"ஹலோ தலைவரே, சட்டத்தின் துணையோடு பேரறிவாளன் விடுதலையை சாதித்ததன் மூலமும், மாநில உரிமையைக் காப்பாற்றிக்கொண்டதன் மூலமும், ஹாட்ரிக் அடித்திருக்கும் முதல்வர் ஸ்டாலின், ஊட்டிக்குச் சென்றிருக்கிறார்.''”
"ஆமாம்பா, முதல்வரின் தெளிவான சட்ட அணுகுமுறைகளுக்குக் கிடைத்த வெற்றியாக அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுது. இந்த அரசியல் தட்ப வெப்பத்துக்கு நடுவில், அவர் ஆற அமர சில முடிவுகளை மலைகளின் அரசியான ஊட்டியில் எடுக்கப்போறார்னு தகவல் வருதே?''”
"ஆமாங்க தலைவரே, ஊட்டி மலர்க் கண்காட்சியை திறந்து வைப்பதற்காக 18-ந் தேதி இரவு கோவைக்குப் புறப்பட்டுச் சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு ஏர்போர்ட்டிலிருந்து சர்க்யூட் ஹவுஸ் வரை சாலையின் இருபுறமும் தொண்டர்களும் மக்களும் திரண்டிருந்து வரவேற்பு கொடுத்தாங்க. மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில்பாலாஜி முனைப்போடு செயல்பட்டாரு. மறுநாள் பொருநை அகழ்வராய்ச்சிக் கண்காட்சி, ஓவியக் கண்காட்சி, தொழில் முனைவர்களின் ஆலோசனைன்னு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கிட்டார். பிறகு கோவையில் இருந்து சாலை மார்க்கமாக ஊட்டிக்குச் சென்றார். அங்கே 3 நாட்கள் குடும்பத்தோடு ஓய்வெடுப்பதாகத் திட்டம். கட்சி, ஆட்சி விவகாரங்கள் தொடர்பான சில முக்கிய முடிவுகளை அவர் எடுக்கப் போகிறார்ன்னு சொல்லப்படுது. அங்கிருந்து அவர் திரும்பிய பிறகு அமைச்சரவை மாற்றம் இருக்கலாம் என்கிற எதிர்ப்பார்ப்பும் நிலவுது.''”
"நல்லது நடந்தா சரிதான். ஸ்மார்ட் சிட்டி ஊழல் தொடர்பான விசாரணை, இப்ப வேகமெடுத்திருக்கே?''”
"ஆமாங்க தலைவரே, தமிழகத்தில் சென்னை, வேலூர், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, திருச்சி, தஞ்சை, மதுரை, தூத்துக்குடி, நெல்லை ஆகிய நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணிகள் நடந்துக்கிட்டு இருக்குது. கடந்த அ.தி.மு.க ஆட்சியில் நடைமுறைக்கு வந்த இந்தத் திட்டத்தில், ஏகத்துக்கும் ஊழல் நடந்திருக்குன்னு டெல்லியே சொல்லி இருக்கு. அதனால் இது குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி டேவிதார் தலைமையில், ஒரு நபர் கமிஷனை தி.மு.க. அரசு அமைத்தது. தனது விசாரணையை விறுவிறுப்பாகத் தொடங்கிய டேவிதார், கோவை, திருப்பூர் மாநகராட்சிகளில் அண்மையில் ஆய்வு செய்து, ஊழல் தொடர்பான பல ஆவணங் களையும் ஆதாரங்களையும் கைப்பற்றினார். அடுத்ததா இப்ப மதுரையிலும் இதை ஆராய்ந்து ஊழல் ஆதாரங்களைத் தொகுத்திருக்கிறார்.''”
"ஆமாம்பா, இந்த விவகாரத்தில் அ.தி.மு.க. மாஜி மந்திரி வேலுமணி வசமா சிக்கி இருக்காரே?''”
