"ஹலோ தலைவரே... அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் இடைவெளி அதிகரித்து வருவது பற்றி முதலமைச்சரே குறிப்பிட்டிருக்காரே...''”
"ஆமாம்பா, தி.மு.க. ஆட்சியில் அதிகாரிகளின் ராஜ்ஜியம் தான் கோலோச்சுகிறது; இதே நிலை நீடித்தால் அமைச்சர்கள் எவரையும் ஐ.ஏ.எஸ்.கள் மதிக்கமாட்டார்கள்னு முதல்வர் ஸ்டாலினிடம் சீனியர் அமைச்சர் துரைமுருகன் ஆதங்கப்பட்டதை, சில வாரங்களுக்கு முன்பு நாம் பதிவு செய்திருந்தோமே?''”
"உண்மைதாங்க தலைவரே, இந்த விவகாரத்தில் கவனம் செலுத்திய ஸ்டாலின், அமைச்சர்களுக்கும் துறையின் செயலாளர்களுக்கும் உள்ள இடைவெளி குறையவேண்டும் என்றும், இது தொடர்பாக அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தத் திட்டமிட்டிருந்தார். அதன்படி, அந்தக் கூட்டத்தை 13-ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஸ்டாலின் நடத்தியிருக்கார். இந்தக் கூட்டத்திற்கு அமைச்சர்கள் அழைக்கப்படவில்லை. இதன் படி அமைச்சர்கள் கலந்துகொள்ளாத முதல் ஆய்வுன்கூட்டத்தை நடத்தி முடித்திருக்கிறார் ஸ்டாலின். இதில் பேசிய அவர் அமைச்சர்கள், துறைச் செயலாளர்கள், துறைத் தலைவர்கள், மாவட்ட கலெக்டர்கள் என 4 பேருக்கும் இடையே இணக்கமான சூழல் இல்லை என்றால், மக்களுக்குத்தான் நட்டம். அரசுக்குத்தான் நட்டம். ஏன்னா,… அரசு அறிவித்த பல திட்டங்கள் இதனால் செயல்பாட்டுக்கே வரவில்லைன்னு மனம் விட்டுப் பேசியிருக்கார்.''”
"சாஃப்ட் ஸ்டாலின் இந்த விஷயத்தில் கடுமை காட்டினாராமே?''”
"ஆமாங்க தலைவரே, இதுபற்றிய குறைகளை அமைச்சர்கள் எடுத்துச் சொன்னாலும் அதில் அக்கறை காட்ட மறுக்கிறீர்கள். இனி இந்த நிலை இருக்கக்கூடாது. அமைச்சர்கள் சொல்வதைக் கேட்க வேண்டும். எந்தத் திட்டத்துக்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதில் உங்களுக்கு தெளிவு வேண்டும். வெறும் அரசாணை போட்டுவிட்டால் மட்டும் போதாது. அதற்கான நிதி ஒதுக்கப்பட்டி ருக்கிறதா? ஒதுக்கப்பட்டிருந்தால் திட்டத்தின் நிலை என்ன? எப்போது நிறைவேறும்? ஒருவேளை நிதி ஒதுக்கப்படவில்லை எனில், அதற்கான காரணம் என்ன? அதுக்கு மாற்று வழி என்ன? என்பது பற்றி யெல்லாம் நீங்கள் அக்கறை காட்ட வேண்டும். இனி அமைச்சர்களோடு ஒருங்கிணைந்து செயல் படுங்கள். இல்லை என்றால் என் நடவடிக்கை வேறு மாதிரி இருக்கும் என்றும் கறார் குரலில் சொல்லியிருக்கிறார்.'' ”
"ஓபி.எஸ். ஆதரவாளர்கள் பலரும் அவர் கிட்டேயிருந்து ஜகா வாங்கியிருக்காங்களே?''”
"அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ஆம் தேதி கோவையில் பிரமாண்டமான மாநாடு நடத்த ஓ.பி.எஸ். திட்டமிட்டிருந்தார். அதற்கான ஏற்பாடுகளை கவனிக்கும் படி ஓ.பி.எஸ்.ஸுக்கு ஆலோசனையையும் வழங்கியிருந்தார் சசிகலா. கொஞ்சம் நிதி உதவியும் அவர் செய்ததாக சொல்லப் பட்டது. கொங்கு மண்ட லத்தில் எடப்பாடியை அதிர வைப்பதுதான் மாநாட்டின் நோக்கம். ஆனால், அந்த மாநாட்டை ரத்து செய்யும்படி கடந்த வாரம் சொல்லியிருக்கிறார் சசி. அதனையடுத்து, கோவை மாநாட்டை ரத்து செய்துவிட்டார் ஓ.பி.எஸ். அதற்குப் பதிலாக காஞ்சியில் நடத்த திட்டமிடப்பட்டு அதுவும் கேன்சலானது. இதற்கு காரணம் என்ன? எடப்பாடி கூட்டிய பொதுக் குழுவுக்கு எதிராக ஓ.பி.எஸ். தொடர்ந்த வழக்கில், ஜூலை 11-ல் கூட்டப்பட்ட பொதுக்குழு செல்லும் என எடப்பாடிக்கு சாதகமாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் ஓ.பி.எஸ்., சசிகலாவை ஆதரிக்க முன்வந்திருந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்., மா.செ.க்கள் பலரும் ஜகா வாங்கிவிட்டனர்.''
"இதனால்தான் மாநாடு கேன்சலா?''”
’"கொங்கு மண்டலத்தில் மாநாடு என்கிற போது, வெறும் கூட்டத்தைக் கூட்டிக் காட்டுவ தால் மட்டும் பலனில்லை. மாறாக, எடப்பாடியை ஆதரிக்கும் அ.தி.மு.க.வின் 63 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மா.செ.க்களில் கணிசமானவர்களை தங்கள் பக்கம் ஈர்த்து, அவர்களை மேடையில் அமர வைத் தால்தான்… எடப்பாடியை அதிர வைக்க முடியும். அ.தி.மு.க. தொண்டர்களின் நம்பிக்கையையும் பெற முடியும். இதை விட்டுவிட்டு, மாநாட்டில் லட்சக் கணக்கில் மக்களை திரட்டிக் காட்டினால் அதில் எந்த பலனும் இருக்காது. அதை எடப்பாடியும் அவரது ஆதரவு முன்னாள் அமைச்சர்களும் எள்ளி நகையாடவே செய்வார்கள். ஏனெனில், கூட்டம் எப்படி கூட்டப்படும் என்பது அரசியல் தலைவர்களுக்குத் தெரியும். அதனால் கூட்டத்தை கூட்டிக் காட்டுவதால் எந்த ஜெர்க்கையும் கொங்கு மண்டலத்தில் ஏற்படுத்த முடியாதுன்னு சசிகலா சொன்னதால்தான், அந்த மாநாடு தவிர்க்கப்பட்டி ருக்கிறதாம்.''”
"அதே கொங்கு மண்டலத்தில் சசிகலா சுற்றுப்பயணம் பண்ணியிருக்காரே?''”
’"கொங்கு மண்டலமான சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் அரசியல் ரீதியிலான தனது சுற்றுப்பயணத்தை நடத்தியிருக்கிறார் சசிகலா. சேலத்தில் சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு ஈரோடு வந்த சசிகலாவை, அவரது ஆதர வாளர்கள் வரவேற்றனர். திரண்டிருந்த மக்களிடம் பேசிய சசிகலா, கொங்கு மக்களையும் அ.தி.மு.க.வையும் பிரிக்க முடியாது. இந்த பந்தம் இன்று நேற்று உருவான தல்ல. புரட்சித் தலைவர் ஏற்படுத்திய பந்தம். அதனால் கொங்கு மண்டலத் துக்கு அ.தி.மு.க. எப்போதுமே முக்கி யத்துவம் கொடுத்துவருகிறது. ஜெய லலிதா மறைவுக்கு பிறகு, முதலமைச்சர் யார் என்கிற பிரச்சினை வந்தபோது, கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த நிர்வாகியைத்தான் முதலமைச்சராக்கி னேன். அப்படிச் செய்ததில் எனக்கு மனநிறைவு. எந்த பிரதிபலனும் பாராமல் கட்சியின் நலனைப் பாதுகாக்க உண்மையான பங்களிப்பை நான் செய்ததில் எனக்கு மனநிறைவுன்னு கூலா பேசியிருக்கார் சசிகலா.''”
"சுகாதாரத்துறையின் கலந்தாய்வில் குழறுபடி நடந்ததா குற்றச்சாட்டு எழுந்திருக்கே?''”
