டலூர் மாவட்டம் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தினால் கடலூர் மாவட்ட மக்கள் பலவிதங்களிலும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். என்.எல்.சி. சுரங்கம் தோண்ட நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு இன்னும் உரிய இழப்பீடு கிடைக்காதது, இதற்கான போராட்டங்கள் ஒரு பக்கம், மூன்றாவது சுரங்கப் பணிக்காக நிலம் கையகப்படுத்த விவசாயிகளுடன் மோதல், சுரங்கம் தோண்டுவதால் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிதண்ணீருக்கு அல்லாடும் நிலை ஒரு பக்கம்.

sand

ஏற்கனவே இரண்டாவது சுரங்கம் தோண் டப்பட்ட மண், மேற்குத்தொடர்ச்சி மலைபோல சுமார் 50 கிலோமீட்டர் சுற்றளவுக்கு நீண்டு கிடக்கிறது. இந்த மண் மலை சரிந்து சுமார் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களிலுள்ள விவசாய நிலங்களில் சுரங்க மண் மூடியதால் விவசாயம் செய்யமுடி யாமல் 20 ஆண்டுகளாக பரிதவிக்கிறார்கள். இதுகுறித்து நமது அலுவலகத்திற்கு பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனுப்பிய புகாரின் பேரில் நாம் நேரடியாகச் சென்று பாதிக்கப்பட்ட விவசாயி களைச் சந்தித்தோம்.

இரண்டாவது நிலக்கரிச் சுரங்கம் தோண்டப் பட்ட மண் மலைமுகடென வானளாவ உயர்ந்து நிற்கிறது. இது நெய்வேலி அருகிலுள்ள ஊமங்கலம், ஊத்தங்கால், அகரம், கொம்பாடிகுப்பம், ஊ.கொளப்பாக்கம், கீரனூர், கோபாலபுரம், கம்மாபுரம், வளையமாதேவி வரை கிழக்கிலிருந்து மேற்கு, தெற்கு, கிழக்கு என நீண்டு வளைந்து செல்கிறது. இரண்டாவது சுரங்கம் தோண்டப் பட்ட மண் மலை விவசாயிகளை மிக மிக மோசமான அளவுக்கு பாதித்துள்ளது என்பதை நாம் நேரில் பார்த்தோம். கொம்பாடிகுப்பம் விவசாயி சதாசிவம் நம்மிடம், "நான் நெய்வேலி என்.எல்.சி.யில் வேலைசெய்து ஓய்வுபெற்றவன். அதில் கிடைத்த பணத்தில் எனக்குச் சொந்தமான 10 ஏக்கர் நிலத்தைத் திருத்தி பல லட்சம் செலவு செய்து 400 அடி ஆழம் வரை ஆழ்குழாய்க் கிணறு அமைத்து, அதற்கு மின்வாரியத்தில் அனுமதி பெற்று புதிய ட்ரான்ஸ்பார்மர் கொண்டுவந்து, எனக்கும் அப்பகுதியிலுள்ள விவசாயிகளுக்கும் பயன்படும் வகையில் மின்மோட்டார் இணைப்பு பெற்று விவசாயம் செய்துவந்தோம். 2011-ஆம் ஆண்டுமுதல் எங்கள் விவசாய நிலங்களை, நிலக்கரிச் சுரங்கம் தோண்டப்பட்ட மண் சரிந்து... சரிந்து மூடிவிட்டது. நிலத்திற்கு செல்லும் பாதையெல்லாம் காணாமல் போய்விட்டது. மின்சார ட்ரான்ஸ்பார்மர், விவசாய மோட்டார் பம்பு செட், அதன் கொட்டகை எல்லாம் பாழடைந்துவிட்டன. இதுகுறித்து நான் உட்பட எங்கள் பகுதி விவசாயிகள் ஒன்றுதிரண்டு ஆயிரக்கணக்கான புகார்களை அவ்வப்போது மாவட்ட ஆட்சியர், என்.எல்.சி. நிர்வாகம், முதலமைச்சர் என்று தொடர்ந்து அனுப்பிவரு கிறோம். நிலங்களை மீட்பதற்காக போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் எவ்வளவோ நடத்தியும் எங்கள் நிலத்தை மீட்கமுடியவில்லை.

