பா.ஜ.க. மா.த.வால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட திருச்சி சூர்யா, பா.ஜ.க. மா.த.வின் எதேச்சதிகார செயல்பாடுகள் குறித்து ஏற்கனவே நம் இதழுக்கு தொடர் பேட்டியளித்திருந்தார். தற்போது பா.ஜ.க. மா.த. மேற்படிப்புக்காக லண்டன் சென்றுள்ளதாகத் தெரிவித்துவிட்டு கிளம்ப, தமிழக பா.ஜ.க.வை நிர்வகிக்க குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இச் சூழலில் லண்டன் மேற்படிப்பு என்று சொல்வதே பொய்யென்றும், எல்லாம் பண விஷயமாகத்தான் செல்கிறாரென்றும், இன்னும் பல தகவல்களை நம்மிடம் மனம் திறந்து பேசியுள்ளார் திருச்சி சூர்யா.

tr

"நேர்மை, நாணயத்தைப் பற்றி நீங்க எனக்குப் பாடம் எடுக்க வேண்டாம். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கூவத்தூரில் நடந்தது அலங்கோலம்' என எடப்பாடி பழனிசாமியையும் அ.தி.மு.க.வையும் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறாரே பா.ஜ.க. மா.தலைவர்?

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆன பிறகு அவரை தேடிச் சென்று கிடந்தது பா.ஜ.க. தான். கூவத்தூரில் நடந்ததெல்லாம் அப்ப தெரிய வில்லையா? சசிகலாவை முதலமைச்சராக்கவிடாமல் செய்தது, ஓ.பி.எஸ்.ஸை கையில் வைத்திருந்தது என எல்லா கீழ்த்தரமான செயலையும் செய்தது பா.ஜ.க. உங்கள் தூண்டுதல் இல்லாமல்தான் ஓ.பி.எஸ். தர்மயுத்தம் நடத்தினாரா? தலைமைச் செயலகம் வரை ரெய்டு நடத்தி, அமைச்சர்களையெல்லாம் கையில் எடுத்தது யார்? பீலா ராஜேஷ் பீகாருக்கு செல்ல வேண்டியவர், அவரை தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்தது யார்? ஓ.பி.எஸ். அணியில் மாஃபா பாண்டியராஜனை சேரச்சொன்னது யார்? இங்க இருந்த பா.ஜ.க. மாநிலத் தலைவரும், மத்திய அமைச்சரும் இந்த மாநிலத்தை ஆட்சி செய்து கொண்டிருந்தார்கள். யாரையுமே செயல்பட விடவில்லை. தினகரன் கூட சென்ற 18 எம்.எல். ஏ.க்கள் பதவியை இழக்க எவ்வளவு துரிதமாக பா.ஜ.க. செயல்பட்டது. தி.மு.க. அவ்வளவு பிரச்சினை செய்தும், மெஜாரிட்டி இல்லாமல் எடப்பாடி ஆட்சி தொடர காரணம் யார்? அப்பெல்லாம் பா.ஜ.க.வுக்கு தெரியவில்லையா?

Advertisment

இதைவிட பெரிய கூத்து 2019ல் மோடி வேட்பு மனுத்தாக்கலின்போது எடப்பாடி பழனிசாமி வர மறுத்தார் எனச் சொன்னதுதான். இந்த விசயம் இவருக்கு எப்படி தெரியும் என்றால், எடப்பாடியுடன் நெருக்கமாக இருக்கும் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்தான் மா.தலைவரிடம் சொல்லியிருக்கிறார். உங்ககிட்ட மணிகள் இருக்கிறார்கள். அவர்களிடமே கேட்டுப்பாருங்கள் என்கிறார். மோடி தோற்கப்போகிறார் அதற்கு எதற்கு நான் வேட்பு மனு தாக்கலுக்கு போகணும் என எடப்பாடி சொன்னதாக இது நாள் வரை மா.தலைவருக்கு தெரியவில்லை. இப்போதுதான் சொல்லியிருக்கிறார்கள். அதனை பிடித்துக் கொண்டார் மா.த.

2019க்கு பிறகுதான் பா.ஜ.க.வுக்கு வந்தீங்க. மா.தலைவர் ஆனீங்க. எடப்பாடி முதல்வராக இருந்தப்ப அவரை அண்டி பிழைப்பு நடத்தினீங்க. எம்.எல்.ஏ. சீட்டுக்காக அ.தி.மு.க. வாசல்ல போய் நின்னீங்க. அ.தி.மு.க. ஆட்சியை இழந்து அதிகாரம் இல்லாதபோதுதான், உங்கள் திமிரையெல்லாம் எடப்பாடியிடம் காட்ட ஆரம்பித்தீர்கள். எடப் பாடி முதல்வராக இருந்தவரை பா.ஜ.க. பொத்திக் கிட்டுதானே இருந்தது. என்.டி.ஏ. கூட்டணி கூட்டத்தில் பிரதமர் பக்கத்தில் ஏக்நாத் ஷிண்டே, எடப்பாடி பழனிசாமியை தவிர வேறு யாரையும் தெரியவில்லை. அப்ப எடப்பாடி மோடியை ஏற்க மறுத்தார் என்பது தெரியவில்லையா? தனிப்பட்ட முறையில் எடப்பாடி மீது மா.தலைவருக்கு கோபம் இருக்கிறது.

tr

Advertisment

தனிப்பட்ட முறையில் என்ன கோபம்?

