கடந்த ஹரியானா, காஷ்மீர் தேர்தலின் போது எனக்கு ஒன்று, உனக்கு ஒன்று என ஆளுக்கொரு மாநிலத்தை பா.ஜ.க., காங்கிரஸ் கூட்டணி வென்றதைப் போலவே தற்போது நடைபெற்றுள்ள மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநிலத் தேர்தல்களிலும் இரு கூட்டணியும் ஆளுக்கு ஒரு மாநிலத்தை கைப்பற்றியுள்ளன. இரு மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகளும் நவம்பர் 23ஆம் தேதி சனிக்கிழமை வெளியானது.
மகாராஷ்டிராவைப் பொறுத்தவரை, பா.ஜ.க. கூட்டணியில், சிவசேனாவிலிருந்து பிரிந்துவந்த ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா, அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள், மகாராஷ்டிரா மகாயுதி என்ற பெய ரிலும், எதிர்ப்புறம், காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மகாவிகாஸ் அகாடி என்ற பெயரிலும் களமிறங்கின. இத்தேர்தலைப் பொறுத்தவரை, பா.ஜ.க.வா? காங்கிரஸா? என்பதைத் தாண்டி, பிளவுபட்ட சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கும்கூட யாருக்கு மக்களிடம் செல்வாக்கு இருக் கிறது என்பதை வெளிக்காட்டும் தேர்தலாகவு
கடந்த ஹரியானா, காஷ்மீர் தேர்தலின் போது எனக்கு ஒன்று, உனக்கு ஒன்று என ஆளுக்கொரு மாநிலத்தை பா.ஜ.க., காங்கிரஸ் கூட்டணி வென்றதைப் போலவே தற்போது நடைபெற்றுள்ள மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநிலத் தேர்தல்களிலும் இரு கூட்டணியும் ஆளுக்கு ஒரு மாநிலத்தை கைப்பற்றியுள்ளன. இரு மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகளும் நவம்பர் 23ஆம் தேதி சனிக்கிழமை வெளியானது.
மகாராஷ்டிராவைப் பொறுத்தவரை, பா.ஜ.க. கூட்டணியில், சிவசேனாவிலிருந்து பிரிந்துவந்த ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா, அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள், மகாராஷ்டிரா மகாயுதி என்ற பெய ரிலும், எதிர்ப்புறம், காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மகாவிகாஸ் அகாடி என்ற பெயரிலும் களமிறங்கின. இத்தேர்தலைப் பொறுத்தவரை, பா.ஜ.க.வா? காங்கிரஸா? என்பதைத் தாண்டி, பிளவுபட்ட சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கும்கூட யாருக்கு மக்களிடம் செல்வாக்கு இருக் கிறது என்பதை வெளிக்காட்டும் தேர்தலாகவும் இருந்ததால், இரண்டு அணியினரும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டிவந்தனர்.
மகாராஷ்டிராவில் பா.ஜ.க. கூட்டணிக்கு ஆதரவாக பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், கூட்டணிக்கட்சித் தலைவர்கள் அனைவரும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் கூட்டணி சார்பில் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் கூட்டணித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
பா.ஜ.க.வுக்கு ஆதரவாக பெருமளவு பணபலமும் இறக்கப்பட்டது. பா.ஜ.க. கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் 150 பேருக்கு தலா 50 கோடி கொடுப்பதாக ஏக்நாத் ஷிண்டே உறுதியளித்ததாகவும், முதல் தவணையாக 15 கோடி ரூபாய் விநியோகிக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. அதற்கேற்ப 15 கோடி ரூபாயுடன் இரு வாகனங்கள் பிடிபட்டன. பா.ஜ.க. முன்னாள் அமைச்சர் வினோத் தவாடே மற்றும் பா.ஜ., எம்.எல்.ஏ. ராஜன்நாயக் ஆகியோர் சுமார் 5 கோடி ரூபாய் பணத்தை வாக்காளர்களுக்கு விநியோகம் செய்யும்போது பிடிபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல் மாற்றுக் கட்சியிலிருந்து வேட்பாளர்களை வளைக்கும் வைபவங்களும் குறையில்லாமல் நடந்தேறின.
