"சசிகலாவிடம் கொட நாடு வழக்கில் நடத்திய விசாரணை ஏகப்பட்ட எதிர்வினைகளை உரு வாக்கும்' எனக் கூறு கின்றன அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள்.
விசாரணை முடிந்ததும் சசிகலா கொடுத்த அறிக்கையில், "கொடநாடு கொலை, கொள்ளை வழக்குத் தொடர்பாக போலீஸார் கேட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் நான் பதில் அளித்தேன். கொடநாடு என்பது மற்றவர்களுக்கு வேண்டுமானால் ஒரு சாதாரண இடமாக இருக்கலாம், நானும் எனது அக்காவும் மிகவும் நேசித்த இடம் அது. எங்களுக்கு நிறைய மன நிம்மதியையும் சந்தோஷத்தையும் கொடுத்த ஒரு இடம் கொடநாடுதான். அது எங்களுக்கு கோயில். அந்த இடத்தில் எங்களிடம் நெடுங்காலமாக பணியாற்றிய காவலாளி கொலை செய்யப்பட்டார். கொள்ளையும் நடந்துள்ளது. அதுமட்டுமல்ல, அந்த வழக்கில் எந்தப் பாவமும் அறியாத சின்னக் குழந்தையும் அவரது தாயும் பலியாகியுள்ளனர். ஒன்றுமே அறியாத அப்பாவிகளான காவலாளி, பிஞ்சுமணம் மாறாத சிறு குழந்தை, அவரது தாயார் ஆகியோர் மரணத்திற்கு உரிய நீதி கிடைத்திட வேண் டும்'' எனக் குறிப் பிட்டிருக்கிறார்.
இந்த அறிக் கையில் அவர், கனகராஜின் மரணத்தைப் பற்றி சொல்லவில்லை. அதே நேரத்தில் ஜெயலலிதா -சசிகலா, ஆகியோரிடம் நின்று பேசும் அளவிற்கு நெருக்கம் கொண்ட காவலாளி ஓம்பகதூரின் கொலை பற்றி சொன்னதுடன், கேரளாவில் ஒரு விபத்தில் பலியான சயானின் மனைவி மற்றும் குழந்தை பற்றி சசிகலா பேசியிருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
கொடநாடு கொள்ளை வழக்கில் எடப்பாடி சம்பந்தப்பட்டிருக்கிறார். அவருடைய உத்தரவின்பேரில் ஜெ.வின் டிரைவராக இருந்த கனகராஜ் கொடநாட்டில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர்களின் ஆ
"சசிகலாவிடம் கொட நாடு வழக்கில் நடத்திய விசாரணை ஏகப்பட்ட எதிர்வினைகளை உரு வாக்கும்' எனக் கூறு கின்றன அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள்.
விசாரணை முடிந்ததும் சசிகலா கொடுத்த அறிக்கையில், "கொடநாடு கொலை, கொள்ளை வழக்குத் தொடர்பாக போலீஸார் கேட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் நான் பதில் அளித்தேன். கொடநாடு என்பது மற்றவர்களுக்கு வேண்டுமானால் ஒரு சாதாரண இடமாக இருக்கலாம், நானும் எனது அக்காவும் மிகவும் நேசித்த இடம் அது. எங்களுக்கு நிறைய மன நிம்மதியையும் சந்தோஷத்தையும் கொடுத்த ஒரு இடம் கொடநாடுதான். அது எங்களுக்கு கோயில். அந்த இடத்தில் எங்களிடம் நெடுங்காலமாக பணியாற்றிய காவலாளி கொலை செய்யப்பட்டார். கொள்ளையும் நடந்துள்ளது. அதுமட்டுமல்ல, அந்த வழக்கில் எந்தப் பாவமும் அறியாத சின்னக் குழந்தையும் அவரது தாயும் பலியாகியுள்ளனர். ஒன்றுமே அறியாத அப்பாவிகளான காவலாளி, பிஞ்சுமணம் மாறாத சிறு குழந்தை, அவரது தாயார் ஆகியோர் மரணத்திற்கு உரிய நீதி கிடைத்திட வேண் டும்'' எனக் குறிப் பிட்டிருக்கிறார்.
இந்த அறிக் கையில் அவர், கனகராஜின் மரணத்தைப் பற்றி சொல்லவில்லை. அதே நேரத்தில் ஜெயலலிதா -சசிகலா, ஆகியோரிடம் நின்று பேசும் அளவிற்கு நெருக்கம் கொண்ட காவலாளி ஓம்பகதூரின் கொலை பற்றி சொன்னதுடன், கேரளாவில் ஒரு விபத்தில் பலியான சயானின் மனைவி மற்றும் குழந்தை பற்றி சசிகலா பேசியிருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
கொடநாடு கொள்ளை வழக்கில் எடப்பாடி சம்பந்தப்பட்டிருக்கிறார். அவருடைய உத்தரவின்பேரில் ஜெ.வின் டிரைவராக இருந்த கனகராஜ் கொடநாட்டில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர்களின் ஆவணங்களை கொள்ளையடித்தார். அந்த ஆவணங்களை எடப்பாடிக்கு நெருக்கமானவர்களிடம் ஒப்படைத்தார் என, 2019-ஆம் ஆண்டு மேத்யூ சாமுவேல் என்கிற பத்திரிகையாளர் மூலம் வெளிப்படுத்தியவர் சயான்.
