கோவை அன்னபூர்ணா விவகாரம் இன்னமும் தொழிலதிபர்கள் மனதில் ஆறாத காயமாகவே இருக்கிறது. அந்தக் கூட்டத்தில் நடந்தது என்ன?
மத்திய அமைச்சர் - தொழிலதிபர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டதே 2026 தேர்தலை மனதில் வைத்துத்தான். "தேர்தல் இல்லாத காலத்திலும் நாங்கள் உங்களுடன் நிற்கிறோம். மத்திய அமைச்சரை அழைத்து உங்களது குறைகளை சொல்ல வைக்கிறோம்' எனக் காட்டத்தான். அதுமட்டுமல்ல, "மாநிலத் தலைவராக இருந்தாலும் கோவையில் அவருக்கு வேலையில்லை, கோவையில் நான்தான் பாஸ்!' எனக் காட்ட நினைத்தார் வானதி. மேலும், மா.தலைவர் இருந்தால் அவருக்கே நல்ல பெயர் கிடைக்கும், தனக்கு எந்தப் பெயரும் கிடைக்காது என்பதால், அவர் லண்டன் போனபிறகு இந்த நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறார் வானதி. ராஜ்யசபா சீட் விஷயத்தில் தமிழிசையுடன் மோதல், கே.டி.ராகவன் வீடியோ வெளியானதில் மா.தலைவருடன் மோதல் என்ற நிலையில், வானதி மட்டும்தான் தமிழகத்தில் நிர்மலாவுடன் நெருக்கமாக இருக்கிறார் என்பதால் அவரது அழைப்பைத் தட்டாமல் வந்தார் நிர்மலா சீதாராமன்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற 90 சதவீத தொழிலதிபர்கள் பா.ஜ.க. ஆதரவாளர்கள் தான். நிகழ்ச்சிக்கு ஸ்பான்சர் 3 பேர். அதில் முக்கியமானவர் அன்னபூர்ணா சீனிவாசன். நிகழ்ச்சிக்கு சாப்பாடு அவரது ஓட்டலில் இருந்துதான் வந்துள்ளது. நிறைய செலவு செய்திருக்கிறார் என்பதால் அவரை மேடையில் உட்கார வைப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் மேடைக்கு அவர் அழைக்கப்படவே இல்லை. நிகழ்ச்சி முடியும் தறுவாயில் அவர் வருத்தத்தோடு இருந்ததை அறிந்து பேச அனுமதிக்கப்பட்டார். முன்னதாக பேசிய வானதி, "வெங்காயம் விலை அதிகமானதால் மக்களும், ஓட்டல் நடத்துபவர்களும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள் என மத்திய அமைச்சரிடம் சொல்லி ஏற்றுமதியை நிறுத்தினேன். பின்னர், எங்களுக்கு கட்டுப்படியாகவில்லை, ஏற்றுமதி செய்ய ஏற்பாடு செய்யுங்கள் என விவசாயிகள் சொன்னதால் மீண்டும் மத்திய அமைச்சரிடம் சொல்லி ஏற்றுமதிக்கு உதவினேன்' என்று சொன்னவர், வெங்காய விலையேற்றத்தின்போது "அன்னபூர்ணா போன்ற பெரிய ஓட்டல்களிலே
கோவை அன்னபூர்ணா விவகாரம் இன்னமும் தொழிலதிபர்கள் மனதில் ஆறாத காயமாகவே இருக்கிறது. அந்தக் கூட்டத்தில் நடந்தது என்ன?