இந்நிலையில் தேர்தல் முடிவுகள் வெளிவரத் தொடங் கியதும் தொடக்கத்திலிருந்தே பா.ஜ.க. கூட் டணி முன்னிலை பெற்ற நிலையில், போகப்போக முன் னிலையை அதி கரித்துக்கொண்டே சென்றது. மொத்தமுள்ள 288 இடங்களில், பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவை யென்ற நிலையில், பா.ஜ.க. கூட்டணி தொடக்கத்திலிருந்தே 180 இடங்களுக்கு மேல் முன்னிலையில் இருந்தது. போகப்போக 225 இடங்களுக்கு மேல் முன்னிலையை அதிகரித்தது. காங்கிரஸ் கட்சியின் மகாவிகாஸ் அகாடி தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்தது. கடந்த தேர்தலில் 105 இடங்களில் வெற்றி பெற்றிருந்த பா.ஜ.க., பெரும்பான்மை கிடைக் காத காரணத்தால் சிவ சேனாவையும், தேசியவாத காங்கிரஸையும் உடைத்து ஆட்சியைப் பிடித்தது. தற்போது, கடந்த தேர்தலைவிடக் கூடுத லான இடங்களை பா.ஜ.க. அறுவடை செய்துள்ளது. இந்த வெற்றி, பா.ஜ.க.வே எதிர்பாராதது! எனி னும், பா.ஜ.க. தனிப் பெரும்பான்மை பெறாததால் இம்முறையும் மகா ராஷ்டிராவில் கூட் டணி ஆட்சி உறுதி யாகியுள்ளது. இந் நிலையில், முதல்வர் பதவி பா.ஜ.க.வுக்கு கிடைக்குமா அல்லது கடந்த முறைபோல் பா.ஜ.க. கூட்டணிக் கட்சிக்கே முதல்வர் பதவி கிடைக்குமா என்பதும், பா.ஜ.க. சார்பில் முதல்வர் பதவிக்கு தேவேந்திர ஃபட்னாவிஸ் முன்னிறுத்தப்படு வாரா என்பது கூட்டணிக் கட்சிகளிடையே பேசி முடிவெடுக்கப்படுமென்று தெரிகிறது. இதில் கூட்டணிக் கட்சிகளிடையே முரண்பாடு ஏற்பட்டால், மீண்டும் ஒரு உடைப்பை ஏற்படுத்தவும் பா.ஜ.க. தயங்காது என்றே தெரிகிறது!
ஜார்க்கண்ட் தேர்தலைப் பொறுத்த வரை, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம், இடதுசாரிகள் ஒரு அணியிலும், பா.ஜ.க. கூட்டணியில், ஒருங்கிணைந்த ஜார்கண்ட் மாணவர் சங்கம், ஒருங்கிணைந்த ஜனதா தளம், லோக் ஜனதா ஆகிய கட்சிகளுமாக இருமுனைப் போட்டி நிலவியது. 500 கோடி ரூபாய் அளவுக்கு செலவழித்து வெறுப்புப் பிரச்சாரத்தில் பா.ஜ.க. ஈடுபடுவ தாகவும், தனக்கெதிராக சுமார் 95 ஆயிரம் வாட்ஸ்அப் க்ரூப்களை உருவாக்கியுள்ள தாகவும் ஹேமந்த் சோரன் குற்றம்சாட்டி யிருந்தார். தேர்தல் முடிவுகள் வெளிவரத் தொடங்கியதிலிருந்தே காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணிக்கிடையே இழுபறியாகத் தான் சென்று கொண்டிருந்தது. மொத்தமுள்ள 81 இடங்களில் இரண்டு கூட்டணியும் 40 இடங்கள் என்ற நிலையில் முன்னும்பின்னுமாக இருந்தன. போகப்போக, ஜே.எம்.எம். + காங்கிரஸ் கூட்டணி முன்னிலை பெற்று, 50+ இடங்களைப் பெற்றது. பா.ஜ.க. கூட்டணி பெருத்த பின்னடைவைச் சந்தித்தது. இதன்மூலம் ஜார்க்கண்டில் ஜே.எம்.எம். + காங் கிரஸ் கூட்டணியின் ஆட்சி மலர்வது உறுதியாகியுள்ளது.
அனைவராலும் பெரிதும் எதிர்பார்க் கப்பட்ட வயநாடு எம்.பி. தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் சார்பாக முதன்முறை யாகத் தேர்தலில் களமிறங்கியுள்ள பிரியங்கா காந்தி, தொடக்கம் முதலே அதிரடியாக முன்னிலை பெற்று, கிட்டத்தட்ட 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று முதன்முறையாக பாராளுமன்றத்தில் காலடி வைக்கிறார்.
இதே தொகுதியில் 2024 பொதுத் தேர்தலில் போட்டியிட்ட ராகுல் காந்தி, 3,64,422 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நிலையில், அந்த சாதனையை பிரியங்கா காந்தி முறியடித்துள்ளார்!