"ஹலோ தலைவரே, கொடநாடு கொலை கொள்ளை வழக்கு, தன் க்ளைமாக்ஸ் கட்டத்தை நெருங்கிவிட்டதே?''”

"ஆமாம்பா இதில் பெரும் திமிங்கிலங்கள் கூட சிக்குதே?''”

rr

Advertisment

rr

"உண்மைதாங்க தலைவரே, இந்த வழக்கில் புதிய குற்றப்பத்திரிகையை மார்ச் 30-க்குள் தாக்கல் செய்யும்படி, சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகளுக்கு தமிழக முதல்வர் ஸ்ட்ரிக்ட்டாக உத்தரவிட்டி ருக்கிறாராம். இதற்குமேல் இதை இழுக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தி இருக்கிறாராம். ஆகவே அதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடந்துவருகின்றன. புதிய விசாரணைப் பட்டியலில், சம்பவ காலத்தில் முதல்வராக இருந்த எடப்பாடியின் செக்யூரிட்டி அதிகாரிகள், சஜீவன், எடப்பாடியின் வலதுகரமான சேலம் இளங்கோவன் ஆகியோரும், இந்த இரண்டாவது குற்றப்பத்திரிகையில் புதிதாக சேர்க்கப்படுகிறார்கள். அடுத்ததாக கொடநாடு கிரைம் அத்தனைக்கும் காரணமானவர் என்ற ரீதியில் முக்கிய குற்றவாளியாக எடப்பாடியின் பெயரும் குற்றப்பத்திரிகையில் அழுத்தமாக இணைக்கப் படுகிறது. அவர்தான் இந்த க்ரைம் சம்பவப் பின்னல்களின் மூலக் குற்றவாளி என்பதற் கான ஆதாரங்களும் திரட்டப்பட்டிருக் கின்றன. அதனால் விரைவில் அவருக்கு ஆப்பு என்றும், அவரை அதிரடியாக மடக்கி, தீவிர விசாரணை நடத்தப்பட இருக்கிறது என்றும் செய்திகள் சூடாகக் கசிகின்றன.''”

Advertisment

rr

"கவர்னர் மாளிகை பொங்கல் கொண்டாட்டத்துக்கு தயாராகுதே?''”

"பல்வேறு நிகழ்ச்சி நிரல்களைப் போட்டுக்கொண்டு, தான் பிஸியாக இருப்பது போலவே கவர்னர் காட்டிக்கொள்ள முயன்று வருகிறார். அந்த வகையில், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட இந்திய ஆட்சிப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளை எழுதி அதில் வெற்றி பெற்ற தமிழக மாணவ-மாணவிகள் நேர் காணலுக்காக விரைவில் டெல்லிக்கு செல்ல இருக்கிறார்கள். அவர்களுடன் 10 ஆம் தேதி கவர்னர் உரையாட இருக்கிறார். அப்போது, நேர்காணலை எதிர்கொள்வது எப்படி? என்பது குறித்து அவர்களுக்குச் சின்னதாகப் பாடம் நடத்தி பல்வேறு டிப்ஸ்களை மாணவ-மாணவி களுக்கு கவர்னர் கொடுக்க இருக்கிறாராம். இதற்கிடையே பொங்கல் திருநாள் வருவதால், அதைப் பெரிதாகக் கொண்டாடி, தமிழ்நாட்டு மக்களின் மனதைக் கவரவும் அவர் திட்டமிட்டிருக்கிறார். இதையொட்டி வரும் 12ஆம் தேதி, நம் பாரம்பரிய கலைஞர்களை ராஜ்பவனுக்கு அழைத்து, கலை நிகழ்ச்சிகளை நடத்தவும் திட்டமிடப்பட்டிருக்கிறது. அதாவது, கனிமொழி முன்னின்று நடத்தும் சென்னை சங்கமம் நிகழ்ச்சியைப் போல, இந்த நிகழ்ச்சி அமையவேண்டும் என்றும் கவர்னர் நினைக்கிறாராம்.''”

"சட்டசபை தொடங்குவதற்கு முதல்நாள் வரை எடப்பாடி குழப்ப நிலையிலேயே ஊசலாடிக்கொண்டு இருந்தாரே?''”

