பாலிவுட்டில் சினிமா நட்சத்திரங்கள், அடிக்கடி போதை பார்ட்டிகளில் சிக்குவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தும். டோனி பட நாயகன் சுஷாந்த்சிங் உயர்ரக போதைப்பொருளை பயன்படுத்திய நிலையில் மர்மமான முறையில் மும்பையில் தன் வீட்டில் இறந்து கிடந்தார்! தமிழில் வெளியான தீரன் பட நாயகி ராகுல் ப்ரீத்சிங் இதே சர்ச்சையில் சிக்கினார்.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆரியன்கான், உயர்ரக போதைப் பொருட்கள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட விவகாரம், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு திரைப்பட பாடகி சுசித்ரா, சுசிலீக்ஸில் தமிழ் சினிமா நட்சத்திரங்கள் உயர்ரக போதைப்பொருட்களை பயன்படுத்துவதாகக் குற்றம்சாட்டினார். அதில், இளம் இசையமைப்பாளர், மூன்றெழுத்து பிரபல நடிகர், பொன்னியின் செல்வன் நாயகி, கவர்ச்சிப் பாடகி, மச்சான் நாயகி ஆகியோர் மீது சர்ச்சை கிளம்பியது. அதேபோல இன்னும் பல பிரபலங்கள் மீதும் இதே சர்ச்சை எழுந்து அடங்கியது.
நடிகை யாஷிகா ஆனந்த் சில வருடங்களுக்கு முன்பு நண்பர்களுடன் சென்னை ஈ.சி.ஆர். சாலையில் போதையில் சென்றபோது கார் விபத்துக்குள்ளானதில், அவர் பலத்த காயங்களுடன் உயிர் தப்ப, உடன் சென்ற தோழி ஒருவர் பலியான சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், தமிழ் சினிமா வட்டாரத்தில் முதன்முறையாக, கொகைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டதால் கோலிவுட் வட்டாரமே அதிர்வில் சிக்கியுள்ளது. நடிகர் ஸ்ரீகாந்த் கைதின் பின்னணி குறித்தும் பார்ப்போம்.
சென்னை நுங்கம்பாக்கத்தில், "லார்டு ஆஃப் தி ட்ரிங்க்ஸ்' என்ற ரெஸ்ட்டோபாருடன் கூடிய பப் இயங்கிவருகிறது, கடந்த மே 22ஆம் தேதி இரவு ஈ.சி.ஆரில் தூண்டில் ரெஸ்டாரண்ட் நடத்தும் 'தூண்டில்' ராஜா மது அருந்திக்கொண்டிருந்துள்ளார். அதே வேளை, ஓய்வுபெற்ற டி.எஸ்.பி. மகன் செல்வம் என்கிற செல்வபாரதி பக்கத்து டேபிளில் மது
அருந்திக் கொண்டிருந்துள்ளார். அப்போது செல்வம் போதை தலைக்கேற சத்தமாக ரகளையில் ஈடுபட்டிருக்கிறார். இதனால் செல்வத்தை தூண்டில் ராஜா கண்டித்துள்ளார். இதுவே வாக்குவாதமாகி கைகலப்பில் முடிந்துள்ளது.
