சசிகலாவிடம் விசா ரணையைத் தொடர்ந்து கொடநாடு வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்படலாம் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சசிகலாவிடம் விசாரணையை முடித்ததும், கொடநாடு வழக்கை விசாரிக்கும் போலீஸ், தனது விசாரணை வளையத்தில் சிக்க வைத்திருக் கும் நபரின் பெயர் கூடலூர் சஜீவன்.
கேரளாவின் திருச்சூர் மாவட்டம் இரிஞ்ஜாலகுடா வைச் சேர்ந்தவர் இந்த சஜீவன். சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, கட்டிய ஒரேயொரு வெள்ளை வேட்டி, ஹவாய் சப்பலுடன் தமிழ்நாட் டில் மலையாளிகள் அதிகம் வசிக்கும் தமிழக -கேரள எல்லை யில் உள்ள காடுகள் நிறைந்த பகுதிக்கு வந்த இந்த சஜீவன், இன்று நூற்றுக்கணக்கான கோடிகளுக்குச் சொந்தக்காரர். கூடலூர், கோவை மற்றும் வளைகுடா நாடுகளில் மிகப் பெரிய ஷோரூம்கள் வைத்து வியாபாரம் செய்கிற சஜீவனுக்கு, கூடலூர் மேற்குத் தொடர்ச்சி மலையில் கிடைக்கும் மரம்தான் மூலதனம். முதலில் கூடலூர் முகம்மது என்பவரின் கடையில் எடுப்பு வேலை செய்ய ஆரம்பித் தது சஜீவனின் பயணம். சஜீவ னின் தம்பிகள் சிபி, சுனில் ஆகி யோருடன் சேர்ந்து செய்த ரவுடியிஸம், சஜீவனை கூடலூர் காடுகளில் உள்ள விலை உயர்ந்த மரங்களை கொள்ளையடிக்கும் கொள்ளைக்காரராக உயர்த்தி யது. அதன்பிறகு கூடலூரில் சஜீவன் வைத்ததுதான் சட்டம் என்றாகியது.
வி.ஐ.பி.க்கள் யார் வீட்டில் மர வேலைப்பாடுகள் அழகுற செய்ய வேண்டுமென்றாலும் கூப்பிடுங்கள் சஜீவனை என்று அழைக்கும் நிலை உருவானது. வி.வி.ஐ.பி.க்கள் என்றால் இலவச மாகவே மர வேலைகளைச் செய்து தருவார். கவுண்டம் பாளையம் எம்.எல்.ஏ. ஆறுகுட்டி யின் வீட்டில் சஜீவன் செய்த மர அலங்காரத்தைப் பார்த்த சசிகலா வியந்துபோனார். அப்பொழுது கொடநாடு பங்களா கட்டி முடியும் நிலையில் இருந்தது. 100-க்கும் மேற்பட்ட அறைகள் கொண்ட அந்த கட்டிடத்தில் பாதுகாப்புகளுடன் கூடிய பெட்டகங்கள் உட்பட அனைத்தையும் மரத்தாலேயே செய்யச் சொன்ன சசிகலா, அதற்கு உதவ சஜீவனுக்குத் தேவையான மரங்களை காடுகளில் வெட்டிக்கொள்ள அப்போது நீலகிரி கலெக்டராக இருந்த சங்கர் மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
சஜீவனுக்கு கூலியாக சட்டவிரோதமாக அவர் வெட்டும் மரங்களை விற்கவும் அனுமதி யளிக்கப்பட்டது. ஏற்கனவே கூடலூரில் தாதாவாக மரத்தொழில் செய்துவந்த சஜீவனை, தமிழகத்தி லேயே மரத் தொழிலில் மிகப்பெரிய கொள்ளைத் தலைவராக மாற்றினார் சசிகலா. ஜெ.வுடன் கொடநாடு மர அலங்காரம் பற்றி பேசும் அளவிற்கு வளர்ந்த சஜீவன், அ.தி.மு.க. அமைச்சர்களான எடப்பாடி, வேலுமணி ஆகியோருக்கும் நெருக்க மானார். ஜெ. மறைவுக்குப் பிறகு சசிகலா விசுவாசத் தில் டி.டி.வி.தினகரனுக்கும் நெருக்கமாகி அ.ம.மு.க. வில் இருந்த சஜீவனை அ.தி.மு.க.வின் வர்த்தக அணி செயலாளராக்கினார் எடப்பாடி. இந்த இடத்தில்தான் கொடநாடு கொள்ளை வழக்கிற்கான அஸ்திவாரம் போடப்பட்டது. கொடநாட்டில் கொள்ளையடிக்க முடிவுசெய்து நடைபெற்ற ஆலோ சனையில் பொறுப்பு சஜீவனிடம் ஒப்படைக்கப்பட்டது.