"உண்மைதாங்க தலைவரே, இந்த ஊழல் தொடர்பாகத் தங்களிடம் இருந்த சில முக்கிய ஆதாரங்களை, சிலர் டேவிதாருக்கு அனுப்பி வச்சிருக்காங்க. இந்த ஆதாரங்கள் எல்லாமே, மாஜி மந்திரி வேலுமணியின் ஊழல் கரங்கள் எவ்வளவு மோசமானதுன்னு எடுத்துச் சொல்ற அளவுக்கு இருக்குதாம். அவரோடு சில முன்னாள், இந்நாள் எம்.எல்.ஏ.க்களும் இந்த வழக்கில் களி திங்கப்போறாங்களாம். இந்த கமிஷன் மூன்று மாதத்திற்குள் தன் ரிப்போர்ட்டைத் தாக்கல் செய்யணும்னு சொல்லப்பட்டிருக்கு. இருப்பினும் இந்த கமிஷன் தன் முழுமையான விசாரணையை முடிக்க, மேற்கொண்டு மூன்று மாதங்கள் தேவைப்படும்னு அதிகாரிகள் தரப்பே சொல்லுது.''”
"திறமையான ஒரு பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி பற்றியும், சர்ச்சை கிளம்புதே?''
"உண்மைதாங்க தலைவரே, முன்னாள் முதல்வர் ஜெ.வின் நம்பிக்கைக்குரிய ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்தவர் இன்னசென்ட் திவ்யா. நீலகிரி கலெக்டராக இருந்த இவரை திறன் மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குநராக்கி யிருக்கு தி.மு.க. அரசு. நல்லா ஒர்க் பண்ணக்கூடியவர். ஆனா, வந்த வேகத்திலேயே தையல் பயிற்சி, ஏ.சி.மெக்கானிக் பயிற்சி உள்ளிட்ட 110 பயிற்சிகளை, திறன் மேம்பாட்டுக் கழகத்தி லிருந்து தன்னிச்சையாக நீக்கி விட்டார். இது தொடர்பாகப் பயிற்சி தந்த நிறுவனங்களும் ஓரம் கட்டப்பட்டுவிட்டன. உயர்மட்ட அதிகாரிகளின் ஆதரவு தனக்கு இருப்பதால் விருப்பம்போல் திவ்யா செயல்படுகிறார்னும், உள்நாட்டு சிறு நிறுவனங்களுக்கு பதில், தனக்கு வேண்டப்பட்ட பெரு நிறுவனங்களை உள்ளே கொண்டு வரப்பார்க்கிறார்னும் சர்ச்சைகள் கிளம்புது. மக்க ளிடம் நற்பெயர் எடுத்தவரான இன்னசன்ட் திவ்யா இதில் கவனமா இருக்கணும்னு எதிர்பார்க்குறாங்க.''”
"காங்கிரஸ் சீனியரான ப.சிதம்பரத்தின் வீடுகளும் அலுவலகங்களும் சி.பி.ஐ. ரெய்டுக்கு ஆளானது ஒரு பக்கம்னா, காங்கிரஸை பலப் படுத்துவதற்காக சிந்தனையாளர் கள் மாநாட்டை சோனியாவும் ராகுலும் நடத்தியிருக்காங்களே.. தேர்தலில் பலன் தருமா?''”
"ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் காங்கிரசின் மூன்று நாள் சிந்தனையாளர்கள் மாநாடு நடந்தது. இதில் கலந்துக்கிட்ட சோனியா காந்தி, காங்கிரஸின் கட்டமைப்பில் பல மாற்றங்கள் உடனடியாகத் தேவைப்படுவதாகவும், அதன் அரசியல் போக்கையும் தன்மை யையும் மாற்றியாக வேண்டும் என்றும் கூறியதோடு, தனிப் பட்ட விருப்பு வெறுப்புகளை விட, கட்சியின் ஆரோக்கியமே முக்கியம்னு எல்லோரும் நினைக்க ணும்னு அழுத்தமாகக் குறிப்பிட்டிருக்கிறார். மாநாட்டில் பல்வேறு முக்கிய விசயங்கள் அலசப் பட்டிருக்கு. குறிப்பாக, குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே பதவிங்கிற திட்டம் பற்றியும் சோனியா தன் கருத்தை அங்கே முன்மொழிஞ்சிருக்கார்.''”
"சோனியாவின், ஒருவருக்கு ஒரு பதவிங்கிற அந்தத் திட்டத்தை, ராகுல் காந்தியே, அங்கே தூக்கிப்போட்டு உடைச்சிட்டாரே?''”
