பொங்கல் முதல் தியேட்டர்களில் 100% பார்வையாளர்களை தமிழக அரசு அனுமதிக்கும் என்ற நம்பிக்கை சினிமா உலகைச் சேர்ந்தவர்களுக்கு இருக்கிறது. இந்த நம்பிக்கையில்தான் விஜய்யின் ‘"மாஸ்டர்', சிம்புவின் ‘"ஈஸ்வரன்'’ படங்களை ரிலீஸ் செய்யும் முடிவுக்கு வந்துள்ளனர் சம்பந்தப்பட்ட படங்களின் தயாரிப்பாளர்கள்.
இந்நிலையில்... 2021 ஜனவரி 16-லிருந்து 24 வரை கோவாவில் நடக்கும் 51-ஆவது சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவில் போட்டியிட கணேஷ் விநாயகன் டைரக்ட் பண்ணிய ‘"தேன்'’ படம் தேர்வாகியுள்ளது. அருள் நிதியை வைத்து "தகராறு'’ படத்தை எடுத்த கணேஷ் விநாயகத்திற்கு இந்த செய்தி, காதில் இன்பத்தேன் பாய்ந்தது போல் இருக்காம். உலக சினிமா ரசிகர்களால் கொண்டாப்படும் ஆஸ்கர் விருதுக்கு அடுத்தபடி யாக "கோல்டன் குளோப்' விருதுகள் புகழ் பெற்றவை. அமெரிக்காவில் ஆண்டுதோறும் நடக்கும் இந்த விருது விழாவின் 78-ஆம் நிகழ்வு, கொரோனா காரணமாக நவம்பர் மாதத்திற்குப் பதில் 2021 பிப்ரவரி மாதம் பெவர்லி ஹில்ஸில் நடக்கிறது.
இந்த விருதுபெறும் அயல்நாட்டு மொழி திரைப்படங்கள் பட்டியலில் தமிழ் சினிமாவிலிருந்து சுதா கொங்கரா டைரக்ஷனில் சூர்யா நடித்த ‘"சூரரைப் போற்று'’ படமும் வெற்றிமாறன் டைரக்ஷனில் தனுஷ் நடித்த "அசுரன்'’ படமும் தேர்வாகி, தமிழ் சினிமாவுக்கு புதிய கௌரவத்தைக் கொடுத்துள்ளது.
இந்த ஆண்டு உலகம் முழுவதுமே கொரோனாவின் பிடியில் சிக்கியதால், "ஓ.டி.டி.யில் ரிலீசான படங்களையும் விருது தேர்வுக்கு அனுப்பலாம்'’ என்ற புது விதியையும் சேர்த்தது கோல்டன் குளோப் கமிட்டி. அந்த வகையில் ஓடிடியில் ரிலீசான முதல் தேர்வாக ’’"சூரரைப் போற்று'’ அமைந்திருப் பதில் சூர்யாவுக்கும் சுதா கொங்கராவுக்கும் ரொம்பவே மகிழ்ச்சி. இந்த மகிழ்ச்சிக் கிடையேதான் சூர்யாவை நோக்கி புதிய சர்ச்சையும் கிளம்பி யுள்ளது. அதாவது ‘"சூரரைப் போற்று'’’ படத்தில் ஹீரோயின் அபர்ணா பால முரளியை சூர்யா திருமணம் செய்யும் காட்சியின் பின்னணி யில் தந்தை பெரியார் படம் இருக்கும். திருமணம் முடிந்ததும் மண ஜோடி பறை இசைக்கு பக்கா டான்ஸ் ஆடும். அந்த சீனை கம்பேர் பண்ணித்தான், அதுவும் கோல் டன் குளோப் விருதுக்குத் தேர்வாகியிருக்கும் இந்த நேரத் தில்தான் சோஷியல் மீடியாவில், ‘"படத்தில் பெரியாரையும் கருப்புச் சட்டையையும் காட்டும் சூர்யாவும் சுதா கொங்கராவும் மிக சமீபத்தில் சென்னையில் உள்ள காளிகாம்பாள் கோவிலில் எலுமிச்சை மாலையுடன் பக்திப் பரவசமாக இருந்தது எப்படி?' என ஒரு குரூப் கேள்வி எழுப்பி புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
எய்யா சோஷியல் மீடியா சொக்கநாதங்கய்ங்களா, நாத்திகரான பெரியாரை ஆன்மிகவாதியான குன்றக்குடி அடிகளாரும், இவரை அவரும் தேடிப்போய் சந்தித்துள்ளனர். அதனால் உங்க குசும்பை விட்டுவிட்டு, சூர்யா ஆற்றிவரும் கல்விச் சேவையைப் பாருங்கய்யா?