Advertisment

sand

10 ஏக்கர் பட்டா நிலம் என் பெயரில் இருக்கு. ‘வரும் ஆனா வராது''’ என வடிவேலு காமெடி ஒன்றில் சொல்வதுபோல, இருக்கு ஆனா இல்லை என்ற நிலையில்தான் எங்கள் நிலங்கள் உள்ளன. எங்களது தொடர்போராட்டம், புகார் என்று வாழ்க்கை போய்க்கொண்டிருந்த நிலையில், 2019-ஆம் ஆண்டு விருத்தாசலம் கோட்டாட்சிய ரான பிரசாந்த் ஐ.ஏ.எஸ். நேரடியாக எங்கள் பகுதிக்கு வந்து பார்வையிட்டார். எங்கள் நிலையை அறிந்து மிகவும் வருத்தப்பட்டதோடு அதிகாரிகள் கொண்ட ஒரு குழுவை நியமித்து யார் யார் நிலம் எவ்வளவு பாதிக் கப்பட்டுள்ளது என்பது குறித்து ஆய்வுசெய்து கணக்கெடுக்க உத்தரவிட்டார். அதன்மூலம் சுமார் 150-க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்டவர்கள் பட்டியல் தயார்செய்து அவர்களுக்கு உரிய இழப்பீடு தரவும், மண் சரிந்து மூடிப்போன நிலங்களை என்.எல்.சி. நிர்வாகம் மண்ணை அகற்றி விவசாயம் செய்யும் அளவிற்கு சரிசெய்து தரவும் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.

அப்போது நடந்த பேச்சுவார்த்தையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள், என்.எல்.சி. நிர்வாகம் இரு தரப்பினரிடமும் எழுத்து மூலம் உறுதிமொழி பெறப்பட்டது. 2019-ஆம் ஆண்டு வரை பாதிக்கப் பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடாக ஒரு தொகை யை என்.எல்.சி. நிர்வாகம் வழங்கியது. அதன்பிறகு ஒப்பந்தப்படி நிலத்தில் மூடிப்போன மண்ணை அகற்றவும் இல்லை. இழப்பீடும் வழங்கவில்லை. விவசாய நிலம் இருந்தும் விவசாயம் செய்யமுடி யாததால் ரேஷன் அரிசி, பட்டினியென எங்கள் வாழ்க்கை ஓடுகிறது. என்.எல்.சி. நிர்வாகம் பாதிக்கப் பட்ட எங்களுக்கு ஒவ்வோராண்டும் எவ்வளவு மகசூல் கிடைக்கும் என்பதைக் கணக்கிட்டு இழப் பீடு வழங்கவேண்டும். என்.எல்.சி. நிர்வாகத்தின் ராட்சச இயந்திரங்கள் கொண்டு எங்கள் நிலத்தைச் சீர்செய்து தரவேண்டும். நிலங்களுக்குச் செல்லும் வழியில் சரிந்துகிடக்கும் மண்ணை அப்புறப்படுத்தி வழி ஏற்படுத்தித் தரவேண்டும். இந்த கோரிக்கை அனைத்தையும் அரசு அதிகாரிகளுக்கு எழுத்து மூலம் தெரிவித்துள்ளோம். இதுவரை என்.எல்.சி. நிர்வாகம் உருப்படியாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே விவசாயிகளை ஒன்றுதிரட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அதன்மூலம் நீதிபெற முயற்சி செய்துவருகிறோம்''’என்கிறார்.

Advertisment

"இந்த பாதிப்பு 20 ஆண்டுகளாக தொடர்ந்து. வருகிறது முப்போகம் விளையும் எங்கள் விவசாய பூமி பாழ்பட்டுப்போனது. என்.எல்.சி. நிர்வாகம் எங்க ளுக்கு உரிய இழப்பீடு கொடுத்துவிட்டு நிலத்தை அவர்களே எடுத்துக் கொள்ளட்டும். பெயரளவிற்கு எங்கள் பெயரில் பட்டாவை வைத்து நாங்கள் நாக்கு வழிப்பதா? என்.எல்.சி. நிர்வாக அதிகாரிகள் கொஞ் சம்கூட மனிதாபிமானம் இல்லாதவர்களாக உள்ளனர். இப்பகுதியில் வெற்றிபெறும் மக்கள் பிரதிநிதிகளை எல் லாம் அவ்வப்போது அழைத்துவந்து காட்டினோம். யாரும் எங்களுக்கு உதவி செய்ய முன்வரவில்லை. என்.எல்.சி. நிர்வாகம் சர்வாதிகாரப் போக்கில் செயல்படுகிறது. ஊருக்கெல்லாம் வெளிச்சம் கொடுக்கும் என்.எல்.சி., எங்கள் வாழ்க்கையை ssஇருளடையச் செய்துவிட் டது. தமிழக அரசு தலையிட்டு எங்கள் நிலத்தை மீட்டுத் தரவேண்டும். பல ஆண்டுகளாக விவசாயம் செய்யமுடியாத நிலையை கணக்கில்கொண்டு என்.எல்.சி. நிர்வாகத்திடமிருந்து கூடுதல் இழப்பீடு பெற்றுத் தரவேண்டும்''’என்கிறார்கள் அரசகுழி அந்தோணி செல்வராஜ், குமாரசாமி ஆகியோர்.