இந்நிலையில் தூண்டில் ராஜாவுக்கு ஆதர வாக, அ.தி.மு.க. தென்சென்னை கிழக்கு மாவட்ட தகவல்தொழில்நுட்ப அணி துணைச்செயலாளர் பிரசாத், விருகம்பாக்கத்தை சேர்ந்த தொழிலதிபர் கணேஷ்குமார், போரூரை சேர்ந்த தனசேகரன், அ.தி.மு.க. பிரமுகர் அஜய் வாண்டையார் எனப் படும் அஜய் ரோகன், முக்குலத்தோர் புலிப்படை யை சேர்ந்த ரவுடி நாகேந்திரன் மற்றும் சிலருடன் சேர்ந்துகொண்டு பீர் பாட்டிலை உடைத்து ரகளையில் ஈடுபட்டனர். அங்கிருந்த மேஜை நாற் காலிகளை தூக்கியடித்து சூறையாடினர். இதனால் அந்த ரெஸ்டோபாரின் உரிமையாளர் நுங்கம் பாக்கம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார். விரைந்து வந்த போலீசார், இரு தரப்பினரையும் விசாரித்து, இருதரப்பையும் சேர்ந்த 22 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில், கைது செய்யப்பட்ட அனைவரின் மொபைல் போன் மற்றும் செயலிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் அ.தி.மு.க. நிர்வாகியான பிரசாத் தொடர் பில் கட்டப்பஞ்சாயத்து, அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி, திருட்டு கார் விற்பனை, ஆட்கடத்தல், நில மோசடி, மிரட்டி பணம் பறிக்கும் கும்பல்கள் இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இந்த கும்பல், சுமார் 200 பேரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக 2 கோடி வரை வசூல் செய்து மோசடியில் ஈடுபட் டுள்ளது. இவர்களுக்கு உடந்தையாக இருந்த மதுரையை சேர்ந்த ஆயுதப்படை போலீஸ் செந்தில் என்பவர் உள்பட, இரண்டு உதவி ஆய்வாளர்கள் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டனர்.
சென்னை மயிலாப்பூர், ஆர்.கே.சாலையி லுள்ள அ.தி.மு.க. பிரமுகர் பிரசாத் வீட்டில் சோதனை போட்ட போலீசார், ஒரு செல்போன் மற்றும் லேப்டாப்பை கைப்பற்றி ஆய்வுசெய்ததில் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடனான தொடர்பு கண்டுபிடிக்கப்பட்டது. இந்தத் தகவலை நுங்கம்பாக்கம் போலீசார், போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீசாரிடம் தெரிவித்தனர். தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் அ.தி.மு.க. பிரமுகர் பிரசாத், சேலம், சங்ககிரியை சேர்ந்த பிரதீப்குமார் என்பவரிடம் அடிக்கடி பேசி வந்ததும், பல லட்சம் ரூபாய் ஜிபே மூலம் அனுப்பியதும் தெரியவந்தது.
மேலும் விசாரித்ததில் பிரதீப்குமார், பெங்க ளூர் பகுதியிலுள்ள ஐ.டி. நிறுவனங்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருட்களை விற்கும் டீலர் என்பது தெரியவந்தது. பிரதீப் குமாரை நுங்கம்பாக்கத்தில் கடந்த ஜூன் 17ஆம் தேதி தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் ஜூன் 18ஆம் தேதி ஓசூரில் பதுங்கியிருந்த மேற்கு ஆப்பிரிக்கா, கானா நாட்டைச் சேர்ந்த போதைப்பொருட்கள் கடத்தல் கும்பலை சேர்ந்த ஜான் என்பவனை தனிப்படை போலீ சார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து இரண்டு செல்போன், 40 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் 11 கிராம் கொக்கைன் போதைப்பொருளை கைப்பற்றினர். மேலும் இவர்களிடம் நடத்திய விசாரணையில், அ.தி.மு.க. பிரமுகர் பிரசாத்திற்கு அதிக அளவில் போதைப்பொருட்கள் சப்ளை செய்ததை ஒப்புக்கொண்டனர். பின்னர் அ.தி.மு.க. பிரமுகர் பிரசாத்தின் செல்போன் வாட்ஸ்அப் சாட்டில் நடிகர் ஸ்ரீகாந்த் சாட் செய்து பணம் அனுப்பியதும் தெரியவந்தது. இதைப்பற்றி போலீசார் மேலும் விசாரித் ததில், அ.தி.மு.க. பிரமுக ரான பிரசாத், போதைப் பொருட்கள் விற்ற பணத்தில் நடிகர் ஸ்ரீகாந்தை வைத்து 'தீங்கிரை' என்ற படம் தயா ரித்ததும், அதன் படப் பிடிப்பு பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதும் தெரியவந்தது.
