தி.மு.க. கூட்டணியில் 6 இடங்களை பெற்று களம் காண்கிறது விடுதலை சிறுத்தைகள் கட்சி. கூட்டணிச் சிக்கல்களை சமாளித்து தனிச் சின்னத்தில் சிறுத்தைகளை தேர்தல் களத்தில் இறக்கியிருக்கும் வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவனை நக்கீரனுக்காக சந்தித்தோம்.
தி.மு.க.விடம் 12 இடங்களைக் கேட்ட நீங்கள், 6 இடங்களை ஒப்புக்கொண்டு, திருப்தியடைந்தது ஏன்?
ஆறு இடங்களுக்கு ஒப்புக்கொண்டதில் கட்சியின் தொண்டர்களுக்கு அதிருப்திதான். எனக்கும் மனநிறைவு இல்லை. ஆனால், அதிக இடங்களில் தி.மு.க. போட்டியிட வேண்டும் என்பதையும் அதற்கான காரணங்களையும் தி.மு.க. தலைமை எங்களிடம் முன்வைத்த காரணங்கள் நியாயமானவையாக இருந்தன. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடந்தாக வேண்டும் என்கிற அரசியல் சூழலை நினைத்து 6 இடங்களுக்கு ஒப்புக்கொண்டோம்.
தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை துவங்கியதிலிருந்தே தோழமைக் கட்சிகளுடன் சில முரண்பாடுகளை தி.மு.க. உருவாக்கியதால் தேர்தல் களத்தில் தி.மு.க.வுக்கும் கூட்டணிக் கட்சிகளுக்குமான இணக்கம் திருப்திகரமாக இல்லை என்கிறார்களே?
தேர்தல் நேரங்களில் கூட்டணிக் கட்சிகளுடன் சில கருத்து வேறுபாடுகள் வருவது இயல்பானதுதான். தங்களின் வலிமைக்கேற்ப அதிக இடங்களைக் கேட்பது கூட்டணிக் கட்சிகளின் தர்மம். அதேசமயம், கூட்டணிக்குத் தலைமை தாங்கும் கட்சி, அதில் சில முடிவுகளை எடுத்து எங்களிடம் விவா திக்கிறபோது ஏற்படும் கருத்து வேறுபாடுகளை முரண்பாடுகளாக எடுத்துக்கொள்ளக் கூடாது. "அதிக இடங்களில் போட்டியிட்டு குறைவான இடங்களில் வெற்றிபெறுவதைக் காட்டிலும், குறைவான தொகுதிகளைப் பெற்று முழுமை யான வெற்றியை பெறுவதுதான் பலம்' என தி.மு.க. சொன்னதன் ஆழத்தை புரிந்த
தி.மு.க. கூட்டணியில் 6 இடங்களை பெற்று களம் காண்கிறது விடுதலை சிறுத்தைகள் கட்சி. கூட்டணிச் சிக்கல்களை சமாளித்து தனிச் சின்னத்தில் சிறுத்தைகளை தேர்தல் களத்தில் இறக்கியிருக்கும் வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவனை நக்கீரனுக்காக சந்தித்தோம்.
தி.மு.க.விடம் 12 இடங்களைக் கேட்ட நீங்கள், 6 இடங்களை ஒப்புக்கொண்டு, திருப்தியடைந்தது ஏன்?
ஆறு இடங்களுக்கு ஒப்புக்கொண்டதில் கட்சியின் தொண்டர்களுக்கு அதிருப்திதான். எனக்கும் மனநிறைவு இல்லை. ஆனால், அதிக இடங்களில் தி.மு.க. போட்டியிட வேண்டும் என்பதையும் அதற்கான காரணங்களையும் தி.மு.க. தலைமை எங்களிடம் முன்வைத்த காரணங்கள் நியாயமானவையாக இருந்தன. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடந்தாக வேண்டும் என்கிற அரசியல் சூழலை நினைத்து 6 இடங்களுக்கு ஒப்புக்கொண்டோம்.
தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை துவங்கியதிலிருந்தே தோழமைக் கட்சிகளுடன் சில முரண்பாடுகளை தி.மு.க. உருவாக்கியதால் தேர்தல் களத்தில் தி.மு.க.வுக்கும் கூட்டணிக் கட்சிகளுக்குமான இணக்கம் திருப்திகரமாக இல்லை என்கிறார்களே?
தேர்தல் நேரங்களில் கூட்டணிக் கட்சிகளுடன் சில கருத்து வேறுபாடுகள் வருவது இயல்பானதுதான். தங்களின் வலிமைக்கேற்ப அதிக இடங்களைக் கேட்பது கூட்டணிக் கட்சிகளின் தர்மம். அதேசமயம், கூட்டணிக்குத் தலைமை தாங்கும் கட்சி, அதில் சில முடிவுகளை எடுத்து எங்களிடம் விவா திக்கிறபோது ஏற்படும் கருத்து வேறுபாடுகளை முரண்பாடுகளாக எடுத்துக்கொள்ளக் கூடாது. "அதிக இடங்களில் போட்டியிட்டு குறைவான இடங்களில் வெற்றிபெறுவதைக் காட்டிலும், குறைவான தொகுதிகளைப் பெற்று முழுமை யான வெற்றியை பெறுவதுதான் பலம்' என தி.மு.க. சொன்னதன் ஆழத்தை புரிந்துகொண்டு ஏற்றுக்கொண்டோம். சிறுத்தைகளை சிறுமைப்படுத்தும் எவ்வித சிறிய அளவிலான நோக்கத்திலும் தி.மு.க. நடந்து கொள்ளவில்லை. அதனால் தேர்தல் களத்தில் இணக்கமில்லா சூழலே கிடையாது. இணைந்து களமாடுகிறோம்.
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட கூட்டணி கட்சிகளுக்கு நெருக்கடி தரவில்லை என தி.மு.க. தலைமை வெளிப்படையாகச் சொன்னாலும் ம.தி.மு.க. உள்ளிட்ட சில கட்சிகளை தனிச் சின்னத்தில் போட்டியிட அனுமதிக்கவில்லை. ஆனால், சிறுத்தைகளுக்கு அனுமதி கிடைத்துள்ளது. சின்னம் விவகாரத்தில் தி.மு.க.வை சமாளித்தது எப்படி?
கட்சிக்கான அங்கீகாரம் கிடைக்க தனிச்சின்னம் அவசியம். கடந்த காலங்களில் நடந்த சட்டமன்ற -நாடாளுமன்றத் தேர்தல்களில் தனிச்சின்னத்தில் போட்டியிட்டதையும், அதற்கான நியாயமான காரணங்களையும் தி.மு.க. தலைமையிடம் விரிவாக விவாதித்தோம். எங்கள் தரப்பின் விவாதத்தை ஏற்றுக் கொண்ட தி.மு.க. இசைவு தெரிவித்தது. தனிச்சின்னத்தில் போட்டியிடுகிறோம். நீண்டகாலம் அரசியல் செய்யவேண்டி யிருப்பதால் தனிச்சின்னம் மூலம் தனித்துவத்தை தற்காத்துக்கொள்ள முடியும்.
தனிச் சின்னத்தில் போட்டியிட தி.மு.க.விடம் அனுமதி பெற்றிருந்தாலும், சிறுத்தைகளை சுயேட்சை யாகக் கருதி 6 தொகுதிகளுக்கும் 6 சின்னங்கள் கிடைக்கவே வாய்ப்பு. அது உங்களின் வெற்றியைப் பாதிக்காதா?
போட்டியிடும் 6 இடங்களுக்கும் ஒரே சின்னம் பெற முயற்சித்துவருகிறோம். கிடைத்து விடும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. புதிய சின்னத்தை மக்களிடம் மிக எளிதாக எங்களால் கொண்டு சென்றுவிட முடியும் என்பதால், தனிச்சின்னத்தில் வெற்றி எங்களுக்கு சாத்தியம் தான். எங்களின் வெற்றி, கூட்டணிக்கு பலம் சேர்க்கும்.
