குறள் அளவு உயரம்! உலகளவு உள்ளம்!

வர் அவ்வளவு உடற்கவர்ச்சியானவர் இல்லை. அவரைப் பார்க்கும் போது படாடோபம் இருக் காது. ஆனால் அறிவின் ஒளி வீசும் மனிதராக இருந்தார். அறிவாளிகளின் உலகம் அவரைக் கொண்டாடியது. ஏழைகளின் மீது இரங்குபவ ராகத் திகழ்ந்தார். மக்களின் மனம் கவர்ந்த மக்கள்திலகம், மாபெரும் தலைவனாக ஏற் றுக்கொண்ட எளிய தலைவன் பேரறிஞர் அண்ணா.

"அண்ணா'... அந்த தலைவனின்பேரைச் சொல் லும் போதே இனம்புரியா உணர்வு பற்றிக்கொள்ளும். நான் கோவையில் புலவர் படிப்பு முடித்த பின், திரு நெல்வேலி மாவட்டம் ஆத்தூரில் தமிழ் ஆசிரியராக காந்திமதி உயர் தொடக்கப் பள்ளியில் பணியாற்றிய போது… நான் முதல்முதலில் ஏறிப் பேசிய அரசியல் மேடை அண்ணாவின் பிறந்தநாள் பொதுக்கூட்டம்தான்.

பரபரப்பான மக்கள் பணிக்கு மத்தியிலும் காலையி லிருந்து உணவு உண்ணாமல், உடல் சோர்ந்திருந்த நிலை யிலும்…அவரைச் சந்திக்கச் சென்ற என்னையும் என் துணைவியையும் வரவேற்றுப் பேசிய விதமாகட்டும், பல் வேறு சந்தர்ப்பங்களில் அண்ணாவை சந்தித்ததாகட் டும்… அண்ணாவின் மறைவிற் குப் பின், அவர் நடத்திவந்த பத்திரிகையின் பொறுப் பாசிரியராக இருந்தது… இப்படி பேரறிஞருடன் எனக்கு உண்டான அனுபவங்கள் ஏராளம்.

Advertisment

இதுபற்றி மூன்றாவது அத்தி யாயத்திலேயே கொஞ்சம் சொல்லியிருக்கிறேன். மற்ற அனுபவங்களைப் பிறகு சொல்கிறேன்.

இப்போது அண்ணா என்பதற்கு பதவுரை போல் அவரின் உருவம் முதல் உள்ளம் வரை, அவரின் அறிவின் தாக்கம் முதல் ஆட்சி முறை வரை, கொள்கை முதல் கருணை வரை… இப்படி அண்ணா குறித்த அனைத்தையும் உள்ளடக்கி, காலத்தால் அழியாத காவியப் பாடல் ஒன்றை எழுதும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது, என் படைப்புப் பணியில் ஒரு பிர மாதமான செயலாக நினைக்கிறேன்.

ஆர்.எம்.வீரப்பன், என்னு டைய மிகச்சிறந்த ரசிகர். அவரே என்னிடம் பலமுறை சொல்லியிருக்கிறார். 1973-ஆம் ஆண்டு ஆர்.எம்.வீரப்பன் தயாரித்த திரைப்படம் "மணிப்பயல்'.’

Advertisment

கதைப்படி அண்ணா காஞ்சி யில் பிறந்தது தொடங்கி, வங்கக் கடலோரம் உறங்கிக்கொண்டிருப் பதுவரை ஒரு பாடலை எழுதினேன்.

அண்ணா ஆண்ட காலம் கொஞ்சமாக இருக்கலாம். ஆனால் பெரியாரின் சீடராக இருந்து தமிழகத்தில் திராவிடக் கொள்கை களை மிக ஆழமாக பதிந்து வைத்திருக்கிறார். ஆயிரம் திராவிட தலைமுறைகளை தழைக்க வைக்கும் வல்லமையை நமக்கெல்லாம் தந்து சென்றிருக்கிறார்.

அந்தப் பாடலைக் கேளுங்கள்…

எங்கள் தமிழன்னை எத்தனையோ தவமிருந்து

திங்களாய் செங்கதிராய் திருநாட்டின் ஒளிவிளக்காய்

வள்ளுவன் குறள்போல வடிவமோ சிறிதாக

உளமோ இந்த உலகினும் பெரிதாக…

-இப்படி… அவரின் உள்ள -உருவத்தை தொகையறாவில் எழுதினேன். மக்கள் சேவையைத் தவிர வேறெதுவும் நினையாத அண்ணாவை புத்தனாகப் பாவித்தேன். பல்லவியில்...

காஞ்சியிலே ஒரு புத்தன் பிறந்தான் -கொண்ட

கருணையினால் எங்கள் நெஞ்சில் நிறைந்தான்

அண்ணாவென் றெல்லோரும் அழைக்க வந்தார்

ஆயிரம் தலைமுறை தழைக்க வந்தார்

அண்ணா… அண்ணா…. அண்ணா -எங்கள்

அன்பின் தெய்வம் அண்ணா

திட்டியவர்களையும் திகைப்பூட்டும்படி நட்பு பாராட்டியவர் பேரறிஞர். இதை சரணத்தில் வைத்தேன்.

