பா..ஜ.க. பொதுக்கூட்டத்தில் பேசிய விஜயதாரணி, கட்சிக்கு வந்து ஆறு மாதம் ஆகிறது. எந்த பொறுப்பும் வழங்கவில்லை என்று பேசியிருக்கிறாரே?
ஆறு மாதம் அல்ல... ஆறு வருஷம் ஆனாலும் பொறுப்பு வராது. விஜயதாரணி செய்தது தவறு. தி.மு.க.வில் இருந்து நான் வெளியே வர காரணம், 15 வருடமாக இருந்தும் எதுவும் செய்யவில்லை என்பதால்தான். ஆனால் நீங்கள் மூன்றாவது முறை எம்.எல்.ஏ., சட்டமன்ற கொறடா, தேசிய அளவில் பதவி என கொடுத்தார்கள். பெண் களுக்கு முக்கியத்துவம் அளிக்க வில்லை என்று வெளியே வந்தார்.
எம்.பி. சீட் கேட் டும் கிடைக்கவில்லை, பெண் என்பதால் தர மறுக்கிறார் கள் என குற் றம் சாட்டு கிறாரே?
இங்கேயும் எம்.பி. சீட் கொடுக்கவில்லை, சீட் கிடைக்கவில்லை என பா.ஜ.க.வை விட்டு வெளியே வந்துவிடுவீர்களா? காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு மாநிலத் தலைவர் பதவி கொடுக்கவில்லை என்கிறார். ஜெகன்மோகன் தங்கைக்கு பதவி கொடுத்தது தெரியவில்லையா? இத்தாலி பெண் என எதிர்க்கட்சிகள் சொன்னதால்தான் சோனியா காந்தி பிரதமர் பதவியை ஏற்காமல் இருந்திருந்தார். இல்லையென்றால் அவர் பிரதமராகியிருப்பார். பிரியங்கா காந்தியை முன்னிலைப்படுத்தவில்லையா? காங்கிரஸ் கட்சியிலும், தி.மு.க.விலும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். கட்சியில் பாரம்பரியமாக இருக்கிற தலைவர் களின் மகள்களே கட்சிக்கு வர பயப்படுகிறார்கள். தைரியமாக வந்தால் பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது. அ.தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ் என எந்தக் கட்சியில் இருந்தாலும் பதவியில் இருந்தவர் திருநாவுக்கரசர். அப்பேர்ப்பட்டவருக்கே சீட் இல்லை என்று சொல்லிவிட்
பா..ஜ.க. பொதுக்கூட்டத்தில் பேசிய விஜயதாரணி, கட்சிக்கு வந்து ஆறு மாதம் ஆகிறது. எந்த பொறுப்பும் வழங்கவில்லை என்று பேசியிருக்கிறாரே?
ஆறு மாதம் அல்ல... ஆறு வருஷம் ஆனாலும் பொறுப்பு வராது. விஜயதாரணி செய்தது தவறு. தி.மு.க.வில் இருந்து நான் வெளியே வர காரணம், 15 வருடமாக இருந்தும் எதுவும் செய்யவில்லை என்பதால்தான். ஆனால் நீங்கள் மூன்றாவது முறை எம்.எல்.ஏ., சட்டமன்ற கொறடா, தேசிய அளவில் பதவி என கொடுத்தார்கள். பெண் களுக்கு முக்கியத்துவம் அளிக்க வில்லை என்று வெளியே வந்தார்.
எம்.பி. சீட் கேட் டும் கிடைக்கவில்லை, பெண் என்பதால் தர மறுக்கிறார் கள் என குற் றம் சாட்டு கிறாரே?
