தற்கு முன் இரண்டு முறை எம்.பி.யாக இருந்தபோது அமைச்சராகவும் ஆளுங் கூட்டணி எம்.பி.யாகவும் இருந்தவர் தயாநிதி மாறன். இப்போது மூன்றாவது பெரிய கட்சியின் உறுப்பினர்.

நிதியமைச்சரையும், மோடி தலைமையிலான மத்திய அரசையும் போட்டுத் தாக்கிய அவருடைய நாடாளுமன்ற உரை சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது.

""எங்கள் தலைவர் கலை ஞர் அவர்களின் வார்த்தை களில் இந்த பட்ஜெட்டை விவரிக்க வேண்டும் என்றால், “"ஒய்யாரக் கொண்டையாம், தாழம்பூவாம். உள்ளே இருக்குமாம் ஈரும், பேனும்'. அதாவது, அழகான பெண் ஒருவர் நீளமான கூந்தலில் பூச்சூடி வருவார். அவரை சற்று உற்றுப் பார்த்தால்தான் கூந்தலில் மொய்க்கும் பேன்கள் கண்ணுக்குத் தெரியும்.

dd

Advertisment

பேன்களை ஆங்கிலத்தில் ‘"லைஸ்'’ என்று சொல்வார்கள். பொய்களையும் ஆங்கிலத்தில் ‘"லைஸ்'’ என்றே சொல்வார்கள். இந்த பட்ஜெட்டை உற்றுப் பார்த்தால் அப்படித்தான் "லைஸ்'’ உள்ளது. பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "வரி செலுத்துவதற்கு நடுத்தர வருவாய் பெறும் மக்கள் ஆடிட் டரை பார்க்க செல்ல வேண் டாம், ஒரு கிளிக் செய்தால் போதும், எளிதாக வரி செலுத்திவிடலாம்' என கூறினார். ஆனால், எந்தப் பிரிவின் கீழ் நாங்கள் வரி செலுத்தவேண்டும் என்று தெரிந்துகொள்ளவே ஆடிட்டருக்கு கூடுதலாக பணம் செலுத்த வேண்டிய நிலைதான் உள்ளது.

புதிய வரிமுறையை எளிதாக விவரிக்க வேண்டும் என்றால், இப்போது 50 ரூபாய்க்கு விற்கும் மசால் தோசையின் விலை புதிய வரி விதிப்புக்கு ரூ.45 ஆகிறது. ஆனால் இந்த விலை நிபந்தனைக்கு உட்பட் டது என்கிறார் நிதியமைச்சர். அதாவது, உங்களுக்கு சாம்பார் வேண்டும் என்றால் கூடுதலாக ரூ.15, சட்னி வேண்டும் என்றால் கூடுதலாக ரூ.15 செலுத்த வேண்டும். ஆக, ரூ.50-க்கு கிடைத்த மசால்தோசையின் தற்போதைய விலை ரூ.80. இப்படித்தான் புதிய பட்ஜெட் உள்ளது.

Advertisment

இன்னொரு அபாயகரமான உண்மையை கூற விரும்புகிறேன். ஒருவர் ரூ.15 ஆயிரம் சம்பளம் பெற்றால், அவரது பாதுகாப்புக்கு பி.எப். பங்களிப்பு எடுக்கப்படுகிறது. இதற்கு வரி விலக்கு இருந்தது. ஆனால் புதிய முறையில் இந்த விலக்கு இல்லை.

எல்லோரும் எல்.ஐ.சி.யில் முதலீடு செய்யத்தான் தற்போது விரும்புகின்றனர். ஏனென்றால் அரசு உத்தரவாதம் இருக்கிறது. அதற்கு வருமானவரி விலக்கும் உள்ளது. ஆனால், தற்போது எல்.ஐ.சி. முதலீட்டுக்கு ஒன்றும் கிடைக்காது என அரசு கூறுகிறது.

