நாயகன் அனுபவத் தொடர் (11) -புலவர் புலமைப்பித்தன்

mgr

சிலப்பதிகார பாணியில் சினிமா பாட்டு!

லகம் சுற்றும் வாலிபன்' படத்திற்கு நான் எழுதிய பாடல்களில் ஒன்றின் தொடக்கமான "சிரித்துவாழ வேண்டும்' என்ற பெயரில் அண்ணன் எம்.ஜி.ஆர். நடித்த படத்தை மணியனும் (இதயம் பேசுகிறது மணியன்), வித்வான் லட்சுமணனும் தயாரித்தனர். ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசனின் மகனும், ஆனந்தவிகடன் பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவருமான எஸ்.பாலசுப்பிரமணியன், எஸ்.எஸ்.பாலன் என்கிற பெயரில் இந்தப் படத்தை இயக்கினார்.

எம்.ஜி.ஆர் இரு வேடங்களில் நடித்த இந்தப் படத்தில் சூதாட்ட விடுதியில் எம்.ஜி.ஆர். பாடுவதாக வரும் பாடலை நான் எழுதியிருந்தேன்.

பாட்டின் தொகையறாவாக...

"எண்ணத்தில் நலமிருந்தால் / இன்பமே எல்லோர்க்கும் / அன்புள்ள தோழர்களே / அஸ்ஸலாமு அலேக்கும்'’ -என எழுதியிருந்தேன். பல்லவியாக

mgr

""ஒன்றே சொல்வான் நன்றே செய்வான்/அவனே அப்துல் ரஹ்மானாம்/ ஆண்டான் இல்லை அடிமை இல்லை/ எனக்கு நானே எஜமானாம் / மேரா நாம் அப்துல் ரஹ்மான்''’-என சமத்துவத்தையும், நேர்மையுள்ளவனிடம் மிளிரும் தன்னம்பிக் கையையும் சொன்னேன்.

பொதுவாக எம்.ஜி.ஆர். சூதாட்டங்களுக்கு எதிரானவர். ஆனால் அவரே கிளப் நடத்துவதாக கதைச் சூழல். அவரை அப்துல்ரகுமான் என்கிற பாத்திரமாக பார்ப்பார்களா என்ன? வாத்தியாராகத்தானே பார்ப்பார்கள் மக்கள். அதனால் பாடல்வரிகளை மிக கவனமாக எழுதினேன்.

""ஆடும் நேரத்தில் ஆடிப் பாடுங்கள் / ஆனாலும் உழைத்தே வாழுங்கள் / வாழ்வில் நாட்டம் ஓய்வில் ஆட்டம் / இரண்டும் உலகில் தேவை / ஆடும் போதும் நேர்மை வேண்டும் / என்றோ

சிலப்பதிகார பாணியில் சினிமா பாட்டு!

லகம் சுற்றும் வாலிபன்' படத்திற்கு நான் எழுதிய பாடல்களில் ஒன்றின் தொடக்கமான "சிரித்துவாழ வேண்டும்' என்ற பெயரில் அண்ணன் எம்.ஜி.ஆர். நடித்த படத்தை மணியனும் (இதயம் பேசுகிறது மணியன்), வித்வான் லட்சுமணனும் தயாரித்தனர். ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசனின் மகனும், ஆனந்தவிகடன் பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவருமான எஸ்.பாலசுப்பிரமணியன், எஸ்.எஸ்.பாலன் என்கிற பெயரில் இந்தப் படத்தை இயக்கினார்.

எம்.ஜி.ஆர் இரு வேடங்களில் நடித்த இந்தப் படத்தில் சூதாட்ட விடுதியில் எம்.ஜி.ஆர். பாடுவதாக வரும் பாடலை நான் எழுதியிருந்தேன்.

பாட்டின் தொகையறாவாக...

