துரை மத்திய சிறையின் ரூ.100 கோடி ஊழல் விசாரணையில் உயரதிகாரி கள் மூவரைக் காப்பாற்ற, இந்த வழக்கை இழுத்து மூடுவதற்கான வேலைகள் சத்தமில்லாமல் நடக்கின்றன.”

சிறைத்துறை வட்டாரத்திலிருந்து நமக்கு தகவல்வர, விசாரணையில் இறங்கினோம்.

என்ன ஊழல்? யார் மீது குற்றச்சாட்டு?

Advertisment

dd

கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது 2016 முதல் 2021 மார்ச் வரை, மதுரை மத்திய சிறையில், தபால் அனுப்புவதற்கான கவர்கள், எழுது பொருட்கள், மருத்துவ பேன்டேஜ், அலுவலக பைல் போன்றவை கைதிகளால் தயாரிக்கப்பட்டு, அரசு அலுவலகங் கள், மருத்துவமனைகள் மற்றும் நீதிமன்றங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக போலியாகக் கணக்கு காட்டியதில், ரூ.100 கோடி வரை ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. ஊழலில் சம்பந்தப்பட்ட உயரதிகாரிகளின் முயற்சியால், அந்த வழக்கு பிசுபிசுத்து ஒன்றுமில்லாமல் போனது.

ஆனாலும், மத்திய, மாநில தணிக்கை அதிகாரிகளின் ஆய்வில் உண்மை வெளிப்பட்டு, லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்திவருகிறது.

இந்த ஊழலுக்கு அப்போது இருந்த சிறைத்துறை கண்காணிப்பாளர்கள், சரக டி.ஐ.ஜி.க்கள் உடந்தையாக இருந்துள்ளனர். அவர்கள் உள்ளிட்ட 12 பேருக்கு, தமிழ்நாடு குடிமைப் பணிகள் (ஒழுங்கு மற்றும் மேல் முறையீடு) விதிகள் எண் 17 (ஆ)-ன் கீழ் குற்றச்சாட்டு குறிப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

இந்த ஊழலின் கதாநாயகர்கள் என்று சொல்லப்படுபவர்கள் நான்கு பேர்.

அவர்களில் ஸ்டோர்-கீப்பர் ராஜவேலு இறந்துவிட, முக்கிய மூன்று உயரதிகாரிகளோடு, ஊழலில் தொடர்பில்லாத சிறை அலுவலர்களுக்கும், சிறைக்காவலர்களுக்கும் குற்றச் சாட்டு குறிப்பாணை அனுப்பப்பட்டது, விவகாரத்தை நீர்த்துப்போகச் செய்யும் செயலாகும். அதாவது, லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் துறை ரீதியாக மேம்போக்காக விசாரணை நடத்தி, முதல் தகவலறிக்கையும் பதிவு செய்து, விவகாரத்தை முடிந்த மட்டிலும் மூடி மறைத்துவிடுவார்கள்’எனச் சிறைத்துறை வட்டாரத்தில் சந்தேகம் கிளப்புகின்றனர்.

ஊழல் விவகாரத்தில் மதுரை சரக சிறைத்துறை துணைத்தலைவர் பழனி, கோவை சிறைக் கண்காணிப்பாளர் ஊர்மிளா மற்றும் மதுரை மத்திய சிறை கூடுதல் கண்காணிப்பாளர் வசந்தகண்ணன் ஆகியோர் பெயர்கள் அடிபட, சம்பந்தப்பட்டவர்கள் நமது லைனுக்கு வராத நிலையில், கூடுதல் கண்காணிப்பாளர் வசந்தகண்ணனைத் தொடர்புகொண்டோம். அவரும் நம்மிடம் பேசுவதைத் தவிர்த்தார். அதேநேரத்தில், ஊழல் உயரதிகாரிகள் வட்டாரத்தில் இருந்து சில தகவல்களைப் பெற முடிந்தது.

Advertisment

dd

சிறைத்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஒருவர் சென்னையில் இருந்தும், இன்னொருவர் தென்மாவட்டத்தில் இருந்தும், ஊழல் அதிகாரிகளுக்கு தொடர்ந்து குடைச்சல் கொடுத்துவருகின்றனர். அந்த இருவரில் ஒருவர், சிறைத் துறை நடவடிக்கைகளில் தலையிடும்போதெல்லாம், அவர் சொல்வதை உயரதிகாரிகள் கேட்கவேண்டும். இல்லையென்றால், உயரதிகாரிகளின் தகாத நடவடிக்கைகளை சமூக வலைத் தளங்களில் பரப்பிவிடுவார். உதாரணத்துக்கு சிறைப் பணியில் உள்ள ஒருவருக்கு ஷூ போடவில்லை என்று மெமோ கொடுக்கப்பட்டால், உடனே அவர் சென்னையில் உள்ள ஓய்வுபெற்ற நபரைத் தொடர்புகொள்வார். அந்த நபர், சம்பந்தப்பட்ட சிறை மேலதிகாரியிடம் பேசுவார். அவருடைய பேச்சுக்கு செவி சாய்க்கவில்லை என்றால், அந்த மேலதிகாரி குறித்த ரகசிய தகவல்களை சிறை வட்டாரத்திலிருந்து சேகரித்து அம்பலப்படுத்திவிடுவார். இதுபோன்ற மிரட்டல்களை சிறைத்துறை உயரதிகாரிகள் சந்தித்துவருகின்றனர்.

