தாமரைக்கு "ஜே!' எடப்பாடிக்கு எதிராக வேலுமணி.. -கோவை களேபரம்!

22

ss'I am Waiting' என சக போட்டி வேட்பாளருக்கு X தளத் தில் வரவேற்பு கொடுத்து பரபரக்க வைத்திருக்கின்றார் கோவை நாடாளுமன்றத் தொகுதிக் கான அ.தி.மு.க. வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன், "தம்பி... நீங்கதான் பரிசோதனை எ-யே, அது தெரியாமல் ஆடாதீங்க. இங்க தாமரை வேட்பாளருக்கு வேலை செய்வதே நம்ம வேலுமணி அண் ணன்தான்' என பதிலுக்கு கி-யூட்டியுள்ளனர் வலைத்தளவாசிகள்.

மேற்கு மண்டலத்தில் தி.மு.க. வலுவாக காலூன்ற வேண்டுமென அமைச்சர் உதய நிதியை பொறுப்பாளராக்கி நாடாளுமன்ற வேட்பாளர்களை அறிவித்தது தி.மு.க. தலைமை. இதில் கோவை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக கணபதி ராஜ்குமார் அறிவிக்கப்பட்டார். அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து கணபதி ராஜ்குமாருக்கு எதிராக 11 குற்றச் சாட்டுக்களை குறிப்புக் களாக்கி தலை மைக்கு அனுப்பி வைத்தனர் உள்ளூர் தி.மு.க.வினர். இதில் ஜெ.வுக்காக ஜெ. பெயரில் ஆராய்ச்சிக்கட்டுரை(?) எழுதி முனைவர் பட்டம் வாங்கியதும் ஒன்று. இது களேபரமான வேளையில், அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்பப் பிரிவின் மாநிலத் தலைவரான சிங்கை ராமச்சந்திரன் அ.தி.மு.க. தரப்பு வேட் பாளராக அறிவிக்கப்பட்டார்

ss'I am Waiting' என சக போட்டி வேட்பாளருக்கு X தளத் தில் வரவேற்பு கொடுத்து பரபரக்க வைத்திருக்கின்றார் கோவை நாடாளுமன்றத் தொகுதிக் கான அ.தி.மு.க. வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன், "தம்பி... நீங்கதான் பரிசோதனை எ-யே, அது தெரியாமல் ஆடாதீங்க. இங்க தாமரை வேட்பாளருக்கு வேலை செய்வதே நம்ம வேலுமணி அண் ணன்தான்' என பதிலுக்கு கி-யூட்டியுள்ளனர் வலைத்தளவாசிகள்.

மேற்கு மண்டலத்தில் தி.மு.க. வலுவாக காலூன்ற வேண்டுமென அமைச்சர் உதய நிதியை பொறுப்பாளராக்கி நாடாளுமன்ற வேட்பாளர்களை அறிவித்தது தி.மு.க. தலைமை. இதில் கோவை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக கணபதி ராஜ்குமார் அறிவிக்கப்பட்டார். அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து கணபதி ராஜ்குமாருக்கு எதிராக 11 குற்றச் சாட்டுக்களை குறிப்புக் களாக்கி தலை மைக்கு அனுப்பி வைத்தனர் உள்ளூர் தி.மு.க.வினர். இதில் ஜெ.வுக்காக ஜெ. பெயரில் ஆராய்ச்சிக்கட்டுரை(?) எழுதி முனைவர் பட்டம் வாங்கியதும் ஒன்று. இது களேபரமான வேளையில், அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்பப் பிரிவின் மாநிலத் தலைவரான சிங்கை ராமச்சந்திரன் அ.தி.மு.க. தரப்பு வேட் பாளராக அறிவிக்கப்பட்டார். அதுபோக கோவை நாடாளுமன்றத் தொகுதியில் மூன்றாவது வேட் பாளராக தாமரைக் கட்சியின் மாநிலத்தலைவர் களமிறங்கினார். இவ்வேளையில், அனைவருக்கும் தான், யார் என்பதை காண்பிக்கும்விதமாக "I am Waiting'என தாமரை கட்சி வேட்பாளரை வரவேற்றதுதான் வினையாகியுள்ளது அ.தி.மு.க. வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனுக்கு.

