"ஹலோ தலைவரே, தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் ஒரு சூறாவளியோடு தொடங்கி முடிஞ்சிருக்கு.''’

"ஆமாம்பா, சட்டப் பேரவையில் வைக்கப்பட்ட விசாரணை ஆணையங்களின் ரிப்போர்ட்டுகள், தமிழகத்தையே அதிரவச்சிருக்கே!''

"உண்மைதாங்க தலைவரே, நடந்துமுடிந்த 3 நாள் சட்டசபை கூட்டத்தின்போது, எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்த ஜெ.வின் மர்ம மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையும், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்த அருணா ஜெக தீசன் ஆணையத்தின் அறிக்கையும் தாக்கல் செய்யப் பட்டன. இதற்கிடையே பேரவையின் இரண்டாம் நாளில், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் விவகாரத் தைக் காரணம் காட்டி, எடப்பாடியும் அவரது ஆதரவாளர்களும் ரகளையில் ஈடுபட்டதால், அவர்களை பேரவையிலிருந்து வெளியேற்றினர். அதோடு மூன்றாம் நாள் கூட்டத்தில் கலந்து கொள்ள, இவர்களுக்குத் தடையும் விதிக்கப்பட்டது.''

Advertisment

f

"எடுத்த எடுப்பிலேயே எடப்பாடித் தரப்பு பேரவையைப் பரபரப்பாக்கிடுச்சே?''”

"ஆமாங்க தலைவரே, தங்கள் மீதான சட்டசபை நடவடிக்கைகளைக் கண்டித்து எடப்பாடி தரப்பு வள்ளுவர் கோட்டத்தில் கருப்பு சட்டை அணிந்து உண்ணாவிரதப் போராட் டத்தை நடத்துச்சு. இந்த போராட்டத்துக்கு போலீஸ் அனுமதி கொடுக்கலை. அதையும் மீறி இந்தப் போராட்டத்தை எடப்பாடி நடத்தியதால், அவரையும் அவர் ஆதரவாளர் களையும் கைது செய்து, ராஜரத்தினம் ஸ்டேடியத் தில் கொண்டுபோய் வச்சிருந்தாங்க.. அப்போது பத்திரிகையாளர்களிடம் எடப்பாடி பேச முற்பட்டபோது, அருணா ஜெகதீசன் ஆணைய ரிப்போர்ட் பற்றி அவரிடம் செய்தியாளர்கள் கேள்வியை எழுப்ப, பத்திரிகையாளர்கள் மீது கோபமாகப் பாய்ந்தார் எடப்பாடி. காரணம், அந்த அறிக்கை எடப்பாடியைக் குற்றவாளியாகச் சுட்டிக்காட்டி இருக்கு. ஆனாலும் பத்திரிகை யாளர்கள் மீது அவர் காட்டிய கோபம், பலரது கண்டனத்துக்கும் ஆளாகிவருது.''”

Advertisment

"சட்டசபையிலும் எடப்பாடிக்கு எதிரான கண்டனக் குரல்கள் எழுந்ததே?''”

"தூத்துக்குடி விவகாரம் தொடர்பான அருணா ஜெகதீசன் அறிக்கை மீதான விவாதம் நடந்தபோது, தி.மு.க. தோழமைக் கட்சிகளின் தலைவர்களான வேல்முருகன், ஜவாஹிருல்லா, ஈஸ்வரன், சிந்தனைச்செல்வன், சதன் திருமலைக் குமார் உள்ளிட்ட அனைவரும், எடப்பாடி மீது உடனடியாக வழக்கைப் பதிவு செய்யணும்னு வலியுறுத்தினாங்க. இதில் ஒருபடி மேலே போன வேல்முருகன், ஆணையத்தின் அறிக்கையில் இது கொலை எனப் பதிவு செய்யப்பட்டிருப்ப தால், எடப்பாடி மீது கொலை வழக்கைப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கணும்னு குரல்கொடுத்தார். இதேபோல், எடப்பாடிக் கும் வேதாந்தா நிறுவனத்துக்கும் உள்ள தொடர்புகள் குறித்தும், விசாரிக்கப்பட வேண்டும்னு சட்டப்பேரவையில் குரல்கள் எழுந்திருக்கு.''”

dd

"காங்கிரஸ் தலைவரா மல்லிகார்ஜூன் கார்கே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்காரே?''’‘

"28 ஆண்டுகளுக்குப் பிறகு நேரு குடும் பத்தைத் தாண்டி காங்கிரசின் தலைவராகி யிருக்கிறார் கார்கே. தேர்தலில் சசிதரூரை ஜெயித்து இந்த இடத்திற்கு வந்திருக்கும் கர்நாடக மாநிலத்துக்காரரான அவர், புத்த மதத்தைத் தழுவிய அம்பேத்கரியவாதி. நாங்கள் திராவிடர்கள், நீங்கள் ஆரியர்கள் என்று பா.ஜ.க.வினரைப் பார்த்து பார்லிமெண்ட்டில் நேருக்கு நேராகச் சொன்னவர்.''