சமுதாய ரீதியிலான கோபம். செந்தில் பாலாஜி மீது என்ன கோபமோ அதுதான். கொங்கு பகுதியில் அந்த சமுதாயத்தின் அடையாளமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். இவர் மட் டும்தான் பச்சை இங்க்கில் கையெழுத்து போட்டா ரா? எடப்பாடியும் முதலமைச்சராக இருந்திருக் கிறார். அமைச்சராக இருந்திருக்கிறார். அவர் மட்டும் வேற கலரில் கையெழுத்து போட்டாரா?

கறை படியாத கை என்கிறார்...?

அது எப்படி அவர் சொல்ல முடியும். அந்த வார்த்தைக்கும் மா.தலைவருக்கு சம்பந்தம் இருக்கா? அந்த வார்த்தையை சொல்லத் தகுதியே கிடையாது. பைசா வாங்கியதில்லை என்கிறார். அதனை நான் ஒத்துக்கொள்கிறேன். கோடிகளில் வாங்குவதால் பைசா வார்த்தையை பயன் படுத்த மாட்டார். மா.தலைவரா வந்த பிறகு நீங்க சம்பாதித்த சொத்து, நீங்க செய்கிற வேலைகளை பார்த்து இங்க அரசியலில் பழம் தின்னு கொட்டை போட்டு, கோடிக்கணக்கில் சொத்து சேர்த்தவர்களே வாயைப் பிளக்கிறார் கள்.

அவர் படிப்பதற்காக லண்டன் போக வில்லை. அமெரிக்காவுக்கு படிக்கப் போவதாக சொன்னார். அப்போது ஒரு முக்கிய இதழில் 5 ஆயிரம் கோடியை அமெரிக்காவுக்கு எடுத் துச் சென்றார் என்று வந்தது. ஆருத்ரா வழக் கில் அமர்பிரசாத் ரெட்டிக்கும் உங்களுக்கும் சம்பந்தம் இருக்கிறது என்று போட்டார்கள். இதற்கு ஏன் வழக்கு போடவில்லை. அவர் களிடம் ஆதாரம் இருந்தது.

இந்தமுறை லண்டனுக்கு அவர் செல்வதற்கு காரணம், பண விஷயத்துக்காகத்தான். இதை விரிவாகப் பார்த்தால்தான் புரியும். இலங்கை தமிழர்களுக்கு வீடுகள் கட்டித் தந்தது, கடல்வழி போக்குவரத்து உள்பட இலங்கைக்கு பல்வேறு உதவிகளை செய்து இணக்கமான உறவை உருவாக்கியிருக்கிறோம் எனச் சொல்லி, கச்சத்தீவை மீட்டுத்தருகிறேன் என ஸ்டண்ட் அடித்தார். கச்சத்தீவை காங்கிரஸ் கொடுத்துவிட்டது என்றார். அதற்கு பிறகு பா.ஜ.க. ஆட்சிக்கே வரவில்லையா? பத்து வருஷம் ஆட்சியில் இருந்தபோது கண்ணுக்குத் தெரியாத கச்சத்தீவு இப்ப மட்டும் அகண்ட பாரதத்தில் தெரிய காரணம் என்ன? அதற்கு காரணம் மா.தலைவரின் தனிப்பட்ட சுயநலம். ஒரு லாப நோக்கத்தில் செயல்படுகிறார்.