எதையும் தாங்கும் இதயம் கொண்டு -தன்னை

எதிர்ப்பவர் மீதும் கனிவு கொண்டு

வைதவர் யாவரும் வாழட்டும் என்றே

வாழ்த்திய இதயம் அதுவல்லவா -அது

வள்ளுவன் காட்டிய வழியல்லவா

-இப்படி இன்னா செய்தவர்க்கும் நன்நயம் செய்த வள்ளுவனை ஏற்றவராயிற்றே நம் அண்ணா.

தந்தை பெரியாரிடம் மனமாச்சரியம் கொண்டிருந்தாலும் தந்தையாய் போற்றிய தனயன் அண்ணா. மாற்றுக்கட்சித் தலை வர்களுடனும், கொள்கை வேறுபாடு கொண்டிருந்தாலும் அவர் களையும் மதித்தார். தன் தொண்டர்களும் இந்தக் கண்ணியத் தைக் காக்கவேண்டும் என வழிநடத்தினார். இதை சரணத்தில் வைத்தேன்.

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் -நல்ல

மணமுண்டு என்றே சொல்லியவர்

கடமை கண்ணியம் கட்டுப்பாடுதான்

தாரக மந்திரம் ஆக்கியவர் -நம்

தாழ்வுகள் எல்லாம் போக்கியவர்…

அண்ணா தன் ஆட்சிக் காலத்தில் போட்ட திட்டங்களை, அடுத் தடுத்த சரணங்களில் அடுக்கினேன்.

மானத்தைக் காத்திடும் நெசவாளர்

dd

-அந்த

மக்களின் கண்ணீர் தனைப் பார்த்தார்

நாடெங்கும் துணிகளைத் தோள்களில் சுமந்து

நலிந்திடும் ஏழைக்கு வாழ்வளித்தார்

-மக்கள்

நலம் பெறவே ஒரு வழி வகுத்தார்…

ஏழைகள் சிரித்திட அரசமைத்தார் -அதில்

இறைவனைக் காண்போம் என

உரைத்தார்

எரிந்திடும் குடிசையில்

வருந்திடுவோர்க்கு

எரியா வீடுகள் அமைத்தளித்தார் -அங்கு

எரியும் விளக்காய் அவர் இருந்தார்…

சென்னை என்றொரு பெயர் மாற்றி

-அதை

செந்தமிழ் நாடென பெயர் சூட்டி

பாரதி பாடிய பைந்தமிழ் நாட்டை

பாரினில் மீண்டும் காட்டியவர் -நம்

பழிகள் அனைத்தையும் மாற்றியவர்…

எல்லோர்க்கும் அண்ணனவன்

இல்லோர்க்கு செல்வமவன்

நல்லோர்கள் உள்ளமெல்லாம்

நாளெல்லாம் ஆளுபவன்

சொன்னால் மனம் பதைக்கும்

சொல்லவோ வாய் பதைக்கும்

தன்னந் தனிமையிலே

தானுறங்க போனானோ…

வங்கக் கடல் அலையே வாய்மூடி

தூங்கும் எங்கள்

தங்கத் தமிழ் மகனை தாலாட்டிப்

பாடினையோ

பாடு நீ பாடு பைந்தமிழர் நாடென்று

ஓடி உழைத்த மகன் உறங்கட்டும்

அமைதியிலே…

இந்தப் பாடல் எம்.எஸ்.வி. இசையில் சீர்காழி கோவிந்தராஜனும் எல்.ஆர்.ஈஸ்வரியும் பாட, ஏவி.எம். ரெக்கார்டிங் தியேட்டரில் பதிவானது. பாடல் பதிவாகிக்கொண்டிருந்தபோது… அங்கிருந்த எல்லோருமே அழத் தவறவில்லை… நான் உட்பட.

உங்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சி யாகத்தான் இருக்கும், நான் அண்ணன் நடிகர் திலகம் சிவாஜியின் ரசிகன் என்பது. ஊரில் மறுமலர்ச்சி நாடக மன்றம் நடத்தி அதில் சிவாஜியைப் போல் நடித்துக் கொண்டிருந்தவன். சென்னை வந்ததும் நான் முதல் முதலாக பாடல் எழுதியது சிவாஜியண்ணனின் "அன்புக் கரங்கள்' படத்திற்காகத்தான். 1965-இல் அந்தப் பாடலை எழுதினேன். ஆனால் அந்தப் பாடலை நிராகரித்துவிட்டார் கள். அதன்பிறகுதான் மூன்றாண்டு காலப் போராட்டத் திற்குப் பின் 1968-இல் "குடியிருந்த கோயில்' படத்தின் மூலம் மக்கள் திலகத்தின் கோட்டைக்குள் நுழைந்தேன்.

