கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணிவெடிகள்... மீள்வாரா கார்த்தி சிதம்பரம்? -சிவகங்கை பரபரப்பு!

ss

லமான தி.மு.க. கூட்டணி, நாடாளு மன்றத் தொகுதியில் மட்டும் மூன்று அமைச்சர்கள் ஆகியன பலமாக இருந்தும், "கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணிவெடிகள் வைச்சிருக்கானுக' என்பதுபோல் பரிதவித்துவரு கின்றார் சிவகங்கை நாடாளுமன்ற வேட்பாளர் காங்கிரஸின் கார்த்தி சிதம்பரம்.

kk

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கென சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியை ஒதுக்கிய நிலையில் இந்தமுறையும் நாம்தான் சீட் வாங்கவேண்டுமென கார்த்தி சிதம்பரம் தன்னுடைய கட்சித் தலைமைக்கு நெருக்கடி கொடுத்தார். இதேவேளையில், "எம்.பி. பதவி என்பது என்ன உங்க பரம்பரை சொத்தா?, எங்களுக்கும் சீட் வேண்டும்' என முன்னாள் அமைச்சர் சுதர்சன நாச்சியப்பனும், மாணிக் தாகூர், எக்ஸ் எம்.எல்.ஏ. சுந்தரம் உள்ளிட்ட இன்னபிற காங்கிரஸ் வி.ஐ.பி.க்களும், எங்களுக் குத்தான் சீட் வேண்டுமென போர்க்கொடி தூக்கினர். "கே.எஸ்.அழகிரி காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கும்போது கூட கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக நடந்திருக்க

லமான தி.மு.க. கூட்டணி, நாடாளு மன்றத் தொகுதியில் மட்டும் மூன்று அமைச்சர்கள் ஆகியன பலமாக இருந்தும், "கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணிவெடிகள் வைச்சிருக்கானுக' என்பதுபோல் பரிதவித்துவரு கின்றார் சிவகங்கை நாடாளுமன்ற வேட்பாளர் காங்கிரஸின் கார்த்தி சிதம்பரம்.

kk

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கென சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியை ஒதுக்கிய நிலையில் இந்தமுறையும் நாம்தான் சீட் வாங்கவேண்டுமென கார்த்தி சிதம்பரம் தன்னுடைய கட்சித் தலைமைக்கு நெருக்கடி கொடுத்தார். இதேவேளையில், "எம்.பி. பதவி என்பது என்ன உங்க பரம்பரை சொத்தா?, எங்களுக்கும் சீட் வேண்டும்' என முன்னாள் அமைச்சர் சுதர்சன நாச்சியப்பனும், மாணிக் தாகூர், எக்ஸ் எம்.எல்.ஏ. சுந்தரம் உள்ளிட்ட இன்னபிற காங்கிரஸ் வி.ஐ.பி.க்களும், எங்களுக் குத்தான் சீட் வேண்டுமென போர்க்கொடி தூக்கினர். "கே.எஸ்.அழகிரி காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கும்போது கூட கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக நடந்திருக்க வாய்ப்புண்டு. இப்பத் தலைவராக இருக்கின்ற செல்வப்பெருந்தகை ப.சிதம் பரத்தின் தீவிர விசுவாசி. ஆகையால் இந்தமுறையும் சீட் கார்த்தி சிதம்பரத்திற்கே' என்றனர் காங்கிரஸின் தீவிர தொண்டர்கள். அவர்கள் எதிர்பார்த்தது போலவே கார்த்தி சிதம்பரம் சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட் பாளராகி மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றார். ஆனால் அவரது மகிழ்ச்சி சிறிது நேரம் கூட் நீடிக்கவில்லை.

"கார்த்தி என்றால் ப.சி யின் மகன் என்பது மட்டுமே தெரியும். தொகுதியில் யாரை யாவது மதித்து நடந்திருக்கின் றாரா.? அதனைக் கூறுங்கள். பணத்தை மட்டும் வைச்சிக் கிட்டு ஜெயிக்க முடியாது. இப்பவும் காங்கிரஸில்தான் இருக்கின்றேன். ஆனால் என் வாக்கு அவருக்கு கிடையாது'' என்கிறார் காரைக்குடி டவுன் பகுதியை சேர்ந்த ஒருவர்.