"எண்ணத்தில் நலமிருந்தால் / இன்பமே எல்லோர்க்கும் / அன்புள்ள தோழர்களே / அஸ்ஸலாமு அலேக்கும்'’ -என எழுதியிருந்தேன். பல்லவியாக

mgr

""ஒன்றே சொல்வான் நன்றே செய்வான்/அவனே அப்துல் ரஹ்மானாம்/ ஆண்டான் இல்லை அடிமை இல்லை/ எனக்கு நானே எஜமானாம் / மேரா நாம் அப்துல் ரஹ்மான்''’-என சமத்துவத்தையும், நேர்மையுள்ளவனிடம் மிளிரும் தன்னம்பிக் கையையும் சொன்னேன்.

பொதுவாக எம்.ஜி.ஆர். சூதாட்டங்களுக்கு எதிரானவர். ஆனால் அவரே கிளப் நடத்துவதாக கதைச் சூழல். அவரை அப்துல்ரகுமான் என்கிற பாத்திரமாக பார்ப்பார்களா என்ன? வாத்தியாராகத்தானே பார்ப்பார்கள் மக்கள். அதனால் பாடல்வரிகளை மிக கவனமாக எழுதினேன்.

""ஆடும் நேரத்தில் ஆடிப் பாடுங்கள் / ஆனாலும் உழைத்தே வாழுங்கள் / வாழ்வில் நாட்டம் ஓய்வில் ஆட்டம் / இரண்டும் உலகில் தேவை / ஆடும் போதும் நேர்மை வேண்டும் / என்றோர் கொள்கை தேவை''’-என முதல் சரணத்தை எழுதினேன்.

"அண்ணாவின் ‘ஒருவனே தேவன்' கொள்கையை இரண்டாவது சரணத்தில் நுழைத்து...

""யாரும் அறியாமல் செய்யும் தவறென்று / ஏமாற்றும் நினைவை மாற்றுங்கள்/ ஒன்றில் ஒன்றாய் எங்கும் நின்றான் / ஒருவன் அறிவான் எல்லாம் / காலம் பார்த்து நேரம் பார்த்து / அவனே தீர்ப்பு சொல்வான்''’-என எழுதினேன். மூன்றாவது சரணத்தில்... எந்த கருத்தையும் நேரடியாக பேசிவிடும் எனது குணாதிசயத்தை வைத்து... நான் சொல்ல விரும்பிய... அஞ்சாமையை இணைத்து...

""உலகம் ஒன்றாக எதிரே நின்றாலும் / அஞ்சாமல் கருத்தை கூறுங்கள் / வந்தான் வாழ்ந்தான் போனான் என்றா / உலகம் நினைக்க வேண்டும் / சொன்னான் செய்தான் என்றே நாளும் / ஊரார் சொல்ல வேண்டும்'' -என எழுதினேன். இந்தப் பாடலும் எனக்கு பாராட்டை வாங்கிக்கொடுத்தது.

க்கள்திலகத்தை இளம்பெண்கள் தங்களின் அண்ணனாக அகமகிழ்ந்து கொண்டாடுவதற்கு மிக முக்கியமாக அமைந்தது "நினைத்ததை முடிப்பவன்' திரைப்படம். கதைப்படி... கால் ஊனமுற்ற தன் தங்கை சீதாவின் திருமணம் வரதட்சனையால் தடைபட்டு நிற்க... அதற்கான பணத்தை சம்ப்பாதிப்பதற்காக கிராமத்திலிருந்து வரும் இசைக்கலைஞன் சுந்தரம், நகரத்தில் தன்னைப்போலவே சாயல் கொண்ட ரஞ்சித் என்கிற கொள்ளைக்கூட்ட தலைவனின் வலையில் வீழ்ந்து... அதனால் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்தான் கதை.

தன் தங்கை போலவே கால் ஊனமுற்ற பெண்ணின் திருமண ஊர்வலத்தில்... மணமகளை தன் தங்கையாக நினைத்து.... தன் தங்கைக்கு எப்படியெல்லாம் திருமணம் செய்யவேண்டும் என்று நினைத்திருந்ததை பாட்டாக்கிப் பாடுவான் அண்ணன்.

