ஸ்டெர்லிங் நடராஜன், கூடுவாஞ்சேரி
இப்பொழுது இந்தியாவை ஆண்டுகொண்டிருப்பது ஜனநாயகமா? பணநாயகமா?
ஆள்வதற்கு வாய்ப்பை வழங்குவது, ஜனநாயகம். ஆட்சியைப் பிடித்ததும் அதிகாரம் செலுத்துவது பணநாயகம்.
பா.சத்ரியன், பாகாநத்தம்
2021-ல் நடக்கவிருக்கும் தேர்தல் களத்திற்கு தி.மு.க., அ.தி.மு.க.வும் தயாரான நிலையில்… தினகரனின் அ.ம.மு.க. அமைதியாக இருப்பதன் மர்மம் என்ன?
தி.மு.க.-அ.தி.மு.க. என்பது நேரடி யுத்தம். அ.ம.மு.க. நடத்துவது நிழல் யுத்தம். அ.தி.மு.க.வை அ.ம.மு.க.வின் கண்ட்ரோலில் கொண்டுவரும் வகையில் சசிகலாவின் விடுதலையும் அதன் பிறகான நடவடிக்கையும் அமையுமா என்ற எதிர்பார்ப்புடன் ஒற்றைக் காலில் நிற்கிறது அந்த அரசியல் கொக்கு.
லட்சுமி செங்குட்டுவன், வேலூர் (நாமக்கல்)
ஆட்சிக் காலம் முடிந்த பிறகு சின்னம்மாவின் கால்களில் ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். விழ வாய்ப்பு உண்டா?
யார் காலை யார் எப்போது வாரிவிடுவார்கள் என்பது தெரியாத, சடுகுடு ஆட்டம்தான் அரசியல்.
பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை
தேசியக் கட்சியான காங்கிரஸ் தொடர்ந்து ப
ஸ்டெர்லிங் நடராஜன், கூடுவாஞ்சேரி
இப்பொழுது இந்தியாவை ஆண்டுகொண்டிருப்பது ஜனநாயகமா? பணநாயகமா?
ஆள்வதற்கு வாய்ப்பை வழங்குவது, ஜனநாயகம். ஆட்சியைப் பிடித்ததும் அதிகாரம் செலுத்துவது பணநாயகம்.
பா.சத்ரியன், பாகாநத்தம்
2021-ல் நடக்கவிருக்கும் தேர்தல் களத்திற்கு தி.மு.க., அ.தி.மு.க.வும் தயாரான நிலையில்… தினகரனின் அ.ம.மு.க. அமைதியாக இருப்பதன் மர்மம் என்ன?
தி.மு.க.-அ.தி.மு.க. என்பது நேரடி யுத்தம். அ.ம.மு.க. நடத்துவது நிழல் யுத்தம். அ.தி.மு.க.வை அ.ம.மு.க.வின் கண்ட்ரோலில் கொண்டுவரும் வகையில் சசிகலாவின் விடுதலையும் அதன் பிறகான நடவடிக்கையும் அமையுமா என்ற எதிர்பார்ப்புடன் ஒற்றைக் காலில் நிற்கிறது அந்த அரசியல் கொக்கு.
லட்சுமி செங்குட்டுவன், வேலூர் (நாமக்கல்)
ஆட்சிக் காலம் முடிந்த பிறகு சின்னம்மாவின் கால்களில் ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். விழ வாய்ப்பு உண்டா?
யார் காலை யார் எப்போது வாரிவிடுவார்கள் என்பது தெரியாத, சடுகுடு ஆட்டம்தான் அரசியல்.
பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை
தேசியக் கட்சியான காங்கிரஸ் தொடர்ந்து பலமிழந்து வருவது ஏற்புடையதா?
ஜனநாயகத்தில் எப்போதுமே ஏகபோகம் இருக்கக் கூடாது. மாற்று சக்திகள் இருந்தாக வேண்டும். 6 ஆண்டு காலமாக பா.ஜ.க. ஆட்சி செய்துவரும் நிலையில்... காங்கிரஸால் எதிர்க்கட்சி என்ற தகுதியைக்கூட நாடாளுமன்றத்தில் பெற முடியவில்லை. டெல்லித் தலைமை முதல், மாநில அமைப்புகள் வரை கலகலத்து கிடக்கிறது. உள்ளுக் குள்ளிருந்தே எதிர்ப்புக் குரல்கள் -பிளவுகள் வலுக்கின்றன. காங்கிரஸ் இல்லாத பாரதம் என்கிற பா.ஜ.க.வின் இலட் சியத்தை காங்கிரசில் இருப்பவர்களே நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்களோ என்கிற சந்தேகம் நிலவுகிறது.
மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14
காதல் மன்னன் ஜெமினிகணேசனுக்கு இணையாக இன்று எந்த நடிகரைக் குறிப்பிடலாம்?
