ஊரே கிசுகிசுக்கும் அர்ச்சகர் விவகாரத்தை அறிந்திட களமிறங்கினோம். சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் விசாரித்தோம். ‘"அந்த குடும்பங்கள் நிம்மதி இழந்து தவிக்கின்றன'’என குமுறலைக் கொட்டினார்கள்.
நடந்தது என்ன?
ஆதாரப்பூர்வமான விஷயம் என்றாலும், பாதிக்கப்பட்ட பெண் மற்றும் சம்பந்தப்பட்ட குடும்பங்களின் எதிர்காலம் கருதி, அர்ச்சகர் உள்ளிட்ட அனைத்துப் பெயர்களுமே மாற்றப்பட்டுள்ளன.
அந்த ஊரில் செந்தூர் பட்டர் ரொம்பவே பிரபலம். அவருடைய ஒரே மகன் அபிநவ். 2020ல் அபிநவ் - பூர்ணா திருமணம் படோடபமாக நடந்தது. 2021ல் இந்து சமய அறநிலையத்துறை பணி நியமன ஆணை மூலம் அந்த ஊரின் பிரசித்திபெற்ற சிவன் கோவிலில் அர்ச்சகரானார் அபிநவ்.
அதே ஊரில் அபிநவ் வசிக்கும் பகுதியிலுள்ள செல்வராஜ், தனது மகள் நிரஞ்சனாவை, அதே ஊரில் செல்வாக்கான குடும்பத்தைச் சேர்ந்த மகேஷின் மகன் பாலாவுக்கு 2022-ல் திருமணம் செய்துவைத்தார்.
தற்போது செந்தூர் பட்டர், செல்வராஜ், மகேஷ் மற்றும் பூர்ணா குடும்பத்தினர் ஒரு காதல் விவகாரத்தால் நிலைகுலைந்து உள்ளனர். யாருக்கும் யாருக்கும் காதல்? ஒரே பகுதியில் வசிக்கும் அபிநவ்-நிரஞ்சனா காதல் மிகவும் அழுத்தமானது. ஆறு வருடங்களாக நெருங்கிப் பழகி வந்துள்ளனர். இந்நிலையில், இருவருக்கும் வெவ்வேறு துணையுடன் திருமண பந்தம் ஏற்பட்டது. பிராமண குடும்பத்துப் பெண் ணான பூர்ணாவை அபிநவ் திரு மணம் செய்தபோது புழுவாய்த் துடித்தாள், பிராமணரல்லாத சமுதாயத்தைச் சேர்ந்த நிரஞ்சனா. அபிநவ்வும் நிரஞ்சனாவும் தங் களது காதலை வீட்டுக்குத் தெரியாமல் மறைத்தாலும் பழக்கத்தை விடவில்லை.
கர்ப்பமான மனைவி பூர்ணா பிரசவத்துக்காக வேறு ஊரிலுள்ள அம்மா வீட்டுக்குச் சென்றுவிட, அபிநவுக்கு ரொம்பவே தேவைப்பட்டிருக்கிறாள் நிரஞ்சனா. பழக்கத் தில் என்னைவிட ஜூனியரான பூர்ணாவின் வயிற்றில் உன் குழந்தை வளர்கிறதே’ என்ற ஏக்கத்திலிருந்த நிரஞ்சனாவிடம், "நான் உயர்குலத்தில் பிறந்தவன். பிரம்மாவின் தலையிலிருந்து பிறந்த பிராமணர்களுக்கு படிப்பு எளிதாக வரும். எனக்கு பிறக்கும் குழந்தை ஐ.ஏ.எஸ். ஆகிவிடுவான்''’ என்று உசுப்பேற்றியே தொடர்ந்து பழகி யிருக்கிறான்.
இந்த நேரத்தில்தான், 2022 டிசம்பரில் நிரஞ் சனாவுக்கும் பாலாவுக்கும் திருமணம் நடந்தது. தன்னுடன் பழகிய நிரஞ்சனா, கணவன் பாலாவுடன் உறவு வைத்துக் கொள்ளக்கூடாது என்பதில் உறுதியாக இருந் திருக்கிறான் அபிநவ். அதனால், பாலாவுக்கு மனைவியான பிறகும் இரவிலும் வாட்ஸ்-ஆப் காலில் நிரஞ்சனாவுடன் தொடர்ந்து பேசியிருக்கிறான்.
மருத்துவப் பரிசோதனையில் நிரஞ் சனா கர்ப்பமானது தெரிந்ததும் பாலா குடும்பம் குதூகலித்தது. அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. மகா சிவராத்திரி நாளில் வாட்ஸ்-ஆப் காலில் அபிநவுடன் நிரஞ்சனா பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்துவிட்டான் பாலா.