"நேற்று இன்று நாளை'’ படத்திற்காக "நீ என்னென்ன சொன்னாலும் கவிதை' பாடலில்-…

நீ என்னென்ன செய்தாலும் புதுமை

உன்னை எங்கெங்கு தொட்டாலும் இளமை’

என தலைவரைப் பார்த்து லதா பாடுவது போல எழுதியிருந்தேன். இந்தப் பாடல் பதிவின்போது தற்செய லாக அங்கு வந்த சிவாஜி, எம்.ஜி.ஆருக்கு மட்டும் ஸ்பெஷ லாக பாடல் போடுவதாக கேலி செய்ததை ஏற்கனவே சொல்லியிருந்தேன்.

இந்த சந்திப்பிற்கு முன்னால் ஒரு சுவாரஸ்யம் நடந்தது… சிவாஜியை நான் சந்திக்காமேலே….

தலைவரின் "நினைத்ததை முடிப்பவன்' படத்திற்காக நான் எழுதிய பாடல் ஒன்று… படத்தில் இடம்பெறவில்லை.

எத்தனை அழகு கொட்டிக் கிடக்குது

எப்படி மனதை தட்டிப் பறிக்குது

அம்மம்மா உடலெங்கும் சிலிர்க்குது

அங்கங்கே இளமையும் துடிக்குது

ஒருநாள் தற்செயலாக எம்.எஸ்.வி. என்னிடம், “""புலவரே… அந்தப் பாட்டை கனகசபை செட்டியார் படத்துக்கு வித்துட்டேன், பாட்டு நல்லாருக்குன் னாங்க… சிவாஜியண்ணன்தான் ஹீரோ'' என்றார்.

எனக்குப் பதட்டமாக இருந்தது. ஜெமினி ஸ்டுடியோவில் படப்பிடிப்பில் இருந்த தலைவரை சந்தித்தேன்.

""வணக்கம் அண்ணே...''

""என்ன புலவரே...''

""உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்''

""சொல்லுங்க''

""அண்ணே… சிவாஜி சார் படத்துக்கு பாட்டெழுதக் கேட்டிருக்காங்க... அண்ணே''

""என்கிட்ட ஏன் சொல்றீங்க?''

""உங்ககிட்டதான சொல்லணும்''

""தாராளமாக எழுதுங்க, எல்லாருக்குமே எழுதுங்க'' என்றார் தலைவர்.

வெளிப்பார்வைக்குத்தானே எம்.ஜி.ஆரும் சிவாஜியும் இரு துருவங்கள். நட்பில் மிகச் சிறந்த வர்கள். நான் தொடர்ந்து எம்.ஜி.ஆர்., சிவாஜி உள்ளிட்டோருக்குப் பாடல்களை எழுதினேன்.

சிவாஜியண்ணனின் படத்திற்கென்று நான் எழுதாமல் படத்தில் இடம்பெற்றது அந்தப் பாடல். அதே படத்தில் மிக அருமையான காதல் பாடல் ஒன் றையும் எழுதினேன். மலைச்சாரலில் இளமை பொங்க பொங்க எழுதிய இனிப்பான பாடல் இதோ…

""இனியவளே என்று பாடி வந்தேன்

இனி அவள்தான் என்று ஆகிவிட்டேன்

இன்பமெல்லாம் ஏந்தி வரும்

இளமை கொண்டவள்

இனியவனே என்று பாடிவந்தேன்

இனி அவன்தான் என்று ஆகிவிட்டேன்

ஏழிசையில் மோகனமாய் இனிமை தந்தவன்

ஓராயிரம் காலம் இந்த

உள்ளம் ஒன்றாக

ஒன்றானவர் வாழ்வே இன்ப

வெள்ளம் என்றாக

துணைதேடி வரும்போது கண்ணில்

என்ன நாணமோ

குணம் நான்கில் உருவான

பெண்ணை என்ன கூறுமோ

திருநாள் வரும் அதோ பார்

தருவார் சுகம் இதோ பார்

பொன்மாலையில்

பூமாலையாய்

நெஞ்சில்

சூடவோ… சூடவோ

இனியவனே என்று பாடிவந்தேன்

இனி அவன்தான் என்று ஆகிவிட்டேன்

தாலாட்டிடும் நெஞ்சம் தன்னைத்

தங்கம் என்றாளோ

பாராட்டிடும் இன்பம் தன்னை

மங்கை கொண்டாளோ

நினைத்தாலும் சுகம்தானே இந்த

நெஞ்சின் காவியம்

கொடுத்தாலும் நலம்தானே என்னைக்

கொஞ்சும் ஓவியம்

இதழால் உடல் அளந்தான்

இவளோ தன்னை மறந்தாள்

ஏனென்பதை

யார் சொல்வது

எங்கும் மௌனமே

மௌனமே…

மௌனேமே

-கடந்த கால காதலுக்கு உங்களை அழைத்துச் செல்கிறதா… இந்தப் பாடல்!

தம்பி இளையராஜா இசையில், நண்பர் கே.பாலாஜி தயாரிப்பில்… அண்ணன் சிவாஜி படத்திற்கு எல்லா பாடல்களையும் எழுதிய அனுபவத்தைச்…...

(சொல்கிறேன்)