ஜெமினி காலத்து காதல்களைக் கடந்து, இன்றைய காதலில் எத்தனையோ மாமன்னர்கள் இருக்கிறார்கள். ஏன், மன்னர்களை மட்டும் பார்க்கவேண்டும்? காதல் மகாராணிகளும் இருக்கிறார்கள். அதிலும் 15 ஆண்டு களுக்கும் மேலாக திரையுலகில் நிலைத்து நின்று, படக்காட்சிகளி லும் நிஜ வாழ்விலும் சளைக்காத காதல் உணர்வை மறைக்காமல் வெளிப்படுத்தும் நயன் தாராதான் நம்பர் 1.
வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு -சென்னை-110
அரசியல்வாதி களுக்கு ஓய்வுபெறும் வயதை நிர்ணயித்தால் என்ன?
அரசியல் என்பது லாபம் தரும் தொழிலாகவும், எந்த வயதிலும் வருமானம் தரும் பதவியாகவும் ஆக்கப்பட்டதாலும் பார்க்கப்படுவதாலும் ஏற்படும் குழப்பம் இது. அரசியல் என்பது பொதுவாழ்வு. மனிதவாழ்வை பொதுவாழ்வுக்காக அர்ப்பணிக்கும் அரசியலுக்கு ஓய்வு வயதே கிடையாது.
______________
தேர்தல் களம்!
அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72
தேர்தலில் கூட்டணி வைக்கும் வழக்கம் எப்போது தோன்றியது?
எதிர்முகாமை வெல்வதற்கான வியூகங்களில் ஒன்று, கூட்டணி. வாக்குகள் சிதறாமல் காப்பாற்றி வைக்கும் முயற்சி இது. பதவியைப் பெற இது உதவியாக இருப்பதால், தேர்தலுக்கு முந்தைய கூட்டணிகளும், தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணிகளும் காலங்காலமாக இருந்து வருகின்றன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, பிரிட்டிஷ் நிர்வாகத்தின்கீழ் நடைபெற்ற நீதிக்கட்சி ஆட்சிக் காலத்திலேயே காங்கிரசுக்கு ஆதரவாகவும், நீதிக் கட்சிக்கு ஆதரவாகவும் இங்கும் அங்குமாக மாறிய உறுப்பினர்கள் உண்டு. சுதந்திர இந்தியாவில் முதல் பொதுத்தேர்தல் (1951-52) நடந்த பிறகு, அப்போதைய சென்னை மாகாணத்தில் இருந்த 375 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 152 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. ஆனால், அது தனிப்பெரும்பான்மைக்குரியதாக இல்லை. சென்னை மாகாணத்துடன் ஆந்திரா, கேரள மாநிலங்களின் பகுதிகளும் இணைந் திருந்ததால், கம்யூனிஸ்ட்டுகள் கணிசமான அளவில் வெற்றி பெற்றிருந்தனர். விவசாயிகளுக்கான அமைப்புகள் -சுயேட்சைகள் உள்ளிட்டோருக்கு வெற்றி கிடைத்தது. இவர்கள் ஒருங்கிணைந்து ஐக்கிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் ஆட்சி அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில்... கம்யூனிஸ்ட்டுகள் கையில் அதிகாரம் போய்விடக்கூடாது என கருதிய டி.டி.கிருஷ்ணமாச்சாரி போன்ற காங்கிரஸ் பிரமுகர்கள், இந்தியாவின் கவர்னர் ஜெனரல் பதவி வகித்து ஓய்வில் இருந்த ராஜாஜியை மாகாண முதலமைச்சர் பதவிக்கு கொண்டுவருவதில் கவனம் செலுத்தினர். தேர்தலில் போட்டியிடாத ராஜாஜியும் இதனை ஏற்று, சட்டமேலவை உறுப்பினராகி (எம்.எல்.சி), காங்கிரஸ் ஆட்சியை அமைத்தார். காமன்வீல் கட்சியை சேர்ந்த 6 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவளித்ததால், அதன் தலைவர் மாணிக்கவேல் நாயக்கருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. உழவர் உழைப்பாளர் கட்சியின் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியர் தலைமையில் 19 உறுப்பினர்களும் ராஜாஜி ஆட்சியமைக்க ஆதரவளித்தனர். தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி என்பதை, இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலிலேயே உருவாக்கியவர் ராஜாஜி. தேர்தலுக்கு முந்தைய கூட்டணி என்பது இந்தியாவின் பல மாநிலங்களிலும் நடைபெற்றிருந்தாலும், தமிழ்நாட்டில் 1967-ல் நடந்த தேர்தலின்போது தி.மு.க. தலைமையில் அண்ணா அமைத்த கூட்டணி முக்கியத்துவம் வாய்ந்தது. அதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக், ராஜாஜியின் சுதந்திரா கட்சி, ம.பொ.சி.யின் தமிழரசு கழகம், ஆதித்தனாரின் நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் தொகுதிப் பங்கீடு செய்து போட்டியிட்டன. தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் ஆட்சி வீழ்த்தப்பட்டது. இந்தியாவில், ஒரு மாநிலக் கட்சி முதன்முறையாக ஆட்சிக்கு வந்தது. 50 ஆண்டு கடந்தும் அந்த வரலாறு நீடிக்கிறது.