இங்கேயும் எம்.பி. சீட் கொடுக்கவில்லை, சீட் கிடைக்கவில்லை என பா.ஜ.க.வை விட்டு வெளியே வந்துவிடுவீர்களா? காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு மாநிலத் தலைவர் பதவி கொடுக்கவில்லை என்கிறார். ஜெகன்மோகன் தங்கைக்கு பதவி கொடுத்தது தெரியவில்லையா? இத்தாலி பெண் என எதிர்க்கட்சிகள் சொன்னதால்தான் சோனியா காந்தி பிரதமர் பதவியை ஏற்காமல் இருந்திருந்தார். இல்லையென்றால் அவர் பிரதமராகியிருப்பார். பிரியங்கா காந்தியை முன்னிலைப்படுத்தவில்லையா? காங்கிரஸ் கட்சியிலும், தி.மு.க.விலும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். கட்சியில் பாரம்பரியமாக இருக்கிற தலைவர் களின் மகள்களே கட்சிக்கு வர பயப்படுகிறார்கள். தைரியமாக வந்தால் பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது. அ.தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ் என எந்தக் கட்சியில் இருந்தாலும் பதவியில் இருந்தவர் திருநாவுக்கரசர். அப்பேர்ப்பட்டவருக்கே சீட் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். கட்சியில் சீனியரான தன்னை பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் அறிவிக்கணும் என ப.சிதம்பரத்திற்கு ஆசை இருக்கு. ஆசை எல்லோருக்கும் இருப்பதுதான். உங்களுக்கு 3 முறை எம்.எல்.ஏ. சீட் கொடுத்துள்ளது காங்கிரஸ். காங்கிரஸ் கட்சியில் எந்த பதவியையும் அனுபவிக்காமல் எத்தனை பேர் உள்ளனர். தி.மு.க.வில் மிசாவில் உள்ளே போயிட்டு வந்த 85 சதவீத பேருக்கு கடைசிவரை எந்த பதவியும் கிடைக்கல.
விஜயதாரணிக்கு பதவி கிடைக்குமா? கிடைக்காதா?
கண்டிப்பாக கொடுக்கமாட்டார்கள். எம்.எல்.ஏ. பதவியை தியாகம் செய்துவிட்டு விஜயதாரணி வந்திருக்கிறார் என மா.தலைவர் சொல்கிறார். இதேபோல் போன கு.க.செல்வத்துக்கு, மதுரை சரவணனுக்கு என்ன பதவி கொடுத்தார்கள்? சிட்டிங் எம்.எல்.ஏ. யாரையாவது பா.ஜ.க.வுக்கு அழைத்து வந்தீங்களா? என மா.தலைவருக்கு டெல்லி கேட்டுக்கொண்டே இருந்தது. அது மட்டுமல்ல பொன்.ராதாகிருஷ்ணனுக்கு எம்.பி. சீட் கிடைக்கக்கூடாது. அவர் பா.ஜ.க. சீனியர் மட்டுமல்ல, மோடி உள்ளிட்ட பெரும் தலைவர்களுடன் தொடர்பு உள்ளவர். அவர் வெற்றிபெற்றால் தனக்கு மரியாதை கிடைக்காது என நினைத்த மா.தலைவர், காங்கிரஸ் மேலிடம் மீது விஜயதாரணி கோபமாக இருந்ததை பயன்படுத்தி, எம்.பி. சீட் உறுதியாகப் பெற்றுத்தருகிறேன் என சொல்லி பா.ஜ.க.வில் சேர வைத்துள்ளார். சிட்டிங் எம்.எல்.ஏ.வை பா.ஜ.க.வில் இணைத்துள்ளேன் என்ற பெயரை எடுத்த மா.தலைவர், விஜயதாரணியை அம்போவென விட்டுவிட்டார்.
இப்போது எம்.பி. சீட் கிடைக்கல, கட்சியில் ஏதாவது பதவி கொடுக்க வேண்டியதுதானே? என கேட்கிறார் விஜயதாரணி. விபி.துரைசாமி, கே.பி.ராம லிங்கம் என கட்சிக்கு வந்தவர்களுக்கெல்லாம் உடனே பதவி வழங்கினார்கள். ஏன் இவருக்கு மட்டும் வழங்கவில்லை. நானாவது பரவாயில்லை. விஜயதாரணி பா.ஜ.க.வை விட்டு வெளியேவந்தால் என்னைவிட மூன்று மடங்கு பேசுவார். அதை மா.தலைவர் தாங்குவாரா என தெரியவில்லை.
