வசனத்திற்கேற்ப ஆச்சரியப்படுத்தும் சிவாஜியின் உயரம்!
அண்ணன் சிவாஜியின் தீவிர ரசிகனாக... ஊரில்... நாடகங்களில் சிவாஜி போல் வேஷம் கட்டிய எனக்கு... சிவாஜியின் "தீபம்' படத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.
ஏவி.எம். ரெக்கார்டிங் ஸ்டுடியோவில், தம்பி இளையராஜா இசையில் "தீபம்' படத்திற்கான பாடல் பதிவு முடிந்து வெளியே வந்தேன். தூரத்தில் நின்றிருந்த நடிகரும், தயாரிப்பாளருமான கே.பாலாஜி... என்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந் தார். நான் அவரின் அருகே சென்று... "என்ன அப்படி பார்க்கிறீர்கள்?' என்று கேட்டேன்.
""இல்லங்க புலவரே... உங்க தோற்றமும், நடையும் கம்பீரமா இருக்கு. இந்தப் படத்துல உங்களுக்கு ஒரு நல்ல கேரக்டர உருவாக்கச் சொல்றேன்... நீங்க கண்டிப்பா நடிக்கணும்'' என்றார். ஆனால்... ‘இலக்கியத்தில் பிரபலமாக வேண்டும்’என்கிற என் லட்சியம், நடிக்க வந்த சான்ஸை ஏற்கவில்லை. அதனால் பாலாஜியும் என்னை வற்புறுத்தவில்லை.
"தீபம்' படத்திற்காக இன்னொரு பாடல் பதிவு முடிந்து வெளியே வந்தேன். ஏவி.எம். ரெக்கார்டிங் தியேட்டரின் பின்புறம் உள்ள மேக்-அப் அறையிலிருந்து அண்ணன் சிவாஜி வெளியே வந்தார். வணக்கம் வைத்தேன்.
""வாங்க தம்பியாபிள்ள'' எனக் கூப்பிட்டார்.
நான் அவரின் அருகில் சென்றதும்... என் தோளில் கைபோட்டுக்கொண்டு... மெல்லமாக நடந்தபடியே பே
வசனத்திற்கேற்ப ஆச்சரியப்படுத்தும் சிவாஜியின் உயரம்!
அண்ணன் சிவாஜியின் தீவிர ரசிகனாக... ஊரில்... நாடகங்களில் சிவாஜி போல் வேஷம் கட்டிய எனக்கு... சிவாஜியின் "தீபம்' படத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.
ஏவி.எம். ரெக்கார்டிங் ஸ்டுடியோவில், தம்பி இளையராஜா இசையில் "தீபம்' படத்திற்கான பாடல் பதிவு முடிந்து வெளியே வந்தேன். தூரத்தில் நின்றிருந்த நடிகரும், தயாரிப்பாளருமான கே.பாலாஜி... என்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந் தார். நான் அவரின் அருகே சென்று... "என்ன அப்படி பார்க்கிறீர்கள்?' என்று கேட்டேன்.
""இல்லங்க புலவரே... உங்க தோற்றமும், நடையும் கம்பீரமா இருக்கு. இந்தப் படத்துல உங்களுக்கு ஒரு நல்ல கேரக்டர உருவாக்கச் சொல்றேன்... நீங்க கண்டிப்பா நடிக்கணும்'' என்றார். ஆனால்... ‘இலக்கியத்தில் பிரபலமாக வேண்டும்’என்கிற என் லட்சியம், நடிக்க வந்த சான்ஸை ஏற்கவில்லை. அதனால் பாலாஜியும் என்னை வற்புறுத்தவில்லை.
"தீபம்' படத்திற்காக இன்னொரு பாடல் பதிவு முடிந்து வெளியே வந்தேன். ஏவி.எம். ரெக்கார்டிங் தியேட்டரின் பின்புறம் உள்ள மேக்-அப் அறையிலிருந்து அண்ணன் சிவாஜி வெளியே வந்தார். வணக்கம் வைத்தேன்.
""வாங்க தம்பியாபிள்ள'' எனக் கூப்பிட்டார்.
நான் அவரின் அருகில் சென்றதும்... என் தோளில் கைபோட்டுக்கொண்டு... மெல்லமாக நடந்தபடியே பேசினார்.
