"ஹலோ தலை வரே, ஆளுங்கட்சி தரப்பை அந்த சந்திப்பு ஆச்சரிய மகிழ்ச்சியில் ஆழ்த்தி யிருக்கு.''”

"முதல்வர் ஸ்டாலினும் அவர் சகோதரர் மு.க.அழகிரி யும் சந்திச்சது பற்றிதான் சொல்றன்னு தெரியுது.''”

rr

"உண்மைதாங்க தலைவரே, பேச்சுவார்த்தை இல்லாமல் ஆண்டுக்கணக் கில் பிரிந்திருந்த இந்த சகோதரர்களைச் சேர்த்து வைக்கணும்னு, கலைஞர் இருக்கும்போதே அவர் குடும்பத்தினர் பல்வேறு முயற்சி களை மேற்கொண் டனர். ஆனாலும், அந்த முயற்சி பலிக்கலை. இந்த வருத்தம் இரு தரப்பினரிடமும் அதிகம் இருந்தது. கலைஞ ரின் மரணத்தின் போது கூட, ஸ்டாலினும் அழகிரியும் பேசிக்கொள்ளவில்லை. இந்த நிலையில், கலைஞரின் திருமதியான தயாளு அம்மாளின் 90ஆவது பிறந்தநாள் வந்தது. இதையொட்டியாவது, இந்த அபூர்வ சகோதரர்களை சந்திக்க வைத்துவிட வேண்டும் என்று கலைஞர் குடும்பம் விரும்பியது. இது இருவரிடமும் பதமாக எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது. இதையொட்டி, 9ஆம் தேதி ஸ்டாலினும், அழகிரியும் கோபாலபுரம் வீட்டில் சந்தித்துக்கொண்டனர். அப்போது மு.க. தமிழரசு, கனிமொழி உள் ளிட்டோரும் இருந்தனர். சகோதரர்களான ஸ்டாலினும் அழகிரியும் அப்போது மனம் விட்டு, எந்த தகிப்பும் இல்லாமல் குளிர்ச்சியாகப் பேசிக் கொண்டார்களாம். இதையொட்டி, விரைவில் அழகிரி மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார் என்றும், மீண்டும் தென்மண்டல அமைப்பாள ராக அவர் நியமிக்கப் படலாம் என்றும் அறிவாலயத் தரப்பு அடித்துச் சொல்கிறது.''”

Advertisment

rr

"சபரீசன் தரப்பில் அதிக பரபரப்பு தெரியுதே?''”

"நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு, முதல்வர் ஸ்டாலினின் மருமகனான சபரீசன், இப்பவே களத்தில் இறங்கி, சில தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறாராம். இதற்காக, ’பென்’ என்ற அமைப்பை அவர் சில மாதங்களுக்கு முன்னதாகவே உருவாக்கி இருக்கிறார். ஐபேக் பேட்டனில் பிரச்சாரம் உள்ளிட்ட தளங்களில் இந்த அமைப்பு இயங்குமாம். இது பிரச்சார டெக்னிக்கு களை கையில் எடுத்துவருவதோடு, தொகுதி வாரி யாக ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச் சர்களுக்கு இருக்கும் செல்வாக்கு, அந்தந்த பகுதி மக்களின் மனக்குறைகள் போன்றவற்றை எல்லாம் நாடி பிடித்துப் பார்த்து வருகிறதாம்.''”

Advertisment

"முதல்வர் ஸ்டாலினுக்கும் சீனியர் அமைச்சர் துரைமுருக னுக்கும் இடையில் மனவருத்தம்னு தகவல் வருதே?''”

ff

"முதல்வர் ஸ்டாலினுக்கு அமைச்சர் துரைமுருகன் வசமுள்ள சுரங்கம் மற்றும் கனிம வளத்துறையின் செயல்பாட்டில் திருப்தி இன்மை ஏற்பட்டிருக்கிறதாம். அந்தத் துறைக்கு லகான் பிடிக்க, அதன் புதிய இயக்குநராக நிர்மல்ராஜ் ஐ.ஏ.எஸ்.சை அவர் அண் மையில் நியமித்திருக்கிறார். இது கனிமவள ஒப்பந்ததாரர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுக்க, அவர்கள் தங்கள் முகச்சுழிப்பை உணர்த்தும் வகையில், ஒரு வாரம் வேலை நிறுத்தத்தை அறிவித்தனர். ஹங்கேரி வரை போயிருந்த அமைச்சர் துரைமுருகன், திரும்பி வந்த சூட்டோடு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அந்த வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற வைத்தார். இப்போது நிர்மல்ராஜை எடுத்துவிட்டு பழைய அதிகாரியையே நியமிக்கவேண்டும் என்று துரைமுருகன் முதல்வருக்கு அழுத்தம் கொடுத்துக்கொண்டிருக்க, இதை முதல்வர் ஸ்டாலின் ஏற்க மறுத்து வருகிறாராம். இவர்களுக்கிடையே ஏற் பட்டிருக்கும் பிணக்கு எப்போது முடியும் என்று துறை அதிகாரிகள் அனைவரும் சைலண்டாக, கவனித்துக்கொண்டு இருக்கிறார்களாம்.''”

"அமைச்சர் ஐ.பெரியசாமி கோட்டை அதிகாரிகளை நேருக்கு நேர் கடுமையாக விமர்சித்தாராமே?''”

rr

"ஆமாங்க தலைவரே, அண்மையில் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்த போது, ஆவேசமாகப் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, ’அதிகாரிகளான உங்கள் போக்கு கவலையளிக்கிறது. நமது முதல்வர் நேரில் தொடங்கி வைக்க வேண்டிய திட்டங்களை எல்லாம் காணொலி மூலமே திறந்துவைக்கச் செய்து, அவரைக் காட்சிப் பொருளாக வைத்திருக்கப் பார்க்கிறீர்கள். அவர் நிகழ்ச்சிகளுக்கு நேரடியாக வந்தால்தானே, அவரைக் காட்டி தேர்தல் நேரத்தில் நாங்கள் மக்களிடம் ஓட்டுக்கேட்க முடியும்? அதை விட்டுவிட்டு, எதைக்கேட்டாலும் காணொலி என்று சொன்னால் என்ன அர்த்தம்? இப்போதே இது அதிகாரிகள் ஆட்சி என்று விமர்சிக்கிறார்கள். அதற்கு இடம் கொடுத்துவிடாதீர்கள் என்று குமுறித் தீர்த்துவிட்டாராம். இதுதான் இப்போது கோட்டை பக்கம் பரபர டாக்காக இருக்கிறது.''”.

"கவர்னர்கள் அரசியல் பேசக்கூடாதுன்னு சொன்ன அண்ணாமலை மீது, கவர்னர்கள் தரப்பில் இருந்து டெல்லிக்கு புகார் போயிருக்கே?''”

"ஆமாங்க தலைவரே, கவர்னர்கள் அரசியல் பேசக்கூடாதுன்னு ஏதோ கடுப்பில் அண்ணாமலை சொல்லப்போக, கவர்னர் ஆர்.என்.ரவியோடு, தெலுங்கானா கவர்னரான தமிழிசை சௌந்தர் ராஜனும் ஒருசேர, ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவிடமும், பா.ஜ.க. வின் தேசியத் தலைவர் நட்டாவிடமும் அண்ணாமலை தங்களின் மரியாதையைக் குறைக்கிறார்னு புகார் சொல்லி இருக்காங்க. இதை யொட்டி, அண்ணாமலை டெல்லிக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்.''

"அங்கே அண்ணாமலை என்ன சொன்னாராம்?''”

"அண்ணாமலையிடம் அவர் மீதான புகாருக்கு விளக்கம் கேட்கப்பட்ட போது, நான் தமிழக கவர்னர் ரவியை மனதில் வைத்துக்கொண்டுதான், கவர்னர் கள் அரசியல் பேசக்கூடாது என்று சொன்னேன். காரணம், அவர் சம்பந்தமில்லாமல், மாநில அரசை ஒன்றிய அரசுக்கு எதிராக உசுப்பிவிடும் வகையில் தொடர்ந்து நடந்துகொள்கிறார். தேவையிலாமல், தமிழக மக்களின் மன நிலை புரியாமல், சனாதனத்துக்கு ஆதரவாகவும், மும்மொழித் திட்டம் பற்றியும் பேசி வருகிறார். அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் அவர் முதலில் ஒரு உத்தரவு போட்டு, பிறகு அதை அவரே வாபஸ் வாங்கியது, கோமாளித் தனமாகப் பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக பா.ஜ.க.வின் வளர்ச்சிக்கு எதிராகவே கவர்னர் ரவியின் நடவடிக்கைகள் இருக் கிறது என்றெல்லாம் பதிலுக்கு கவர்னர் ரவி பற்றி விரிவாகவே அண்ணாமலை புகார் வாசித்திருக்கிறார். கூடவே, 356ஆவது சட்டப் பிரிவையும் நாம் மறந்துவிடக்கூடாது என்றும் சொல்லிவிட்டு வந்தா ராம்.''”