நான் பாடலை எழுதிக்கொண்டுபோய் தலைவரிடம் படித்துக்காட்டியபோது... தலைவரின் கண்களில் பாசத்தின் கசிவு. "ரொம்ப சிறப்பா இருக்கு புலவரே' என்றார். எம்.எஸ்.வி.யின் இசையில், டி.எம்.எஸ்.குரலில் அமைந்த இந்தப் பாடலின் காட்சியைப் பார்க்கும் ரசிக உள்ளங்கள் ஈரத்தால் கனத்துப்போகும். பாடல் காட்சியில் தலைவர் மிக உற்சாகமாக ஆடிப்பாடுவார். ஆனால் அது தன் அண்ணன் குரல் என அறிந்து... அண்ணனை பார்த்துவிட கண்ணீரோடு வரும் தங்கையின் தவிப்பையும், அவர்கள் சந்திக்க முடியாமல் போகும் அந்த தருணத்தையும் பார்க்கிற ரசிகர்கள் தவித்துப் போவார்கள்.

பாடலின் காட்சிகளுக்குள் இப்படியான ஒரு மெல்லிய சோகம் இழையோடினாலும்... பாடல் வரிகளும், தலைவரின் துள்லலான நடிப்பும், இசையும், டி.எம்.எஸ். குரலும்... மகிழ்ச்சியை பெருக்கெடுக்கச் செய்வதாக இருக்கும்.

""பூ மழை தூவி வசந்தங்கள் வாழ்த்த / ஊர்வலம் நடக்கின்றது / எழில் பொங்கிடும் அன்பு / தங்கை யின் நெற்றியில் / குங்குமம் சிரிக்கின்றது / மங்கல குங்குமம் சிரிக்கின்றது''

-என பல்லவியை எழுதினேன். முதல் சரணத்தில்... மேளம், வெடி, உறவுகளின் மகிழ்ச்சி, தோழியின் சீண்டல்... உள்ளிட்டவைகளை உள்ளடக்கி...

’""கச்சேரி மேளங்கள் வேடிக்கை வாணங்கள் / ஊரெங்கும் கொண்டாட்டமாம் / உன்னை கண்டோர்கள் கண்பட்டு / போகின்ற எழிலோடு சிங்காரத தேரோட்டமாம் / தோழி அத்தானை பாரென்று உனை கிள்ள / முகம் நாணத்தில் செந்தூர நிறம் கொள்ள''’ -என எழுதினேன்.

mgr

இரண்டாவது சரணம் மிக முக்கியமானது.

"வெண் சங்கு கழுத்தோடு பொன் மாலை அசைந்தாட நான் கண்ட பொருள் கூறவா' என்கிற வரிகளை நான் எழுதுவதற்கு எனக்கு தூண்டுதலாக இருந்தது ‘சிலப்பதிகாரம்’.

சிலப்பதிகார காப்பியத்தில் கோவலனும், கண்ணகியும் மதுரை நகருக்கு முன்பே... தங்கியிருந்து காலையில் நகருக்குள் கிளம்புவார்கள். இது மதுரைக் காண்டத்தில் ‘புறஞ்சேரி இறுத்த காதையில் வரும் கட்டம்.

""போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி

வாரலென் பனபோல் மறித்துக்கை காட்ட''’என இளங் கோவடிகள் எழுதியிருப்பார்.

"பாண்டியன் தன் பகைவரை வெற்றி கொண்டதன் அறிகுறியாக எடுத்த மதில் மேல் பறந்துகொண்டிருந்த கொடிகள் ’வராதே’ என்று தடுப்பன போல் மறித்துக் கை காட்டின...' என்பது அர்த்தமாகும். அதாவது கண்ணகியின் வாழ்க்கையில் நிகழப்போகும் துயரங்களை முன்கூட்டியே அறிந்து... "வராதே' என கொடிகள் அசைந்ததாக சொல்லப்பட்டுள்ளது. இது "தற்குறிப்பேற்ற அணி' என இலக்கணம் சொல்கிறது.

