வாங்க காலேஜுக்குப் போகலாம்..! பள்ளிக்கல்வித் துறை அசத்தல் !

ss

லகளவில் உயர்கல்வியில் தமிழகம் முன்னணியில் இருந்தாலும், இடைநிற்றலை முற்றிலு மாகத் தடுத்து அனைவரையும் கல்லூரிக்குள் காலடி எடுத்து வைக்க ஒரு உன்னதமான திட்டத்தை இந்தியாவிலேயே முதன்முறையாக துவங்கியுள் ளது தமிழக பள்ளிக்கல்வித் துறை.

'வறுமையும் பசியும் படிப்பிற்கு தடையாக அமையக்கூடாது' என்ற நோக்கத்திலேயே நாட்டிலேயே முதன்முறையாக காமராஜர் காலத்தில் தமிழகத்தில் மதிய உணவுத் திட்டம் துவக்கப்பட்டது. அதற்குரிய பலன் கிடைக்கவே தமிழகத்தின் படிப்பறிவு சதவீத மும் படிப்படியாக உயர்ந்தது. அதன்பின்னர், உயர்நிலைக் கல்வி வரை மாணவ- மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் இலவச பஸ் பாஸ், இலவச சைக்கிள், இலவச லேப்டாப் என ஆட்சியாளர்கள் பலரும் எடுத்த நடவடிக்கைகளால், தமிழகத்தின் உயர்கல்வி சதவீதமானது 52 ஐ தொட்டது. இதுதான் தேசிய அளவில் அதிகம் என்பதோடு பல முன்னேறிய நாடுகளின் சதவிகிதத

லகளவில் உயர்கல்வியில் தமிழகம் முன்னணியில் இருந்தாலும், இடைநிற்றலை முற்றிலு மாகத் தடுத்து அனைவரையும் கல்லூரிக்குள் காலடி எடுத்து வைக்க ஒரு உன்னதமான திட்டத்தை இந்தியாவிலேயே முதன்முறையாக துவங்கியுள் ளது தமிழக பள்ளிக்கல்வித் துறை.

'வறுமையும் பசியும் படிப்பிற்கு தடையாக அமையக்கூடாது' என்ற நோக்கத்திலேயே நாட்டிலேயே முதன்முறையாக காமராஜர் காலத்தில் தமிழகத்தில் மதிய உணவுத் திட்டம் துவக்கப்பட்டது. அதற்குரிய பலன் கிடைக்கவே தமிழகத்தின் படிப்பறிவு சதவீத மும் படிப்படியாக உயர்ந்தது. அதன்பின்னர், உயர்நிலைக் கல்வி வரை மாணவ- மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் இலவச பஸ் பாஸ், இலவச சைக்கிள், இலவச லேப்டாப் என ஆட்சியாளர்கள் பலரும் எடுத்த நடவடிக்கைகளால், தமிழகத்தின் உயர்கல்வி சதவீதமானது 52 ஐ தொட்டது. இதுதான் தேசிய அளவில் அதிகம் என்பதோடு பல முன்னேறிய நாடுகளின் சதவிகிதத்தைவிடவும் இது அதிகம்.

dd

அதேநேரத்தில், தி.மு.க. ஆட்சிக்கு வந்ததிலிருந்தே மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு பள்ளிக்கல்வித் துறைக்கென்று சிறப்புக் கவனிப்பே நடந்துவருகிறது. பள்ளிக்கல்வித்துறை வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.

அதேபோல் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக "இல்லம் தேடி கல்வி', "நான்' "முதல்வன்', "காலை உணவுத் திட்டம்', மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு அதிரடியான திட்டங்களையும் அறிவித்து வருகிறது தமிழக அரசு.

