ர்ஜென்டினாவை மொய்த்துக்கொண்டிருக்கிறார்கள் ரஷ்யப் பெண்கள். அதுவும் கர்ப்பிணிப் பெண்கள். ஏன்? அர்ஜென்டினாவில் பிறக்கும் குழந்தைகளுக்கு எளிதாக அர்ஜென்டினா குடியுரிமை கிடைக்கும். குழந்தையின் பெற்றோர்களும் எளிதாக அந்நாட் டின் குடியுரிமை பெற்றுவிடலாம். போர்ச்சூழலும் கம்யூனி சக் கெடுபிடியும் நிலவும் ரஷ்யப் பெண்கள், அர்ஜென்டி னக் குடியுரிமை பெற ஆசைப்படுவதில் என்ன ஆச்சரி யம் இருக்கமுடியும்? கடந்த சில மாதங்களில் மட்டும் 5000 ரஷ்ய கர்ப்பிணிகள் அர்ஜென்டினாவில் வந்து குழந்தை பெற்றிருக்கிறார்கள். அதிலும் 33 பேர் ஒரே விமானத்தில் வந்திறங்கியிருக்கின்றனர்.

dd

ரஷ்யாவில், அர்ஜென்டினாவில் போய் குழந்தைப்பேறு ஏற்பாடு செய்வதற்கான சுற்றுலா மும்முரமாக நடக்கிறதாம். 5000 டாலர் முதல் 15,000 டாலர் வரை வெவ்வேறு விலையில், வெவ்வேறு பேக்கேஜில் வியாபாரம் களை கட்டுகிறது. அர்ஜென்டினாவின் தேசிய குடிப்பெயர்வு முகமை சமீபமாக விழித்துக்கொண்டு, இப்படி வருபவர்கள் எல்லாம் கர்ப்பகாலத்தின் கடைசிக் கட்டத்தில் வந்து குழந்தைபெற்றுவிட்டுச் செல்வதைக் கவனித்திருக் கிறது. வெளிநாட்டு குடியுரிமை தேடிக்கொண்டிருப்பவர் கள் இதை நோட் பண்ணிக்கொள்ளுங்கள்! நம்ம ரெடி யாகுறதுக்குள்ள சலுகையை நிறுத்திடுவாங்களோ!

ந்த ஒரு ஃபார்முலா பாலையும்விட தாய்ப்பாலே சிறந்தது. இருந்தாலுமென்ன, வருடத்துக்கு 60 பில்லியன் டாலர்கள் வரை ஃபார்முலா பால் நிறுவனங்கள் ஈட்டு கின்றன. இது வெறுமனே பணம் சம்பா திக்கும் விஷயம் மட்டும் கிடையாது. குழந்தை களின் ஆரோக்கியத்துடனும் தொடர்புடையது. இதையேதான் மருத்துவ ஆய்விதழான லான் செட்டும் வலியுறுத்துகிறது. இந்த பால் நிறு வனங்கள் மிகப்பெரிய பொருளாதார, அரசியல் பலத்தைக் கொண்டிருக்கின்றன. இதன்மூலம் தாய்ப்பால் கட்டாயம் என்ற நடைமுறை பல நாடுகளில் பொதுக்கொள்கையாக மாறவிடாமல் பார்த்துக்கொள்கின்றன. இதனால் கோடிக் கணக்கான குழந்தைகள் அவசியமான காலகட்டத்தில் தாய்ப்பால் குடிக்கமுடியாமல் போய்விடுகிறது. தாயான பெண்களுக்கு போதுமான விடுமுறை தராமல், குழந்தை தாய்ப்பால் குடிக்க வழியில்லை என்கிறது பேராசிரியர் நிகேல் ரோலின்ஸின் ஆய்வு. குழந்தை பிறந்த 1 மணி நேரத்தில் குடிக் கும் தாய்ப்பாலுக்கு நோயெதிர்ப்பு சக்தி அதிகம். ஆனால் அப்படிக் குடிப்பது பாதிக்குப் பாதி குழந்தைகளே. அதுபோல முதல் ஆறு மாதங் களுக்கு 50%-க்கும் குறைவான குழந்தைகளே தாய்ப்பால் அருந்துகின்றனர். பார்முலா பால் நிறுவனங்களின், தவறாக வழிநடத்தும் உத்தரவாதங்களும் பலசமயங்களில் தாய்ப் பாலை நிறுத்தக் காரணமாக இருப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது. அம்மாக்கள் கொஞ்சம் கவனியுங்க!