புரட்சித்தலைவரால் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தப் பட்டு... தொடர்ந்து அவரின் படங்களுக்கு அற்புதமான பாடல்களை எழுதிக்கொண்டிருந்த... ’எம்.ஜி.ஆரின் ஆள்’என அறியப்பட்ட நான் அண்ணன் சிவாஜியின் படங்களுக்கு பாட்டெழுத தொடங்கியதால்... தலைவருக்கும், எனக்கும் பிரச்சினை.... என்கிற மாதிரி ஒரு பேச்சு அரசல்புரசலாக நிலவியது.
""என்ன தம்பியாபிள்ள... அண்ணனுக்கும் (எம்.ஜி.ஆருக்கும்) உங்களுக்கும் இடையில வாங்கலாமே?’ அப்படியா?'' என்று கேட்டார். அதாவது... சும்மா... கேலிக்காக கேட்டு விட்டு சிரித்தார்.
அண்ணன் சிவாஜியை மிக நுணுக்கமாக கவனித்தால் ஒரு ரகசியம் புலப்படும். நான் அதை என் கண்ணாரக் கண்டு வியந்திருக்கிறேன். சாதாரண நிலையில் சிவாஜியின் உயர அளவிற்கும்.. வீரமான வசனங்களை உணர்ச்சிகரமாக பேசி நடிக்கும்போது இருக்கும் உயரத்திற்கும் இடையே பெரிய வேறுபாடு இருக்கும். வீராவேசமான வசனங்களை கனல் தெறிக்கப் பேசும்போது... அவரின் உருவ உயரம் பெரிய அளவில் அதிகரித்திருக்கும்.
தஞ்சை தமிழ்வாணன் எழுதிய ‘சாம்ராட் அசோகன்’ ஓரங்க நாடகம் ஒன்று ஒரு படத்தில் இடம்பெற்றது. சாம்ராட்டாக சிவாஜி நடித்தபோது... படப்பிடிப்பை பார்க் கும் அனுபவம் எனக்கு கிடைத்தது. அப்போதுதான் அவரின் உடல் உயரம் அதிகரிப்பதை நான் பார்த்தேன்.
ஒருநாள்... தயாரிப்பாளாரும், கதாசிரியருமான கலைஞானம் அவர்கள் என்னைச் சந்தித்தார். சிவாஜியை வைத்து "மிருதங்க சக்கரவர்த்தி' படத்தை எடுக்கப்போவ தாகவும், ""நம்ம சாமிதான் (கே.சங்கர்) டைரக்ஷன் பண்ணப் போறார்... அதன் ஜீவநாடியான பாடல்களை எழுதவேண் டும்'' என்று சொல்லி... ஒரு திரைப்படத்தை கண்முன் நிறுத்துவதுபோல... கதையைச் சொன்னார்.
அவ்வளவுதான்... நானும் அந்தக் கதைக்குள் மூழ்கி விட்டேன். ராகங்களை வைத்து ஒரு பாடலை எழுதினேன்.
அதன் பல்லவி:
சுகமான ராகங்களே / இசை சபை ஏறி வாருங்களே / சுரம் ஏழின் திருத்தேரில் / கலை தெய்வம் வரும் நேரம் / இசை வேள்வி நான் செய்கிறேன் / என்னை யாரென்று நான் சொல்கிறேன்.
கதைப்படி முதிய தம்பதியான சிவாஜி- கே.ஆர்.விஜயா பல்வேறு மனச் சுமையில் இருப்பார்கள். விஜயா உடல்நலம் குன்றி வாட... அப்போது சிவாஜிக்குள் எழும் விம்மல் "வண்ணக்கிளியே' பாடலாக உருவானது. இந்தப் பாடல் என் வாழ்க்கையில் மறக்கமுடியாத பாடலாகவும் ஆனது. காரணம்... இந்த பாடலை எழுத உட்கார்ந்த நேரம்... என் மனைவி தமிழரசி உடல்நலம் குன்றியிருந்தார். கிட்டத்தட்ட பாட்டின் சூழலும், என் சொந்த வாழ்க்கைச் சூழலும் ஒன்றாக இருந்ததால்... இந்தப் பாட்டில் என் சொந்தச் சோகமும் எதிரொலித்தது.
இதோ... அந்தப் பாடல்...