நம்ம நக்கீரன் பேட்டியோட தாக்கத்தை சொல்கிறேன். ஒரு முன்னாள் எம்.எல்.ஏ. பா.ஜ.க.வுக்கு போவதற்காக பேச்சுவார்த்தையில் இருந்துள்ளார். அவரிடம் மா.தலைவர் போனில் பேசும்போது, "என்னண்ணே கட்சிக்கு வர்றேன் வர்றேன்னு சொல்றீங்க. ஆனா வரமாட்டேங்குறீங்க'ன்னு வருத்தப்பட்டிருக்கிறார். அதற்கு அந்த முன்னாள் எம்.எல்.ஏ., "நான் வரலான்னுதான் இருந்தேன். திருச்சி சூர்யா பேட்டி யை பார்த்ததும், என் மனசு மாறிப்போச்சி. என்னை ஆளை விடுங்க'ன்னு போனை கட் பண்ணியுள்ளார். நான் பேசியது உண்மை. பா.ஜ.க. மோசம். அதைவிட மோசம் மா.தலைவர். அவரை நம்பி போனீங் கன்னா, விஜயதாரணி போலத்தான் நிலைமை வரும். அதனால் விஜயதாரணி அக்காவே கடைசியாக இருக்கட்டும். நயினாருக்கு சொன்னதுதான், 2026ல் விஜயதாரணிக்கு எம்.எல்.ஏ. சீட் கொடுப்பதாகச் சொல்வார்கள். அதற்கு நான் காங்கிரஸ் கட்சியிலேயே இருந்திருப்பேனே என்பார்.
2029ல் எம்.பி. சீட் கொடுத்தாலும் வயது ஒத்துழைக்குமா? அப்படியே ஜெயித்தா லும் மத்தியில் பா.ஜ.க. வருமா?
நான் சொல்வது இதுதான், தலைஎழுத்துன்னு ஒண்ணு இருக்கு. என்ன எழுதி வைச் சிருக்கோ அதுதான் நடக் கும். செந்தில்பாலாஜி அமைச்சராகணும் என தலையில் எழுதி யிருக்கு. அ.தி. மு.க.வில் இருந்து அ.ம.மு.க. வந்து, அ.ம.மு.க. வில் இருந்து தி.மு.க. வந்தார். செந்தில்பாலாஜி தி.மு.க. வருவார், மா.செ. ஆவார் என்று யாராவது நினைத்தார்களா? அ.தி.மு.க.வில் இருந்தபோதும் அமைச்சர், தி.மு.க. விற்கு வந்த பிறகும் அமைச்சர், கொங்கு மண்டல சிங்கமாகி, மூத்த அமைச்சர்களைவிட முதலமைச்சர் குடும்பத்துடன் நெருக்கமாகிவிட் டார். இதே வி.பி.துரைசாமி தி.மு.க.வில் இருந் திருந்தால், எம்.எல்.ஏ.வாகவோ, எம்.பி.யாகவோ ஆகியிருப்பார். ராஜ்யசபா சீட்டை அந்தியூர் செல்வராஜுக்கு கொடுத்துவிட்டார்கள் என்று பா.ஜ.க.வுக்கு போனார். நல்ல மரியாதையுடன் தி.மு.க. வைத்திருந்தது. பா.ஜ.க.வில் எந்த மரியாதையும் கிடைக்கவில்லை. குஷ்புவும், வி.பி.துரைசாமியும் ஏன் பா.ஜ.க.வில் இன்னும் இருக்கிறார்கள் என்றால் அவர்களின் கடன்களை அடைக்க பா.ஜ.க. உதவி செய்துள்ளது. வி.பி. துரைசாமி மீண்டும் தி.மு.க.வில் இணைவதற்கு முயற்சி செய்தார். இங்க என்ன வேலை இருக்கு அவர் வருவதற்கு, இங்க வந்து எதுவும் கழட்ட வேணாம் அங்கேயே இருக்கட்டும் என்று ஸ்டாலின் ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டார்.