"ஆமாங்க தலைவரே, தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் துணைத்தலைவராக இருந்த ஓ.பி.எஸ்.ஸை நீக்கிவிட்டு, புதிய துணைத்தலைவராக உதயகுமாரை நியமித்திருந்தார் எடப்பாடி. இது குறித்த கடிதத்தை சபாநாயகர் அப்பாவுவுக்கு அவர் அனுப்பி யிருந்தார். ஆனால், அதனை நிராகரித்த சபாநாயகர், கடந்த மாதம் நடந்த கூட்டத்தொடரில், எடப்பாடிக்கு அருகிலேயே போடப்பட்டிருக்கும் ஓ.பி.எஸ்.ஸின் பழைய இருக்கையில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. இந்த நிலையில், தற்போது கூடும் கூட்டத்தில், மீண்டும் தனது அருகில் ஓ.பி.எஸ். அமரக்கூடாது என்கிற வகையில், மீண்டும் அதே கடிதத்தை எடப்பாடி சபாநாயகருக்கு அனுப்பி வைக்க, அதை மீண்டும் நிராகரித்துவிட்டார் சபாநாயகர். இதனால் ஓ.பி.எஸ். பக்கத்தில் அமர்வதைத் தவிர்க்க முனையும் எடப்பாடி, கவர்னர் உரையைப் புறக்கணிக்கலாமா? அல்லது கூட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு, கவர்னர் தனது உரையைத் தொடங்கியதும், தி.மு.க. அரசின் மீது சில குற்றச்சாட்டுகளைக் கூறிவிட்டு வெளிநடப்பு செய்யலாமா? என்று 8ஆம் தேதி இரவு வரை யிலும் தீவிரமாக ஆலோசனையில் இருந்தார்.''”

"உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதி யின் புகைப்படம் ஒன்றும் பரபரப்பை ஏற்படுத்தியதே?''”

rrr

"சொந்தக் கட்சியினராலேயே, ஹனி டிராப் விவகாரத்தில் சிக்கி இருக்கும் பா.ஜ.க. அண்ணாமலை, இந்த விவகாரத்தைத் திசை திருப்ப, தனது வார் ரூம் ஆட்கள் மூலம் இன்பநிதி, தன் தோழியுடன் இருக்கும் படத்தை வெளியிடச் செய்து, பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இதேபோல் ஏராளமான தி.மு.க. பிரமுகர்களின் கிளுகிளுப்பான பர்சனல் படங்களையும் பேஸ்புக், இன்ஸ்ட்டாகிராம் போன்றவற்றில் இருந்து அவர் தேடித் திரட்டி வைத்திருக்கிறாராம். இதற்கிடையே, கே.டி.ராகவன், காயத்ரி ரகுராம் ஆகியோரின் ஹனி டிராப் படங்களை எடுக்கச் செய்தவர் அண்ணாமலைதான் என்று பா.ஜ.க. ஆதரவு யூ-டியூபரான மாரிதாஸே ஸ்டேட் மெண்ட் கொடுத்து, அண்ணாமலைத் தரப்பை அதிரவிட்டிருக்கிறார். இதில் அப்செட்டான அவர், ஆர்.எஸ்.எஸ். தலைமையிடம் மாரிதாஸ் பற்றி புகார் சொல்ல, மாரி இப்போது கண்டிக்கப் பட்டிருக்கிறாராம்.''”

"ஈ.வி.கே.எஸ். மகன் படத்திறப்பிற்கு காங்கிரஸிலேயே எதிர்ப்பு கிளம்பி யிருக்கே?''”

"காங்கிரசின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மகனும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான திருமகன் ஈ.வெ.ரா. சமீபத்தில் ஹார்ட் அட்டாக்கில் மரணமடைந்தார். காங்கிரஸ் தரப்பில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், திருமகன் ஈவெ.ரா.வின் படத்தை சத்தியமூர்த்தி பவனில், திறந்து வைத்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை, அக்கட்சியில் உள்ள மீனவர் பிரிவு ஏற்பாடு செய்திருந்தது. தமிழக காங்கிரசின் பொதுச் செயலாளர்களில் ஒருவரான காண்டீபன், மறைந்த திருமகன் படத்தைத் திறந்து வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதற்கான அனுமதியையும் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தந்திருந்தார். இந்த நிலையில், எம்.எல்.ஏ.க்களை வைத்துதான் இந்த நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்றும், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப் பெருந்தகையுடன் ஆலோசித்துதான் இதுகுறித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் எதிர்ப்பு தெரிவித்த கட்சியின் 2 சீனியர்கள், காண்டீபனிடம் தகராறு செய்திருக்கிறார்கள்.''”