அவரது இந்த பேட்டிக்குப் பிறகுதான் கொடநாடு வழக்கின் விசாரணைப் போக்கு மாறியது. அவரது பேட்டியை சீரியஸாக எடுத்துக்கொண்ட தி.மு.க. மேலிடம் அது தொடர்பான ஆக்ஷனில் இறங்கியது. "சயான், மேத்யூசாமுவேல் போன்றோர் பேட்டியளிக்கக் கூடாது' என உச்சநீதிமன்றம் வரை போய் தடையாணை பெற்றுவந்தார் எடப்பாடி.
"எனக்கு இழப்பதற்கு எதுவும் இல்லை. எனக்கு எல்லாமுமாக இருந்த எனது மனைவியும் குழந்தையும் இறந்துவிட்டார்கள். நான் விபத்தில் சிக்கிய அன்றே கனகராஜும் மற்றொரு விபத்தில் மரணமடைந்தார். இந்த இரண்டு விபத்துக்களும் ஒரு பெரிய சதியே. இதை செய்தது எடப்பாடிதான்'' என வெளிப்படையாக அறிவித்தார் சயான். அதன்பிறகு அவர் நீதிமன்றத் தடையாணையால் எதுவும் பேசவில்லை. அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்தார் எடப்பாடி. அவரை சிறையில் வைத்து கொடுமை செய்தார். அவர் தொடர்பான கொடநாடு கொள்ளை வழக்கை கொரோனா காலத்திலும் வேகமாக நடத்தி அவருக்கு தண்டனை பெற்றுத்தர எடப்பாடி தீவிரமாக முயன்றார்.
தி.மு.க.வின் வழக்கறிஞரும் ஊட்டி நீதிமன்றத்தில் சயானுக்காக வாதாடியவருமான ஆனந்த் என்பவர் எடுத்த பெரும்முயற்சியின் விளைவாக சயான் கொடநாடு வழக்கில் மேலதிக விசாரணை வேண்டும் என தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் மேலதிக விசாரணைக்கு ஊட்டி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த விவகாரத்தை சசிகலா இப்பொழுது கையிலெடுத்து பேசியிருப்பது, "எடப்பாடிதான் கொடநாடு கொள்ளைக்கு காரணம் என சயான் சொன்னதை உறுதிப்படுத்துகிறது' என்கிறார்கள் சசிகலாவுக்கு நெருக்கமானவர்கள்.
சசிகலாவிடம் 500க்கும் அதிகமான கேள்விகளை போலீஸார் கேட்டார்கள். "கனகராஜ் யார்? அவர் எப்படி வேலைக்கு வந்தார்? அவரை உங்களுக்குத் தெரியுமா?' என கேட்ட கேள்விகளுக்கு "கனகராஜை எனக்குத் தெரியும்'' என பதில் சொன்ன சசிகலா, "அவரை ஏன் வேலையை விட்டு நீக்கினீர்கள்?' என்று கேட்டதற்கு, "அவரது குடிப்பழக்கம்தான் காரணம்'' என பதில் சொல்லியிருக்கிறார்.
அதேபோல் "ஆறுகுட்டியைத் தெரியுமா?' என கேட்டதற்கு, "தெரியும்'' என்றே சொல்லியிருக்கிறார் சசிகலா.
"கடைசியாக கொடநாட்டிற்கு எப்போது சென்றீர்கள்?' என்று கேட்டதற்கு, "நவம்பர் 2015-ஆம் ஆண்டு சென்றேன்'' என சொன்ன சசிகலா, கொடநாடு கொள்ளை தொடர்பாக அவர் சிறையிலிருந்தபோது வந்த தகவல்கள் அப்பொழுது அவருக்கு இருந்த மனநிலை என எல்லாவற்றையும் விளக்கியிருக்கிறார்.
"கொடநாட்டில் கொள்ளை நடந்தபோது சி.சி.டி.வி. அணைத்து வைக்கப்பட்டது' ஏன்?' என கேட்ட கேள்விக்கு, "கொடநாட்டில் சி.சி.டி.வி. என எதுவும் கிடையாது. கொடநாட்டில் ஜெ. சுதந்திரமாக இருப்பார். அதனால் அவர் சி.சி.டி.வி. முலம் தன்னை பதிவு செய்வதை விரும்பவில்லை. தகுந்த போலீஸ் பாதுகாப்புடன் அனைத்துவித ஏற்பாடுகளுடன் கொடநாட்டுக்கு செல்லும் எங்களுக்கு எந்த பாதுகாப்பு அச்சுறுத்தலும் அங்கு இல்லை. எனவே நாங்கள் சி.சி.டி.வி.யை உபயோகிக்கவில்லை'' என தெளிவாக பதில் சொல்லி யிருக்கிறார்.