"காங்கிரசிலும் பா.ஜ.க. போல இந்துத்வா கொள்கை கொண்டவர்கள் உண்டே, அவங்க மத்தி யில் கார்கே தாக்குப் பிடிப்பாரா?''”

"காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆனந்த் சர்மா, கட்சியில் தனக்கு மரியாதை இல்லைன்னு சொல்லி ஹிமாச்சல பிரதேச காங்கிரசின் வழிகாட்டுதல் குழு தலைவர் பதவியிலிருந்து திடீரென்று விலகி இருக்கார். ஏற்கனவே, மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம்நபி ஆசாத் காங்கிரசில் இருந்து விலகி, புதுக் கட்சி ஒன்றை ஆரம் பித்துவிட்டார். அவர் விலகிச் சென்றதையே காங்கிரஸ் இன்னும் ஜீரணிக்காத நிலையில், தற்போது ஆனந்த் சர்மாவும் விலகியிருப்பது கட்சியினரை சங்கடத்தில் ஆழ்த்தி இருக்கு. ஏற்கனவே, ராகுலுக்கு எதிராக கட்சியின் மூத்த தலைவர்கள் 23 பேர், கொடிபிடித்து வருகிறார்கள். இப்போது பலரும் கட்சியிலிருந்தும் முக்கிய பதவிகளிலிருந்தும் விலகுவது காங்கிரஸுக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. மல்லிகார்ஜுன் கார்கே காங்கிரசின் புதிய தலைவராக பொறுப்பேற்ற பிறகு, மேலும் பலர் விலகுவார்கள் என்று இப்போதே பேசப்படுது. அதனால், டெல்லியில் உள்ள காங்கிரஸின் தலைமையகத்தில் பதட்டமான சூழலே நிலவுகிறதாம். கட்சியின் சீனியர்களை காங்கிரஸ் இழப்பது அதற்கு நல்லதல்ல என்கிற விமர் சனமும் டெல்லியில் எதிரொலிக்கத் தொடங்கி இருக்கு.''

"காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவருக்காக நடத்தப்பட்ட தேர்தலும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கே?''”

"ஆமாங்க தலைவரே, நம்ம தமிழக காங்கிரஸ் கட்சியினரே அது சம்பந்தமா முணுமுணுத்தாங்க. காரணம், அந்தத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு, சென்னை சத்திய மூர்த்தி பவனில் நடந்தது. வாக்களிக்கத் தகுதிபெற்ற பொதுக்குழு உறுப்பினர்கள் 750 பேர் வாக்களித்தனர். அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குச் சீட்டில், வேட் பாளர்களான மல்லிகார்ஜுன் கார்கே, சசிதரூர் ஆகி யோர் பெயர்களை ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே அச்சிட்டிருந் தாங்க. மாநில மொழியான தமிழ் அதில் இல்லை. இதுதான் தமிழக காங் கிரஸாரை முணுமுணுக்க வைத்தது. டெல்லி பா.ஜ.க.வின் இந்தித் திணிப்பை காங்கிரசின் தோழமைக் கட்சியான தி.மு.க. தீவிரமாக எதிர்த்து வரும் நிலையில், நம் கட்சி இந்தியைத் திணிப்பதா? என்று அவர்கள் கேள்வியும் எழுப்பினார்கள்.''

ff

"ஸ்டாலின் விரைவில் ஏதேனும் அதிரடி நடவடிக்கையில் இறங்குவார்னு கோட்டைத் தரப்பில் டாக் அடிபடுதே?''”

