தமிழகத்தில் மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளுக்காகச் செயல்படும் 20 அமைப்புகள், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஒரு திறந்த மடலை எழுதியுள்ளன. அதில், மக்களில் 1 லட்சம் பேரில் 1,635 பேர் பல்வேறு குறைபாடுகளு டன் இருக்கின்றனர். சென்னை யில் மட்டும் 16.85 லட்சம் பேர் உடற்குறைபாடுகளுடன் உள்ள னர் என உலக சுகாதார மையம் கணித்துள்ளது. ஆனால் கடந்த இருபது ஆண்டுகளாக பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் மெட்ரோபாலிட்டன் ட்ரான்ஸ் போர்ட் கார்ப்பரேஷனும், இதர போக்குவரத்துக்குக் கழகங்களும் இத்தகைய மாற்றுத் திறனாளி களும் பயன்படுத்தும் விதத்தில் பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தவில்லை. நவம்பர் 2005-ல் பல்வேறு அமைப்புகள் ஒன்றிணைந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் எம்.டி.சி. பஸ்களை மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகளோடு இயக்க பொதுநல வழக்குத் தொடுக் கப்பட்டது. இவர் களது வாழ்க்கையில் மாற்றம்வர பொருளாதாரம் அதிகரிக்க வேண்டும். பொதுப் போக்கு வரத்து வசதிகள் கிடைத்தால் தான் அது சாத்தியம். பேருந்து நிறுத்தம், ரயில்வே நிலையங்கள், விமான நிலையங்கள், கழிவறை கள், டிக்கெட் கவுண்டர்கள், டிக்கெட் தரும் எந்திரங்கள் போன்றவை மாற்றுத் திறனாளிகள் அணுகும் விதத்தில் வசதிகள் ஏற்படுத்தித் தர கோரிக்கை வைத்துள்ளனர். பரிசீலிக்கவேண்டிய கோரிக்கைதான்!
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் உண்டு… என்ற பழமொழியைத் திருத்தி எழுதியிருக்கிறார் சைதார் வாசவா. இவரது வெற்றிக்குப் பின்னால் இரண்டு பெண்கள் உண்டு. இருவருமே இவரது மனைவிகள். குஜராத் மாநிலம் வடோதரா, தேதியாபாடா பழங்குடித் தொகுதியின் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.தான் இந்த சைதார் வாசவா. பாரதிய ட்ரைபல் பார்ட்டி கட்சியைச் சேர்ந்த இவர், இம்முறை ஆம் ஆத்மி கட்சிக்குத் தாவி தேர்த லில் போட்டியிட்டார். கூடவே இவரது இரு மனைவிகளான சாகுந்தலா, வர்ஷா இருவரும் கணவருக்காக வாக்குச் சேகரித்தனர். முடிவில் கட்சி மாறி வந்து வெற்றி பெற்ற ஆம்ஆத்மி வேட்பாளர் என்ற பெருமையை கணவருக்கு வாங்கித் தந்திருக்கின்றனர் மனைவிகள். நான் வாங்கித்தந்த வெற்றினு இரண்டுபேரும் சொல்வாங்களே!
பிறவியிலேயே கருப்பை இல்லாமல் பிறந்த கொல்கத்தா பெண்ணுக்கு கருப்பை மாற்று அறுவைச் சிகிச்சை ஜனவரி 15, 2023-ல் நடக்கவிருக்கிறது. இந்தியாவிலேயே இதுபோன்ற கருப்பை மாற்று அறுவைச் சிகிச்சை 12 பேருக்குத்தான் நடைபெற்றுள்ளது. மேற்கு வங்கத்தில் நடைபெறும் முதல் கருப்பை மாற்று அறுவைச் சிகிச்சை இது. இதில் சிகிச்சை பெறும் பெண்ணுக்கு கருப்பை தானம் தருவது, அந்தப் பெண்ணின் தாயார்தான். “சில மருத்துவ அனுமதி கள், சிகிச்சை பெறுபவரின் உடல்நலத்தைப் பொறுத்து அறுவைச் சிகிச்சை ஒன்றி ரண்டு நாள் முன்பின் னாக இருக்கலாம்’’ என சுக்லால் கர்னானி மெமொரியல் மருத்துவமனையின் மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துத் துறையின் தலைமை மருத்துவர் சுகாஸ் பிஸ்வாஸ் தெரிவித்துள் ளார். இதற்காக கருப்பை மாற்று அறுவைச் சிகிச்சைக்கு பெயர் பெற்ற புனேவின் கேலக்ஸி கேர் மருத்துவமனை யின் உதவியை இம்மருத்துவ மனை நாடியுள்ளதாம். ஒரே கருப்பையில் மகளும் பேத்தியும் உருவாகுறாங்களா!
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரத்திலுள்ள தனியார் பயிற்சி மையங்களில் போட்டித் தேர்வுகளுக்கு ஆயத்தமாகிவந்த மூன்று பேர் தற்கொலை செய்துகொண்டது தேசிய அளவில் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது. கோட்டா, போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களுக்கு பெயர் பெற்றது. இங்குள்ள மையங்களில் நாடு முழு வதிலிருந்தும் வந்து ஆயிரக் கணக்கான மாணவர்கள் பயின்றுவருகின்றனர். இதில் பீகாரைச் சேர்ந்த நண் பர்களும் அடுத்தடுத்த அறைகளில் தங்கிப் பயின்று வந்தவர்களுமான அங்குஷ் ஆனந்த், உஜ்வல்குமார் இருவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனர். மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த பிரணவ் வர்மா விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார். மூவரிவ் இருவர் நீட் தேர்வுக் கும் ஒருவர் ஜே.ஈ.ஈ. தேர்வுக்கும் படித்துவந்தது குறிப்பிடத்தக் கது. இந்த மையங்களின் நீண்ட நேர வகுப்புகளும், அடுக்கடுக் கான அசைன்மெண்டுகளும், மிகவும் கடினமான ஆயத்தத் தேர்வுகளும் எவரொருவரையும் மன அழுத்தத்துக்கு உள்ளாக் கும். 2016-ல் இங்குள்ள பயிற்சி மையத்தில் தற்கொலை செய்துகொண்ட மாணவன், அனைத்து பயிற்சி மையங்களை யும் மூடவேண்டுமென தற்கொலைக் குறிப்பு எழுதிவைத்து இறந்துபோனது குறிப்பிடத்தக்கது. நீட்டுக்குப் போடுங்க ஒரு கேட்!
தமிழகத்தில் 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. எதனால்? இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் 7.20 லட்சம் பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவர்களில் 77 ஆயிரம் பேர் தமிழக விவசாயிகள். இப்படி தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகள் பெரும்பாலும் பூச்சிமருந்தைக் குடித்தே தற்கொலை செய்துகொள்கின்றனர். இதனால் அபாயகரமான 6 பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தடைசெய்து அரசாணை வெளியிட்டுள்ளனர். பூச்சிக்கொல்லி மருந்தைத் தடுத்தால், வேறு வழிகளை நாடப்போகிறார்கள். எனவே விவசாயிகள் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கான வழிவகைகளை மத்திய- மாநில அரசுகள் நாடவேண்டும். சீப்பை ஒளித்துவைத்தால் கல்யாணம் நின்னுடுமா?