ss

இது இப்படியிருக்க, "தேர்தலுக்கு முன்னரே திருவாடனை சட்டமன்றத் தொகுதியில் 1989, 91, 96, 2001, 2006 ஆகிய தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற கே.ஆர். ராமசாமி, எக்ஸ் எம்.எல்.ஏ. சுந்தரம், முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் உள்ளிட்ட பெருந்தலைகளும் கார்த்திக்கு எதிரியாகி கூட்டம் போட்டு தங்களது எதிர்ப்பைக் காட்டினர். சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியைப் பொறுத்தவரை வெற்றியை நிர்ணயிப்பது முக்குலத்தோர் மற்றும் பட்டியலின சமூக வாக்குகளே. கார்த்தி சிதம்பரத்திற்கு எதிர்ப்புக் கொடி காட்டி வருவது குறிப்பிட்ட இரு சமூகத்தினர் மற்றும் வல்லம்ப சமுதாயத்தின் குறிப்பிட்ட பகுதி மக்களுமே. காரைக்குடி ச.ம.உ. மாங்குடி தன்னுடைய பக்கம் இருக்கின்றார் எனக் காட்டிக்கொண்டாலும், நாடாளுமன்றத் தொகுதி யில் பரவலாகவும், காரைக்குடி தொகுதியில் வரும் தேவக்கோட்டை பகுதி முழுவதும் கே.ஆர். ராமசாமியின் கண்ணசைவிலும், மானாமதுரை, சிவகங்கை ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் சுதர்சன நாச்சியப்பன் வசமும், உள்ளதால் காரைக்குடி டவுன் வாக்குகளை மட்டுமே நம்பி களமிறங்கி யுள்ளார் கார்த்தி சிதம்பரம்' என்கின்றனர் விபரமறிந்தவர்கள்.

சிவகங்கை டவுனை சேர்ந்த காங்கிரஸ் பேரியக்கவாதி ஒருவரோ, "உழைச்சதெல்லாம் போதும். மரியாதையும் கிடையாது. வயசில் மூத்தவர்களை மரியாதை இல்லாமல் பேசுறாப்ல. ஆகையால் இந்த தடவை கார்த்தி சிதம்பரத்திற்கு வாக்குகளை செலுத்த வேண்டாம். நம்ம சமூகத்தை சார்ந்தவர்களுக்கு வாக்கை செலுத்துங் கள். அது யாராக இருந்தாலும், எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி' என பேசி முடித்திருக்கின்றார்கள். கால் வைக்கின்ற இடெமெல்லாம் கண்ணிவெடியா போச்சே என, திங்கட்கிழமையன்று நடந்த வேட்புமனுத் தாக்கலின்போது பெரியகருப்பன், ரகுபதி மற்றும் மெய்யநாதன் உள்ளிட்ட மூன்று அமைச்சர்களை வரவழைத்து வேட்புமனு தாக்கல் செய்திருக்கின்றார். "கார்த்தி புத்திசாலி. தேர்தலை எப்படி அணுகனும்னு அவருக்குத் தெரியும்'' என்கின்றார் அவர்.

அ.தி.மு.க.வின் சேவியர்தாஸ் இந்த தொகுதியில் அ.தி.மு.க. கட்டாயம் வெற்றி பெறவேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி, சி.வி சண்முகம் உத்தரவிட்ட நிலையில் முன்னாள் அமைச்சர்கள் பாஸ்கரன், ராதாகிருஷ்ணன், ராஜன்செல்லப்பா, திருமயம் வைரமுத்து மற்றும் சிவகங்கை சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ. செந்தில்நாதன் ஆகியோர் களப்பணியாற்றி வருகிறார்கள். குறிப்பாக, கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான வாக்குகளையும், பா.ஜ.க. வாக்குகளை யும் அறுவடை செய்வதற்காக, அது குறித்து முக்கிய யயஒடக்களையும் பார்த்து வருவது குறிப்பிடத்தக்கது. நா.த.க. சார்பாக எழிலரசி களத்தில் உள்ளார்.

"என்னுடைய சமூக மக்கள் அதிகமாக இங்கிருக்கின்றனர். அதுபோக தி.மு.க., அ.தி.மு.க.விற்கு எதிரான வாக்குகள், ஓ.பி.எஸ்.ஸின் வாக்குகள் தன்னை கரைசேர்க்கும்' என பணத்தை அள்ளி இறைத்து வருகிறார் தாமரைச் சின்னத்தில் போட்டியிடும் இந்திய மக்கள் கல்வி கழகத்தின் வேட்பாளரான தேவநாதன்.

சிவகங்கை தொகுதி பரபரப்பாகியுள்ளது. கார்த்தி சிதம்பரம் பிரச்சினைகளை சமாளித்து மீள்வாரா என காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சியினர் திக்.. திக்... நிலையிலேயே உள்ளனர்

-நா.ஆதித்யா

படங்கள்: விவேக்

nkn300324
இதையும் படியுங்கள்
Subscribe