"ஹலோ தலைவரே, ஜெ.வின் கொடநாடு பங்களா விவகாரத்தில் காவல்துறை அதிகாரிகள் விசாரணை வளையத்துக்குள் வந்திருக்காங்க.''”
"ஊட்டி மலைப்பாதை மாதிரி திடீர் திருப்பமா இருக்கே?''”
"உண்மைதாங்க தலைவரே, கொடநாடு விவகாரத்தில் முக்கியத் திருப்பமாக இரண்டு காவல்துறை அதிகாரிகளை விசாரணை டீம் சுற்றி வளைத்திருக்கிறது. அதில் ஒருவர் குன்னூர் டி.எஸ்.பி. சுரேஷ். மற் றொருவர் உளவுப்பிரிவு இன்ஸ்பெக் டர். இவர்கள் இருவரும் கொட நாடு குற்றவாளிகளுக்கும் எடப்பாடி தரப்பிற்கும் வழக்கு தொடர்பான சீக்ரெட் மூவ்களை எல்லாம் பாஸ் பண்ணி வந்ததாக விசாரணை டீம் சந்தேகிக்கிது. இவர்களில் டி.எஸ்.பி. சுரேஷின் மனைவியும் அ.தி.மு.க. மாஜி மந்திரி வேலுமணியின் மனைவியும் பள்ளித் தோழிகளாம். அந்த நட்புதான் வழக்கு ரகசியங் களை அந்தத் தரப்புக்குப் பகிர வைத்திருக்கிறது என்கிறார்கள். இது குறித்து நாம் ஏற்கனவே நக்கீ ரனில் குறிப் பிட்டிருக்கிறோம். இவர்களிடம் நடக்கும் விசாரணை, வழக்கில் அதிரடித் திருப்பத்தை உண்டாக்கும் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.''”
"அ.தி.மு.க. மாஜி மந்திரி வேலுமணி வீட்டில் நடந்த ரெய்டில், பா.ஜ.க. தொடர்பான ஒரு பவர்ஃபுல் எவிடன்ஸும் அகப்பட்டிருக்குதே?''”
"மாஜி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையால் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில், எடப்பாடி முதல்வராக இருந்த போது, ஒன்றிய அமைச்சர் பியூஸ்கோயல் மூலம், மாதாமாதம் பா.ஜ.க. தலைமைக்கு அவர் கப்பம் கட்டி வந்திருக்கிறார். மேலும் கர்நாடக, குஜராத் தேர்தல்களின் போது, எடப்பாடி தரப்பிலிருந்து பா.ஜ.க.வுக்குப் பணம் போயிருக்கிறது. தனி விமானங்கள் மூலமும் கரன்ஸிக்கட்டுகள் பறந்திருக்கின்றன. அது தொடர்பான கணக்கு வழக்கு டாக்குமெண்ட்டுகள்தான், லட்டு மாதிரி கிடைச
"ஹலோ தலைவரே, ஜெ.வின் கொடநாடு பங்களா விவகாரத்தில் காவல்துறை அதிகாரிகள் விசாரணை வளையத்துக்குள் வந்திருக்காங்க.''”
"ஊட்டி மலைப்பாதை மாதிரி திடீர் திருப்பமா இருக்கே?''”
"உண்மைதாங்க தலைவரே, கொடநாடு விவகாரத்தில் முக்கியத் திருப்பமாக இரண்டு காவல்துறை அதிகாரிகளை விசாரணை டீம் சுற்றி வளைத்திருக்கிறது. அதில் ஒருவர் குன்னூர் டி.எஸ்.பி. சுரேஷ். மற் றொருவர் உளவுப்பிரிவு இன்ஸ்பெக் டர். இவர்கள் இருவரும் கொட நாடு குற்றவாளிகளுக்கும் எடப்பாடி தரப்பிற்கும் வழக்கு தொடர்பான சீக்ரெட் மூவ்களை எல்லாம் பாஸ் பண்ணி வந்ததாக விசாரணை டீம் சந்தேகிக்கிது. இவர்களில் டி.எஸ்.பி. சுரேஷின் மனைவியும் அ.தி.மு.க. மாஜி மந்திரி வேலுமணியின் மனைவியும் பள்ளித் தோழிகளாம். அந்த நட்புதான் வழக்கு ரகசியங் களை அந்தத் தரப்புக்குப் பகிர வைத்திருக்கிறது என்கிறார்கள். இது குறித்து நாம் ஏற்கனவே நக்கீ ரனில் குறிப் பிட்டிருக்கிறோம். இவர்களிடம் நடக்கும் விசாரணை, வழக்கில் அதிரடித் திருப்பத்தை உண்டாக்கும் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.''”