"ஆமாங்க தலைவரே, எதிர்காலத்தில் ஆட்சி அமைக்கும் போது, ஒருவருக்கு ஒரு பதவிதான் என்பதை வலியுறுத்தும் வகையில் சோனியாவின் பேச்சு இருந்தது. ஆனால் ராகுலோ, ஒருவருக்கு ஒரு பதவிங்கிற கான்செப்ட் ஆரோக்கியமானது தான். அதேசமயம், ஒரே குடும்பத்தில் 5 வருடங் களுக்கும் அதிகமாக மற்றொருவரும் தொடர்ச்சி யாக கட்சிப் பணி ஆற்றினால், அவர்களுக்குப் பதவி தருவது பற்றிப் பரிசீலனை செய்வதில் தவறில்லைன்னு சொன்னார் . இதுதான் அங்கே விவாதத்தை ஏற்படுத்துச்சு. ராகுல் சொன்னமாதிரி செய்தால், ஒருவருக்கு ஒரு பதவிங்கிற நோக் கமே அடிபட்டுப் போகுன்னு பல ரும் சொன் னாங்க. அதே நேரத்தில், காங்கிரசுக்கு புதியவர்கள் வரணும்னா இன்னும் நிறைய மாற்றங்களைச் செய்யணும், இளைஞர்களுக்குப் பொறுப்புகளைத் தரணும். மாநிலத் தலைமைகளை பலப்படுத்தணும். ஒவ்வொரு மாநிலத்திற்கும் தகுந்தமாதிரி அரசியல் வியூகங்களை வகுக்கணும்னு ஏகப்பட்ட அம்சங்கள் டிஸ்கஸ் செய்யப்பட்டிருக்கு.''”
"அன்புமணியை பா.ம.க.வின் தலைவராக ஆக்க தைலாபுரம் காய் நகர்த்துதுன்னு அந்தக் கட்சியினரே சொல்றாங்களே?''”
"பா.ம.க.வின் தலைவராக ஜி.கே.மணி பொறுப்பேற்று 25 ஆண்டுகள் ஆகுது. இதற்காக மணிக்கு வருகிற 24-ஆம் தேதி சென்னையில் டாக்டர் ராமதாஸ் தலைமையில் பாராட்டு விழாவை அக்கட்சி நடத்துது. ஜி.கே.மணி, தமிழக சட்டமன்ற பா.ம.க. கட்சித் தலைவராகவும் இருக்கிறார். இந்த நிலையில் ராமதாஸ் தன் காலத்திலேயெ அன்புமணியை கட்சித் தலைவ ராக அமரவைத்துப் பார்க்க நினைக்கிறாராம். இதைத் தொடர்ந்து இப்போதே, அன்புமணிக்கு ஆதரவான நிர்வாகிகளின் நியமனம் நடந்துக்கிட்டு இருக்குது. இதைத் தொடர்ந்து விரைவில் கட்சித் தலைவர் பதவியில் அன்புமணி அமரவைக்கப் படுவார் என்கிறார்கள். கால் நூற்றாண்டாக பா.ம.க.வின் தலைவராக இருக்கும் ஜி.கே.மணி, தாமாக முன்வந்து அன்புமணிக்காகத் தனது பொறுப்பிலிருந்து விலகுகிற வகையில், மிக நேர்த்தியாக காய் நகர்த்தல்கள் நடக்குதாம்.''”
"நெருக்கடியில் இருக்கும் இலங்கைக்கு இப்போது தமிழகத்தில் இருந்து கள்ளத்தோணிகள் அதிகம் போவதா செய்திகள் வருதே?''”