காற்றில் கொடி பறப்பது இயல்பு. இந்த இயல்பான செயல்மீது கவிஞர் தன்குறிப்பை ஏற்றுவது தற்குறிப்பேற்ற அணி ஆகும். கொடி அசைவதை துயரத்தின் குறியீடாக சிலப்பதி காரத்தில் இளங்கோவடிகள் சொன்னார்.

""என் அண்ணாவை ஒரு நாளும் என் உள்ளம் மறவாது என்றாடும் விதமல்லவா'' என நான் எழுதினேன்.

தங்கையின் கழுத்தில் ஆடும் மாலையை... அண்ணனை என்றும் மறவாத தங்கையின் நன்றியுணர்ச்சி என்கிற மகிழ்ச்சியின் வெளிப்பாடாகவும், அண்ணாவை மறக்காத தம்பியாக மக்கள்திலகம் திகழ்வதை மறைபொருளாகவும்... ஒரே நேரத்தில் இருவிதமாக எழுதினேன். அறிஞர் அண்ணாவினை தன் படங்களிலும், பாடல்களிலும் போற்றியவர் மக்கள்திலகம். இந்தப் பாடலிலிருந்து நான் அண்ணனுக்கு எழுதிய பாடல்கள் பலவற்றிலும் அண்ணன் விரும்பிய அண்ணாவினை குறிப்பிடத் தவறுவதில்லை.

""வெண் சங்கு கழுத்தோடு பொன் மாலை அசைந்தாட / நான் கண்ட பொருள் கூறவா / என் அண்ணாவை ஒரு நாளும் என் உள்ளம் மறவாது / என்றாடும் விதமல்லவா / நீ வாழ்கின்ற நாளெல்லாம் திருநாளே / என உனை கொண்ட மணவாளன் தினம் பாட'' -என இரண்டாவது சரணத்தையும்...

""கால் பட்ட இடமெல்லாம் மலராக / கை பட்ட பொருளெல்லாம் பொன்னாகணும் / உன் கண் பட்டு வழிகின்ற நீரெல்லாம் / ஆனந்தக் கண்ணீரே என்றாகணும் / ஒரு பதினாறும் தான் பெற்று நீ வாழ / அதை பார்க்கின்ற என் உள்ளம் தாயாக'' -என அண்ணன் தன்னை தாயாய் பாவிக்கிற நேசத்தை பாட்டில் வைத்தேன்.

இந்தப் படத்தில் அண்ணன் எம்.ஜி.ஆரின் தங்கையாக நடித்த சாரதா ஒரு பேட்டியில்... ""நான் அண்ணன் எம்.ஜி.ஆருடன் ஒரே ஒரு படத்தில்தான் நடித்துள்ளேன். நினைத்ததை முடிப்பவன். தமிழர்களின் வீடுகளில் திருமணம் நடக்கும்போது தவறாமல் இடம்பெறும் "பூமழை தூவி'’ பாடல். ஆக... எக்காலத்திற்கும் அழிவே இல்லாத இந்தப் பாடல் மூலம்... இந்தப் பாடல் இடம்பெற்ற படம் மூலம் எனக்கும் பெருமையாக இருக்கிறது'' எனச் சொல்லியிருந்தார்.

கல்யாணம் என்பது இருப்பதுவரை இந்தப் பூமழை தூவிக்கொண்டுதானே இருக்கும்.

""எங்கிருந்தோ வந்த மலையாளி'' என மக்கள்திலகத்தை தூற்றினார்கள் எதிர்கட்சியினர். அதற்கு பாட்டாலே நான்கொடுத்த பதிலடியைச்...

(சொல்கிறேன்)

போட்டோ உதவி- ஞானம்

nkn010820
இதையும் படியுங்கள்
Subscribe