"அ.தி.மு.க. மாஜி மந்திரி வேலுமணி வீட்டில் நடந்த ரெய்டில், பா.ஜ.க. தொடர்பான ஒரு பவர்ஃபுல் எவிடன்ஸும் அகப்பட்டிருக்குதே?''”
"மாஜி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையால் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில், எடப்பாடி முதல்வராக இருந்த போது, ஒன்றிய அமைச்சர் பியூஸ்கோயல் மூலம், மாதாமாதம் பா.ஜ.க. தலைமைக்கு அவர் கப்பம் கட்டி வந்திருக்கிறார். மேலும் கர்நாடக, குஜராத் தேர்தல்களின் போது, எடப்பாடி தரப்பிலிருந்து பா.ஜ.க.வுக்குப் பணம் போயிருக்கிறது. தனி விமானங்கள் மூலமும் கரன்ஸிக்கட்டுகள் பறந்திருக்கின்றன. அது தொடர்பான கணக்கு வழக்கு டாக்குமெண்ட்டுகள்தான், லட்டு மாதிரி கிடைச்சிருக்கிறதாம்.''”
"அ.தி.மு.க.வில் இருக்கும் வன்னிய சமூகப் பிரமுகர்கள், எடப்பாடிக்கு எதிராக வரிந்து கட்டுகிறார்களே?''”
"ஆமாங்க தலைவரே, தேர்தலில் படுதோல்வியடைந்தும் கூட எடப்பாடி, சாதி பாலிடிக்ஸ் பண்ணுவதாக அ.தி.மு.க.வில் உள்ள வன்னிய சமூகப் பிரமுகர்கள் குமுறுகிறார்கள். பெரும் பான்மைச் சமூகமாக இருக்கும் தங்களை மதிக்காமல், தன்னோட கொங்கு கவுண்டர் சமூகத்துக்கு மட்டுமே இன்னும் முக்கியத் துவம் தருகிறார்னு மாஜி அமைச்சர்களான கே.பி.முனுசாமி, எம்.சி.சம்பத், சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், கே.சி.வீரமணி ஆகியோர் செம காட்டத்தில் இருக்கிறார்களாம். இந்த கடுப்பால் தான், சட்டமன்றத்தில் பட்ஜெட்டுகள் தாக்கலானபோது, கே.பி.முனுசாமி அந்தப் பக்கமே தலையைக் காட்டலையாம். அவரது கோபத்தை அறிந்த எடப்பாடி, முனுசாமியைத் தொடர்புகொண்டு சமாதானப்படுத்தி வருகிறாராம்.''”
"வன்னிய சமூகத்தைப் பா.ஜ.க. கையில் எடுக்கத் துடிக்குதே?''”
"உண்மைதாங்க தலைவரே, அ.தி.மு.க. மீது வன்னிய சமூகத்தினர் அதிருப்தியில் இருக்கும் நிலையில், அவர்களைத் தங்கள் பக்கம் வளைக்கும் முயற்சியில் இருக்குது பா.ஜ.க. இதற்கான அசைண்மெண்டை பெங்களூரில் இருக்கும் வாழும் கலை ஸ்ரீஸ்ரீரவிசங்கரிடம் தேசிய பா.ஜ.க. ஒப்படைத்திருக்கிறதாம். இதைத் தொடர்ந்து ஒரு முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை பெங்களூரில் நடத்தியிருக்கிறார் ரவிசங்கர். அதில் அ.தி.மு.க. மாஜி மந்திரி எம்.சி.சம்பத், பா.ம.க. முன்னாள் எம்.எல்.ஏ. கலையரசன், மற்றும் ஏ.கோவிந்த சாமியின் மகனும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஏ.ஜி.சம்பத் உள்ளிட்ட பலரும் கலந்துக்கிட்டாங்களாம்.''”
