என்.இளங்கோவன், மயிலாடுதுறை.

அஜர்பைஜான் விமானத்தை தவறுதலாக ரஷ்யா சுட்டுவீழ்த்தியதற்காக புதின் மன்னிப்பு கேட்டுள்ளாரே?

அந்த மன்னிப்பால் பறிபோன 38 உயிர்கள் திரும்பக் கிடைத்துவிடுமா? உக்ரைனுடான போரால், பைத்தியக்கார நிலையில் இருக்கும் ரஷ்ய ராணுவம் இதனை ஏதோ போர் விமானம் என நினைத்து, ஜி.பி.எஸ். ஜாமரைப் பயன்படுத்தி அஜர்பைஜான் விமானத்தை நிலைகுலைய வைத்ததோடு, ட்ரோன்களைத் தாக்கும் ஏவுகணையால் தாக்கியிருக்கும் என அமெரிக்கா சந்தேகிக்கிறது. தாக்கப்பட்டது அஜர்பைஜான் விமானமாக இல்லாமல், ஏதாவது பெரிய நாட்டின் விமானமாக இருந்திருந்தால் இன்னொரு போர் தொடங்கியிருக்கும்.

as

மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

Advertisment

உலகின் தங்கத்தில் 11% தங்கம் இந்திய பெண்களிடத்தில் உள்ளது என்கிறதே உலக கோல்டு கவுன்சில் அறிக்கை...?

இதற்கு உலக கோல்டு கவுன்சிலின் அறிக்கை எதற்கு? இந்தியத் திருமணங் களில் வரதட்சணை யாகக் கேட்கப்படும் தங்கமே போதுமே! எல்லா பெரிய நாடு களுமே பொருளா தார சமநிலைக்காக தங்கம் வாங்கிக் குவிக்கும். அதுபோக பெரிய முதலீட்டாளர்கள், ஆதாயத்துக்காக தங்கத்தை வாங்கி வைப்பர். இந்தியாவில் மட்டும்தான் பெண்களின் திருமணத்தை உறுதிசெய்வதற்கே பவுன் கணக்கில் தங்கம் வேண்டும். சேமிப்பு என்ற விதத்தில் இந்தியாவில் ஏழைக் குடும்பம்கூட அரைப் பவுனோ, ஒரு பவுனோ தங்கம் வைத்திருக்கும். வரதட்சணை என்ற விதத்தில், அதே தங்கம், பல பெண்களின் திருமணத்தையும் குடும்பவாழ்வையும் சிதைத்து விடுகிறது.

அ.யாழினிபர்வதம், சென்னை-78

Advertisment

பா.ஜ.க. நிகழ்ச்சிகளுக்கு என்னைக் கூப்பிடுவதில்லை என்று குஷ்பூ குமுறுகிறாரே?

ஏற்கெனவே தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளின் மீது குறைகூறிவிட்டுத்தான் பா.ஜ.க.வுக்கு வந்தார். அவரை தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமித்திருந்தார்களே. அதுபோதாதா? கையில காசு வாயிலே தோசை என்பார்களே, அதுபோல பதவி முதலில், கட்சி வேலை பிறகு என எதிர்பார்க்கிறார்போல. குஷ்பூவின் பேரத்துக்கு பா.ஜ.க. படிகிறதா என பார்ப்போம்.

நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி.

பணக்கார முதல்வர்கள் பட்டியலில் நாயுடு முதலிடமும் மம்தா கடைசி இடமும் பிடித்திருப்பது குறித்து?

ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட் டமைப்பு என்ற அமைப்பு இந்தியாவிலுள்ள முதல்வர்களின் சொத்து மதிப்பைக் கணக்கிட்டி ருக்கிறது. இதில்தான் சந்திரபாபு நாயுடு 936 கோடியுடன் முதலிடத்தையும், வெறும் 15 லட்சத்துடன் மம்தா கடைசி இடத்தையும் பிடித்திருக்கிறார். 31 இந்திய முதல்வர்களின் சொத்தையும் சேர்த்தால், 1630 கோடி. இதில் சந்திரபாபு நாயுடுக்கு அடுத்தபடியாக அருணாச்சல் முதல்வர் பெமா காண்டு 332 கோடிக்குச் சொந்தக்காரர். இவர் கள் இருவர் சொத்தே 1,268 கோடி ஆகி விடுகிறது. மற்ற முதல்வர்களெல்லாம் உஷார் பேர்வழிகள் போல!

ஜி.அர்ஜுனன், செங்கல்பட்டு

மகளிரணி, இளைஞரணி மாதிரி கட்சியிலே மதுப்பிரியர் அணி என எந்த கட்சியாவது தொடங்குமா?

கட்சி தொடங்குகிறவர்களை அத்தனை பைத்தியக்காரர்கள் என நினைத்தீர்களா என்ன! தொடங்காவிட்டாலும், மதுப்பிரியர் அணி எல்லா கட்சியிலும் உண்டு. கட்சிகள் மாநாடு கூட்டும்போது, எந்த நகரத்தில் மாநாடு கூட்டப்படுகிறதோ, அங்குள்ள மதுக்கடைகளில் அக்கட்சியின் மதுப்பிரியர் அணியைச் சந்திக்க முடியும்.

எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்

புகழ் போதையா.. போதி மரமா..?

அது அந்தப் புகழ் உங்களுக்கு என்ன செய்கிறது என்பதைப் பொறுத்தது.

வண்ணை கணேசன், கொளத்தூர்

கிரெடிட் கார்டு பாக்கிமீது வங்கிகள் 30% வட்டி வசூலிக்கலாமென உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதே?

இல்லை, 30 சதவிகிதத்துக்கும் அதிகமாகக் கூட வசூலித்துக்கொள்ளலாம் என தீர்ப்பளித்துள் ளது. கிரெடிட் கார்டு பயனாளிகளே உஷார்!

எஸ்.கதிரேசன், பேர்ணாம்பட்டு

கூட்டணியில்லாமல் தமிழகத்தில் எந்தக் கட்சியும் ஆட்சியைப் பிடிக்கமுடியாது என பிரேமலதா கூறியிருக்கிறாரே?

இரண்டொரு சதவிகித வாக்குகள் ஆட்சி யமைக்கும் வாய்ப்பை பறித்துவிட வாய்ப்புள்ளதால், தற்போதைய நிலையில் அதில் உண்மை உண்டு. ஆனால் தமிழகத்தில் மாற்று அரசியல் கட்சியாகப் போகிறோம் எனக் கிளம்பிவந்த தே.மு.தி.க., வெறுமனே பெரிய கட்சிகளின், கூட்டணிக் கட்சிகளில் ஒன்றாகத் தேய்ந்துபோனதே என்ற வருத்தமும் உண்டு.