கன்னியாகுமரி அருகே மயிலாடி பகுதியில் இயங்கிவருகிறது அந்த தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி. இந்த பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்துவருகின்றனர். அந்தப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக இருந்த கோட்டார், வட்டவிளை பகுதியைச் சேர்ந்த 32 வயதான சுந்தர்சிங் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் பழகி பாலியல் பலாத்காரம் செய்து,...
அதை வீடியோ எடுத்து மிரட்டுவதாக மாணவியின் பெற்றோர் கன்னியாகுமரி மகளிர் போலிசில் புகார் கொடுத்தனர்.
இதையடுத்து 7-ஆம் தேதி போக்சோ வில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக் கப்பட்ட உடற்கல்வி ஆசிரியர் சுந்தர்சிங் கின் செல்போனில் மாணவிகள், ஆசிரியை களின் ஏராளமான ஆபாச வீடியோக்கள், நிர்வாண புகைப்படங்கள் இருப்பதைக் கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து இந்த வழக்கை நாகர்கோவில் சைபர் க்ரைம் பிரிவுக்கு மாற்றி எஸ்.பி. சுந்தரவதனம் உத்தரவிட்டார்.
சுந்தர்சிங் மீது புகார் கொடுத்த மாணவியின் பெற்றோரிடம் பேசியபோது, “"இவன் பல பள்ளிகளில் வேலை பார்த்துட்டு கடந்த ஆண்டு ஜனவரியிலதான் இந்தப் பள்ளிக்கு வந்தான். எங்களது வீட்டுக்குப் பக்கத்துலதான் வாடகை வீடு எடுத்து, மனைவி மற்றும் 3 வயதுக் குழந்தையுடன் வசித்து வந்தான். எங்க மகள் 8-ஆம் வகுப்பிலிருந்தே வாலிபால் விளையாடி வருகிறாள். பள்ளியில் வாலிபால் பயிற்சி கொடுக்கும் போது சுந்தர்சிங் என் மகளுடன் பேசிப் பழகியிருக்கிறான். ஒருகட்டத்தில் எங்களுக்கு அறிமுகமானதையடுத்து, "நான் உங்க மகளை வாலிபால் விளையாட்டில் நல்ல இடத்துக்குக் கொண்டுவருவேன்' என கூறினான். அதனால இவர்கள் இருவரும் பேசிப் பழகுவதை நாங்க பெரிசா எடுத்துக்கலை. இதை சாதகமாகப் பயன்படுத்திய சுந்தர்சிங், எனது மகள் தனியாக இருக்கும்போது வீடியோகாலில் பேசி, "உன்னை தேசிய அளவில் வாலிபால் போட்டி களில் கலந்துகொள்ள வைப்பேன்' என ஆசை வார்த்தைகளைக் கூறி பாலியல்ரீதியாக உறவு வைத்து அதை வீடியோ எடுத்து, அடிக்கடி மகளை மிரட்டி வந்துள்ளான். ஒருகட்டத்தில் என்னிடமே (மாணவியின் தாயார்), "உங்க மகளின் ஆபாச வீடியோ என்னிடம் நிறைய இருக்கிறது. அதை அழிக்கவேண்டுமென்றால் நீங்கள் அந்த மாதிரியான கோலத்தில் வீடியோகாலில் வர வேண்டுமென்று தொடர்ந்து மிரட்டியதால்தான் புகார் கொடுத்தோம். எங்க மகளைப்போல் பல பிள்ளைகளை பாலியல்ரீதியாக அவன் சீண்டியுள்ளதோடு, வீடியோக் களும் எடுத்துள்ளான்''” என்றனர்.
சுந்தர்சிங் பற்றி நாம் விசாரித்ததில் அதிர்ச்சியான பல தகவல்கள் கிடைத் தன.