கச்சத்தீவை ஒன்பது வருடமாக கண்டுக்காத பா.ஜ.க. அரசு, தேர்தலுக்காக ஒரு வருடத்திற்கு முன்புதான் கையில் எடுக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியால்தான் இவ்வளவு பிரச்சினை, பா.ஜ.க. ஏதாவது செய்யும் என வெளிநாடுகளில் உள்ள தமிழர்களின் பார்வை இவர்கள் மீது திரும்புகிறது. இதனை பிஸினஸ் ஆக்குகிறார் மா.தலைவர். அடுத்த முறை பா.ஜ.க. ஆட்சிக்கு வரும்போது கச்சத்தீவை மீட்டுக்கொடுப்போம் என சொல்லியிருக்கிறார். இப்போது மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தவுடன், டெல்லி சென்றவர் கச்சத்தீவை மீட்டால் தமிழ்நாட்டில் நமக்கு வாக்கு வங்கி கூடும் என நம்ப வைக்கிறார். இதனை செய்து கொடுப் பதற்கு மா.தலைவர் முன்னெடுப்பதால் இங்குள்ள அமைப்புகள் எல்லாம் திரண்டு 4 ஆயிரம் கோடி ரூபாய் கொடுக்கிறார்கள். இது கட்சிக்கு போகிறதா. மா.தலைவர் தனியாக சம்பாதிக்கிறாரா என எனக்கு தெரியவில்லை. இதற்காக லண்டன் போகும் இவர், 3 மாத படிப்பையும் படிப்பதாக சொல்கிறார். அங்கு இந்த பணத்தை எப்படி யார் கணக்கில் வைப்பது என்பதற்காகத்தான் சென்றுள்ளார். இதில் கட்சிக்கும் ஒரு நிதி போகிறது. இது எப்படி எனக்கு தெரியும் என்றால், டெல்லியில் நெருக்கமாக உள்ள ஒருவரிடம் வானதி சீனிவாசன், பணம் விசயத்திற்கு மட்டும் மா.தலைவரை அனுப்பு கிறார்கள். நானும் சீனியர்தானே. என்னை அனுப்பினால் நான் அதனை செய்ய மாட்டேனா? லண்டன் நான் போகமாட்டேனா? என் மீது நம்பிக்கை இல்லையா? என டெல்லியிடம் சொல்லச் சொல்லியிருக்கிறார். இதனால் பணம் விசயத்துக்காக லண்டன் போவது உறுதியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனத் தில் இவரது மனைவி பார்ட்னராக இருக் கிறார். 14 நாடுகளில் புதிதாக ஐ.டி. கம்பெனிகளை தொடங்கியுள்ளார். பண விரிவாக்கம் பெரிதாகிக் கொண்டே இருப்பதால் லண்டன் பயணத்தை வேறு யாரை நம்பியும் கொடுக்க மாட்டார்.

தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை மறைக்கிறார்கள். தமிழக மீனவ அமைப்பினருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை சந்திக்கச் செல்கிறார் மா.தலைவர். அன்றைக்கு தமிழக மீனவர்கள் 22 பேரை இலங்கை கைது செய்தது. 44 ஆயிரம் கோடி இலங்கைக்கு கொடுத்தீங்களே, அதெல்லாம் இந்தியர்களின் வரிப்பணம்தானே. மத்தது எல்லாம் வியாக்யானம் பேசும் நிர்மலா சீதாராமன், இங்க வரி கட்டினவர்களுக்கு எதுவும் செய்யாமல், வெள்ளத்துக்கு பணம் கேட்டால் தராமல் இலங்கையில் கோடிக்கணக்கில் கொட்டினீங்களே, அந்த நாட்டால் நம் தமிழக மீனவர்களுக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என்று பேச முடியாதா?

தமிழக மீனவர்கள் கைது பிரச்சனையை ஏன் மா.த. மறைக்கிறார் என்றால், வெளியில் இருந்து வரக்கூடிய நிதிகள் வராது. மீனவர்களையே காப்பாற்ற முடியவில்லை. இவர் எங்க கச்சத்தீவை மீட்டுக்கொடுக்கப் போகிறார் என்று சொல்லிவிடுவார்கள். கடலோரத்தில் உள்ள மீனவர்களுக்கு இலங்கையால் பிரச்சனை இருந்துகொண்டுதான் இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில்தான் இந்தப் பிரச்சனை இருந்தது என்று சொன்ன பா.ஜ.க.வால் இப்பவும் பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை.

அதிகாரத்தில் இருந்த பா.ஜ.க. என்ன செய்தது? மா.தலைவராக என்ன செய்ய முடிந்தது என்பதைத்தான் எடப்பாடி கேட்கிறார். எடப்பாடியை பத்தி பேசினால் கூவத்தூருக்கு போவது, முதலமைச்சர் மீனவர்கள் குறித்து கடிதம் எழுதினால் காங்கிரஸ் ஆட்சியை பத்தி பேசுவது, கச்சத்தீவை மீட்கணும் என்றால் காங்கிரஸ் அரசுதான் எனச் சொல்வது, இந்த வரலாறு எல்லாம் எல்லோருக்கும் தெரியும். பா.ஜ.க. என்ன புடுங்கப்போகுது என்பதுதான் கேள்வி. இலங்கைத் தமிழர்களுக்கு இதனை செய்தோம், அதனை செய்தோம் என போகஸ் செய்யும் பா.ஜ.க. அரசு, தமிழக மீனவர் களைக் காப்பாற்றத் தயாராக இல்லை.

(தொடரும்)

சந்திப்பு: வே.ராஜவேல்

படம்: நவீன்