ம.தமிழ்மணி, குப்பம் -ஆந்திரா
தற்போது மகாத்மா காந்தி உயிரோடு இருந்திருந்தால், தான் வாங்கிக் கொடுத்த சுதந்திர இந்தியாவின் தற்போதைய நிலையை நினைத்து என்னவென்று நினைப்பார்?
காந்தியடிகள் கவலையோ, வருத்தமோ படக்கூடாது என்றுதான் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத் தில் வளர்ந்த கோட்சே அவரை சுட்டுக் கொன்று, தேசத்தைக் காப்பாற்றியிருக்கிறான். புதிய கல்விக் கொள்கை பாடத்திட்டத்தில் இப்படி எழுதினாலும் எழுதுவார்கள்.
வாசுதேவன், பெங்களூரு
இந்தோனேசியாவில் கால்பந்து போட்டி வன்முறையில் பலர் உயிரிழப்பு ஏன்?
உலகத்தில் உள்ள பல நாடுகளில் அதிகம் ரசித்துப் பார்க்கப்படுகின்ற விளையாட்டு கால்பந்து. இந்த ஆண்டு கத்தார் நாட்டில் நடை பெறவிருக்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்காக உலகளாவிய ரசிகர்கள் ஆயத்தமாகி வருகிறார்கள். தங்கள் நாட்டு அணி, தாங்கள் விரும்பும் உள்ளூர் அணி இவற்றின் மீது அதீத ஆர்வம் கொள்வது கால்பந்து ரசிகர்களின் இயல்பு. அதுவே சில நேரங்களில் வெறி யாக மாறிவிடும். தோல்வியைத் தாங்க முடி யாத நிலையில் வன்முறையாக வெடிப்பதும் உயிரிழப்புகளும் தொடர்கின்றன. கால்பந்து விளை யாட்டே உயிர் மூச்சு என நினைக் கும் தென்அமெரிக் காவின் பிரேசில் நாட்டு ரசிகர்கள், தங்கள் நாடு தோல்வியடைந் தால் கதறும் கதறல் உலகெங்கும் கேட்கும். 1992ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியின்போது, ஈக்வடார் நாட்டைச் சேர்ந்த எஸ்கொபர் என்ற வீரர், எதிர் அணியிடமிருந்து பந்தை தடுக்க முயன்றபோது, அது தவறுதலாக சேம்சைடு கோலாக மாறிவிட்டது. ஈக்வடார் அணி தோற்றுப் போய் சொந்த நாட்டுக்குத் திரும்பியபோது சோகமும் கோபமுமாக காத்திருந்தார்கள் அந்நாட்டு கால்பந்து ரசிகர்கள். விமான நிலையத்திலேயே தங்கள் அணியின் எஸ்கோபரை ஒரு ரசிகர் சுட்டுவிட்டார். சிகிச்சை பலனின்றி அந்த வீரரும் இறந்துபோனார். விளையாட்டு என்று விளையாட்டாகச் சொல்லி விடுகிறோம். ஆனால், அது விளையாட்டாக இல்லை.
கலா கண்ணன், சாத்தூர்
சங்க இலக்கியங்களில் பகுத்தறிவுச் சிந்தனைகள் இருந்தனவா?
பகுத்தறிவுச் சிந்தனை என்பது ஒரு கட்சியின் கொள்கை அல்ல. மனிதர்கள் எல்லாருமே பகுத்தறிவாளர்கள்தான். அந்த பகுத்தறிவு சிந்தனை ஒவ்வொரு காலத்திலும் மேலோங்கி வளர்ந்து கொண்டே இருக்கிறது. "உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே' என்று புறநானூற்றில் ஒரு பாடல் உண்டு. அதைப் பாடியது புலவர் அல்ல. அரசர். பாண்டிய மன்னனான ஆரியப் படை கடந்த நெடுஞ்செழி யன். எப்பாடு பட்டாயினும் கல்வி கற்கவேண்டும் என் பதே இதன் கருத்து. நால்வகை நிலையில் உள்ள மக்களில் கீழ்நிலையில் உள்ள ஒருவன் கல்வி கற்றான் என்றால், மேல் நிலையில் உள்ளவனும் அவனுக்கு ஆட்படுவான் என் கிறது இந்தப் பாடல். இது சங்ககாலப் பகுத்தறிவுச் சிந்தனை. அதனை சமகாலத்தில் நிறைவேற்றிக் காட்டியதுதான் பகுத்தறிவு -சுயமரியாதை -சமூக நீதி ஆகியவற்றை அடிப்படை யாகக் கொண்ட திராவிட இயக்கம்.