நாகர்கோவிலிலுள்ள கல்லூரி ஒன்றில் 4 ஆண்டுகள் இளங்கலை உடற்கல்வியியல் பட்டயப் படிப்பு படித்த சுந்தர்சிங், 10ஆம் வகுப்பு வரை உள்ள தனியார் ஆங்கிலப் பள்ளி ஒன்றில் உடற்கல்வி ஆசிரியராக பணி யில் சேர்ந்தார். அங்கு பணியில் சேர்ந்த ஒருசில நாட்களில் பள்ளி ஆசிரியை களிடம் நெருங்கிப் பழகியதுடன், சில ஆசிரியைகளிடம் எல்லை மீறி நடக்க ஆரம்பித்தார். உடற்பயிற்சி வகுப்பு நேரங்களிலும் மாணவிகளின் உடம்பில் அங்குமிங்கும் தொட்டுப் பேசியதாக மாணவிகள் தந்த புகாரால் சில மாதங்களிலே அந்தப் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டார்.
பிறகு பள்ளம் பகுதியிலுள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் பணி யில் சேர்ந்த அவர், அங்குள்ள ஆசிரியைகளுக்கு செல்போன் மூலம் ஆபாச மெசேஜ்கள் அனுப்பியதால் அந்த பள்ளியிலிருந்தும் துரத்தப்பட் டார். இறச்சகுளத்தில் ஒரு பள்ளியில் சேர்ந்த அவர், பள்ளி வேனில் வந்துசெல்லும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்ததால் அங்கி ருந்தும் வெளியே தள்ளப்பட்டார்.
சுந்தர்சிங் இதுவரை 10 பள்ளிகளில் வேலை பார்த்திருக்கிறார். எந்த பள்ளி யிலும் நிரந்தரமாக வேலை செய்யமாட் டார். எல்லா பள்ளிகளிலும் பிரச்சனை யாகி நிர்வாகத்தால் வெளியே துரத்தப் படுவார். வெளியே தெரிந்தால் பள்ளியின் பெயர் கெட்டுப் போய்விடும் என்பதால் பள்ளி நிர்வாகமும் அவர் மீது எந்த நட வடிக்கைக்கும் போகாமல் அப்படியே விட்டுவிடுகிறார்கள். சுந்தர்சிங்கின் வலை யில் சிக்கிய மாணவிகள், ஆசிரியைகள், மாணவிகளின் அம்மாக்கள் என சுமார் 50 பேராவது இருக்கும்'' என்கிறார்கள்.
இதுகுறித்து சைபர் க்ரைம் போலீஸ் தரப்பில் நாம் விசாரித்தபோது, “"சுந்தர் சிங்கின் செல்போன், அவனிடமிருந்து கைப்பற்றப்பட்ட பென்ட்ரைவில் மாணவிகள், ஆசிரியைகள், மாணவி களின் தாயார்களின் அந்தரங்க வீடியோக் கள், நிர்வாணமாக அட்டெண்ட் செய்த வாட்ஸ்ஆப்-கால் காட்சிகள் என சுமார் 75 வீடியோக்களும் 100-க்கு மேற்பட்ட நிர்வாணப் புகைப் படங்களும் உள்ளதாக தகவல் கிடைத்தது. விளையாட்டில் ஆர்வ மாக இருக்கும் மாணவிகளின் அம்மாக்களிடம், "உங்க மகளை ஸ்போர்ட்ஸில் உயர்ந்த இடத்துக்கு என்னால் கொண்டுவர முடியும்' என்று வலைவிரிக்கும் சுந்தர்சிங், மகளையும் சமயங்களில் தாயையும் இரையாக்கி தன்னுடைய காமப் பசியை தீர்த்திருக்கிறான்.
சுந்தர்சிங்கை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க இருப்பதாகவும், அப்போது மேலும் பல தகவல்கள் கிடைக்கும் என்றும், அதுபோல் செல்போன், பென்ட்ரைவில் இருக்கும் மாணவி கள், பெண்களை அடையாளம் கண்டு ரகசியமாக புகார் வாங்கவும் முடிவு செய்திருப்பதாக சைபர் க்ரைம் போலீசார் தெரிவித்தனர்.
நாகர்கோவில் காசி, பிலாங்கலை பாதிரியார் பெனிட்டிக் ஆன்டோ வரிசையில் தற்போது மாட்டியிருக்கிறார் சுந்தர்சிங்.