kovai

அ.தி.மு.க. ஐ.டி. விங்கை சேர்ந்த மூத்த நிர்வாகி ஒருவரோ, "சிங்காநல்லூரில் தற்போதைய ச.ம.உ. ஜெயராமன், செ.மா. வேலுச்சாமி ஆகியோர் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக முயற்சிக்கையில், வேலுமணியால் கை காண்பிக்கப்பட்டவர்தான் சிங்கை ராமச்சந்திரன். ஆனால் இந்த வேட்பாளர் ஓ.பி.எஸ்.ஸின் தீவிர ஆதரவாளர் என்பது எத்தனை பேருக்குத் தெரி யும்? அதற்கு முன்னால் ஒரு சுவாரசிய கதை ஒன்று. தகவல் தொழில்நுட்ப அணிக்காக ஒரு சீட் என முன்னரே முடிவான நிலையில், தற்பொழுது ஐ.டி. விங்கின் மாநில செயலாளராக இருக்கும் எடப்பாடியின் நெருங்கிய விசுவாசியான மதுரை ராஜ்சத்யனுக்குத் தான் அந்த சீட் என பேசப்பட்டது. இதற்காக ராஜ்சத்யனும் விருதுநகரை குறிவைத்து தீவிரமாக வேலை செய்துவந்தார். இந்த நிலையில், அ.தி.மு.க. வில் இருந்து ஓ.பி.எஸ்.ஸை வெளியேற்றியது, கூட்டணியில் இருந்து பா.ஜ.க.வை வெறியேற்றியது என்பதிலும் ராஜ்சத்யனின் பங்கு அலாதியானது. குறிப்பாக, "நன்றி! மீண்டும் வராதீர்கள்' என்கின்ற ஹேஷ்டேக். பா.ஜ.க. விடயத்தில் முதலில் லேசாக பயந்தாலும், ஐ.டி. விங்கின் தைரியத்தால் பா.ஜ.க.வை முழுமூச்சாக எதிர்ப்பதுபோல் காட்டிக்கொண்டார் இ.பி.எஸ். இது கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர்களுக்கு அறவே பிடிக்கவில்லை. இதேவேளையில், தங்களுக்காக ஒருவர் வேண்டுமென பா.ஜ.க.வின் ஐ.டி. விங்கை சேர்ந்த நிர்மல்குமாரை ஐ.டி. விங் இணைச்செய லாளராக அ.தி.மு.க.விற்குள் கொண்டுவந்தனர் வேலுமணி மற்றும் தங்கமணி டீம். இருப்பினும், ராஜ்சத்யனின் பதவியை பறி முதல் செய்து அதனை நிர்மலுக்கு வாங்கிக் கொடுக்க வேண்டுமென்பதால் ஒரு கேம் விளையாடினர். அது, "ராஜ்சத்யனை அழைத்ததை இ.பி.எஸ்., "நீ விருதுநகரில் போட்டியிடு. கட்சியே முழுச்செலவை பார்த்துக்கொள்ளும். அதற்குமுன் ஐ.டி. விங் பதவியை ராஜினாமா செய்துவிடு'' எனக் கூற, "நமக்கு இதுதான் முக்கியம். தோற்றாலும் பிடுங்கிக்கொள்வார்கள், நின்றாலும் பிடுங்கி கொள்வார்கள்'' என்று போட்டியிடவில்லை என வெளியேறிவிட்டார் ராஜ்சத்யன். அதற்கு பின்தான் சிங்கை ராமச்சந்திரனே'' என்றார் அவர்.

கடந்த இரு தினங்களுக்கு முன் சின்னியம் பாளையத்தில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் வேலுமணி, "வெறும் 4 சதவிகிதம் மட்டுமே வாக்கு வங்கியை பெற்ற தாமரை கட்சி இங்கு போட்டியிடுகின்றது. பயப்பட வேண்டாம், நமக்கு போட்டி தி.மு.க.வே'' எனக்கூறி பா.ஜ.க.விற்கு எதிராக அடக்கியே வாசித்தார்.

"அ.தி.மு.க.வின் சிங்கை ராமச்சந்திரன் வெற்றியை வேலுமணி விரும்பவில்லை என்பது தான் உண்மை. அவரைப் பொறுத்தவரை பா.ஜ.க. கூட்டணியை உடைக்க காரணமாய் இருந்த ராஜ்சத்யன் வெளியேற வேண்டும். அதே வேளையில், ஐ.டி. விங் நிர்மல்குமாரை கொண்டு கோவையில் தாமரை வேட்பாளரை வெற்றிபெற வைக்கவேண்டும் என்பதே. இருக்கும் இடம் தான் அ.தி.மு.க. என்றும் உங்களின் விசுவாசி என்பதுபோல, தாமரை வேட்பாளருக்காக புரோமோஷன் வேலைகளில் இறங்கி தாமரைக்கு "ஜே' போட்டு வருகின்றது வேலுமணி டீம். இது அப்படியே வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் மூலம் எடப்பாடிக்கு சென்றாலும் அடக்கியே வாசிக்கின்றது அவரது தரப்பு'' என்கின்றனர் உண்மையான இரட்டைஇலை வாசிகள்.

படங்கள்: விவேக்

___________

இறுதிச் சுற்று

22

வேட்புமனு தாக்கலுக்கு 27-ந்தேதி கடைசி நாள் என்பதால் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. கட்சிகளின் வேட்பாளர்கள், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள், தனித்துக் களமிறங்கும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் பலரும் 25-ந் தேதி திங்கள்கிழமை மனுத்தாக்கல் செய்துள்ளனர். ராமநாதபுரம் தொகுதி யில் போட்டியிடும் ஓ.பி.எஸ். 25-ந் தேதி மனுத்தாக்கல் செய்தார். இதற்கிடையே, பம்பரம் சின்னத்தைக் கேட்டு போராடி வந்தார் வைகோ. ஆனால், இதுவரை பம்பரமும் ஒதுக்கவில்லை; அதற்கு மாற்றாக வேறு எந்த சின்னமும் ஒதுக்கப்படவில்லை. அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சின்னத்தை ஒதுக்கித் தருகிற தேர்தல் ஆணையம், 24-ந் தேதி வரை சின்னம் ஒதுக்காததால், 25-ந் தேதி காலையில் நீதிமன்றத்தை அணுகியுள்ளது ம.தி.மு.க. இதற்கிடையே அ.தி.மு.க. கொடி சின்னத்தை ஓ.பி.எஸ். பயன்படுத்த தடை விதித்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டு மனு 25-ந் தேதி விசாரணைக்கு வந்தது. தீர்ப்புக்கு தடை விதிக்க மறுத்து, விசாரணையை ஜூன் 10க்கு தள்ளி வைத்தனர் நீதிபதிகள்

-இளையர்

nkn270324
இதையும் படியுங்கள்
Subscribe