"அமைச்சர்களின் லூஸ் டாக் பேச்சால், தி.மு.க. பொதுக்குழுவில், கட்சிப்பிரமுகர்கள் அனை வரையும் எச்சரிக்கும் விதத்தில் முதல்வர் பேசிய பேச்சு, சம்பந்தப்பட்டர்களை மிரள வச்சிருக்கு. அதேநேரம், எதிர்க்கட்சியினர், தி.மு.க.வே இப்ப முதல்வர் கட்டுப்பாட்டில் இல்லையா?ன்னு விமர்சிக்க ஆரம்பிச்சிட்டாங்க. அதனால், தன் ஆளுமையைக் காட்டும் விதமாக முதல்வர் ஸ்டா லின், அமைச்சரவை மாற்றம் அல்லது மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் மாற்றம் என ஏதேனும் ஒன்றைச் செய்து அதிரடி காட்டத் தயாராகிறார் என்கிறார்கள். இந்த நிலையில் ஐ.ஏ.எஸ். தரப்பில் லிஸ்ட் எடுக்கும் வேலை நடக்கிறதாம்.''”

"திருச்செந்தூர் முருக பக்தர்களிடையே சலசலப்பு எழுந்திருக்கே?''”

’"திருச்செந்தூர் முருகன் கோயில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, பக்தர்கள் 10 நாட்கள் அங்கே தங்கி விரதம் இருப்பது வழக்கம். இந்த வருடம் பக்தர்கள் தங்கியிருக்க தடை விதிக்கப்பட்டிருப்ப தாக பா.ஜ.க. உட்பட பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இதனால் பக்தர்களிடையே ஒருவித பதட்டம் அதிகாரித்த நிலையில், உண்மை நிலையறிய, திருச்செந்தூர் முருகன் கோயில் அறங்காவல் குழு தலைவர் அருள்முருகனிடம் இது குறித்து நாம் விசாரித்தோம். அவர் நம்மிடம், "கோயில் உள்பிரகாரத்தில் பக்தர்கள் வழக்கமாகத் தங்க அனுமதிக்கப்படுவார்கள். தற்போது பழைய கட்டிடங்கள் அனைத்தும் புனரமைப்புக்காக இடிக்கப் பட்டு வருகிறது. அதனால், சஷ்டி விரதம் இருக்கும் பக்தர்கள் தங்குவதற்காக, 13 தற்காலிக தங்கும் குடில்கள் அமைக்கப்படுகிறது. அதில் 15,000 பக்தர் கள் வரை தங்கலாம். அதனால் பொய்ப் பிரசாரங் களை பக்தர்கள் நம்பவேண்டாம் என்றார்.''”

"ம்...''”

dd

"அண்மையில் இளவரசியின் மகன் விவேக் கின் ஜாஸ் சினிமா தியேட்டருக்கு, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி படம் பார்க்க வந்ததாகவும், அவரை விவேக் வரவேற்றதாகவும் தகவல் பரப்பப்பட்டது. ஆனால் உண்மை அதுவல்லவாம். சத்யம் சினிமா ஸிடம் இருந்து, வேளச்சேரி பீனிக்ஸ் மால் லக்ஸ் தியேட்டரை வாங்கிய விவேக்கின் ஜாஸ், மீண்டும் அதை சத்தியம் சினிமாஸிடமே ரூ.1000 கோடிக்கு விற்றிருக்கிறதாம். இந்த நிலையில், சத்யம்தான் தனது தொடக்க நிகழ்ச்சிக்காக கவர்னரை வர வழைத்தது என்று சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் சொல்கிறது. கவர்னருடன் இருக்கும் படத்தைப் போட்டு விவேக் சீன் போட்டது எதற்கெனில், இந்த தியேட்டர் வியாபாரத்தை வருமான வரித்துறையோ, அமலாக்கத்துறையோ கண்டு கொள்ளக்கூடாது என்பதற்காகத்தானாம்.''”

"நான் ஒரு தகவலைச் சொல்றேன். சென்னை எழும்பூர் மாண்டியத் சாலையில் புகழ்பெற்ற நிறுவனம் கட்டியுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் அரசியல் தலைவர்களுக்கு வீடுகள் இருக்கு. எதிலும் பிரம்மாண்டம் காட்டும் அமைச்சர் ஒருவர், கரன்சிகளை அடுக்குவதற் காகவே இங்கே வீடு எடுத்திருக்கிறாராம். ஆளுந்தரப்பில் இன்னும் சிலருக்கும் இதுபோல பல இடங்களிலும் வீடுகள் இருக்கு. எதிர்க்கட்சி வரி சையில் தென் மாவட்ட எம்.பி.க் கும் இதுபோல வீடு இருக்காம். டீலிங் நடத்த இந்த மாதிரி இடங்கள்தான் அரசியல் பிர முகர்களுக்கு வசதியா இருக்கு தாம்.''’