Advertisment

dd

மேஜிக் செய்பவர்கள் வெறும் கையில் பூக்கள் முதல் பல பொருட்களை வரவழைக்கவும், மறையவைக்கவும் செய்து பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் மூழ்கவைப்பர். அந்த வகையில் மிகப்பெரிய மேஜிசியன் இந்திய ரயில்வே துறை தான். ஏற்றுமதிக்காக அனுப்பப்பட்ட கண்டெய் னர்களுடன் ஒரு ரயிலையே மாயமாக மறைய வைத்திருக்கிறது ரயில்வே. நாக்பூரிலுள்ள சர்வதேச சரக்குப் பெட்டக முனையமான டெப் டோவிலிருந்து, மும்பை ஜவஹர்லால்நேரு துறைமுகத்துக்கு அரிசி, காகிதம், ரசாயனம் உள்ளிட்ட ஏற்றுமதிப் பொருட்களடங்கிய 90 கன்டெய்னர்களுடன் இந்த ரயில் புறப்பட் டது. வழக்கமான பயண காலம் 4- 5 நாட்கள். ஆனால் 13 நாட்களாகியும் துறைமுகத்தை வந்தடையவில்லை இந்த ரயில். மாயமான ரயில் எங்கிருக்கிற தெனத் தேடிவருவதாகச் சொல்கிறார் கன் டெய்னர் கார்ப்பரே ஷன் மேலாளர் சந்தோஷ் குமார்சிங். ரயில் கடைசியாக ஓம் பர்மா- ரயில் நிலை யத்தில் காணப்பட்ட தாகத் தகவல். இதற்கிடையில் ஊடகங்களின் கேள்விக்கு சரக்கு ரயில் வெவ் வேறு ரயில் நிலையத்தில் காணப்பட்டதாக, ரயில்வே அதிகாரிகள் பதிலளித்துள்ளனர். கடைசி யாகக் குறிப்பிட்ட துறைமுகத்துக்குச் சென்றடைந்துவிட்டதாக ஒரு அதிகாரி கூறினார். காலதாமதத்துக்கும், அதிகாரிகள் மாற்றி மாற்றி பதிலளித்ததற்குமான விளக்கங்கள் இதுவரை கிடைக்கவில்லை. "சரக்கு ரயில்'ங்கிறதால திசைமாறிப் போயிருக்குமோ?

Advertisment

dd

சென்னை ஐ.ஐ.டி.யில் படித்துவந்த மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ரூவன் சன்னி ஆல்பர்ட் விடுதியறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எலக்ட்ரிகல் இன்ஜினிய ரிங் இரண்டாமாண்டு படித்துவந்த இவர் கடந்த 2 மாதங்களாகவே வகுப்புக்கு சரிவர செல்லாமல் இருந்திருக்கிறார். மாணவனின் கடிதமொன்றும் போலீசாரால் கைப்பற்றப் பட்டுள்ளது. அதே சென்னை ஐ.ஐ.டி.யில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வீரேஷ் அளவுக்கதிகமாக தூக்க மாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்று, மீட்கப் பட்டு மருத்துவமனையில் ஆபத்தான நிலை யில் சிகிச்சைபெற்று வருகிறார். அதேபோல் மும்பை ஐ.ஐ.டி.யில் சேர்ந்து மூன்று மாதங் களே ஆன மாணவர் ஏழாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட தும் பேசுபொருளாகியுள்ளது. அகமதாபாத் தைச் சேர்ந்த தர்ஷன் சோலங்கி, பட்டியலின மாணவர். பட்டியலின மாணவர்கள் தங்கிப் படிப்பதற்கான பாதுகாப்பான இடமாக உயர்கல்வி நிறுவனங் கள் மாற்றப்பட வில்லை என்ற புகா ரும் சோலங்கியின் மரணத்தோடு எழுந் துள்ளது. தற்கொலை யைத் தடுக்க தொழில் நுட்பம் எதுவுமில் லையா?

-நாடோடி