Advertisment

மும்பை மாபியாவால் உயிருக்கு ஆபத்து! -கதறும் கிறித்துவ மக்கள்நல சங்கத் தலைவர்…

mumbai

"மும்பை மாபியா கும்பலால் என் உயிருக்கு ஆபத்து. திருச்சபையின் 1,000 கோடி சொத்தை மோசடி செய்து விற்றதை பல்வேறு போராட்டங்கள் வழக்கு போட்டு மீட்டதாலும், அதே நபர்கள் தென்னிந்திய திருச்சபையின் 200 கோடி சொத்தை அதே பாணியில் விற்றதை எதிர்த்து கிறித்துவ மக்கள் நல சங்கத்தைக் கூட்டி கூட்டம் போட்டதாலும் என்னை தீர்த்துக்கட்ட திருச்சபை சம்பந்தப்பட்ட நபர்களால் தொடர்ந்து அச்சுறுத்தல் வருகிறது'” என்கிறார் கிறித்துவ மக்கள்நல சங்கத் தலைவர் தேவசகாயம். 

Advertisment

"என் உயிருக்கு ஆபத்து உள்ளதால் காவல்துறை பாதுகாப்பு வழங்கவேண்டி மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு போட்டு முறையிட்டிருந்தேன். எனக்கு மாநில அரசு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கும்படி கடந்த ஜூன் மாதம் ஆணையிட்டிருந்தனர். ஆனால்    மாநில அரசோ, பாதுகாப்பு வேண்டுமென்றால் அதற்கான செலவுகளை நான் ஏற்கவேண்டும் என்று கூறியது. கிறித்துவ மக்கள் நலசங்கத்தினர் அனை வரும் வசூல்செய்து கொடுப்பதாகச் சொல்லி யும் இதுவரை பாது காப்பு வழங்கவில்லை. உயிருக்கு ஆபத்திருப்ப தால் மறைந்தே வாழ்கிறேன். 

Advertisment

mumbai1

நக்கீ

"மும்பை மாபியா கும்பலால் என் உயிருக்கு ஆபத்து. திருச்சபையின் 1,000 கோடி சொத்தை மோசடி செய்து விற்றதை பல்வேறு போராட்டங்கள் வழக்கு போட்டு மீட்டதாலும், அதே நபர்கள் தென்னிந்திய திருச்சபையின் 200 கோடி சொத்தை அதே பாணியில் விற்றதை எதிர்த்து கிறித்துவ மக்கள் நல சங்கத்தைக் கூட்டி கூட்டம் போட்டதாலும் என்னை தீர்த்துக்கட்ட திருச்சபை சம்பந்தப்பட்ட நபர்களால் தொடர்ந்து அச்சுறுத்தல் வருகிறது'” என்கிறார் கிறித்துவ மக்கள்நல சங்கத் தலைவர் தேவசகாயம். 

Advertisment

"என் உயிருக்கு ஆபத்து உள்ளதால் காவல்துறை பாதுகாப்பு வழங்கவேண்டி மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு போட்டு முறையிட்டிருந்தேன். எனக்கு மாநில அரசு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கும்படி கடந்த ஜூன் மாதம் ஆணையிட்டிருந்தனர். ஆனால்    மாநில அரசோ, பாதுகாப்பு வேண்டுமென்றால் அதற்கான செலவுகளை நான் ஏற்கவேண்டும் என்று கூறியது. கிறித்துவ மக்கள் நலசங்கத்தினர் அனை வரும் வசூல்செய்து கொடுப்பதாகச் சொல்லி யும் இதுவரை பாது காப்பு வழங்கவில்லை. உயிருக்கு ஆபத்திருப்ப தால் மறைந்தே வாழ்கிறேன். 

Advertisment

mumbai1

நக்கீரன் இதழ்தான் முதன் முதலில் இந்த மோசடி குறித்து செய்தி வெளியிட்டது. நான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் தேன். அதனைத் தொடர்ந்து, அரசு சொத்தை விற்பனை செய்தது தவறு என்ன நோக்கத்திற்காக அந்த இடம் கொடுக்கப்பட்டதோ அதைச் செய்யவில்லை என்பதால் மறு படியும் அரசிடம்தான் ஒப்படைத் திருக்கவேண்டும். அதைவிடுத்து தனியாருக்கு அந்த 31 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்தது ரத்து செய்யப்படுகிறது என்ற தீர்ப்பு வந்தது. அதுமுதல் என்மீது அவர்களின் கோபம் திரும்பியது. தற்போது மீண்டும்  2007-ல் கொடைக்கானலில் 200 கோடி மதிப்புள்ள அரசு இடத்தை திருச்சபையைச் சேர்ந்தவர்கள் விற்பனை செய்ததை வெளிப் படுத்தியதால் என்னை கொலை செய்யத் திட்டமிட்டுள்ளனர்''” என்றார் தேவசகாயம். 