"இந்த ராத்திரி நேரத்துல யாருகிட்ட பேசிட்டி ருக்க?''’என்று மனைவியிடம் கேட்க... அவளோ, "“இன் னைக்கு மட்டுமில்ல.. ஆறு வருஷமா பேசிப் பழகிட் டிருக்கேன். என் வயித்துல வளர்றது உன் குழந்தையில்ல. அபிநவ் குழந்தைதான். டி.என்.ஏ. டெஸ்ட் எடுத்துக்கூட பார்த் துக்கோ. நீ எனக்கு தாலி கட்டுனதுல இருந்து குற்ற வுணர்ச்சியோட இருந்தேன். இப்ப எல்லாத்தயும் சொல்லிட் டேன்''” என்று கூலாகச் சொல்ல, அதிர்ந்து போனான் பாலா.
நிரஞ்சனா நினைத்திருந்தால் அபிநவுடனான பழக்கத்தையும், அவனால் கர்ப்பமானதையும் மறைத்திருக் கலாம். இத்தனை துணிச்சலுடன் கணவனிடம் அவளால் எப்படி பேச முடிந்தது என்றால், “"நீ பாலாவை விட்டுட்டு, உன் அம்மா வீட்டுக்கு வந்திரு. நான் பூர்ணாவை டைவர்ஸ் பண்ணிட்டு உன்னை கட்டிக் கிறேன்'’என்று பழகிய நேரத்திலெல்லாம் அபிநவ் அளித்த வாக்குறுதிதான். அந்த நேரத்து காம இச்சைக்காக அபிநவ் கூறியதெல்லாம் பொய் என்பதை அறியாதவளாக இருந்திருக்கிறாள் நிரஞ்சனா.
நிரஞ்சனா மனதில் முழுக்க முழுக்க அபிநவ் இருந்ததை அறிந்துகொண்ட பாலா குடும்பம், அவளுடைய செல்போனில் இருந்த ஆதாரங்களைச் சேகரித்துக் கொண்டு, அவளை அம்மா வீட்டுக்கு அனுப்பியது. விவாகரத்து செய்வதற்கான ஏற்பாடுகளிலும் இறங்கியது. மகளுடைய வாழ்க்கை இப்படியாகிவிட்டதே என உடைந்து போனார் நிரஞ்சனாவின் அப்பா செல்வராஜ். ஆச் சாரத்தை அணுபிசகாமல் கடைப்பிடித்துவரும் செந்தூர் பட்டர், வேற்று சமுதாயத்தைச் சேர்ந்த பெண்ணிண் வயிற்றில் அபிநவின் சிசு வளர்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால், தனக்கு குழந்தை பிறந்த நிலையிலும் அபிநவ் வீட்டுக்கு வரமறுத்தாள்.
நிரஞ்சனா தன் தந்தையிடம் "என்னால் அபிநவுக்கு ஒரு பிரச் சனையும் வரக்கூடாது. அபிநவ் வீட்டில் நியாயம் கேட்டு போராட வேண்டாம்''’என்று உறுதியாகச் சொன்னபோது, "உன் வயிற்றில் குழந்தை வளர்கிறதே? அதை பெற்றுக் கொள்ள வழியில்லையே?''’என்று பரிதவித்த செல்வராஜ் ஒரு முடிவுக்கு வந்தார்.
அபிநவ்- நிரஞ்சனா சட்டவிரோதத் தொடர்புக்கு சாட்சியாக மகள் வயிற்றில் வளர்ந்த கருவைக் கலைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். குடும்ப கவுரவத்துக்காக, மூன்று மாதங்களுக்கு மேல் உயிர்த் துடிப்புடன் வளர்ச்சி கண்ட கருவுக்கு, சிசுவாகப் பிறக்கும் வாய்ப்பு இல்லாமல் போனது. அந்த ஊர் சிவன் கோவிலில் பூஜை பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அபிநவுக்காக காத்திருந்து பேசினோம். "இன்று என் மனைவி பூர்ணாவுக்கு பிறந்தநாள். எங்களுக்குப் பிறந்த குழந்தை குப்புறப் படுக்கும் அளவுக்கு வளர்ந்திருச்சு.
