நாயகன் அனுபவத் தொடர் (18) - புலவர் புலமைப்பித்தன்

ss

எம்.ஜி.ஆர். தொண்டன்! சிவாஜி ரசிகன்!

கோவை மாவட்டம் ஒண்டிப்புதூர் கம்போடியா பஞ்சாலையில் தொழிலாளியாக நான் வேலை செய்துகொண்டிருந்தபோது... மறுமலர்ச்சி நாடக மன்றத்தை நடத்தி வந்தேன். அண்ணன் சிவாஜி கணேசனின் தீவிர ரசிகனான நான்... அவரைப்போலவே நடந்து, சிரித்து, உதடு துடித்து... நாடகங்களில் நடித்து வந்தேன்.

ஒருநாள்... என் சக தொழிலாளியான, எம்.ஆர்.ராதாவின் தீவிர ரசிகர் ஒருவர்... ""நீ சிவாஜி மாதிரிக்கூட நடிச்சிடலாம். ஆனா எம்.ஆர்.ராதா மாதிரி நடிக்க முடியாது'' எனச் சொன்னார்.

அந்தச் சமயம் கோவை சண்முகா ஹாலில் எம்.ஆர்.ராதாவின் "ரத்தக்கண்ணீர்' நாடகம் நடந்துகொண்டிருந்தது. எட்டு முறை அந்த நாடகத்தைப் பார்த்தேன். ராதாவின் நடை- உடை - பாவனை- வசன உச்சரிப்பு... என ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றாக கவனித்தேன். பிறகு... நாடக ரிகர்ஸல் மேற்கொண்டேன். நண்பரை அழைத்து அந்த நாடகத்தைப் போட்டேன். ராதா போல பேச முயற்சித்ததில்... என் தொண்டை புண்ணாகிவிட்டது. ஒருவாரத்திற்கு மேலாக பேச முடியாமல் போனது.

நான் சென்னைக்கு வந்து, அண்ணன் சிவாஜியின் "தங்கப்பதக்கம்' படத்தைப் பார்த்துப் பார்த்து வியந்தேன். தலைவரை சந்தித்த ஒரு சமயத்தில்... சிவாஜியின் நடிப்பை தலைவ ரிடமே புகழ்ந்து சொன்னேன்...

""அண்ணே... "தங்கப்பதக்கம்' படத்துல... மனைவி இறந்த செய்திய கேட்டதுமே சிவாஜி ஒரு ரியாக்ஷன் பண்ணுவார் பாருங்க...''’’ என நான் சொல்லிக் கொண்டிருக்க...

என்னையே பார்த்துக்கொண்டிருந்த புரட்சித்தலைவர், தன்

எம்.ஜி.ஆர். தொண்டன்! சிவாஜி ரசிகன்!

கோவை மாவட்டம் ஒண்டிப்புதூர் கம்போடியா பஞ்சாலையில் தொழிலாளியாக நான் வேலை செய்துகொண்டிருந்தபோது... மறுமலர்ச்சி நாடக மன்றத்தை நடத்தி வந்தேன். அண்ணன் சிவாஜி கணேசனின் தீவிர ரசிகனான நான்... அவரைப்போலவே நடந்து, சிரித்து, உதடு துடித்து... நாடகங்களில் நடித்து வந்தேன்.

ஒருநாள்... என் சக தொழிலாளியான, எம்.ஆர்.ராதாவின் தீவிர ரசிகர் ஒருவர்... ""நீ சிவாஜி மாதிரிக்கூட நடிச்சிடலாம். ஆனா எம்.ஆர்.ராதா மாதிரி நடிக்க முடியாது'' எனச் சொன்னார்.

அந்தச் சமயம் கோவை சண்முகா ஹாலில் எம்.ஆர்.ராதாவின் "ரத்தக்கண்ணீர்' நாடகம் நடந்துகொண்டிருந்தது. எட்டு முறை அந்த நாடகத்தைப் பார்த்தேன். ராதாவின் நடை- உடை - பாவனை- வசன உச்சரிப்பு... என ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றாக கவனித்தேன். பிறகு... நாடக ரிகர்ஸல் மேற்கொண்டேன். நண்பரை அழைத்து அந்த நாடகத்தைப் போட்டேன். ராதா போல பேச முயற்சித்ததில்... என் தொண்டை புண்ணாகிவிட்டது. ஒருவாரத்திற்கு மேலாக பேச முடியாமல் போனது.

நான் சென்னைக்கு வந்து, அண்ணன் சிவாஜியின் "தங்கப்பதக்கம்' படத்தைப் பார்த்துப் பார்த்து வியந்தேன். தலைவரை சந்தித்த ஒரு சமயத்தில்... சிவாஜியின் நடிப்பை தலைவ ரிடமே புகழ்ந்து சொன்னேன்...

""அண்ணே... "தங்கப்பதக்கம்' படத்துல... மனைவி இறந்த செய்திய கேட்டதுமே சிவாஜி ஒரு ரியாக்ஷன் பண்ணுவார் பாருங்க...''’’ என நான் சொல்லிக் கொண்டிருக்க...