"அரசியல் நெருக்கடியிலும் பொருளாதார நெருக்கடியிலும் சிக்கி இருக்கும் இலங்கையில், கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வு ஏற்பட்டிருக் கிறது. இந்த நெருக்கடியிலிருந்து அங்குள்ள தமிழர் களை மட்டுமின்றி, இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும் உதவுகிற வகையில் உணவுப் பொருட் களையும் மருந்துகளையும் சென்னை துறைமுகத்தி லிருந்து கப்பலில் அனுப்பி வைக்கும் நிகழ்வு முதல்வர் தலைமையில் நடந்தது. தமிழ்நாட்டு மக்களிடமிருந்து அன் புடன்.. என்ற வார்த்தை களுடன் பார்சல்கள் அனுப்பப்பட்டன. அதே நேரத்தில், இலங்கையின் பொருளாதார நிலையைத் தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள நினைக்கும் கடத்தல் பேர்வழிகள், சென்னை தொடங்கி ராமநாதபுரம் வரையி லான கடலோரப் பகுதி கள் வழியாக, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களில் தொடங்கி, பெட்ரோல், டீசல், மளிகைப் பொருட்கள், ரேசன் அரிசி மூட்டைகள் என சகலத்தையும் கடத் திச் சென்று, அங்கே கொள்ளை லாபம் பார்ப் பதாக செய்திகள் வருது. இதன்மூலம் கடலோர மாவட்டங்களின் காவல் துறையினரும், கட லோரப் பாதுகாப்புப் படையினரும் மாமூலில் கொழிக்கிறார்களாம்.''”
"இலங்கைக்கு கடல் வழியே கடத்தல் என்பது புதுசல்ல. அதை சில நேரம் தடுப்பதும், சில நேரம் கண்டுகொள்ளாமல் விடுவதும் வழக்கமாக இருக்கு. அப்புறம், தமிழ்நாடு எப்போதெல்லாம் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு ஆதரவாக இருக்குதோ அப்போதெல்லாம் கடல் வழியே கடத்தல், தீவிரவாதிகள் வருகைன்னு செய்திகளைக் கிளப்பி விடுவதும் ரொம்ப காலமா நடப்பதுதான்.''”
"ஈழக்கவிஞர் காசி.ஆனந்தனும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறாரே?''
"சென்னையில் கடந்த வாரம் தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த முள்ளிவாக்கால் நினைவேந்தல் நிகழ்ச்சியில், பா.ஜ.க. அண்ணாமலையுடன் கலந்துகொண்டு, அவரைப் புகழ்ந்த ஈழக்கவிஞர் காசி. ஆனந்தன் கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகிவருகிறார். ஈழத்தமிழ் மக்களுக்கு மோடி தேவை என்றும் அவர் குறிப்பிட்டது பலரையும் முகம் சுழிக்க வச்சிருக்கு. இலங்கை இனக்கலவரத்தின் போது தமிழ்நாட்டுக்கு வந்த கவிஞர், இப்போது அரசு கொடுத்த வீட்டில் இருக்கிறார். அவரது பிள்ளை கள் நல்ல முறையில் படிக்கிறாங்க. அவரும் வசதியா இருக்காரு. பொதுவாகவே ஒன்றிய அரசில் செல்வாக்கானவர்களோடு, இனப்பிரச்சினை பற்றி பேசுவதற்காகக் கவிஞருக்குத் தொடர்பு இருக்கும். அந்த அடிப்படையில் இப்போது பா.ஜ.க.. ஆர்.எஸ்.எஸ். கூட்டங்களிலும் கலந்துக்குறாரு. பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையோடு பழ.நெடு மாறனும் காசிஆனந்தனும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் சுடர் ஏற்றிய பிறகு, இந்த செய்திகள் ரொம்பவும் சுடர் விடுகின்றன..”
"நானும் ஒரு சுவாரஸ்யமான தகவலைச் சொல்றேன். திண்டுக்கல்லைச் சேர்ந்த சி.பி.எம். கட்சியின் சீனியரான, முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதிக்கு, இந்த முறை எம்.எல்.ஏ. சீட்டு கொடுக்கப்படவில்லை. எனினும் இப்போது அவர் அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராக செயல்பட்டு வருகிறார். எளி மையானவர், நேர்மையானவர் சளைக்காத போராளி என்று பெயரெடுத்தவர் பாலபாரதி. அண்மையில் திண்டுக்கல் சென்ற முதல்வர் ஸ்டாலின், அங்கிருந்து பாலபாரதியைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்ததோடு, மக்கள் நலத் திட்டங்கள் குறித்த அவரது ஆலோசனைகளையும் கேட்டாராம்.''