பல்லவி-1:
அடி வண்ணக் கிளியே இங்கு… / தன்னந்தனியே என்னை/ விட்டு விட்டுப் போக சம்மதமோ…
சரணம்-1:
சிரித்தால் சிரித்து அழுதால் துடித்து / வாழ்ந்திடும் சொந்தங்கள் நாம் அடைந்தோம் / இசையால் இணைந் தோம் இதயம் கலந்தோம் / ஈருயிர் ஒன்றென்று நாம் இருந்தோம்
பல்லவி-2:
இந்த வண்ணக் கிளியே இங்கு / தன்னந்தனியே உம்மை / விட்டு விட் டுப் போக எண்ணிடுமோ
சரணம்-2:
இனியும் இருப்போம் பிரிவை மறப்போம் / நீ உள்ள நாள் மட்டும் நான் இருப்பேன் / உறவில் மனைவி பரிவில் அன்னை / துன்பங்கள் வாராமல் நான் தடுப்பேன்
சரணம்-3:
கோயில் விளக்கே விடியும் கிழக்கே / அர்ச்சனை தேவாரம் நீ எனக்கு / எழுதா வேதம் அது உன் பாதம் / தேவனின் சங்கீதம் நீ எனக்கு
இந்தப் படத்தில் பிரபு- சுலக்ஷனாவுக்கு இடையேயான டூயட் பாடல் ஒன்றையும் எழுதினேன்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் என்கிற பெரும் பாடகனுக்கு அறிமுகப்பாடலாக அமைந்தது.... "அடிமைப்பெண்' படத்திற்காக நான் எழுதிய "ஆயிரம் நிலவே வா' பாடல். அதேபோல... பெரும் பாடகரான சீர்காழி கோவிந்தராஜனின் மகன் சீர்காழி ஜி. சிவ சிதம்பரத்திற்கு அறிமுகப்பாடலாக அமைந்தது... "மிருதங்க சக்கர வர்த்தி'க்காக நான் எழுதிய "அபிநய சுந்தரி ஆடுகிறாள்' பாடல்.
பல்லவி:
அபிநய சுந்தரி ஆடுகிறாள்- என் / ஆசை கனலை ஊதுகிறாள் / விழிகளில் கடிதம் தீட்டுகிறாள்- இன்ப / வீணையில் சுதி மூட்டுகிறாள்
சரணம்-1:
நீ மயிலுக்கு நாட்டியக் கலை சொன்னவள் / அந்த மத னுக்கும் காதலின் பொருள் சொன்னவள் / அழகிய மேகலை அசைவதும் ஓர் கலை / உனதுடல் மிருதங்கமே… / பல வகை தாளங்கள் சுகம் தரும் நாதங்கள் / பயில்வது சுகமல்லவோ…
சரணம்-2:
உன் சிறு இடை என்பது இடைச் சங்கமோ / உன் சதங்கையில் வந்தது தமிழ்ச் சந்தமோ / இளமையின் சீதனம் இசையினில் மோகனம் / என்பதும் நீயல்லவோ… / கவி நயம் மேவிடும் இலக்கியம் யாவிலும் / கற்பனை நீயல்லவோ…
ஏற்றுக்கொண்ட பாத்திரமாகவே மாறிவிடுபவர் சிவாஜி. தத்ரூபமாக மிருதங்க வாத்தியக் கலைஞனாகவே இந்தப் படத்தில் பரிணமித்தார்.
""தம்பியாபிள்ள... நான் மிருதங்கம் வாசிக்கிற மாதிரியான காட்சிகள் எடுக்குறப்பவெல்லாம் நீங்க ஷூட்டிங்க்கு வந்துடணும்'' என சிவாஜி கேட்டுக்கொண்டதால்... அதன்படியே சென்று... முன் வரிசையில் அமர்ந்து பார்ப்பேன். ஷாட் பிரேக்கில் கண்ஜாடையாலேயே... "எப்படி தம்பியாபிள்ள?'’என்பதுபோல கேட்பார்.
எனக்கு மிருதங்கத்தில் அடிப்படையான சில விஷயங்கள் தெரியும். நான் சிறுவயதில் மிருதங்கம் கற்றுள்ளேன். ஆனாலும்... மிருதங்க வித்வானின் கடுமையான... கண்டிப்பான ஆச்சாரங்கள் எனக்குப் பிடிக்காததால்... பயிற்சியை முழுமையாக முடிக்க வில்லை. சிவாஜியின் மிருதங்க வாசிப்பு பாவனைகளை ரசிக்க... அந்தந்த பழைய பயிற்சி எனக்கு உதவியாக இருந்தது.
சிவாஜிக்கு... பொன்மகள் போல்... பிரபுவுக்கு தங்கமகள்... பாடல் அமைந்ததைச்....
(சொல்கிறேன்)
படம் உதவி: ஞானம்