ல ஆண்டுகளாக நடந்துவந்த சட்டப்போராட்டத்தின் விளைவாக பஞ்சமி நில மீட்பில் முக்கியமான உத்தரவைப் பிறப்பித்தது சென்னை உயர்நீதிமன்றம். இறுதிக்கட்டத்தை நெருங்கியும் அதை கிடப்பிலேயே வைத்திருக்கிறது பஞ்சமர் நில மீட்புக்கான மத்தியக்குழு.

land

சமூக மற்றும் பொருளாதார நிலையில் அடித்தட்டில் இருக்கும் பட்டியலின மக்களின் தரத்தை உயர்த்த நில உரிமை அத்தியாவசியமாகிறது. இதே காரணத்தால் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்து ஆட்சியர் ஜேம்ஸ் ட்ரெமென்கீர் என்பவரின் முயற்சியிலும், சுதந்திரத்திற்குப் பின்னர் பல்வேறு முன்னெடுப்புகளாலும் பட்டியலின மக்களுக்கு நிலங்கள் வழங்கப்பட்டன. சேரி நத்தம், வெட்டியான் மானியம், பூமிதானம், ஜமீன் ஒழிப்பு உள்ளிட்ட 14 வகையான நிபந்தனைக்குட்பட்ட இத்தகைய நிலங்களை, வருவாய் நிலையாணை 15/41 நிலப்பாதுகாப்பு விதிகளை மீறி எஸ்.இ./எஸ்.டி. அல்லாதோர் அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் துணையோடு அபகரித்துள்ளனர்.

Advertisment

சுமார் 12 லட்சம் ஏக்கருக்கும் மேல் அபகரிக்கப்பட்ட பஞ்சமி நிலத்தை மீட்கக்கோரி, உச்சநீதிமன்றம்வரை சட்டப்போராட்டம் நடந்தது. நிலத்தை இழந்தவர்களுக்கே மீண்டும் ஒப்படைக்குமாறு தீர்ப்பு வழங்கியும், அரசு தரப்பு இதனை மெத்தனமாகவே கையாண்டது. இந்நிலையில், அரசு தலைமைச் செயலாளர் தலைமையில் பஞ்சமர் நிலமீட்புக்கான மத்தியக் குழு ஒன்றை அமைக்கவேண்டும் என நாகர் சேனை அமைப்பின் தலைவர் அருங்குணம் விநாயகம் என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

landசென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷான் கவுல் மற்றும் நீதிபதி சிவஞானம் அமர்வு ஆகஸ்ட் 12, 2015 அன்று வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. அதில், “"தலைமைச்செயலாளர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் முதன்மைச் செயலாளர் அடங்கிய பஞ்சமர் நிலமீட்பு மத்தியக் குழுவை அமைத்து, பஞ்சமி நிலங்களை மீட்டு அதிகபட்சமாக ஆறுவார காலத்திற்குள் மக்களிடம் ஒப்படைக்க வேண்டும்'’என உத்தரவிடப்பட்டது.

அதன்படி, அப்போதைய தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், அரசாணை நிலைஎண் 357-ன் கீழ் பஞ்சமர் நிலமீட்பு மத்தியக்குழுவின் தலைவராக நிலநிர்வாக ஆணையர் கிரிஜா வைத்தியநாதனையும், ஆதிதிராவிடர் செயலாளர் மற்றும் அரசு வருவாய் செயலாளரை உறுப்பினர்களாகவும் நியமித்து ஆணை பிறப்பித்தார்.

Advertisment

பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தை பட்டியலின மக்கள் தவிர வேறு யாருக்கும் விற்கவோ, தானமாக வழங்கவோ முடியாது. அதற்கு முற்பட்டால் பத்திரப்பதிவு அதிகாரி பதிவுசெய்யக்கூடாது. அதையும் மீறினால், எந்தக் காலத்திலும் எந்த நஷ்டஈடும் இன்றி நிலத்தை வாங்கியவரிடம் இருந்து அரசு பறிமுதல் செய்யலாம் என்பது விதி. இந்த விதிகளையெல்லாம் கண்டுகொள்ளாமல் அபகரிக்கப்பட்ட நிலத்தை மீட்க, 1994-ல் மிகப்பெரிய போராட்டம் வெடித்தது. செங்கல்பட்டில் குழிப்பான் தண்டலம் ஏழுமலை, பாப்பநல்லூர் ஜான்தாமஸ் உள்ளிட்டோர் காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

பஞ்சமர் நிலமீட்பில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வரும் நாகர்சேனை தலைவர் அருங்குணம் விநாயகம், ""டிசம்பர் 12, 2013-ல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அகலி, சிறுநல்லூர், முதுகரை, ஒரத்தூர் பகுதிகளில் இருக்கும் பஞ்சமி நிலங்களை, அவற்றின் உரிமையாளர்களுக்கு வழங்கக்கோரி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை ஏப்ரல் 26, 2014-ல் “பஞ்சமி நிலமீட்பில் முதல் வெற்றி’என பதிவுசெய்தது நக்கீரன். பஞ்சமர் நிலமீட்பு மத்தியக்குழு அமைக்கவும் நக்கீரன்தான் எங்களுக்கு உந்துசக்தியாக இருந்தது. ஆனால், பட்டியலின மக்களுக்கு சொந்தமான நிலத்தை மீட்டுத்தருவதில் அரசுகளுக்கு கொஞ்சமும் விருப்பமில்லை. காலதாமதத்தைச் சுட்டிக்காட்டி தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகாரளித்தபோது, கடந்த மே 26-ல் குறைந்தது 2 லட்சம் ஏக்கர் நிலத்தை மீட்டு ஜூலை 15-க்குள் மக்களிடம் ஒப்படைப்போம் என உறுதியளித்தது பஞ்சமி நிலமீட்புக்குழு. இருப்பினும், எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை''’என்கிறார் ஆதங்கத்துடன்.

""சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய ஆறுவாரகால அவகாசம் முடிந்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன. தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் அளித்த உறுதியையும் பஞ்சமர் நிலமீட்பு மத்தியக்குழு மறந்துவிட்டது. “முன்னாள் முதல்வரும், பிரதமரும் மறைந்த காரணத்தால் பணியைத் தொடர முடியவில்லை. இப்போதுதான் தொடங்கியிருக்கிறோம்''’என்கிறார் பஞ்சமர் நிலமீட்பு மத்தியக்குழு தலைவர் ஓட்டம் டைய். “""இதுதொடர்பாக எனக்கு எந்தத் தகவலும் தெரியாது''’என கூறுகிறார் வருவாய்த்துறை செயலாளர் மிஸ்ரா. நில நிர்வாக ஆணையர் ஜெயக்கொடி இதைப்பற்றி பேச மறுத்துவிட்டார்.

‘பஞ்சமி நில மீட்பு’ என்பது சமூகத்தில் நலிவடைந்த பட்டியலின மக்களை, நில உரிமையின் மூலம் பாதுகாக்கும் பெரும்பணியாகும். ஆனால், அதைப்பற்றிய எந்தவித கவலையும் இல்லாத அரசு மற்றும் அதிகாரிகளால் அது இன்னமும் கானல்நீராகவே இருக்கிறது.

-அ.அருண்பாண்டியன்