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ஏன் ராஜினாமா செய்தார்கள்?
மா.தலைவர் செய்த அரசியல்தான். குஷ்பு சினிமா ஸ்டார். ஃபேஸ் வேல்யூ இருக்கிறது. தி.மு.க.வில் இருந்தபோது அ.தி.மு.க.வை எதிர்த்து கடுமையாக பிரச்சாரம் செய்தார். தி.மு.க. சார்பாக ஆங்கில மீடியாக்களில் டிபேட்டுகளில் பங்கேற் றார். இதேபோலத்தான் காங்கிரஸ் கட்சியிலும் இருந்தார். பா.ஜ.க.வுக்கு அவர் வந்ததே ராஜ்யசபா எம்.பி. சீட் கேட்டுதான். ஆனால் மா.தலைவரோ எம்.எல்.ஏ.வுக்கு நில்லுங்க, அ.தி.மு.க. கூட்டணியில் நாம் ஜெயித்துவிடலாம் என்று போட்டியிட வைத்துள்ளார். அதற்கு பின்னர் எம்.பி. தேர்தலில் அவர் போட்டியிடக்கூடாது என்பதற்காக பிரச்சாரத்திற்கு போகு மாறு பா.ஜ.க. ஏற்பாடு செய்தது. அப்போது எம்.பி. சீட் தராத கோபத்தில், தனக்கு உடல்நிலை சரியில்லை என்று ஒதுங்கிக் கொண்டார் குஷ்பு. நேரடி அரசியலில் ஈடுபட்டால் டெவலப் ஆகிவிடுவாரோ என்ற பயத்தில்தான் குஷ்புவை தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவிக்கு அனுப்பினார் மா.தலைவர்.
எச்.ராஜாவுக்கு என்ன செல்வாக்கு இருக்கிறது? எங்கே யாவது கோவிலுக்கு போவார், அங்க மீடியாவை பார்த்ததும் ஒரு பேட்டி கொடுப்பார். தான் இருப்பதை அவ்வப்போது இப்படித்தான் காட்டிக்கொள்வார். இதேபோல் குஷ்பு வந்துவிடு வாரோ என்று பயந்துதான் மா.தலைவர் அவரை ஆணைய உறுப்பினராக்கினார். உயரிய பதவி கேட்டு பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். ராஜினாமாவை பார்த்து மேலிடம் பயந்து வேறு பதவி கொடுப்பார்கள், இல்லையென்றால் கூப்பிட்டு பேசுவார்கள் என்று நினைத்தார். ஆனால் மேலிடமோ, ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று சொல்லிவிட்டதால் கடும் அப்செட் ஆகிவிட்டார். வேறு வழியில்லாமல் இவரே மீடியாக்களை அழைத்து நான் ராஜினாமா செய்துவிட்டேன் என்று சொல்லியிருக்கிறார்.
தி.மு.க.வுக்கு என்னைப் பார்த்தால் பயம் என்கிறார் குஷ்பு. இத்தனை வருடமாக திரைத்துறையில் இருந்தீங்க, அரசியலில் இருந்தீங்க. ஒரு கவுன்சிலர் தேர்தலில்கூட ஜெயிக்க முடியவில்லை. உங்களால்தான் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கட்சியில் இருந்து நீக்கினார்களா? ஆளுநர் பற்றியும்தான் பேசியிருக்கிறார். அவர் பேசியது கட்சிக்கே பிடிக்கவில்லை. உங்களுக்கு பயந்து எடுக்க வில்லை. தி.மு.க.வுக்கு என்னைப் பார்த்தால் பயம் என குஷ்பு சொல்வது வேடிக்கையானது.
(தொடரும்...)
சந்திப்பு: -வே.ராஜவேல்