தமிழக பள்ளி மாணவர்கள், கல்வியில் மட்டுமின்றி மற்ற துறைகளில் சிறந்து விளங்கவேண்டும் என்ற எண்ணத்தில், சமீபத்தில் அதிரடித் திட்டம் ஒன்றையும் அறிவித்தது. அதன்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் கலை, பண்பாட்டுச் செயல்பாடுகளில் கட்டாயம் பங்கேற்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பள்ளிக் கால அட்டவணையில் கலை மற்றும் பண்பாட்டுச் செயல்பாடுகள் முதல்முறையாக இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த பள்ளிகளில் வாரத்தில் இரு பாடவேளை கலை, பண்பாட்டுச் செயல்பாடுகளுக்கு ஒதுக்கப் பட்டுள்ளன. அதில் இசை, நடனம், காட்சிக்கலை, நாடகம், நாட்டுப்புற கலை ஆகிய 5 கலைச் செயல்பாடுகளில் மாணவர்கள் ஒன்றைத் தேர்வுசெய்யலாம்.

இதுதவிர்த்து, முக்கியமானதொரு அறிவிப்பை பள்ளிக்கல்வித் துறை மூலம் வெளியிட வைத்துள்ளார் தமிழக முதல்வர். பள்ளிக்கல்வித் துறை வெளியிட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த அறிவிப்பின்படி, '2021 - 22ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் இவ்வாண்டு தங்கள் உயர்கல்வியைத் தொடர்ந்துள்ளனரா?' என்பதை அறிய ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில், மேல்நிலைக் கல்விமுடித்த 79 ஆயிரத்தி 762 மாணவர்களில் 8 ஆயிரத்தி 588 மாணவர்கள் எவ்வித உயர்கல்விக்கும் விண்ணப்பிக்கவில்லை என்பது கண்டறியப்பட்டது. எனவே, அந்த மாணவர்கள் அனைவரையும் தனித்தனியாகத் தொடர்புகொண்டு உரிய உயர்கல்வி வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகளை மாநில திட்ட இயக்ககத்தின் மூலமாக வழங்க திட்ட மிடப்பட்டுள்ளது.

இதற்காக மாணவர்களின் தொலைபேசி, தொடர்பு விவரங்களை அவர்கள் படித்த பள்ளிகள் மூலம் பெற்று உரிய படிவங்கள் மூலமாக மாநில திட்ட இயக்ககத்திற்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அனுப்பி வைக்கவேண்டும் எனவும், இதை அவர்கள் முன்னுரிமை அடிப்படையில் விரைந்து செயல்படுத்தவேண்டும் எனவும் அவர் களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் அந்த மாணவர்களுக்கு உரிய வழிகாட்டுதல்கள் மற்றும் உதவிகள் வழங்கி, அவர்கள் டிகிரி, டிப்ளமோ வகுப்புகளைப் பயின்று தங்கள் எதிர்காலத்தை சிறப்பாக நடத்த வழிகாணமுடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித்துறையின் இந்த அதிரடி அறிவிப்பானது, பெற்றோர்கள், பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்கள் அனைவரையும் பெருமகிழ்ச்சிக் குள்ளாக்கி இருக்கிறது. வறுமை மற்றும் பணப் பற்றாக் குறை காரணமாக கல்லூரிக் கல்வியை தொடர முடியாத மாணவர்களுக்கு வங்கிகள் மூலமாக கல்விக் கடனையும் பெற்றுத் தருமா அரசு? என்ற கேள்வியும் தொக்கி நிற்க, இது குறித்து விவரம் அறிவதற்காக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை தொடர்புகொண்டு பேசினோம்.

"முதலில், என்னென்ன காரணங்களுக்காக அந்த மாணவர்கள் கல்லூரிப் படிப்பை நாடவில்லை என்பதை ஆய்வு செய்து, தமிழக முதல்வரின் ஆலோசனையைப் பெற்று அதன் பின்னர் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்'' என உறுதியளித்தார் அமைச்சர்.

நல்ல சேதிதான்!

nkn011022
இதையும் படியுங்கள்
Subscribe