மத்திய அமைச்சர் - தொழிலதிபர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டதே 2026 தேர்தலை மனதில் வைத்துத்தான். "தேர்தல் இல்லாத காலத்திலும் நாங்கள் உங்களுடன் நிற்கிறோம். மத்திய அமைச்சரை அழைத்து உங்களது குறைகளை சொல்ல வைக்கிறோம்' எனக் காட்டத்தான். அதுமட்டுமல்ல, "மாநிலத் தலைவராக இருந்தாலும் கோவையில் அவருக்கு வேலையில்லை, கோவையில் நான்தான் பாஸ்!' எனக் காட்ட நினைத்தார் வானதி. மேலும், மா.தலைவர் இருந்தால் அவருக்கே நல்ல பெயர் கிடைக்கும், தனக்கு எந்தப் பெயரும் கிடைக்காது என்பதால், அவர் லண்டன் போனபிறகு இந்த நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறார் வானதி. ராஜ்யசபா சீட் விஷயத்தில் தமிழிசையுடன் மோதல், கே.டி.ராகவன் வீடியோ வெளியானதில் மா.தலைவருடன் மோதல் என்ற நிலையில், வானதி மட்டும்தான் தமிழகத்தில் நிர்மலாவுடன் நெருக்கமாக இருக்கிறார் என்பதால் அவரது அழைப்பைத் தட்டாமல் வந்தார் நிர்மலா சீதாராமன்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற 90 சதவீத தொழிலதிபர்கள் பா.ஜ.க. ஆதரவாளர்கள் தான். நிகழ்ச்சிக்கு ஸ்பான்சர் 3 பேர். அதில் முக்கியமானவர் அன்னபூர்ணா சீனிவாசன். நிகழ்ச்சிக்கு சாப்பாடு அவரது ஓட்டலில் இருந்துதான் வந்துள்ளது. நிறைய செலவு செய்திருக்கிறார் என்பதால் அவரை மேடையில் உட்கார வைப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் மேடைக்கு அவர் அழைக்கப்படவே இல்லை. நிகழ்ச்சி முடியும் தறுவாயில் அவர் வருத்தத்தோடு இருந்ததை அறிந்து பேச அனுமதிக்கப்பட்டார். முன்னதாக பேசிய வானதி, "வெங்காயம் விலை அதிகமானதால் மக்களும், ஓட்டல் நடத்துபவர்களும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள் என மத்திய அமைச்சரிடம் சொல்லி ஏற்றுமதியை நிறுத்தினேன். பின்னர், எங்களுக்கு கட்டுப்படியாகவில்லை, ஏற்றுமதி செய்ய ஏற்பாடு செய்யுங்கள் என விவசாயிகள் சொன்னதால் மீண்டும் மத்திய அமைச்சரிடம் சொல்லி ஏற்றுமதிக்கு உதவினேன்' என்று சொன்னவர், வெங்காய விலையேற்றத்தின்போது "அன்னபூர்ணா போன்ற பெரிய ஓட்டல்களிலேயே சாம்பாரில் வெங்காயம் போடவில்லை. நாங்க நினைச்சா வெங்காய விலையை ஏற்றவும் முடியும், குறைக்கவும் முடியும்' எனப் பெருமையா பேசியதோடு, அன்னபூர்ணாவையும் வம்பிழுத்தார் வானதி.
இவ்வளவு சம்பாதிக்கிற ஓட்டலே சாம்பாரில் வெங்காயம் போடல என வானதி பேசியதை யாரும் சீரியஸாக பார்க்கல. ஜாலியா எடுத்துக்கிட்டாங்க. அதேபோல உதாரணத்துக்குத்தான் அடுத்து பேசிய அன்னபூர்ணா சீனிவாசனும், "பன்னுக்கு வரி இல்ல, க்ரீமுக்கு வரி என்கிறபோது கஸ்டமர்கள் கேள்வி கேட்கிறார்கள். எங்க தொகுதி எம்.எல்.ஏ. வானதியும் கேள்வி கேட்குறாங்க'ன்னு சொன்னார். வெங்காயம் போடாததை எப்படி எல்லோரும் ரசித்தார்களோ அதேபோல வானதியும் அவரது பேச்சை சிரித்தபடியே ரசித்துக்கொண்டிருந்தார். எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
நிகழ்ச்சியில் எத்தனை தொழிலதிபர்கள் பேசினார்கள்?
ஸ்பான்சர் செய்த 3 பேர் மட்டும்தான். வேறு யாரும் பேச அனுமதிக்கப்படவில்லை.
தொழிலதிபர்கள் தங்களது குறைகளை அமைச்சரிடம் நேரடியாகச் சொல்வதற்காகத்தான் இந்த நிகழ்ச்சியே என்றார்களே?