என்னையே பார்த்துக்கொண்டிருந்த புரட்சித்தலைவர், தன் அருகில் இருந்தவர் களிடம்... ""பார்த்தீங்களா.... கணேசு தம்பி நடிப்பப்பத்தி புலவர் என்கிட்டயே சொல்றாரு பாருங்க...'' எனச் சொல்லி புன்னகைத்தார்.

pp

ண்ணன் சிவாஜியின் தீவிர ரசிகரான எனக்கு அவர் படத்திலேயே நடிக்க வாய்ப்பு அமைந்தது. சிவாஜியை வைத்து ஐந்து படங்களை தயாரித்த, எனக்கு நன்கு பரிட்சயமான என்.வி.ராமசாமியிடம் நடிகரும், தயாரிப்பாளருமான கே.பாலாஜி... “நான் எடுக்கப்போற அடுத்த படத்துல புலமைப் பித்தனோட பாடல்கள் இடம்பெறனும்’’எனச் சொல்லி இருக்கிறார். ராமசாமி மூலம் என்னைச் சந்தித்தார் பாலாஜி.

இப்படித்தான் அமைந்தது "தீபம்' படக்கூட்டணி. அண்ணன் சிவாஜி நடிப்பில், தம்பி இளையராஜா இசையமைப்பில், நண்பர் பாலாஜி தயாரிப்பில், நண்பர் கே.விஜயன் இயக்கத்தில் உருவான அந்தப் படத்தின் எல்லாப் பாடல்களும் எழுதும் வாய்ப்பை எனக்களித்தனர்.

மோகம் நிறைந்த ஒரு காதல் சூழலில்... நாயகி தன் விழியாலேயே... காமன் திருச் சபைக்குப் போக தன்னிடம் முகவரி கேட்பதாக... நாயகன் கற்பனையை வளர்க்கிறான். குங்குமத்தின் இதழ் சின்னம் பொறித்த காளையாக நாயகனை நாயகி சித்தரித்துப் பார்க்கிறாள். அவளிடம் முத்தம் பெறும் ஆசை அதிகரித்து அவனுக்குள் பித்தமும் வளர்வதாக அவன் சொல்ல... என்ன ஒரு ஏகாந்தச் சூழல். இதோ அந்தப் பாடல்...

அந்தபுரத்தில் ஒரு மகராணி - அவள்

அன்புக் கரத்தில் ஒரு மகராஜன்

கண்கள் சிவந்திருக்க அவள் பார்த்தாள்

காமன் திருச்சபைக்கு வழி கேட்டாள்

சாமந்திப் பூக்கள் மலர்ந்தன

இரு சந்தன தேர்கள் அசைந்தன

பாவை இதழிரண்டும் கோவை

அமுத ரசம் தேவை

என அழைக்கும் பார்வையோ...

அந்தபுரத்தில் ஒரு மகராஜன்

அவன் அன்புக் கரத்தில் ஒரு மகராணி

ஆசை கனிந்து வர அவன் பார்த்தான்

அன்னம் தலை குனிந்து நிலம்

பார்த்தாள்...’’

-இப்படியாக பல்லவியில் மோகம் வேகம் எடுப்பதாக எழுதினேன். முதல் சரணத்தில்...

’’சங்கு வண்ண கழுத்துக்குத் தங்க மாலை / அவள் சங்கமத்தின் சுகத்துக்கு அந்தி மாலை / குங்குமத்தின் இதழ் சின்னம் கண்ட காளை / அவன் கொள்ளை கொள்ள துடித்தது என்ன பார்வை / அது பார்வை அல்ல பாஷை என்று கூறடி என்றாள்’’

-என எழுதினேன். அடுத்த சரணத்தில்...

’’முத்துச் சிப்பி பிறந்தது விண்ணைப் பார்த்து / மழை முத்து வந்து விழுந்தது வண்ணம் பூத்து / பித்தம் ஒன்று வளர்ந்தது முத்தம் கேட்டு / அவன் நெஞ்சில் வந்து பிறந்திடும் தொட்டில் பாட்டு / அந்தி தென் பொதிகை தென்றல் வந்து / ஆரிரோ பாடும்... ஆராரிரோ...’’

-என எழுதினேன். இது காதல் தம்பதிகளின் அந்நியோன்யத்தை அதிகரிக்கச் செய்யும் இன்பமான பாட்டு.

கதைப்படி ஹீரோ ஒரு உல்லாச பேர்வழி. தினம் ஒரு பெண்ணுடன் உறவு... என்கிற குணம் கொண்ட வசதியானவன். அவனுடைய ஜாலியான வாழ்க்கையை விவரிக்கும் விதமாக எழுதிய பாடல்... “"ராஜா... யுவராஜா நாள் தோறும் ஒரு ரோஜா'’ எனத் தொடங்கும்.

