மிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு உருவாக் கப்பட்ட குமரி லேகியம் பூஞ்சை படிந்து சுகாதார மின்றி இருப்பதால் அதனை பொதுமக்களுக்கு விநி யோகிக்க இயக்குனர் கொடுத்த உத்தரவு சர்ச் சையை ஏற்படுத்தியுள்ளது.

ll

இந்திய அரசு, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் சுகாதார மேம்பாடு மற்றும் நோய்த் தடுப்பு சக்தியை வலுப்படுத்தும் வகையில் ஸ்கூல் ஹெல்த் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்திற்கு மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து செலவிடுகின்றன. தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை, பள்ளிக் கல்வித்துறை, மனிதவள மேம்பாட்டுத்துறை ஆகியவை இணைந்து திட்டத்தைச் செயல்படுத்துகின்றன.

பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு உடல்நலன் மற்றும் ஊட்டச்சத்து பற்றிய விழிப்புணர்வை வழங்குதல், அவர்களுக்கு இளம்பருவத்தில் வருகின்ற நோய்களை ஆரம்ப காலத்திலே கண்டறிந்து சிகிச்சை யளிப்பது, பெண் குழந்தைகளுக்கு மாத விடாய்க் காலங்களில் சுகாதாரத்தை எப்படி கையா ளுவது என்கிற அனைத்து விவரங்களையும் உள்ளடக் கியதே ஸ்கூல் ஹெல்த் திட்டமாகும்.

தமிழகம் முழுவது முள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர்களின் ஆரோக்கியத்திற்காக ஆயுஷ் குழுமம் மற்றும் டாம்ப்கால் நிறுவனத்தின் மூலமாக குமரி லேகியம் தயாரிக்கும் பணி வழங்கப்படுகிறது. இந்த குமரி லேகியம், பாரம்பரிய முறையில் சோற்றுக் கற்றாழை, பாதாம், முந்திரி, பிஸ்தா, கசகசா, கற்கண்டு, மிளகு, நெய், பசும்பால் இவை யெல்லாம் சேர்த்து உருவாக்கப் படுகிறது. இப்படி சத்தான மூலப்பொருட்களை வைத்து, பல்வேறு வைட்டமின்கள் இருக்கும்படி உருவாக்கிய இந்த லேகியத்தை மாணவர்கள் காலை, மாலை 5 கிராம் சாப்பிட்டுவந்தால் உடல் புத்துணர்ச்சி அடைந்து ஆரோக்கியம் பெறும் என சித்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

hh

இப்படி உருவாக்கப்பட்ட குமரி லேகியத்தை தமிழகம் முழுவதுமுள்ள சுகாதார நிலையங் களுக்கு அனுப்பி, அவர்களிட மிருந்து பள்ளி மாணவர்களுக்கு கொண்டுசேர்க்கப்படும். அதேபோல சென்ற ஆண்டு ஜூன் மாதம் தமிழகத்திலுள்ள 385 அரசு சுகாதார மையங்களுக்கு லேகியம் அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால் இதுநாள் வரையிலும் இந்த குமரி லேகியம் பள்ளி மாணவர்களைச் சென்றுசேரவில்லை. ஆனால் அதற்குமாறாக அவசர அவசரமாக ஒரு சுற்றறிக்கையை இயக்குனர் 16.11.22 அன்று அனுப்பினார். அதில், சுகாதார நிலையங்களிலுள்ள குமரி லேகியத்தை பொதுமக்களுக்கு வழங்குவதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்.

மாணவர்களுக்காக உருவாக்கப்பட்டதை எதற்காக பொதுமக்களுக்கு கொடுக்கவேண்டும் என விசாரித்தபோது, "அந்த லேகியம் மூன்று வருட உத்தரவாதத்துடன் தயாரிக்கப்பட்டு தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த குமரி லேகியம் அத்தனை சுகாதார மையங்களுக்கும் அனுப்பப்பட்டு, அமைச்சர்கள் தொடங்கி வைப்பதாக இருந்த சூழ்நிலையில்... சற்று காலதாமதம் ஆகிவிட்டது. மீண்டும் அதனைத் தொடங்கிவைக்க அமைச்சர்கள் தயாராக இருந்த நிலையில், அது பூஞ்சை பிடித்துள்ளதாகவும், மாணவர்களுக்கு கொடுத்தால் சிக்கலை உண்டாக்கும் என்பதாலும் அதனை சித்த மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களுக்கு கொடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளாராம்.

Advertisment

dd

லேகியம் தயாரிப்பதற்கு தரமற்ற மூலப் பொருட்களைப் பயன்படுத்தியதால் பூஞ்சை பிடித்துள்ளதாகவும், தரமான பொருட்களைப் பயன்படுத்தியிருந்தால் மூன்று வருடத்திற்கும் மேலாகவே கெடாமல் இருக்கும் எனவும் சித்த மருத்துவர்கள் சொல்கிறார்கள். ஆயுஷ் குழும இயக்குனராகவும் டாம்ப்காலின் நிர்வாக இயக்குனராகவும் கணேசன் இருப்பதால், குமரி லேகியம் தயாரிப்பில் பல கோடி ஊழல் நடைபெற்று இருப்பதாகவும், இந்த ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள் மீது தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என சித்த மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள். மீண்டும் லேகியத்தை தரமாக தயாரித்து மாணவர்களுக்கு வழங்கவேண்டும்' எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

இயக்குனர் கணேசன், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் உறவினர். சென்ற ஆட்சிகாலத்தில் கொரோனா காலகட்டத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பல ஆர்டர்களை டெண்டர் போடாமலே கொடுத்து ஊழல் செய்ததாக இவர்மீது குற்றச்சாட்டு நிலவுகிறது.

இதுகுறித்து ஆயுஷ் குழும இயக்குநர் கணேசனிடம் கேட்டபோது, "நீங்கள் சொல்வது போன்று எந்த லேகியமும் பூஞ்சை பிடிக்கவில்லை... எந்த ஊழலும் நடக்கவில்லை''’என்றார்.

Advertisment