 நக்கீரன் 2022 செப்டம்பர்  இதழில் "வசமாய் மாட்டிக்கொண்ட மதுரை திருச்சபை!'’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதில், 1912-ல் ஆங்கிலேயே அரசு அமெரிக்கன் போர்ட் மிஷனரிக்கு அனாதைக் குழந்தைகளுக்கான கல்விக்கூடமும் தங்கும் விடுதியும், அதை நடத்த அவர்களின் பராமரிப்புச் செலவுக்காக 31 ஏக்கரில் விவசாயம் செய்வதற்காக நிலமும் வழங்கப்பட்டது. இவையனைத்தும் மாவட்ட கலெக்டர் கண்காணிப்பில் இருக்கவேண்டும். மேலும் பள்ளியையும், விடுதியையும் நடத்தமுடியவில்லை என்றால்      அதை மீண்டும் அரசு எடுத்துக்கொள் ளும் என்ற நிபந்தனைகளுடன் ஒப்படைத்துள்ளது. 

2005-ல் முன்னாள் பேராயர் கிறிஸ்டோபர் ஆசீர் காலத்தில் மதுரை சி.எஸ்.ஐ. லீகல் அட்வைஸராக இருந்த பெர்னாண்டஸ் ரத்னராஜா, சொத்து அதிகாரி  ஜான்சன் இஸ்ரேல் ஆகியோர் அந்த இடத்தின் ஒரு பகுதியை கொல்கத்தாவைச் சேர்ந்த அபிசேக், ராஜுபாய் என்பவர்களுக்கு  மோசடியாக விற்றுவிட்டனர். விற்ற இடத்தில் அவர்கள் ”லோட்டஸ் அபார்ட்மெண்ட்” என்று மதுரையிலேயே மிகப்பெரிய 14 மாடி அபார்ட்மெண்ட் கட்டியுள்ளனர். மீதமுள்ள இடத்தில் 200 கடைகளைக் கட்டியுள்ளார்கள்.. அதை மீட்டு மீண்டும் அதே இடத்தில் ஏழை விதவைப் பெண்களுக்கு விடுதியும் தொழிற் கல்வியும் அரசு நடத்தவேண்டும் என்று ஆவணங்களோடு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் தேவசகாயம். அதன்படி 13-12-2022ல் உயர் நீதிமன்றம் அந்த விற்பனையை ரத்துசெய்து அந்த நிலத்தை அரசுக்கு திரும்ப ஒப்படைக்க ஆணை பிறப்பித்தது. இதனை, "1000 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு! நக்கீரனுக்கு நன்றி!' என்ற தலைப்பில் 2024-ல் மறுபடியும் செய்தி வெளியிட்டிருந்தோம். தீர்ப்பை எதிர்த்து திருச்சபையினர் மேல்முறையீடுசெய்த நிலையில் கடந்த 2025 ஆகஸ்ட் மாதம் அடுக்குமாடிக் குடியிருப்புகளை, கடைகளை அரசு மாவட்ட நிர்வாகம் எடுத்துகொள்ளலாம் என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தது நீதிமன்றம்.

mumbai2

இந்நிலையில்தான் தென்னிந்திய திருச் சபையின் மதுரை திருச்சபையின் பேராயராக இருந்த கிறிஸ்டோபர், ஆசிர் திருச்சபையின் லீகல் அட்வைஸர் பெர்ணான்டஸ் இரத்தினராஜா, பொருளாளர் ஜான்சன் ஆகியோர் மதுரை திருச்சபைக்குச் சொந்தமான கொடைக்கானலில் இருக்கும் நாலரை ஏக்கருடன் கூடிய பங்களா மற்றும் 9 ஏக்கர் நிலத்தை  1990-ல் தென்னிந்திய திருச்சபையின் அப்போதைய செயலாளர் பால் சத்தியமூர்த்தி என்பவருக்கு லண்டன் மிஷனரி சொசைட்டி யிலிருந்து அதன் செயலாளர் டேவிட் என்பவர் எழுதிக் கொடுத்ததாக போலியாக பத்திரம் பதிந்து, அதை வைத்து அப்போது 2007-ல் ஆட்சியராக இருந்த இளங்கோவன் என்பவருக்கு விற்பனை செய்துள்ளனர். அந்த லண்டன் மிஷனரி சொஸைட்டி 1966-லேயே கலைக்கப்பட்டுவிட்டது. எனவே இதை மீட்டு அரசு கையகப்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். நிலங்களுக்கு போலி ஆவணங்கள் தயார்செய்து மோசடியாக விற்பனை செய்த தென்னிந்திய திருச்சபையின் நிர்வாகிகள் பெர்னாண்டஸ் ரத்தினராஜா, கிறிஸ்டோபர் ஆசீர், அப்போது நிர்வாகத்திலிருந்த திருச்சபையினர் அனைவர் மீதும் பராபட்சமில்லாமல் மாநில அரசும் மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை கிறித்துவ மக்கள் நல சங்கத்தினர் சார்பில் நடத்தவுள்ளோம்''’என்றார். 

தற்போது தென்னிந்திய திருச்சபையின் பொதுச் செயலாளராக இருக்கும் பெர்னான்டஸ் இரத்தினராஜாவிடம் பேசினோம். “

"எல்லாமே பொய்யான குற்றச்சாட்டு. 2007-ல் விற்றது யார் என்று, அப்போதிருந்த மதுரை பேராயர் ஏன் விற்றார்கள் என்பதை நீங்கள் விசாரித்து எழுதுங்கள். என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்? எனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. நான் எந்த பத்திரத்திலும் கையெழுத்துப் போடவில்லை. வழக்கை நீதிமன்றத்தில் சந்தித்துக்கொள்கிறோம்''’ என்று முடித்துக் கொண்டார்.

nkn111025
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe