ன நூதனமோ? / உங்கள் ஆசையின் சாதனமோ? / மனம் தந்தும் தனம் தந்தும் / இதழ் சிந்தும் ரசம் தந்தும் / தரும் இன்பம் பல தந்தும் / வரும் சொந்தம் / இவள் தரும் சீதனமோ / பலவித சுகங்களின் தரிசனம் / விழியும் மனமும் உருக வருக

m

விஜயகாந்த் நடித்த "ஆட்டோ ராஜா' படத்தில் ஒரு பாட்டெழுத தம்பி இளையராஜாவிடமிருந்து அழைப்பு.

""அண்ணே... ஒரு மெட்டு ஒண்ணு... புதுசா முயற்சி பண்ணீருக் கேன். இதுக்கு நீங்க எழுதினாத்தான் சரியா இருக்கும்... நீங்கதான் எழுத முடியும்'' என தொலைபேசி வாயிலாக அழைத்தார்.

ஹோட்டல் ரஞ்சித்தில் சிட்டிங். அங்கே பாரதிராஜாவும் இருந்தார்.

இளையராஜா மெட்டைச் சொல்லச் சொல்ல... பாடலை எழுதிக் கொடுத்தேன். பிரமாதமாக இருப்பதாக பாரதிராஜா சொன்னார். கூடலை ‘அந்திப்போர்’ என அடையாளப்படுத்தி நான் எழுதிய அந்தப் பாடல்...

பல்லவி:

சங்கத்தில் பாடாத

கவிதை - உன்

அங்கத்தில் யார் தந்தது

சந்தத்தில் மாறாத

நடையோடு - என்

முன்னே யார் வந்தது -

தமிழ்ச்

சங்கத்தில் பாடாத

கவிதை - உன்

அங்கத்தில் யார் தந்தது

சரணம்-1:

கையென்றே செங் காந்தள் மலரை / நீ சொன்னால் நான் நம்பவோ / கால் என்றே செவ்வாழை இலைகளை / நீ சொன்னால் நான் நம்பி விடவோ / மை கொஞ்சம் பொய் கொஞ்சம் / கண்ணுக்குள் நீ கொண்டு வருவாய் / காலத்தால் மூவாத உயர் தமிழ்ச்

சரணம்-2:

அந்திப்போர் காணாத இளமை / ஆடட்டும் என் கை களில் / சிந்தித்தேன் செந்தூர இதழ்களில் / சிந்தி தேன் பாய்கின்ற உறவை / கொஞ்சம் தா..அ… கொஞ்சம் தா..ஆ.. / கண்ணுக்குள் என்னென்ன நளினம் / காலத்தால் மூவாத உயர் தமிழ்ச்

சரணம்-3:

ஆடை ஏன் உன் மேனி அழகை / ஆதிக்கம் செய்கின்றது / நாளைக்கே ஆனந்த விடுதலை / காணட்டும் காணாத உறவில் / கை தொட்டு… அ... மெய் தொட்டு… ஆ / சாமத்திலே தூங்காத விழிகளில் / சந்தித்தேன் என்னென்ன மயக்கம்

d

பி.யூ.சின்னப்பாவின் மகன் பி.யூ.சி.ராஜாபகதூர், சரிதா உள்ளிட்டவர்கள் நடிப்பில் கே.விஜயன் இயக்கத்தில் "கோவில்புறா' படத்தின் பாடல்களை நான் எழுதினேன்.

’’அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே / சுகம் பல தரும் தமிழ்ப்பா / சுவையோடு கவிதைகள் தா / தமிழே நாளும் நீ பாடு’’-என்கிற பாடலையும்,

’’வேதம் நீ இனிய நாதம் நீ / நிலவு நீ கதிரும் நீ / அடிமை நான் தினமும் ஓதும் / வேதம் நீ இனிய நாதம் நீ’’ -என்கிற பாடலையும்,

“சங்கீதமே என் ஜீவனே’’என்கிற பாடலையும் எழுதினேன்.

நடிகை ஸ்ரீப்ரியா தயாரிப்பில் சங்கர்-கணேஷ் இசையில் "நீயா?' படத்திற்காக...

உன்னை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை / என் இருவிழியோ ஒருகணமும் இமைப்ப தில்லை / தமிழ் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை / நம் இதழ் பாடும் சுக ராகம் முடிவதில்லை’’-என்கிற பாடலை எழுதினேன்.

லட்சுமி, ராஜேஷ், பிரசன்னா உள்ளிட்டோர் நடிப்பில், திரைக்கதை-வசனம் அமைத்து ஆர்.சி.சக்தி இயக்கி வெளிவந்த திகைப்பும், பரபரப்பும் கொண்ட திரைப்படம் ‘"சிறை'. அனுராதா ரமணன் கதையை எழுதியிருந்தார்.