மல்லிகா கணேசன், பரவை -மதுரை
"பொன்னியின் செல்வன்' நாவல் படித்துள்ளீர்களா, சினிமா பார்த்தாச்சா மாவலி?
தமிழ் வாசகர்களால் அதிகம் படிக்கப்பட்ட நாவல், எழுத்தாளர் கல்கியின் பொன்னியின் செல்வனாகத்தான் இருக் கும். ஒவ்வொரு புத்தகக்காட்சியிலும் அதிகம் விற்பனையாகும் புத்தகமும் அதுதான். நமது நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் உள்பட பல பதிப்பாளர்களும் அதனை வெளியிட்டுள்ளார்கள். பிற்காலச் சோழ மன்னர்களின் சாம்ராஜ் ஜியம் தொடர்பான சில வரலாற்றுக் குறிப்புகளுடன் தனது கற்பனையைக் கச்சிதமாகக் கலந்து, சரியான பதத்தில் மாவு தயார் செய்து, தோசையை ஊற்றியிருப்பார் கல்கி. ஐந்து (பாகங்கள்) தோசைகளையும் வாசகர்களுக்கு ருசியாகத் தந்திருப்பார். எழுத்து நடையில் பொன்னியின் செல்வன் எல்லா ரையும் கவர்ந்தது. வீராணம் ஏரி, சோழர் அரண்மனை, இலங்கை தீவு, கடற்பரப்பு எல்லாவற்றையும் வாசகர்களின் மனக்கண்ணில் விரிய வைத்தது. குந்தவை, வந்தியத்தேவன், நந்தினி, அருண்மொழிவர்மன், ஆதித்த கரிகாலன், ஆழ்வார்க்கடியான் என வரலாறும் கற்பனையும் கலந்த கதாபாத்திரங்கள் சுவை கூட்டின. அதைத் திரையில் தோசையாக ஊற்ற எம்.ஜி.ஆர். முயன்றார். கமல் முயன்றார். ஐந்து பாகங்களை 3 மணிநேரத்தில் காட்டுவது சாத்தியமில்லை எனத் தெரிந்தது. நவீனத் தொழில்நுட்ப காலத்தில் இரண்டு, மூன்று பாகங்களாக படங்களை எடுக்க முடியும் என ஏற்கனவே வந்த சில படங்கள் வெற்றிவழியைக் காட்டியிருப்பதால் மணிரத்னம் அதனைக் காட்சிப்படுத்தி திரையிலும் தோசை ஊற்றிக் காட்டிவிட்டார். படத்தின் தலைப்பில் உள்ள பொன்னியின் செல்வன் என்பது அருள்மொழிவர்மனான ராஜராஜசோழனைக் குறிக்கும். அந்தப் பெயர் கொண்ட படத்தில் ஏற்கனவே சிவாஜி நடித்து அசத்தியிருக்கிறார்.
முரளிசுந்தரி, எம்.ஜி.நகர் -சென்னை
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை திருநாள்களின் வரலாறு என்ன?
அப்பதான் கொஞ்சமாவது க்ளீன் பண்ணி வைப்பாங்க என்பதுதான் ஐடியா. ஆனா, அதை நேரடியாகச் சொன்னால் யார் கேட்பார்கள் என்பதால், புராணம் வழியாக நிறைய கம்பி கட்டும் கதைகளை சொருகியிருக்கிறார்கள்.