மேலும், அ.தி.மு.க. பிர முகர் பிரசாத் மூலம் நடிகர் ஸ்ரீகாந்திற்கு கொகைன் போதைப்பொருள் கொடுத்த தும் தெரியவந்தது. சுமார் 40 முறை இந்த போதைப் பொருளை நடிகர் ஸ்ரீகாந் திற்கு அவர் கொடுத்தது தெரியவந்துள்ளது. நடிகர் ஸ்ரீகாந்த் வெளிநாடு சென்றிருந்ததால் அவர் சென்னை திரும்பியதும் மீண்டும் இதே போதைப் பார்ட்டியில் கலந்துகொண்டதும் போலீசின் விசாரணையில் தெரியவந்தது. கடந்த ஜூன் 23ஆம் தேதி ஸ்ரீகாந்தை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் போதைப் பொருட்களை பயன்படுத்தியதை அவர் ஒப்புக் கொண்டுள்ளார். மேலும், அ.தி.மு.க. பிரமுகர் பிரசாத் தனக்கு கடந்த மூன்று வருடங்களாக உயர்ரக போதைப்பொருளான கொக்கைனை சப்ளை செய்ததாகவும் அவர் தெரிவித்தார். நடிகர் ஸ்ரீகாந்த் வீட்டில் சோதனை செய்தபோது எட்டு பாக்கெட் கொக்கைன் இருந்ததற்கான தடயம் கிடைத்துள்ளது. அதற்காக நடிகர் ஸ்ரீகாந்த் சுமார் 5 லட்சம் ரூபாய் பணம் அனுப்பியதும் விசா ரணையில் தெரியவந்தது.
பின்னர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத் துவமனையில் ரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரி பரி சோதனை செய்யப்பட்டது. மருத்துவர்கள் நடத்திய ஆய்வில் கொக்கைன் போதை பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை வைத்திருந்த காரணத்தால் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு, எழும்பூர் நீதிமன்றத்துக்கு அழைத் துச் செல்லப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட விசாரணையின் முடிவில், ஜூலை ஏழாம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி உத்தரவிடப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப் பட்டார்.
அ.தி.மு.க. பிரமுகர் பிரசாத், இரவு விருந்து, பண்ணை வீட்டு விருந்து, பப் பார்ட்டி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும், நடிகர், நடிகைகளுக்கும் உயர்ரக போதைப்பொருட்களை சப்ளை செய்வது தெரியவந்துள்ளது. போலீசார், அ.தி.மு.க. பிரமுகர் பிரசாத், போதைப்பொருள் சப்ளையர் பிரதீப்குமார் இருவரையும் 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். ரெஸ்டோ பாரில் ரகளையில் ஈடுபட்ட 22 பேரில் 5 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது.
அடுத்தடுத்து எந்த சினிமா பிரபலம் இந்த போதைப்பொருள் விவகாரத்தில் மாட்டுவார்கள் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கண்காணிப்பில் போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணா பிடிபட்டார். நான் போதைப் பொருள் உபயோகிக்கவில்லை என விசாரணையில் சொல்கிறார். சமீபகால மாக உடல்நிலை சரியில்லாமல் இருந் திருக்கிறார். பெரிய அளவில் உபயோகித் தார் என்பது.. நிரூபிக்கப்படவில்லை. பரிசோதனையின்போது அவரது இரத்தத் தில் கொக்கைன் இல்லை. 45 நாள்தான் கொக்கைன் பவர் உடலில் இருக்கும். தற்போது அவரது வீட்டை சோதனையிட போலீஸ் முடிவு செய்துள்ளது.. அவருடைய மொபைல் காண்டக்ட்ஸ் மற்றும் வாட்ஸ்ஆப் மெசேஜ்கள் சோதனையிடப்பட்டு மேலும் கண்காணிக்கப்படுகின்றன.
|