"இறந்தவருக்கு அஞ்சலி செய்வதிலும் அரசியலா?''”

rr

"ஆமாங்க தலைவரே, எதிர்ப்பைக் கண்டு குழம்பிப்போன காண்டீபன், மாநிலத் தலைவரிடமே அனுமதி பெற்றிருக்கிறோம். அப்படி இருக்க, தனியாக கட்சி எம்.எல்.ஏ.க்களிடம் எதற்கு அனுமதி பெறவேண்டும்? என்று கேள்வி எழுப்பிப் பார்த்தார். இருந்தும் படத்திறப்பு நிகழ்ச்சியை நடத்தவே கூடாது என்று சத்தியமூர்த்தி பவனில் கலாட்டா நடந்திருக்கிறது. இதனால் வெறுத்துப் போன காண்டீபன், அந்த நிகழ்ச்சியை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் ஒருவரின் அலுவலகத்தில் நடத்தி விட்டார். இப்போது, படத் திறப்புக்கு எதிர்ப்பு தெரி வித்த அந்த 2 சீனியர்கள் மீதும், கட்சியினர் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். அந்த இருவரும் தொடர்ந்து கட்சிக்குக் கெட்டபெயர் சம்பாதித்து வருவதாகக் கட்சித் தலைமைக்குப் புகார் அனுப்பிவருகிறார்கள்.''”

"ஹாக்கி டோர்னமெண்ட் தொடர்பான சர்ச்சைகள் நீடிக்குதே?''”

"ஆமாங்க தலைவரே, உலகக் கோப்பை ஹாக்கி விளையாட்டுப் போட்டிகள் ஜனவரி 13 முதல் 29ஆம் தேதிவரை ஒடிசா மாநிலத்தில் நடக்கிறது. ஹாக்கிக் கோப்பையை இந்தியா முழுவதும் காட்சிப்படுத்துவதற்காக 12 மாநிலங்களின் முக்கிய நகரங்களுக்கு எடுத்துச்செல்கிறார்கள். அந்த வகையில், 20 நாட்களுக்கு முன்பு சென்னைக்கு அந்தக் கோப்பை கொண்டு வரப்பட்டு, மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் ரசிகர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. இதற்கான நிகழ்ச்சியில், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணி, மேயர் ப்ரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஹாக்கி வீரர்களுக்கு முன் வரிசையில் இருக்கைகள் போடப்பட வில்லை என ஹாங்கி சங்கத்தின் முன்னாள் தலைவரும் பிரபல ஹாக்கி வீரருமான பாஸ்கரன் உள்ளிட்ட சிலர், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் கடுமையாக வாய்த் தகராறில் ஈடுபட்டனர்.''”

"ஆமாம்பா. காட்சி ஊடகங்கள்ல நானும் பார்த்தேன்...''”

"உதயநிதி கலந்துக்கிட்ட நிகழ்ச்சியில் இப்படி ஒரு சர்ச்சை ஏற்பட்டதால், அது காட்சி ஊடகங்களில் பரபரப்பாச்சு. அந்த rrசம்பவத்தின் போது பாஸ்கரன் உள்ளிட்டவர்கள், "இது என்ன விளையாட்டு நிகழ்ச்சியா? உங்கள் கட்சி நிகழ்ச்சியா?' என கோபமாகக் குற்றம்சாட்டினர். இது ஏகத்துக்கும் சர்ச்சையையும் சலசலப்பையும் ஏற்படுத்தியதால், உடனடியாக முன்னாள் வீரர்களுக்கு முன் வரிசையில் இருக்கைகள் போடப்பட்டன. அதைத் தொடர்ந்து இந்த சர்ச்சையும் பரபரப்பும் சற்று அடங்கிய நிலையில், உலக ஹாக்கி விளையாட்டு தொடர்பாக ஒரு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார் துறை அமைச்சரான உதயநிதி. அதில் தமிழ்நாடு ஹாக்கி சங்கத்தில் உள்ள தி.மு.க. ஆதரவு வீரர்களை மட்டுமே அவர் அழைத்து ஆலோசித்த தாககவும் மற்றவர்களை அவர் புறக்கணித்துவிட்டதாகவும் முன்னாள் ஹாக்கி வீரர்கள் சிலர் மீண்டும் ஒரு சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார்கள். இதுகுறித்து அகில இந்திய ஹாக்கி சங்கத்துக்கும் புகார்கள் ஏகத்துக்கும் பறந்துள்ளன.''”