இன்று கொடநாடு வழக்கில் குற்றம்சாட்டப் பட்டவர்களிலேயே பெரிய கிரிமினல் சஜீவன்தான். கொடநாடு பற்றி அனைத்தும் அறிந்த சஜீவன், அங்கு கொள்ளையடிக்க திட்டம் தீட்டி, அதற்கான உபயோகித்தது மலையாளிகள் அடங்கிய டீமைத் தான். கூடலூரில் உள்ள மற்றொரு தாதாவான மண்டபம் ஷாஜி மூலம் கேரளா மற்றும் மலப்புரம் பகுதியைச் சேர்ந்த பிரபல ஹவாலா ஆபரேட்டர் அலியாரை ஜெ.வின் டிரைவரான கனகராஜ் துணையுடன் சஜீவன் களமிறக்க... ஜெ.வின் வீடு என்று தெரிந்ததும் அலியார் மறுத்துவிட்டார்.
அதன்பிறகுதான் சஜீவனின் சொந்த ஊரான இரிஞ்ஜால குடாவிலிருந்து ஒரு டீமை இறக்கி கொடநாடு கொள்ளையடிக்கப்பட்டது. கொள்ளை நடக்கும்போது துபாயிலிருந்து அதை ஆபரேட் செய்ததே சஜீவன்தான். அதிக அனுபவம் இல்லாத இந்தக் கொள்ளை டீம் ஓம்பகதூர் என்கிற காவலாளியைக் கொலை செய்ததும் நிலைமை மோசமானது.
கொள்ளையடித்தவர்கள் கேரளாவுக்குச் செல்லும் வழியில் போலீசாரிடம் சிக்கிக் கொள்ள... துபாயில் இருந்துகொண்டு, தனது தம்பி சுனிலை அனுப்பி ஆறுமணி நேரம் கூடலூர் நாலுகாணி செக் போஸ்ட்டில் சிக்கிய கேரளா டீமை பத்திரமாக அனுப்பி வைத்தது சஜீவன்தான்.
சஜீவனின் போன் கால்கள் கொடநாடு செக் போஸ்ட் டவர் மூலமாக போலீசுக்கு கிடைத்திருக் கிறது. அந்த குற்றவாளிகள் எனக்கு நன்கு தெரிந்தவர்கள் என சஜீவனின் தம்பி ஏற்கனவே போலீசில் குற்றவாளிகளை விடுவிக்கும்போது கையெழுத்துப் போட்டு அளித்த கடிதம் போலீசார் வசம் உள்ளது. அத்துடன் ஆறுகுட்டி எம்.எல்.ஏ. வின் ஸ்டிக்கர் போட்ட காரை அனுபவ் ரவி என்கிற சஜீவனின் நண்பரும், சஜீவனும் உபயோகித்ததை கொடநாடு வழக்கில் சாட்சியமாகவே அனுபவ் ரவி சொல்ல பதிவாகியுள்ளது.
இது தவிர சஜீவன் மீது ஏகப்பட்ட மரக்கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகு சஜீவனுக்குச் சொந்தமான சாமியார் தோட்டம் என்கிற தனியார் நிலத்துக்கு பக்கத்தில் உள்ள காட்டுப் பகுதியில் மரம் வெட்டி கடத்தியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு அதில் தொடர்புடைய வனத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. தி.மு.க.வைச் சேர்ந்த வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், சஜீவனை வனத்துறை கைது செய்வதைத் தடுத்தார் என்கிறார்கள் நீலகிரி மாவட்ட உடன்பிறப்புகள்.
சசிகலா விசாரணையில் எடப்பாடிக்கு நெருக்கமான போலீஸ் கமிஷனர் என போலீசாரால் சொல்லப்படும் ஜெ.வின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த முத்துசாமியை கொடநாடு விசாரணை டீம் சேர்க்கவில்லை. விசாரணை முடிந்ததும் முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு மிக நெருக்கமாக இருந்த கொடநாடு வழக்கின் விசாரணை அதிகாரியான குன்னூர் பகுதி டி.எஸ்.பி. சுரேஷை தேனி மாவட்டத்துக்கு தமிழக காவல்துறை தூக்கியடித்தது. சுரேஷின் மனைவியும், வேலுமணியின் மனைவியும் பள்ளித் தோழிகள் என்பதால், தினசரி கொடநாடு விசாரணையில் நடக்கும் விவரங்களை வேலுமணி மூலமாக எடப்பாடி தெரிந்து கொள்கிறார் என இந்த மாற்றத்திற்கான காரணத்தைச் சொல்கிறார்கள் காவல்துறையினர்.
சுரேஷைத் தொடர்ந்து எடப்பாடியுடன் நெருக்கமாக இருப்பதாகச் சொல்லப்படும் பலர் மாற்றப்பட இருக்கிறார்கள். சுரேஷ் மாற்றப் பட்டதையடுத்து சஜீவனை விசாரணைக்குள் ளாக்கியிருக்கிறது போலீஸ் டீம். மூர்த்தி என்கிற டி.எஸ்.பி. தேடிப்பிடிக்க, கிட்டத்தட்ட கைது என்கிற அளவில் சஜீவனை கேள்விகள் கேட்டுக் கொண்டிருக்கிறது ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான போலீஸ் டீம். மேலும் சஜீவனை மட்டுமல்லாமல் அவரது தம்பி சிபி, சுனில் உட்பட ஒட்டுமொத்த குடும்பத்தையும் விசாரணைக்கு உள்ளாக்கியுள்ளது போலீஸ்.