மனைவி, குழந்தையுடன் பெரிய ஹோட்டலுக்கு போகலாம்னு நினைச்சிருந்த நேரத்துல நீங்க வந்துவிட்டீங்க... சரி பேசுவோம்''’என்று தனது இக்கட்டான நிலையைச் சொல்லி விட்டு தொடர்ந்தார். "நான் காலேஜ் படிக்கும்போது மொதல்ல வாட்ஸ்-ஆப்ல ஹாய் சொன்னது நிரஞ்சனாதான். காதலித்த நிரஞ்சனாவை கழற்றிவிட்டு பூர்ணாவை திருமணம் செய்து கொண்டது தவறுதான். நிரஞ்சனாவை நம்பவைத்து கர்ப்பமாக்கியது மன்னிக்கமுடியாத பாவச்செயல்தான். அவளோட புதுவாழ்க்கையும் சரியா அமையல. பாலா குடும்பம் ஆரம்பத்துல இருந்தே நிரஞ்சனாவ வெறுத்துச்சு. நிரஞ்சனாவுக்கு பாலாவை சுத்தமா பிடிக்கல. அதனால தான், மேரேஜுக்கு பிறகும் அவ என்கிட்ட பேசுனா. பிடிக்கலைன் னா வந்திருன்னு அவகிட்ட சொன்னேன். என்னால அவள் வயித்துல வளர்ந்த கருவைக் கலைச்சிட்டாங்கன்னு கேள்விப்பட்டேன். நான் எப்படி நிரஞ்சனாவுக்கு இன்னொரு வாழ்க்கை தரமுடியும்? என் வாழ்க்கை முடிஞ்சுபோச்சு. நீ பூர்ணாவோடு நல்லபடியா வாழணும்னு நிரஞ்சனாவே என்கிட்ட சொல்லிருக்கா. நிரஞ்சனாவை நினைத்து நான் அழாத நாளில்லை. அவளுக்கு நல்ல வாழ்க்கை அமையணும்னு அனுதினமும் பகவானை வேண்டிக்கிறேன்.
நிரஞ்சனாவோடு நான் பழகியது ஊர் முழுக்கத் தெரிஞ்சபிறகு, இந்தக் கோயில்ல உள்ளவங்களுக்கு தெரியாமலா இருக்கும்? எல்லாரும் என்னைப் பார்க்கும் பார்வையே சுட்டெரிக்குது. கோவிலுக்கு வரும் பெண்கள் தேவையில்லாமல் என்னைப் பார்த்து பயப்படறாங்க. நான் அந்த அளவுக்கு மோசமானவன் கிடையாது. குற்றவுணர்ச்சியோடு கோயில்ல உதவி அர்ச்சகர் வேலை பார்க்க எனக்கு விருப்பமில்லை. ராஜினாமா பண்ணுறேன்னு என் தந்தை செந்தூர் பட்டர்கிட்ட சொன்னேன். அதுக்கு அவர், நீ பண்ணுனது பாவம்னு பகவான் ஒரு முடிவெடுத்துட்டா, பகவானே உன்னை வேலையைவிட்டு அனுப்பிருவாரு. அதுவரைக்கும் பொறுமையாக இருன்னு சொல்லிட்டாரு. நிரஞ்சனாவுக்கு ஆறுதல் சொல்ல அவ வீட்டுக்கு போகணும்னு மனசுகிடந்து துடிக்குது. இந்த அளவுக்கு ஆனபிறகு, அவளோட அப்பா முகத்தை என்னால எப்படி பார்க்க முடியும்? என்னை நம்பி என் மனைவி, குழந்தை இருக்கு. நான் செஞ்ச பாவத்துக்கு என்ன பரிகாரம் பண்ணுவது?''’எனக் கேட்டு கண்களைத் துடைத்துக்கொண்டார்.
‘ஒரு பிராமணனைக் காதலித்து உறவும் வைத்துக்கொண்டது தவறா? காதலனின் கருவை வயிற்றில் சுமந்துகொண்டு, போலியாக கணவனுடன் வாழ மனமில்லாமல், உண்மையைக் கூறியது தவறா? வயிற்றிலிருந்த சிசுவை நேர்மையாகப் பிரசவிக்கமுடியாமல் கருக்கொலைக்கு உடன்பட்டது தவறா? இத்தனை கொடுமை நடந்தபிறகும் காதலனை மனதிலிருந்து இறக்கிவைக்க முடியாமல் உள்ளுக்குள் பரிதவிப்பது தவறா? முறையான விவாகரத்து கணவனிடமிருந்து கிடைத்ததும் பெற்றோர் விருப்பத்துக்காக வேறொரு திருமணத்துக்கு நான் தயாராகவேண்டுமே? அது நடக்குமா? அதற்கு எத்தனை காலம் ஆகுமோ?’ என்ற பரிதவிப்பில் நாட்களைக் கடத்திக்கொண்டி ருக்கிறாள் நிரஞ்சனா.