இயற்கைப் பேரிடர் ஏற்பட்டால், கிடைக்கும் ஒரே தொலைத்தொடர்பு சேவை பி.எஸ்.என்.எல். ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் ஏர் இந்தியா உள்ளது என நமது அமைச்சர்கள் பேசிய விளம்பர ஒலிநாடாக்கள் உள்ளன. சமீபத்தில் கூட கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட சீனா சென்று இந்திய மாணவர்களை, ஏர் இந்தியா விமானங்கள் மீட்டு வந்தன. ஆனால் அரசு தற்போது அவற்றை எல்லாம் விற்கிறது. இனி ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் தனியார் விமானங் கள் செல்லுமா அல்லது ஜியோ தொலைத்தொடர்பு சேவை அளிக்குமா? எல்.ஐ.சி., ஏர் இந்தியாவை மட்டும் நிதியமைச் சர் விற்கவில்லை. பி.எஸ். என்.எல்., பி.பி.சி.எல். உட்பட பல நிறுவனங் களை அரசு விற்கிறது. தற்போது தேசிய நெடுஞ்சாலைகளையும் அரசு விற்கிறது. அதிக வசூல் செய்யும் மையங்களாக நெடுஞ் சாலைகள் மாற்றப்படுகின்றன. நாடாளுமன்றக் கட்டிடத்தையும் விற்றுவிடுங்களேன்.

வரிசெலுத்துவதில் பாகு பாடு இருக்காது என நிதியமைச்சர் கூறுகிறார். ஆனால் தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது? அடுத்த ஆண்டு தேர்தல் வரவுள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்துக்கு ரூ.1 கோடி வரி நிவாரணம் கிடைக்கிறது. அதே சமயம் முகம் இல்லாத உங்கள் வரி அலுவலகம், நடிகர் விஜய்க்கு குறி வைக்கிறது.

செத்துப்போன மொழி யான சமஸ்கிருதத்துக்கு கோடிக் கணக்கில் பணம் செலவழிக்கப் படுகிறது. ஆனால் செம்மொழி தமிழுக்கு எதுவும் செலவழிக்கப் படவில்லை'' என்ற அவருடைய அதிரடி உரை மக்களவையை உலுக்கவே செய்தது.

-தொகுப்பு: சோழன்

____________________

ஆவேச பெண் எம்.பி!

wwராகுல்காந்தியை "டியூப்லைட்' என்று நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விமர்சித்தார். "பிரதமர் பதவிக்குரிய மாண்பு அறியாமல் மோடி பேசுகிறார்' என்றார் ஊடகங்களிடம் பேசிய ராகுல். இந்நிலையில், இமாச்சலபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் பெண் எம்.பி. விப்லப் தாகூர், நாடாளுமன்றத்தில் மோடி மீதும் அவர் அரசின் மீதும் வைத்த விமர்சனத் தாக்குதல் இந்தியா முழுவதும் மொழிகளைக் கடந்து, சமூக வலைத்தளம் மூலம் வைரலாகியுள்ளது.

""6 வருடங்களாக பிரதமராக இருந்து, கேவலத்தைத் தவிர வேறு என்ன சாதித்தீர்கள்? பாகிஸ்தான் என்று பூச்சாண்டி காட்டுவதைத்தவிர, வேறு ஏதேனும் நல்ல விசயத்தை நாட்டுக்கு செய்திருக்கிறீர்களா? நீங்கள் வெளிநாட்டுக்குப் பறக்கும் (ஏர் இந்தியா) விமான நிறுவனத்தை உருவாக்கித் தந்தது காங்கிரஸ். அதை விற்றுக் கொண்டிருக்கிறீர்கள். ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். போன்ற உயர்தரக் கல்வி நிறுவனங்களையெல்லாம் காங்கிரஸ் உருவாக்கியது. 6 வருடமாக உங்கள் ஆட்சியில் எத்தனை பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களை உருவாக்கினீர்கள்? பிரதமர் பற்றியோ அல்லது மந்திரிகளைப் பற்றியோ பேசினால் தேசத்துரோகி என்கிறீர்கள். ஆனால், உங்கள் கட்சியினர் 6 வயது சிறுமியைக்கூட விட்டுவைக்கவில்லை. மதத்தை வைத்து தேசத்தை பிளவுபடுத்துவது கேவலமாக இல்லையா? இதைவிட தேசத்துரோகம் வேறென்ன இருக்க முடியும்' என விப்லப் தாகூர் கேட்ட கேள்விகள் பா.ஜ.க. தரப்பைத் திணறடித்தன.