3 பேரைத் தவிர யாரையும் பேச அனுமதிக்கல. அமைச்சர் வருவதற்கு முன்பே, நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதனை எழுதிக்கொடுங்கன்னு அதிகாரிகள் எழுதி வாங்கிட்டாங்க. அன்னபூர்ணா சீனிவாசன் பேசும்போது, ஒரு சதவீதம் கூட அரசை எதிர்த்துப் பேசவில்லை. "வரியை ஏத்தினாலும் பரவாயில்லை, குழப்ப வேண்டாம், கணக்கு எடுக்க வர அதிகாரிகளுக்கும் சிரமமா இருக்கு, கம்ப்யூட்டரே திணறுது' என்றபோது, அங்கிருந்த தொழிலதிபர்கள் மட்டுமல்ல, மேடையிலிருந்த அதிகாரிகளும் கைதட்டி வரவேற்றனர்.
அன்னபூர்ணா சீனிவாசன் பேசிய விஷயம் உடனே தமிழகத்தைத் தாண்டி ஆங்கில மீடியாக்களில் ஃப்ளாஷ் ஆகி, பிரதமர் அலுவலகம் வரை பேசுபொருளானது. ஓட்டலுக்கு வந்த பின்னர், "அன்னபூர்ணா சீனிவாசன் பேசும்போது நீ சிரிச்சிக்கிட்டே இருந்த, என்னை கூப்பிட்டு அவமானப்படுத்துறீயா?'ன்னு வானதி சீனிவாசனை, நிர்மலா சீதாராமன் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிட்டார். இன்னொரு பக்கம் அன்னபூர்ணா ஓட்டலுக்கு போன பா.ஜ.க.வினர், "எங்க அமைச்சரிடமே கேள்வி கேட்பீங்களா? எங்களை மீறி தொழில் பண்ணமுடியுமா?' என மிரட்டியுள்ளனர். உடனே அன்னபூர்ணா சீனிவாசன், வானதிக்கு போன்போட்டு, தான் பேசியதற்கு வருத்தம் தெரிவித்திருக்கிறார். "என்கிட்ட மன்னிப்பு கேட்டு என்னங்க பண்றது, அமைச்சரை சந்திச்சி மன்னிப்பு கேளுங்க'ன்னு வானதி சொல்லியிருக்கிறார்.
பிரஸ் மீட்டில், அமைச்சரை பார்த்து வருத்தம் தெரிவிக்கணும் என சீனிவாசன் போன் பண்ணியதாக வானதி சொன்னாரே?
அப்படி சொன்னால் நீங்க என்ன சொல்லியிருக்கணும், தொழிலதிபர்கள் குறைகளைச் சொல்லத்தான் இந்த நிகழ்ச்சியே. அமைச்சரின் வருகையே குறைகளை நிவர்த்தி பண்ணத்தான். நாங்க தப்பா நினைக்கலன்னு நீங்க பெருந்தன் மையா சொல்லியிருக்கணும். மன்னிப்பு கேட்க நேரம் வாங்கிக் கொடுக்குறீங்க. மன்னிப்பு கேட்கும் வீடியோவை எடுத்தது மாவட்ட தலைவர் ரமேஷ். அந்த அறையிலிருந்தது நிர்மலா சீதாராமன், வானதி, அன்னபூர்ணா சீனிவாசன், ரமேஷ் என 4 பேர் தான். சீனிவாசன் வருவதற்கு முன்பாகவே, அவர் எந்த சீட்ல உட்காரணும், அமைச்சர் எந்த சீட்ல உட்காரணும், வானதி எந்த சீட்ல உட்காரணும் எனத் திட்ட மிட்டு, வீடியோ செட் பண்ணி வைத்துவிட்டார்கள். சீனிவாசனை ஓட்டலின் கீழே இருந்து லிப்ட் வழியே அந்த அறைக்கு அழைத்து வருவது ரமேஷ்தான். அமைச் சரை சந்தித்தபோது, உட்கார்ந்து கொண்டே மன்னிச்சிடுங்கன்னு கேட்டிருக்கலாம். உட்கார்ந்துகொண்டே கையை கூப்பி மன்னிச்சிடுங்கன்னு சொல்லியிருக்கலாம். எழுந்து நின்று மன்னிப்பு கேட்டிருக்கிறார் என்றால் எந்த அளவுக்கு மிரட்டியிருப்பார்கள்? பதட்டத்தின் உச்சத்தில் அந்த நாற்காலியின் முனையில் உட்கார்ந் திருக்கிறார். மிரட்டியதற்கு கரெக்ட்டா மன்னிப்பு கேட்குறாருன்னு இரண்டு பேரும் உட்கார்ந்திருக்கிறார்கள். அவர்களுடைய பார்வையைப் பாருங்கள்!