"அண்மையில் நடந்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் டிரான்ஸ்பரின் பின்னணியில் ஏகப்பட்ட சுவாரஸ்யக் கதைகள் சொல்லப்படுதே?''”
"உண்மைதாங்க தலைவரே, அதில் ஒன்றை மட்டும் உங்களுக்குச் சொல்றேன். இந்த டிரான்ஸ்பர்கள் மூலம் ஐ.பி.எஸ். அதிகாரிகளான பிரேமானந்த் சின்ஹா வடக்கு மண்டல ஐ.ஜி.யாகவும், அன்பு, வடசென்னை இணை கமிஷன ராகவும் நியமிக்கப்பட்டிருக் கிறார்கள். இவர்கள் கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் செல்வாக்காக இருந்தவர்கள். அதனால் அவர்கள் சென் னைக்கு வேண்டாம் என்று உளவுத்துறை ஏ.டி.ஜி.பி.யான டேவிட்சன் தேவஆசிர்வாதம் எதிர்ப்பு தெரிவித்தாராம். இதைக் கேட்ட ஆட்சி மேலிடம், கடந்த ஆட்சிக் காலத்தில் ஓ.பி.எஸ்.ஸின் வலதுகரம் போல் செயல் பட்ட உங்களையே உளவுத் துறையின் உயர் பதவியில் உட்கார வைத்திருக்கிறோம். அப்படி இருக்க, நல்ல அதிகாரிகளான அவர்களுக்கு உரிய பதவியைக் கொடுக் கக் கூடாதான்னு கேட்க, ஆசிர்வாதம் கப்சிப் ஆகிவிட்டாராம்.''”
"தி.மு.க. ஆட்சியிலும் அ.தி.மு.க. ஆதரவாளர்களின் செல்வாக்கு கொடி கட்டிப் பறக்குதே?''”
"உண்மைதாங்க தலைவரே, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்காக துபாய் செல்லும் முதல்வர் ஸ்டாலினின் நிகழ்ச்சி களை ஒருங்கிணைக்கும் பணியை, செலின் என் பவர் நடத்தும் ’இவோக் மீடியா’ என்கிற ஈவண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்திடம் ஒப்ப டைத்திருக்கிறது தமிழக அரசு. இவர், அ.தி.மு.க. மாஜி சுகாதார மந்திரி விஜயபாஸ்கரின் வலது கை என்கிறார்கள். தமிழக அரசு இங்கே நடத்த இருக்கும் நிகழ்ச்சிகளையும் இவர்கிட்டே ஒப்படைக்கவும் பேச்சுவார்த்தை நடக்குதாம். விஜயபாஸ்கர் தன் கட்டுப் பாட்டில் கவர்மெண்ட் இருப் பதா பெருமையடிக்கிறாராம்.''”
"லஞ்ச அதிகாரிகளுக்கு பனிஷ்மெண்ட் டிரான்ஸ்பர் கொடுக்கப்பட்டிருக்கே?''”
"ஆமாங்க தலைவரே, அண்மையில் நடந்த கலெக்டர்கள் மாநாட்டில் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், இன்னும் நம் அரசு யாருக்கும் மணல் எடுக்கும் அனுமதியைக் கொடுக்கவில்லை. ஆனால் கன்னியாகுமரி, கோவைப் பகுதிகளில் இருந்து கேரளாவிற்கு பெருமளவில் மணல் கடத்தப் படுகிறது என்று அதிகாரிகள் மீது பகிரங்கமாகக் குற்றச்சாட்டை வைத்தார். இந்த விவகாரத்தை விசாரிக்கும்படி உளவுத்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட, உளவுத்துறையோ, கோவை எஸ்.பி. செல்வநாகரத்தினம் லஞ்சம் வாங்கிக் கொண்டு மணல் கடத்தலை அனுமதிக்கிறார் என்றும், குமரி எஸ்.பி.யும் சரியில்லை என்றும், ரிப்போர்ட் கொடுத்தது. இதைத்தொடர்ந்து கோவை எஸ்.பி., காவலர் பயிற்சிப் பள்ளிக்குத் தூக்கியடிக்கப்பட, கன்னியாகுமரி எஸ்.பி.யும் மாற்றப்பட்டிருக்கிறார்.''”