ரூ.100 கோடி ஊழல் என்று கூசாமல் சொல்கிறார் களே, சிறைத்துறைக்கான பட்ஜெட்டே ரூ.36 கோடியை எட்டியதில்லை. ரூ.30 கோடி ஊழல் என்று சொன்னால் மக்களைச் சென்றடையாது என்பதாலேயே, ரூ.100 கோடி என்று மிகைப்படுத்திச் சொல்கிறார்கள். தணிக்கைத் துறையும்கூட ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்கிறது. பாளையங்கோட்டை, கடலூர் சிறைகளோடு மிகப்பெரிய சிறையான மதுரை மத்திய சிறையை எப்படி ஒப்பிடமுடியும்? வேலூர் சிறை குறித்தெல்லாம் யாரும் மூச்சுவிடுவதில்லை. அங்கு ஏன் தணிக்கைத்துறை ஆய்வு நடத்தவில்லை? மதுரை மத்திய சிறையும், ஊழலின் கதாநாயகர்கள் என்று சொல்லப்படும் உயரதிகாரிகள் மூவரும்தான் சிலரது டார்கெட்’என ஆற்றாமை வெளிப்பட்டது.

ஊழலில் பணம் குவித்த உயரதிகாரிகளால் குடைச்சலை சமாளிக்க முடியாதா என்ன? சென்னையிலுள்ள அந்த ஓய்வுபெற்ற நபரிடம் பேச்சுவார்த்தை நடத்தி கைலுக்கிவிட, தற்போது இன்னொரு விவகாரம் ஓடிக்கொண்டிருக்கிறது.

சிறை உயரதிகாரிகளுக்கு எதிராக எந்தெந்த சிறைகளில் யார் யாரெல்லாம் செயல்படுகிறார்கள்? யார் யாரோடு தொடர்பில் இருக்கிறார்கள்? யார், யார் மதுரை சிறை ஊழல் குறித்து தகவல் உரிமைச் சட்டத்தின் மூலம் தகவல் பெற்றுள்ளனர்?

என்ற விபரமெல்லாம் சேகரிக்கப்பட்டு, அவர்களைக் குறி வைத்துள்ளனர்.

விருதுநகர் சிறையில் பணியாற்றும் காவலர் ஒருவர், மதுரை சிறை ஊழல் குறித்த கடிதம் ஒன்றைத் தன் கைபேசியில் வைத்திருந்தது மதுரை உயரதிகாரிக்குத் தெரியவந்தது. அந்த காவலரை விசாரித்தபோது, "கடிதத்தை தனக்கு அனுப்பியது தஞ்சாவூர் உதவி சிறை அலுவலர்' என உளறியிருக்கிறார். அந்த உதவி சிறை அலுவ லரை அழைத்து, கெட்டவார்த்தைகளால் ‘டோஸ்’ விட்ட மதுரை உயரதிகாரி, பல்கலைக்கழகம் ஒன்றில் துணை பதிவாளராக உள்ள அவருடைய மனைவியையும் விமர்சித்திருக்கிறார். அதனால் மனஉளைச்சலுக்கு ஆளான உதவி சிறை அலுவலர், தன் மனைவியிடம் நடந்ததைச் சொல்லி அழுதிருக் கிறார். இந்த விவகாரத்தை, தனக்குத் தெரிந்த உயர்நீதிமன்ற குற்றவியல் அரசு வழக்கறிஞரிடம் அந்தத் துணை பதிவாளர் கொண்டுபோயிருக்கிறார். இதையறிந்த உயரதிகாரி, அரசு வழக்கறிஞரோடு துணை பதிவாளரை சம்பந்தப்படுத்தி கொச்சையாகப் பேசியிருக்கிறார். அதனால், இந்த விவகாரம் தேசிய மகளிர் ஆணையம் வரை போயிருக்கிறது. நடவடிக்கைக்கு ஆளான விருதுநகர் சிறைக் காவலரும் நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்.

குற்றச்சாட்டுக்கு ஆளான சிறைத்துறை அதிகாரியை, அதே சிறையில் பணியில் நீடிக்கச் செய்தால், அவர் சாட்சிகளைக் கலைக்கத்தானே செய்வார்? சிக்கலுக்கு மேல் சிக்கலை சிறைத்துறை சந்தித்துவருகிறது.