அமைச்சரிடம் மன்னிப்பு கேட்பது மட்டும்தான் வீடியோவா?
மொத்தம் 15 நிமிஷம். அமைச்சரிடம் மன்னிப்பு கேட்ட பிறகு, எம்.எல்.ஏ.கிட்டேயும் கேளுங்கன்னு அமைச்சர் சொல்றாங்க. எம்.எல்.ஏ.கிட்டேயும் அமைச்சருகிட்ட கேட்டதுபோல எழுந்து நின்று மன்னிப்பு கேட்டிருக்கிறார் சீனிவாசன். அது முழுமையாக வெளியானால் கட்டாயப்படுத்தி மன்னிப்பு கேட்க வைத்தார்கள் என்று எதிர்ப்பு வரும் என்பதற்காக எடிட் செய்துவிட்டனர். இவர்களுடைய நோக்கமே, சீனிவாசனை நேரில் அழைத்து மன்னிப்பு கேட்க வைத்து, எப்படி அவர் பேசிய வீடியோ வைரலானதோ, அதேபோல் மன்னிப்பு கேட்கும் வீடியோவும் வைரலாகணும் என்பதுதான்.
இங்க நடந்ததை எப்படி அறிந்தார் மாநில தலைவர்? ஏன் மன்னிப்பு கேட்டார்?
இந்த வீடியோ வெளியானதற்கு பிறகுதான் இங்கு நடப்பவை குறித்து விசாரித்திருக் கிறார். சீனிவாசனுக்கு நடந்தது நாளை நமக்கும் நடக்கும் என்று எல்லா தொழிலதிபர் களும் கோவையில் நினைத்துவிட் டார்கள். அதுமட்டுமல்ல, பா.ஜ.க.வுக்கு ஏற்கெனவே நிறைய டொனேஷன் கொடுத்திருக்கிறார் சீனிவாசன். டொனேஷன் கொடுக்கிற 200 தொழி லதிபர்களில் டாப் 3 இடத்தில் இருக்கிறார் சீனிவாசன். மா.தலைவர் எம்.பி.க்கு நின்றபோது தேர்தல் நிதி கொடுத்திருக்கிறார். ஒட்டுமொத்த தொழிலதிபர்களும் சேர்ந்து நாளை டொனேஷன் இல்லை என்றால் என்ன செய்வது என அதிர்ந்துவிட்ட னர். இதனால் மன்னிப்பு கேட்டிருக்கிறார். மாநி லத் தலைவரின் மன்னிப்பு வீடியோ வரும்வரை சீனிவாசனின் மன்னிப்பு வீடியோவை பரப்பி யது பா.ஜ.க. ஐ.டி. விங்தான். இன்னொன்றும் நடந்தது. தொழிலதிபர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அடுத்த நாள் அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சிக்கும் செலவு அன்னபூர்ணா தான். நிர்மலா சீதா ராமன் அழகா ஒரு விஷயம் செஞ்சிட்டாங்க. வானதிக்கே தெரியாமல் வானதிக்கும் ஆப்பு வைத்துவிட்டார். மாநிலத் தலைவருக்கும் ஆப்பு வைத்துவிட்டார். 2026-ல் மா.தலைவர் சீட் வாங்கி கோவையில் நின்றாலும் சட்டமன்றத்திற் குள் போக முடியாது, அரசியல் ரீதியாக எப்படி சந்திப்பது என்பதால், மன்னிப்பு கேட்டார். இருவருக்கும் இன்னொரு பிரச்சனை என்ன வென்றால், சீனிவாசன் நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால்தானே அவர மன்னிப்பு கேட்க வைச்சீங்க. இதே கவுண்டராக இருந்தால் இந்த மாதிரி மன்னிப்பு கேட்க வைப்பீங்களான்னு கேட்க ஆரம் பிச்சிட்டாங்க. எதற்குமே மன்னிப்பு கேட்காத கவரிமான் பரம்பரையான மா.