"காவல்துறையிலும் பெரும் சலசலப்பு ஏற்பட்டிருக்குதே?''”

"உண்மைதாங்க தலைவரே, அண்மையில் காவல்துறையைச் சேர்ந்த ஏறத்தாழ 45 பேருக்கு இடமாறுதல் மற்றும் பதவி உயர்வுகளுக்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. இதில் சம்பந்தப்பட்ட சிலர் தங்களுக்குத் தரப்பட்ட பணியிடங்களை ஏற்கமறுத்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்களாம். குறிப்பாக, பதவி உயர்வுடன் இடமாற்றப் பட்டியலில் இருக்கும் காவல்துறை அதிகாரிகளில் சென்னை சி.ஐ.டி. சிறப்புப் பிரிவு எஸ்.பி.யாக நியமிக்கப்பட்ட அருளரசு, தனது புதிய நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விடுப்பில் போய்விட்டாராம். தஞ்சாவூர் எஸ்.பி.யாக நியமிக்கப்பட்ட முத்தரசியோ, என்னால் அங்கே போக முடியாது என்று முரண்டுபிடிக்க, தென்காசி எஸ்.பி.யாக நியமிக்கப்பட்ட செந்தில்குமாரோ, என்னை அந்த இடத்துக்கு நியமித்தது தவறு என்று டி.ஜி.பி. சைலேந்திரபாபுவுக்கே கடிதம் எழுதியிருக்கிறாராம். இதுவரை காவல்துறையில் இப்படியொரு எதிர்க்குரல் எழுந்ததே இல்லை என்கிறார்கள். இதில் டி.ஜி.பி. ரொம்பவே அப்செட் ஆகிவிட்டாராம்.''”

"காவல்துறையில் சில பதவிகளைப் பிடிக்க கடுமையான முட்டல்-மோதல் இருக்குதாமே?''

"ஆமாங்க தலைவரே, சென்னை தி.நகர் காவல் மாவட்டத்தில் டெபுடி கமிஷனராக நியமிக்கப்பட்ட ஆதர்ஸ் பச்சோராவின் நிர்வாகத்தில் சீர்கேடுகள் அதிகம் இருந்தது குறித்து அண்மையில் நாம் பேசிக்கிட்டோம். இதைத் தொடர்ந்து அவர் குறித்த புகார்களின் உண்மைத் தன்மை குறித்து உளவுத்துறை மூலம் விசாரித்தது முதல்வர் அலுவலகம். இந்த நிலையில் அண்மையில் இடமாறுதல் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரிகளுடன் பச்சோரோவும் டிரான்ஸ்பர் செய்யப்பட்டு இருக்கிறார். அவர் இடத்தைக் கைப்பற்ற அனுபவம் வாய்ந்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் பலரும் முயற்சித்தாலும், சிலர் மேலிடம் வரை சென்று முட்டி மோதி வருகின்றனர். இதேபோல் சென்னை அண்ணாநகர் டெபுடி கமிஷனர் பதவியும் காலியாக உள்ளது. இந்தப் பதவியில் திண்டுக் கல் மாவட்ட ஏ.எஸ்.பி. ஒருவரை உட்கார வைப்பதற்காகவே, அவருக்கு எஸ்.பி. அந்தஸ்தை தர, ஒரு புரமோசன் பட்டியலும் வேகமாகத் தயாராகி வருகிறதாம்.''’

"நானும் ஒரு முக்கியமான தகவலை பகிர்ந்துக்கறேன். சமீபத்தில், பாரம்பரியமிக்க பத்திரிகை குடும்பத்தைச் சேர்ந்த முக்கிய பெண் பிரமுகரின் வீட்டில் நடைபெற்ற கெட் டுகெதரில், ஆடிட்டர் குருமூர்த்தி, தமிழக ஆளுநர், அண்ணாமலை, காபி டே நிறுவனத்தின் பெண் நிர்வாகி, அம்பானி சகோதரி, நடிகைகள் சுஹாசினி, ராதிகா ஆகியோர் கலந்து கொண்டு தமிழ் நாட்டில் வலது சாரி இயக்கத்தை வலுப்படுத்துவது தொடர்பாக கலக்க லாக ஆலோசித் திருக்கிறார்களாம்!''’