சனாதன எதிர்ப்பைத் தொடர்ச்சியாக நீங்கள் கூர்மைப்படுத்தி வருகிறீர்கள். அந்த எதிர்ப்பு இந்துக்களுக்கு எதிரானதாக உருமாறுவதால் இந்துக்களின் வாக்குகள் தி.மு.க.வுக்கு கிடைக்காது என்கிற அச்சம் ஏற்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறதே?
சனாதன எதிர்ப்பினை பெரியாரும் அண்ணாவும் மிக வலிமையாக உயர்த்திப் பிடித்தார்கள். தி.மு.க.வின் கோட்பாடும் அதுதான். அந்தக் கோட்பாட்டில் கலைஞர் எப்படி உறுதியாக நின்றாரோ அதே வலிமையும் உறுதியும் மு.க.ஸ்டாலினிடமும் இருக்கிறது. அதனால் நாங்கள் கூர்மைப்படுத்துவதால் எந்த சிக்கலும் தி.மு.க.வுக்கு இல்லை. அதேசமயம், சனாதன எதிர்ப்புங்கிறது பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவாரங்களுக்கு எதிரானதே தவிர, இந்து மக்களுக்கு எதிரானது அல்ல. சங்பரிவாரங்களின் மதவெறி அரசியலை முறித்து மதச்சார்பற்ற அரசியலை வென்றெடுப்பதே எங்களின் இலக்கு. அதனால் சனாதன எதிர்ப்பினை கூர்மைப்படுத்துகிறோம்.
சனாதன எதிர்ப்பின் காரணமாக இந்து மக்களின் மத நம்பிக்கை உணர்வுகளுக்கு எதிராக நீங்கள் பேசுவது தேர்தல் அரசியலில் கூட்டணியை பாதிக்காதா?
இந்து மக்களின் மத நம்பிக்கைகளை மதிக்கிறேன். அவர்களின் உணர்வு களையும் நம்பிக்கைகளையும் நாங்கள் விமர்சித்ததில்லை. ஆனால், மதத்தையும் கடவுள் களையும் மையப்படுத்தி மக்க ளிடையே மோதலை உருவாக்க ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் முயற்சிக்கின்றன. அதற்காக, மக்களின் மத உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் தூண்டிவிடு கின்றன. அதனால் நாடு முழுவதும் மத மோதல்கள் வெடிக்கிறது. அத்தகைய மோதல்கள் மூலம் அரசியல் ஆதாயம் தேடுகிறது பா.ஜ.க. அதனைத்தான் தமிழகத்திலும் செய்து கொண்டிருக்கிறது. அதனை நாங்கள் எதிர்க்கும் வகையில் விமர்சிக்கிறோம். சாதிய கொடுமை களையும், பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறை களையும்தான் நாங்கள் விமர்சித்துள்ளோமே தவிர, இந்து மதத்தை நாங்கள் கொச்சைப்படுத்திய தில்லை. அதற்கான தேவையும் இல்லை. எங்களின் இந்த நோக்கத்தில், மக்களுக்கு எவ்வித குழப்பமும் இல்லை. மக்கள் தெளிவாக இருப்பதால் கூட்டணிக்கு எந்த பாதிப்பும் கிடையாது.
அ.தி.மு.க. கூட்டணியில் 20 இடங்களைப் பெற்றுள்ள பா.ஜ.க.வுக்கு எத்தனை தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் என நம்புகிறீர்கள்?
தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட தாமரை மலராது. எந்த ஒரு தொகுதியிலும் 10 ஆயிரம் வாக்குகள் வாங்கக்கூட பா.ஜ.க.வால் முடியாது. பா.ஜ.க. களத்தில் நிற்கும் 20 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணியின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது. தமிழக பா.ஜ.க.வினரின் பகல் கனவில் கூட தாமரை மலராது. பா.ஜ.க.வின் தேசிய தலைவர்களுக்கே இது தெரிந்த உண்மைதான்.