"காங்கிரஸ் எம்.பி. விஷ்ணு பிரசாத் இல்லத் திருமணவிழாவில் கட்சி பேதம் இல்லாமல் அனைத்து அரசியல் தலைவர் களும் கலந்துக்கிட்டு இருக்காங்களே?''”

rr

"ஆமாங்க தலைவரே, தமிழக காங்கிரஸ் கட்சியின் எம்.பி. டாக்டர் விஷ்ணுபிரசாத்தின் மகள் திருமண வரவேற்பு, சென்னை திருவான் மியூரில் கடந்த 7ஆம் தேதி நடந்தது. அனைத்துக் கட்சித் தலைவர்களும் இதில் கலந்துக்கிட்டதால், அவர் களின் கொடி போட்ட கார்களால், ஏரியாவே ஒரே கலர்ஃபுல்லாக இருந்தது. இதில் முதல்வர் ஸ்டாலினும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். விழாவுக்கு வந்த அவரை, வாசலிலேயே வரவேற்று மேடைக்கு அழைத்துச் சென்றார் விஷ்ணு. அங்கு ஏற்கெனவே வந்திருந்த டாக்டர் ராமதாஸும் அவர் சம்பந்தியான காங்கிரஸ் சீனியர் கிருஷ்ணசாமியும், அவரை அன்போடு வரவேற்க, பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்டார் கள். பா.ஜ.க. அண்ணாமலை யோ, தன் படை பரிவாரங் களோடு வர, சட்டைப் பையில் மோடி படத்துடன் காட்சிதந்த பா.ஜ.க.வினரை கூடியிருந்த காங்கிரஸ்காரர்கள் வினோதமாகப் பார்த்தார்கள். அவர்களில் சிலர்,’மோடி ஆளுங்களை எல்லாம் இந்த நிகழ்ச்சிக்கு விஷ்ணு கூப்பிட னுமா?’ என முனகியதையும் பார்க்க முடிந்தது.''”

"தமிழக காங்கிரஸ் தலைவ ராக கார்த்தி சிதம்பரம் நியமிக் கப்படலாம் என்கிறார்களே?”

"தமிழக காங்கிரஸ் கட்சி யின் தலைவராக தனது மகன் கார்த்தி சிதம்பரத்தை கொண்டு வர, பகீரத முயற்சியில் இறங்கி இருக்கிறார் ப.சி. இதற்கு முன்பு எடுக்கப்பட்ட அவரது முயற்சி பலனளிக்காவிட்டாலும், தற்போது பழம் கனிந்து வருவதாக அவர் தரப்பே சொல்கிறது, கட்சியின் அகில இந்திய தலைவரான மல்லிகார்ஜுன் கார்கே, எதாக இருந் தாலும் ராகுலிடம் பேசிக்கொள் ளுங்கள் என்று நழுவிய நிலையில், ராகுலிடம் இருந்து நிபந்தனை அடிப்படையில் க்ரீன் சிக்னல் கிடைத்து வரு கிறதாம். அதாவது, சிட்டிங் எம்.பி.யாக இருக்கும் கார்த்தி சிதம்பரம், வருகிற நாடாளு மன்றத் தேர்தலில் மீண்டும் சீட் கேட்கக்கூடாது என்பது தான் ராகுல் விதித்த நிபந் தனையாம். இது சிதம்பரம் தரப்பை திகைக்க வைத்திருக் கிறதாம்.''”

"தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. தலைவராக சைலேந்திரபாபு வரப்போகிறார்னு டாக் அடிபடுதே?''”

"அப்படித்தாங்க தலைவரே கோட்டை வட்டாரத்தில் பேச்சு இருக்கு. இந்த தேர்வாணை யத்தில், தனியார் ஐ.ஏ.எஸ். கோச்சிங் சென்டர் களின் ஆதிக்கம் இருப்பதாகவும், அவர்களுக்கு சாதகமாக இது செயல்படுவதாகவும் அண்மைக் காலமாக புகார்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில், டி.ஜி.பி. பதவியில் இருந்து ஓய்வு பெறு வதற்கு முன்பாகவே, இதன் சேர்மன் பதவியில் சைலேந்திரபாபுவை அமர்த்துவதாக உத்தரவாதம் தரப்பட்டது என்கிறார்கள். இந்த நிலையில், டி.என். பி.எஸ்.சி. தலைவராக சைலேந்திரபாபுவை நியமிக்க வேண்டும் என்று, அரச பெயர்கொண்ட ஐ.ஏ.எஸ். பயிற்சி அகடமி ஒன்று, மிக ஆர்வமாக காய் நகர்த்தி வருகிறதாம். இதைச் சொல்லியே மாணவர்களை யும் அதிக அளவில் அது ஈர்த்துவருகிறதாம். இதுதான் இப்போது, அரசுத் தரப்பிற்கு லேசான தயக்கத்தை ஏற்படுத்தி வருகிறது என்கிறார்கள்.''”