பழைய வில்லங்கம்!
பலே கூட்டணியின் "பாம்பாட்டம்'’என்ற தலைப்பில் கடந்த டிச.19-22 இதழில் வெளியிட்டிருந்த செய்தி சினிமா தயாரிப்பாளர்கள் மத்தியிலும் ஃபைனான்சியர்கள் மத்தியிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதழ் வெளியான அன்று சில தயாரிப்பாளர்களும் ஃபைனான்சியர்களும் நம்மைத் தொடர்பு கொண்டு, டைரக்டர் வடிவுடையான், தயாரிப்பாளர் பழனிவேல் பற்றிய பழைய வில்லங்கங்களை விலாவாரியாக விளக்கினார்கள். ""ஏபி பிலிம் கார்டனின் ஆனந்தன் என்ன ஆனார் எனத் தெரியவில்லை, பழனிவேல் இப்ப படம் எடுக்க வந்திருக்கார்னு எழுதியிருந்தீங்க. ஆறேழு வருசங்களுக்கு முன், போர்ஜரி டாக்குமெண்ட் டைக் காட்டி 33 லட்ச ரூபாய்க்கு சாலிகிராமம் வீட்டை ஆர்.ஏ.புரத் தைச் சேர்ந்த சிவரஞ்சன் என்பவருக்கு விற்ற வழக்கில் கைதாகி ஜெயிலுக்குப் போய்விட்டு வந்தார் பழனிவேல்.
அதேபோல் ‘"வீரமாதேவி'’யில் சன்னி லியோனைக் காட்டி பல ஃபைனான்சியர்களிடம் 13 கோடி வசூல் பண்ணினார் வடிவுடையான். சன்னிலியோன் சம்பந்தப்பட்டது என்பதால் ஃபைனான்சியர்களால் வெளியில் சொல்ல முடியாது. இதேபோல் நரேஷ் கோத்தாரி என்பவரிடம் விஷாலை வைத்து படம் பண்ணித் தருவதாக சொல்லி 47 லட்சம் மோசடி செய்த வடிவுடையானும் ஜெயிலுக்குப் போனவர்தான். அவரின் மனைவி உமாராணி முன் ஜாமீன் வாங்கினார்.
அந்த வழக்கில் ஜாமீன் பெற உத்தண்டியில் உள்ள 50 லட்ச ரூபாய் சொத்தை ஷுரிட்டியாக காட்டினார் வடிவுடையான். அந்த ஷுரிட்டியில் பெரிய வில்லங் கம் இருப்பதை இப்போது போலீஸ் கண்டு பிடித்துள்ளது. இப்போது மல்லிகா ஷெராவத்தைக் காட்டி 3 கோடி வசூலை பழனிவேலும் வடிவுடையானும் ஆரம்பித்த தும் ஒருவாரமாக ‘"பாம்பாட் டம்'’ ஷூட்டிங் நடக்கிறது. இனிமேல்தான் ஆட் டத்தின் போக்கு தெரியும்'' ’’ என்றார்கள்.
-ஈ.பா.பரமேஷ்வரன்