சட்டமன்றத் தேர்தலின்போது ஏதேனும் ஒரு அலை வீசும். ஆனால், இந்தத் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு எதிரான அலை என்பதோ, தி.மு.க.வுக்கு ஆதரவான அலை என்பதோ 100 சதவீதம் வீசவில்லை என்கிற சூழலில், தி.மு.க. கூட்டணியின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்?
தி.மு.க. தலைமையில் உருவாகியிருப்பது இயற்கையான, இயல்பான கூட்டணி. தி.மு.க.வின் வலிமையான கட்சிக் கட்டமைப்பும் கூட்டணியின் பலமும் வலிமை வாய்ந்தவை. ஆனால், அ.தி.மு.க.-பா.ஜ.க.-பா.ம.க. கூட்டணி பொருந்தாக் கூட்டணி. குறிப்பாக, கூட்டணியில் பா.ம.க. இருப்பது அ.தி.மு.க.வுக்குப் பின்னடைவுடன் கூடிய மிகப்பெரிய சிதைவு; சுமையும்கூட! மோடியின், மைய அரசின் பொம்மலாட்ட அரசாகத்தான் எடப்பாடி அரசு இருந்து வந்திருக்கிறது. தமிழகத்தில் மோடிக்கு எதிரான அலை எடப்பாடிக்கு எதிரான அலையாக மாற்றம் பெற்றுள்ளது. தவிர, அ.தி.மு.க.வுக்கு வலிமையான தலைமை இல்லாததால் இ.பி.எஸ்.- ஓ.பி.எஸ்.சிடையே ஒற்றுமையில்லை. எடப்பாடி ஆட்சியில் அடி முதல் நுனிவரை எங்கும் வெளிப்படையாக ஆக்ரமித்திருக்கும் ஊழல்கள், மாநில உரிமைகளை விட்டுக் கொடுத்து தமிழகத்தை அடமானம் வைத் துள்ள ஆட்சி நிர்வாகம், ஏழு தமிழர்கள் விடுதலையில் பா.ஜ.க.வும் அ.தி.மு.க.வும் போட்டு வரும் நாடகங்கள், வேளாண் சட்டங்கள் உட்பட மக்கள்விரோத சட்டங்களுக்கு எடப்பாடி தந்துவரும் ஆதரவு... இவை எல்லாமுமே தி.மு.க.வுக்கு பலம் சேர்க்கின்றன. அந்த வகையில், 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சிக்கு எதிராக மக்களிடம் ஒருவித அமைதி அலை வீசிக்கொண்டிருக்கிறது. இது தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்கும். அதனால், தி.மு.க. கூட்டணிக்கான 100 சதவீத வெற்றி உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
மக்களின் எதிர்பார்ப்புகளை உணர்ந்து இலவச அறிவிப்புகளும் தள்ளுபடிகளும் செய்துள்ள எடப்பாடி அரசுக்கு சாதகமான உணர்வு, பெண்களிடமும் விவசாயிகளிடமும் இருப்பதால் தி.மு.க.வின் வெற்றி அவ்வளவு எளிதானதாக இல்லை என்கிறார்களே அரசியல் விமர்சகர்கள்?
அப்படி ஒரு தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர். ஆனால், எடப்பாடி அரசின் இலவசங்களும், புதிய அறிவிப்பு களும் நிறைவேற சாத்தியமே இல்லை. மீளவே முடியாத அளவுக்கு தமிழகத்தின் கடன்சுமையை அதிகரித்து வைத்திருக்கும் எடப்பாடி அரசால் ஏற்பட்டுள்ள பொருளா தார நெருக்கடி, இதனை நிறைவேற்ற அனுமதிக்காது. மக்களை ஏமாற்றும் வித்தை இது. அதனால் அ.தி.மு.க.வுக்கு எதிராகத் தான் மக்கள் வாக்களிப்பார்கள். வெற்று விளம்பரங்களால் மக்களை ஏமாற்றிட முடியாது.