"தமிழக அரசின் அட்வ கேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ராஜினாமான்னு செய்தி பரவியதே?''”
"எனக்கும் வாட்ஸ் ஆப்பில் வந்தது. தி.மு.க வழக்கறிஞர்கள் தரப்பில் விசாரிச்சப்ப, குற்ற வழக்குகளில் மிகுந்த அனுபவம் பெற்றவர் சண்முகசுந்தரம். திறமையா வாதாடி அரசுக்கு நல்ல பெயர் வாங்கித் தருபவர். அதே நேரத்தில், ரிட் வழக்குகளில் இன்னும் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால், கோர்ட் டில் நெருக்கடிகள் உருவாகு தாம். அதனால், ரிட் வழக்கு களைக் கவனிக்க சிறப்பு அட்வகேட் ஜெனரல் என அனுபவமிக்க ஒருவரை நியமிக்கலாம்னு முதல்வரிடம் ஒரு தரப்பு சொல்லியிருக்கு. அப்படியொரு நியமனம் நடந்தால் தேவையற்ற விமர்சனங்களும் ஈகோ க்ளாஷூம் ஏற்படலாம்னு சீனியர் அட்வகேட் என்.ஆர். இளங்கோ எம்.பி. போன்றவங்க முதல்வர்கிட்ட சொல்லி யிருக்காங்க. இந்த நிலையில் தான், அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் தனக்கு நெருக்கமான வட்டாரங்களில், அதிகாரிகள் தரும் நெருக்கடிக்காக முதல்வர் என்னை ரிசைன் பண்ணச் சொன்னால் ரிசைன் பண்ணிடுவேன். கட்சிப் பணிகளிலும் ஈடுபடுவது பற்றி யோசிக்கணும்னு அதிருப்தி குரலில் சொல்லி யிருக்கிறார். முதல்வர் கவனத்துக்கு இது வந்ததால், ஸ்பெஷல் ஏ.ஜி. நியமன யோசனையை தள்ளி வச்சிட்டாராம். சண்முகசுந்தரத்தின் ராஜினாமா விவகாரத்திற்கும் தற்காலிக முற்றுப்புள்ளி விழுந்திருக்குன்னு சொல்றாங்க.''”
"முன்னாள் கேரள கவர்னர் சதாசிவம், சசிகலாவை சந்திக்க அப்பாயிண்மெண்ட் கேட்டிருக்கிறாரே?''”
"ஆமாங்க தலைவரே, முந்தைய ஆட்சிக் காலத்தில் எடப்பாடிக்கும் டெல்லிக்கும் பாலமாக இருந்தவர் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், கேரள மாநில முன்னாள் கவர்னரு மான சதாசிவம். சமீபகாலமாக எடப்பாடிக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடுகள் அதிகரித்ததால், சதாசிவத்தின் நட்பை முறித்துக் கொண்டாராம் எடப்பாடி. இந்த நிலையில்தான், சசிகலாவை சந்திக்கத் தூது அனுப்பியிருக்கிறார் சதாசிவம். இவர் எதற்காக நம்மை சந்திக்க துடிக்கிறார்ன்னு குழம்பிய சசிகலா, அவருக்கு அப்பயிண்ட்மெண்ட் தரலாமா? வேண்டாமா?ன்னு யோசிக்கிறாராம்.''”
"நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில், ஆசிரியர்களுக்கான தங்கு விடுதி சென்னை சைதாப்பேட்டையில் இருக்கிறது. இந்த விடுதியின் பொறுப்பாளராக வழக்கறிஞர் மணிவாசகன் என்பவர் இருக்கிறார். இவர் தன்னை அ.தி.மு.க. மாஜி வளர்மதியின் உறவினர் என்று சொல்லிக் கொண்டு, அத்துமீறல்களை அரங்கேற்றுகிறாராம். இங்குள்ள அறைகளில், தன்னிடம் வழக்கிற்காக வரும் நபர்களைத் தங்க வைக்கிறாராம். இங்கே இரவு நேரங்களில் மது, சூதாட்டம் உள்ளிட்ட விரும்பத்தகாத செயல்கள் நடப்பதாக ஏரியாவாசிகள் முகம் சுழிக்கிறார்கள். எனவே இவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷுக்கு புகார்கள் பறந்திருக்கின்றன.''”