"என்.எல்.சி. சுரங்க மண்மூடிய தங்கள் நிலத்தை மீட்கப் போராடி, பிழைக்க வழியில்லாமல் கொம்பாடிகுப்பம், கண்ணன், அரசகுழி நடராசன் ஆகியோர் இறந்தே போனார்கள். ஆழ்குழாய் போர் அமைக்கும்போது போர் குழி உள்ளே மண் சரியாமல் இருப்பதற்கு குழை மண் தேவை. நிலத் தை இழந்த விவசாயிகளான நாங்கள், அதற்காக சரிந்துகிடக்கும் குழைமண் சேற்றை டிராக்டர் டிப்பர்களில் அள்ளிக்கொடுத்து நபருக்கு 500 ரூபாய் கூலிபெறுகிறோம். உடல்முழுவதும் உருவமே தெரியாத அளவிற்கு சேற்றில் மூழ்கி மண்ணை வாரிக் கொடுத்து அதில் கிடைக்கும் சம்பளத்தில் எங்கள் குடும்பத்தை காப்பாற்றி வருகிறோம்'' என்கிறார்கள் அந்தோணிசாமி சார்லஸ், ராஜா, ராதாகிருஷ்ணன், யேசுமரியான் போன்றவர்கள்.

நெய்வேலி என்.எல்.சி. இரண்டாவது சுரங்கத் தைச் சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களது நிலத்தை மீட்பதற்கு வழிதெரியாமல் திகைத்து நிற்கிறார்கள். கடந்த 15-ஆம் தேதி கம்மா புரம், கோபாலபுரம். முத்துகிருஷ்ணாபுரம், அகரம், அரசகுழி போன்ற கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் இரண்டாவது சுரங்கப் பணிக்காக கடந்த 2000-ஆவது ஆண்டில் விளைநிலங்களைக் கையகப்படுத்திய நிலங்களுக்கு உரிய இழப்பீடு, வீட்டுக்கு ஒருவருக்கு வேலை உள்ளிட்ட வாக்குறுதிகளை என்.எல்.சி. நிர்வாகம் அளித்தது. அதை இன்றுவரை நிறைவேற்றவில்லை. நிர்வாகம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி விவசாயத் தொழிலாளர் கூட்டமைப்பினர் விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி, கோட்டாட்சியர் சையத் மெக்மூத்திடம் கோரிக்கை மனுவை அளித்துவிட்டுச் சென்றனர்.

“பல ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியர் குறைகேட்புக் கூட்டம், என்.எல்.சி. நிர்வாக ஆலோ சனை குறைகேட்புக் கூட்டம், கோட்டாட்சியர் குறைகேட்புக் கூட்டம், வட்டாட்சியர் குறைகேட் புக் கூட்டம் இப்படி அனைத்திலும் மனுக்களைக் கொடுத்துக், கொடுத்து ஓய்ந்துவிட்டோம். குறைகளைத் தீர்க்க எந்த அரசும், அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளும் முன்வரவில்லை. தேர்தல் வந்தால் ஓட்டு கேட்டு வருகிறார்கள். வெற்றிபெற்ற தும் நன்றி சொல்லக்கூட கிராமங்கள் பக்கம் தலைகாட்டுவதில்லை. நாங்களோ நடுத்தெருவில் நின்று போராடிவருகிறோம்''’என்கிறார் சூசை

"என்.எல்.சி. நிர்வாகம் ஆண்டுதோறும் ஏகப்பட்ட கோடி லாபத்தில் இயங்குவதாக அதிகாரிகள் கூறுகிறார்கள். விவசாயிகளை நஷ்டப்படுத்தி லாபம் சம்பாதிக்கும் என்.எல்.சி. நிர்வாகம் அதில் சிறு பகுதியை அவர்களுக்கு இழப்பீடாகவும் மண் மூடிக்கிடக்கும் அவர்கள் நிலங்களைச் சரிசெய்யவும் செலவு செய்யக் கூடாதா? மண்மூடிப் போன நிலங்கள் போக மிச்சம் மீதியுள்ள நிலங்களில் விவசாயம் செய்யலாம் என்றால் அதற்கும் வழியில்லை. ஆம், அந்த நிலங்களுக்குச் செல்லும் பாதைகளில் சுரங்கத்தின் மண் சரிந்து வழித்தடம் இல்லாமல் மூடிகிடக்கிறது. எங்கள் வாழ்க்கையையும், நிலத்தையும், மீட்டெடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும்'' என்கிறார்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகள்.