ll

பிராமண தம்பதி ரகுபதி (பிரசன்னா)- பாகீரதி (லட்சுமி). இவர்களின் அழகிய இல்லறத்தில் குறுக்கிடும் ரௌடி அந்தோணி, பாகீரதியை பாலியல் பலாத்காரம் செய்துவிடுகிறான். இதனால் மனைவி கெட்டுப்போனவள் என்று பாகீரதியை பிரிகிறான் ரகுபதி. வீட்டையும் பூட்டிக்கொண்டு அவளை நடுத்தெருவில் தவிக்கவிட்டுச் செல்கிறான். தாய் வீடும் வறுமையில் வாடுவதால் அங்கும் அவளால் செல்ல முடியாது. ஒரு கட்டத்தில் தனக்கு இந்த நிலமை ஏற்படக் காரணமான அந்தோணி வீட்டிற்கே சென்று அங்கேயே தன்னை ஒரு அறையில் சிறைவைத்துக்கொள்கிறாள். மனம் திருந்திய அந்தோணி, அவளுக்குத் தேவையான சாப்பாடு உள்ளிட்ட வசதிகளை செய்துதருகிறான். பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட அந்தோணி, கடைசி வரை அவளின் சிறை அறைக்கு வெளியே காவலனாக இருக்கிறான். அந்தோணி இறந்துவிட்ட நிலையில்... பாகீரதியை தேடிவருகிறான் அவளின் கணவன். தன்னுடன் அழைக்கிறான். ஆனால்... தினம் தினம் தன்னைத் தொட்டபோதும் கைவிட்ட கணவனுக்கு மனைவியாக இருப்பதைவிட, ஒருநாள் தன்னை தொட்டதிற்காக கடைசிவரை காவலனாக இருந்த மறைந்த அந்தோணிக்காக விதவைக்கோலம் பூணுவதே சரி என முடிவெடுத்து தாலியை கழற்றி வீசுகிறாள் பாகீரதி.

மெல்லிசை மன்னருடன் பணியாற்றுவது சுகமான அனுபவம்தான்.

என் தலையிலே நான் தாங்கிக்கொண்டிருக்கிற தமிழ் இருக்கிறது. அதனால் நான் யார் காலையும் தொட்டு வணங்குவதில்லை. நான் வணங்குபவரின் காலை தமிழும் வணங்கவேண்டியிருக்குமே. ஆனால் மெல்லிசை மன்னரின் காலைத்தொட்டு வணங்கும்போது.... "ஏ புலமைப்பித்தா... ’இவன்தான் என்னை வளர்க்கிறவன்... இவன் காலைத்தொட்டு வணங்கு' என்கிறது தமிழ். இசை மூலம் உலகமெங்கும் தமிழ் வளர்த்த தமிழாசிரியர் மெல்லிசை மன்னர்.

"சிறை' படத்தின் கதைக்கு உயிர்ப்பை உண்டாக்கியது மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாத னின் இசை.

இதில் பிரசன்னா - லட்சுமி ஜோடியின் இல்லற மகிழ்வை வெளிப்படுத்தி லட்சுமி பாடுவதாக பாடல் ஒன்றையும், அதே மெட்டில் அந்தோணியை மன்னித்த நிலையில்... பாவம் செய்கிற நெஞ்சம் தான் தர்மமும் செய்கிறது’ என சோகம் ததும்ப... அதேசமயம் குற்ற உணர்ச்சியின் இறுக்கத்தை குறைப்பதுபோல் பாடுவதாகவும் இருவிதமாக ஒரே ட்யூனுக்கு பாடலை எழுதினேன். வாணி ஜெயராமின் அற்புதக் குரலில் மனசுகளை மயக்கிய அந்தப் பாடல்...

பல்லவி:

நான் பாடிக்கொண்டே

இருப்பேன்

உன் பக்கத்துணை இருப்பேன்

என் ஜென்மம் இருக்கும் வரை

என் ஜீவன் காக்கும் உன்னை

நான் பாடிக்கொண்டே

இருப்பேன்

சரணம்-1:

நிலா வீசும் நேரம் உண்டு

அம்மாவசை நாளும் உண்டு

ஒரே வானில் ரெண்டும் இன்று

பார்க்கவில்லையா…

சுகம் காணும் நேரம் உண்டு

துன்பம் சூழும் நாளும் உண்டு

ஒரே வாழ்வில் ரெண்டும்

என்றால்

பாவம் என்னய்யா….

சரணம்-2:

யார் நெஞ்சில் காமம் இல்லை

யார் நெஞ்சில் கோபம் இல்லை

மகாத்மாக்கள் என்றே இன்று

யாரும் இல்லையே…..

ஒரே நெஞ்சம் பாவம் செய்யும்

அதே நெஞ்சம் தர்மம் செய்யும்

எதை எந்த நேரம் செய்யும்

என்பதில்லையே…….

- இப்படியாக குற்றம் புரிந்த மனசு உணரும்படி அதை சகித்துக்கொள்கிற மனதின் வெளிப்பாடாக இந்தப் பாடலை எழுதியிருந்தேன்.

"நாயகன்' படத்திற்கு பாட்டெழுதியதைச்....

(சொல்கிறேன்)

படம் உதவி- ஞானம்

________________

அமைச்சர் மகன் விளக்கம்!

vv

கடந்த செப். 16-18 தேதியிட்ட இதழில் "குட்டி விமானத்தில் ஆட்டம் போடும் அமைச்சர் மகன்' என்று எந்தவித உள்நோக்கமும் இன்றி வெளியான செய்தி குறித்து விசாரித்தபோது, அமைச்சர் வேலுமணி தரப்பு கருத்தை பதிவு செய்ய முயற்சி மேற்கொண்டபோது பதிலளிக்காத நிலையில் தற்போது, அந்த செய்தியில் குறிப் பிடப்பட்டுள்ள தகவல்கள் சரியானது அல்ல என்றும், தான் சொந்த செலவில் கொரோனா காலத்திற்கு முன்பு ஆஸ்திரேலியா சுற்றுலா சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும், இதில் அரசியல் சார்ந்தது எதுவுமில்லை என்றும் அமைச்சர் வேலுமணியின் மகன் விகாஷ் தனது வழக்கறிஞர் மூலம் மறுப்பு தெரிவிக்கிறார்.

-(ஆர்)

nkn230920
இதையும் படியுங்கள்
Subscribe