"அரசு அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை மதிப்பதில்லைன்னு நீதிபதிகளே புலம்புறாங்களே?''

"ஆமாங்க தலைவரே... நீதிமன்ற உத்தரவு களை போலீஸ் மதிப்பதில்லை என்கிற ஆதங்கம் நீதிபதிகளிடம் இருப்பதாகக் கூறுகின்ற னர் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள். அதிகாரிகளின் கூட்டுச் சதியில் ஒரு அரசு பெண் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டு கைது செய்யப்படுகிறார். இதனை எதிர்த்து அந்த அதிகாரி நீதிமன்றத்துக்கு செல்ல, இது பொய் வழக்கு எனச் சொல்லி சம்பந்தப்பட்ட எஃப்.ஐ.ஆரை நீக்கியதுடன் அரசு பணி வழங்க கன்சிடர் பண்ண வேண்டும் என உத்தரவிடப்படுகிறது. இதை ஒரு வருடம் ஆகியும் கன்சிடர் பண்ணவே இல்லை அரசு அதிகாரிகள். அதேபோல, கிரிமினல் குற்றம் சாட்டப்பட்ட சென்னையைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் புரோக்கர் ராஜேஷ் என்பவர் முன்ஜாமீன் பெறுகிறார். விழுப்புரத்தில் தங்கியிருந்து போலீஸ் ஸ்டேசனில் தினமும் கையெழுத்து போட வேண்டும் என்பது நீதிமன்ற உத்தரவு. ஆனால் விழுப்புரத்தில் தங்காமல் போலீஸுக்கு டிமிக்கி கொடுக்கிறார் ராஜேஷ். விழுப்புரம் போலீசார் ராஜேஷுக்கு உதவியாக இருப்பதால் நீதிமன்ற உத்தரவுகள் மதிக் கப்படுவதில்லை. இப்படி நிறைய உதாரணங்களை சொல்ல முடியும் என்கிறார்கள் வழக்கறிஞர்கள்.''

"நானும் என் காதுக்கு வந்த ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன். டி.ஐ.ஜி. விஜயகுமாரின் தற்கொலையை காவல்துறை அதிகாரிகளாலேயே ஜீரணிக்க முடியலை. இவரைப் போலவே, காவல்துறையில் இருக் கும் பலருக்கும் மன அழுத்தப் பிரச்சினை இருப்பதை அறிந்து ஆட்சி மேலிடமே அதிர்ந்து போயிருக்கிற தாம். அதனால் இதற்கு தீர்வுகாணும் முன்னெடுப்பு கள் இப்ப நடந்துக்கிட்டு இருக்குது. சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில், மாமல்லபுரம் அருகே தனியாருக்குச் சொந்தமான ஒரு பீச் ரிசார்ட் டுக்கு, டி.ஐ.ஜி. விஜயகுமார் அடிக்கடி வந்துபோன தாக ஒரு தகவல் உலவுகிறது. இந்த ரிசார்ட் டிற்கு அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதி காரிகள்னு பலரும் வந்து போவது வழக்கமாம். விஜயகுமாரின் இந்த ரிசார்ட் தொடர்புகள் குறித்தும் விசாரிக்கவேண்டும் என்று, அவரது நண்பர்கள் சிலரே சொல்கிறார்கள்.''

___________

இறுதிச்சுற்று!

rr

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவிற்கு உட்பட்ட மீனாட்சிபட்டி பேருந்து நிறுத்தம் அருகில் வைக்கப்பட்டிருந்த தியாகி இமானுவேல் சேகரனார் மற்றும் வீரன் சுந்தரலிங்கம் ஆகியோரது திருவுருவ படங்களை நேற்று இரவு நான்கு பைக்குகளில் வந்த மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டு வீசி சேதப்படுத்தினர். இந்த காட்சி அருகில் உள்ள கோயிலில் வைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி சேர்ந்த மக்கள் 10ந்தேதி திங்கள்கிழமை காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி சாலையில் திரண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வைகுண்டம் போலீசார் பொதுமக்களோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், "திருவுருவ படங்களை சேதப்படுத்தியவர்கள் அணியாபரநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர்களே.. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என மீனாட்சிபட்டி ஊர் தலைவர் ராஜகோபால் அளித்த பேட்டி தென் மாவட்டங்களில் பதட்டத்தை அதிகரித்துள்ளது.

- நாகேந்திரன்