தலைவர் இதற்கு ஏன் மன்னிப்பு கேட் கிறார்? பத்திரிகையாளர்களை அசிங்கமாக பேசியதற்கு மன்னிப்பு கேட்கணும் என்கிறபோது, "நான் என்ன தப்பு செஞ்சேன், மன்னிப்பு கேட்க?' எனக் கேட்டவர், யாரோ செஞ்ச தப்புக்கு ஏன் மன்னிப்பு கேட்டீங்க? வீடியோ வெளியிட்டது யாருன்னு தெரியும். ஏன் அவரை கட்சியை விட்டு நீக்கல? வீடியோ வெளியிட்டது தப்புன்னு சொன்ன உங்க ஆதரவாளர் சதீஷை நீக்கியிருக்காங்க. நீங்கள் மன்னிப்பு கேட்கும் நிலைக்கு தள்ளிய ரமேஷை உங்களால் ஏன் நீக்க முடியல? அந்த அளவுக்கு செயலற்ற தலைவரா இருக்கீங்க. ரமேஷ் வானதி ஆதரவாளர். மாநிலத் தலைவர் படம் இல்லாமலேயே வானதி போஸ்டர் களை கோவையில் ஒட்டியது இவர்தான்.
ஆண் அமைச்சர், ஆண் எம்.எல்.ஏ. அந்த மேடையில் இருந்தால் இது போன்ற பேச்சுகள் வர வாய்ப்புள்ளதா என்கிறாரே வானதி?
நமக்கு நாமே ஸ்டாலின் போனப்ப, எங்க ஊருக்கு பஸ் வரல, ரோடு இல்ல, தண்ணீர் வரலன்னு கேள்வி கேட்டாங்க. அதையெல்லாம் ட்ரோல் பண்ணீங்க. கோவை மேயர் தேர்தலில் கே.என்.நேரு, முத்துசாமி ஆகியோரிடம் ஒரு பெண் சரமாரியாகக் கேள்வி கேட்டாங்க. பொது இடத்துல பொதுமக்களும் கேள்வி கேட்டாங்க. கட்சிக்குள்ளும் கேள்வி கேட்டாங்க. இதில் ஆணாக இருந்தால் இப்படி கேட்பீங்களா? எனக் கொண்டுவருவதே தப்பு. ஒரு பெண் எம்.எல்.ஏ., ஒரு பெண் அமைச்சரை இப்படி பேசலாமா எனச் சொல்றீங் களே, அந்த அறையில் சீனிவாசனை நீங்கள் நடத்திய விதம் எப்படி இருந்தது? ஒரு பெண்மைக்கு உண்டான பாங்கு செயல்பாட்டில் தெரிந்ததா? இதுக்கெல்லாம் ஏன் மன்னிப்பு கேட்குறீங்கன்னு வானதி சொல்லாவிட்டாலும், அமைச்ச ராவது சொல்லியிருக்கலாமே. நீங்க பண்ற வேலையைப் பார்த்தால் பாவம் பார்க்கிற மாதிரியா இருக்கிறது? அமித்ஷா தமிழிசையை கை நீட்டி பேசியபோது நாடார் சமுதாயமே கொந்தளித்தது. அப்போது வானதி என்ன செய்தார்? தமிழ்நாட்டுல பூஜ்ஜியம், நோட்டாவோடு போட்டிபோடும் போதே இவ்வளவு பண்றீங்க. நாளைக்கு ஆட்சிக்கு வந்தால் ஒரு போண்டா, பஜ்ஜி போட விடுவீங்களா?
(தொடரும்)
சந்திப்பு: -வே.ராஜவேல்
படங்கன்: நவீன்