’"ஆமாங்க தலைவரே, தமிழக அரசின் சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர்களுக்கு கடந்த மே, ஜூன் மாதங்களில் இடமாறுதல் குறித்த கலந்தாய்வு நடந்திருக்கிறது. இதில் பல சர்ச்சைக்குரிய தவறுகள் நடந்திருப்ப தால் டாக்டர்கள் பலரும் பாதிக்கப் பட்டனர். இதனையடுத்து, பாதிக்கப் பட்ட 22 அரசு டாக்டர்களை அழைத்துக்கொண்டு போய், அமைச்சர் மா.சுப்பிரமணியனை சந்தித்திருக்கிறார்கள் அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்ட குழுவினர். அந்த சந்திப்பின்போது, ’ஒரு குறிப்பிட்ட துறையில் அதற்கான சிறப்பு படிப்பு படித்துள்ள டாக்டர்கள் இருப்பதுதான் சரியானது, நியாயமானதும் கூட. அதாவது, குழந்தைகள் நலப் பிரிவில் குழந்தைகளுக்கான டாக்டர் படிப்பைப் படித்த டாக்டர்களை நியமிப்பதுதான் சரியானது. அப்போது தான் மக்களுக்கு முறையான சிகிச்சை கிடைக்கும். ஆனால், கலந்தாய்வில், சிறப்பு மருத்துவர்கள் இருந்தும், அவர்களை நியமிக்காமல் வேறு படிப்பு படித்த டாக்டர்களை இடமாறுதல் என்ற பெயரில் நியமித்திருக்கிறார்கள். இதய டாக்டர் இருக்க வேண்டிய இடத்தில் எலும்பு முறிவு டாக்டரை நியமிப்பது இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிமுறைகளுக்கு எதிரானது.''”
“"ம்...''”
”"இதையெல்லாம் அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் விளக்கமாக எடுத்து சொல்லியிருக்கிறார்கள். அதனை புரிந்து கொண்ட அமைச்சர், உடனடியாக நடவடிக்கை எடுக்கிறேன் என்றவர், உடனே மருத்துவக் கல்வி இயக்குநர் நாரயணபாபுவைத் தொடர்புகொண்டு, கவுன்சிலிங்கில் தவறு நடந்திருக்கிறது. உடனடியாக அது களையப்பட வேண்டும். அரசு டாக்டர்கள் பலர் என்னிடம் முறையிட்டுள்ளனர். அவர்களை உங்களிடம் அனுப்பி வைக்கிறேன் என்று சொல்லி, இயக்குநரை பாருங்கள் என அறிவுறுத்தினார். அதன்படி மருத்துவ கல்வி இயக்குநர் நாராயணபாபுவை 22 டாக்டர்களும் சந்தித்து, கவுன்சிலிங்கில் நடந்த முறைகேடுகளை சுட்டிக்காட்ட, அதற்கு நாரயணபாபு, "சீனியாரிட்டிப்படி சில மாறுதல்கள் செய்ய வேண்டியதிருக் கிறது' என்று விளக்கியிருக்கிறார். ஆனால் டாக்டர்களோ, "அதெப்படிங்க,… சிறப்பு மருத்துவப் படிப்பை படித்த டாக்டர்கள் இருக்கும்போது அந்த இடத்துக்கு வேறு படிப்பு படித்த டாக் டரை நியமிக்க முடியும்?'’என்றெல்லாம் கேட்டு நெளிய வைத்தி ருக்கிறார்கள். இதன்பிறகும் குறைகள் சரிசெய்யப்படாததால், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டத்தை நடத்த தயாராகி வருகிறார்கள் அரசு மருத்துவர்கள்.''”
”"நானும் ஒரு முக்கியமான செய்தி ஒன்றைப் பகிர்ந்துக்கறேன். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், வன்னியர் சங்கத்தில் சில மாறுதல் களைக் கொண்டுவரத் திட்ட மிட்டுள்ளார். பா.ஜ.க.வுக்கு பின்புலமாக ஆர்.எஸ்.எஸ். இயக்கம் எப்படி இருக்கிறதோ அதேபோல, பா.ம.க.வுக்கு பின்புலமாக வன்னியர் சங்கத்தை இயங்க வைக்கத் திட்டமிடுகிறாராம் ராமதாஸ். இதனால், இதுவரை வெளிப் படையாக இயங்கி வந்த வன்னி யர் சங்கம், இனி ஆர்.எஸ். எஸ். மாதிரி திரை மறை வில் இயங்கவிருக்கிறதாம்.''”