போலீசாரின் கேள்விகளுக்கு ஆரம்பத்தில் சளைக்காமல் பதில் சொன்ன சஜீவனால், அவரது டெலிபோன் கால்கள் பற்றிய டெக்னிக்கல் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை. கொடநாடு சம்பவத்தில் அவருக்குள்ள தொடர்பை உறுதிப்படுத்தி முன்னேறும் போலீஸ், சஜீவனை கைது செய்யும் என்கிற எதிர்பார்ப்பு ஏற் பட்டுள்ளது.
இப்பொழுது சஜீவன்... அடுத்தடுத்து அ.தி.மு.க. எம்.பி.யான அர்ஜுனன், கூடலூரைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மில்லர் மற்றும் எடப்பாடிக்கு நெருக்கமான இளங்கோவன், முன்னாள் அமைச்சர் வேலுமணியின் சகோதரர் அன்பரசன், அதன்பிறகு வேலுமணி, எடப்பாடி... என கொடநாடு விசாரணையும் கைது படலமும் நீளும் என்கிறார்கள் காவல்துறையைச் சேர்ந்த வர்கள்.
குன்னூர் டி.எஸ்.பி. மாற்றம், சஜீவனிடம் விசாரணை கள செய்திகள் வந்ததும் அ.தி.மு.க. வட்டாரமே சைலண்ட் மோடுக்கு போய்விட்டது. சசிகலா தனது விசாரணையில் என்ன சொன்னார், அவரிடம் விசாரித்த பிறகு, இதுநாள்வரை போலீஸ் விசாரணைக்கு உட்படுத்தப் படாத சஜீவன் இப்போது கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார் என வேலுமணி, எடப்பாடி தரப்பு யோசிக்க ஆரம்பித்து விட்டது.
வருகிற மே மாதம் 19-ஆம் தேதி ஊட்டியில் மலர் கண்காட்சி நடக்கிறது. அதற்கு முதல்வர் ஸ்டாலின் வருகிறார். அதற்குள் கொடநாடு கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என போலீசார் திட்ட மிட்டிருக்கிறார்கள் என்கிற தகவல் நீலகிரி முழுதும் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த வாரம் கொடநாடு வழக்கில் முக்கிய திருப்பம் வரும் என அடித்துச் சொல்கிறார்கள் போலீஸ் வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.
சஜீவனுக்கு அதிக இடம் கொடுத்துவிட்டார் எடப்பாடி. அவர் நீலகிரிக்கு வந்தால் அவரை வரவேற்கும் முதல் ஆள் சஜீவன்தான். மர வியாபாரியான சஜீவனுக்கும் அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவரை நீலகிரி மாவட்ட தேர்தல் பொறுப்பாளராக்கினார் எடப்பாடி. இதெல்லாம் கொடநாடு சம்பவத்தில் தன்னை சஜீவன் காட்டிக் கொடுத்துவிடக்கூடாது என்பதற்காக எடப்பாடி எடுத்த நடவடிக்கைகள். எங்கப்பன் குதிருக்குள் இல்லை என எடப்பாடி எடுத்த நடவடிக்கைகள் காரணமாக சஜீவனை துருப்புச் சீட்டாக்கி கொடநாடு விவகாரத்தில் எடப்பாடியை நெருக்க முயல்கிறார்கள் போலீசார். இதிலிருந்து எப்படி தப்பிப்பது என ஏகப்பட்ட ஆலோசனைக் கூட்டங்களை எடப்பாடி, இளங்கோவன், வேலுமணி வகையறாக்கள் நடத்திக்கொண்டிருக்கிறார்கள் என்கிறது அ.தி.மு.க. வட்டாரங்கள்.
கொடநாடு விவகாரத்தில் சஜீவன் சிக்கியுள்ள நிலையில், சசிகலாவிடம் விசாரணை நடந்திருப்பதாலும் அதிர்ச்சியடைந்துள்ளாராம் எடப்பாடி பழனிச்சாமி. தன்னை நோக்கி வரும் விசாரணையிலிருந்து தப்பிக்க, சேலம் இளங்கோவன் வழியாக சசிகலாவின் அண்ணி இளவரசி மகன் விவேக் மூலம் தூது விட்டிருக்கிறார். சசிகலா காலில் விழுந்து முதல்வரான எடப்பாடி, தன்னுடைய முதல்வர் பதவிக் காலத்தில் நடந்த கொடநாடு கொலை + கொள்ளைக்காக மீண்டும் சசிகலாவிடம் சரணாகதியடை யத் தயாராகிவருகிறார் என்பதுதான் லேட்டஸ்ட் தகவல் என்கிறது மன்னார்குடி தரப்பு.