"நித்தம் ஒரு புத்தம் புது நெஞ்சில் உறவாடும் பழக்கம் எனதல்லவா' என்கிற வரிகள் மூலமும், "தினம் ஒரு திருமணம் நடக்கலாம்'’என்கிற நித்யகல்யாண குணத்தையும், "தங்கம் அது தங்கம் உடல் எங்கும் அதை கண்டால் கடத்தும் நினைவு வரும்' என்பதாகவும் எழுதி... ஹீரோவின் குணாதிசயத்தை பாட்டால் தெரிவித்தேன். அதே சமயம்... நான் நடிகர்திலகத்தின் ரசிகன் என்பதை குறிப் பிடுவதுபோல "நடிப்பிலே எவரையும் மயக்குவேன்'’எனவும் எழுதினேன்.

கதைப்படி பெண்களை போகப்பொருளாக பாவிக்கும் ஹீரோ, நாயகி சுஜாதாவை உண்மையாக காதலிப்பார். ஆனால்... சுஜாதாவோ... சிவாஜியின் தம்பி விஜயகுமாரை விரும்புவார். இதனால் விஜயகுமார்-சுஜாதாவுக்கான டூயட் பாடல் ஒன்றும் எழுதச் சொன்னார்கள். துள்ளலான மெட்டில்... காதற்சுவை பொங்க எழுதப்பட்டது. அந்தப் பாடல்...

sivaji

பல்லவி:

பூவிழி வாசலில் யாரடி வந்தது

கிளியே கிளியே - இளம் கிளியே கிளியே

அங்கு வரவா தனியே மெல்ல தொடவா கனியே

இந்த புன்னகை என்பது சம்மதம் என்று

அழைக்குது எனையே

சரணம்-1:

அரும்பான காதல் பூவானது

அனுபவ சுகங்களை தேடுது

நினைத்தாலும் நெஞ்சம் தேனானது

நெருங்கவும் மயங்கவும் ஓடுது

மோகம் வரும் ஒரு வேளையில்

நாணம் வரும் மறு வேளையில்

இரண்டும் போராடுது

துடிக்கும் இளமை தடுக்கும்

பெண்மை

சரணம்-2:

இள மாலைத் தென்றல்

தாலாட்டுது

இளமையின் கனவுகள் ஆடுது

மலை வாழை கால்கள் தள்ளாடுது

மரகத இலை திரை

போடுது

கார் மேகமோ குழலானது

ஊர்கோலமாய் அது

போகுது

நாளை கல்யாணமோ ஓ...

எனக்கும் உனக்கும் பொருத்தம் தானே

பல்லவி-2:

பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே

இளம் கிளியே கிளியே இங்கு வரலாம் தனியே

மெல்லத் தொடலாம் எனையே

இந்த புன்னகை என்பது சம்மதம் என்று

அழைத்தது உனையே

சரணம்-3:

கலைந்தாடும் கூந்தல் பாய்

போடுமோ

கலை இது அறிமுகம்

வேண்டுமோ

அசைந்தாடும் ஊஞ்சல்

நாமாகவோ

நவரச நினைவுகள்

தோன்றுமோ

பூமேனியோ மலர்

மாளிகை

பொன் மாலையில் ஒரு

நாழிகை

நாளும் நானாடவோ

அணைக்கும்... துடிக்கும்... சிலிர்க்கும் மேனி

ண்ணன் சிவாஜி யின் படங்களில் சுய பரிதாப கழிவிரக்கப் பாடல்கள் பெரும்பாலும் இருக்கும். "தீபம்' படத் திலும் கதைப்படி சுஜாதா மீது முன்பு சிவாஜி கொண்டிருந்த ஒருதலை காதல் குடும்பத்தை குலைத்துவிடும். எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என நினைக்கிற தனக்கு ஏன் இத்தனை துயரம் என எண்ணி சிவாஜி பாடுவதாக நான் எழுதிய சுயபரி தாப பாடல் இதோ...

பேசாதே...

வாயுள்ள ஊமை நீ

சொந்தம் என்ன பந்தம் என்ன

சொன்னால் பாவமே

பேசாதே... பேசாதே...

...

நீ தந்த வாழ்க்கைக்கும்

நான் தந்த வார்த்தைக்கும்

இங்கே போராட்டமா... ஆ.. ஆ...

நான் இங்கு தீபம் உனக்கென்ன

கோபம்

புயல் என்ற காற்றில் ஏற்றி

வைத்தாய்

...

கண்ணுக்கு இமையெல்லாம்

முள்ளாகி வரும் போது

கண்ணை யார் காப்பது

என் தங்கை என்றேன் என் தம்பி

சென்றான்

கண்ணீரில் என்னை ஆட்டி

வைத்தான்

-இப்படியாக அந்தப்பாடலை எழுதியிருந்தேன்.

எம்.ஜி.ஆர் தன் படங்களில் இடம்பெரும் பாடல் வரிகளை முன்கூட்டியே படிப்பது வழக்கம். ஆனால் சிவாஜி அதில் ஆர்வம் காட்டமாட்டார்.

""என்ன தம்பியாபிள்ள... அண்ணனுக்கும்(எம்.ஜி.ஆர்) உங்க ளுக்கும் ‘பிரச்சனை ஆகிப்போச் சாமே...''’என அண்ணன் சிவாஜி என்னிடம் கேட்டதைச்...

(சொல்கிறேன்)

படம் உதவி: ஞானம்

nkn290820
இதையும் படியுங்கள்
Subscribe