கொடநாட்டில் ஜெ.வின் அறை, சசிகலாவின் அறை எப்படி இருந்தது? அங்கு கதவுகள் எப்படி உடைக்கப்பட்டது? அங்கு வேலை செய்த லட்சுமி என்கிற பெண் பார்த்துதான் ஜெ.வின் அறை உடைக்கப்பட்டதை உறுதிப்படுத்தினார் என்பதை சசிகலா ஒத்துக் கொண்டார்.
அந்த அறையில் இருந்த ஜெ. பூஜை செய்த குருவாயூரப்பன் சிலை, மயில் சிலை, கணபதி சிலை போன்ற தங்கத்தாலான கடவுளின் சிலைகள் மற்றும் அங்கிருந்த அ.தி.மு.க. கட்சியின் ஆவணங்கள் என அனைத்தையும் பற்றி தனக்குத் தெரிந்த விபரங்களை சசிகலா பதிவு செய் திருக்கிறார்.
கொடநாடு வழக்கில் இதுவரை போலீஸார் ஜெ. மற்றும் சசி ஆகியோரின் அறைகள் உடைக்கப்பட்டன என்பதை கொள்ளை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் குறிப்பிட வில்லை.
ஜெ.வின் அறை எப்படி உடைக்கப்பட்டது என்பதைப் பற்றி எந்தப் பதிவும் இல்லை. அந்த அறையில் உள்ள கைரேகைகள் அழிக்கப் பட்டனவா என்பதை இதுவரை போலீஸார் பதிவு செய்யவில்லை.
ஆகவே சசிகலாவை அவர் கொட நாட் டிற்கு வரும்பொழுது அங்கு வைத்து மறுபடியும் விசாரிக்க போலீஸார் திட்டமிட்டிருக்கிறார்கள்.
மொத்தத்தில்,… சசிகலாவிடம் நடத்திய விசாரணை ஏகப்பட்ட ஆதாரங்களை போலீஸா ருக்குத் தந்துள்ளது.
"சேலம் இளங்கோவன், எடப்பாடி, வேலுமணி, வேலுமணியின் அண்ணன் அன்பரசன், ஆறுகுட்டி மற்றும் அ.தி.மு.க. உட்கட்சி விவகாரங்கள் என பலவற்றையும் மனம் திறந்து சசிகலா பேசியிருக்கிறார். இது எங்களுக்கு உபயோகமாக இருக்கும். குற்றிவியல் நடைமுறை சட்டம் 160 (3)ன்படி ஒரு சாட்சியாகத்தான் சசிகலா விசாரிக்கப்பட்டார். 67 வயதான அவர், குடியிருக்கும் வீட்டிற்கே சென்று அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்தோம். சசிகலா நல்ல ஒத்துழைப்பு தந்தார். சசிகலாவிடம் விசாரணை இன்னமும் முடிவடையவில்லை. தேவைப்படும் போது அவரே போலீஸை தொடர்புகொண்டு அவருக்குத் தெரிந்த விசாரணையில் விட்டுப்போன விபரங்களை தெரிவிக்கலாம் அல்லது எங்களுக்கு ஏதேனும் சந்தேகம் வந்தால் சசிகலாவிடம் விளக்கம் கேட்டுப் பெறலாம். அதற்கான வாய்ப்புகளை இந்த விசாரணை ஏற்படுத்தியுள்ளது. இது கொடநாடு வழக்கின் விசாரணையில் மிகப்பெரிய திருப்பம்' என்கிறார்கள் விசாரணைக்குச் சென்ற போலீஸார்.
______________________
ஒப்பந்தம் போடவில்லை! -காவல் உயரதிகாரி விளக்கம்
நக்கீரன் ஏப்ரல் 23-26, இதழின் ராங்கால் பகுதியில் வெளியான, தமிழக காவல் துறையின் சைபர் க்ரைம் பிரிவுக்கு ஆன்லைன் புகார்களைப் பதிவுசெய்ய வாங்கப்பட்ட கியாஸ்க் சிஸ்டம் குறித்த செய்திக்கு இணையதளக் குற்றப்பிரிவின் காவல்துறை இயக்குநர் அமரேஷ் புஜாரி மறுப்பும் விளக்கமும் அளித்துள்ளார்.
அதில், “வளர்ந்துவரும் தொழில்நுட்பம் குறித்து மார்ச் 2022-ல் காவல் துறையின் தலைமை இயக்குனரகத்திலிருந்து கருத்துரை கோரப்பட்டது. மொபைல் மற்றும் தடயவியல் மென்பொருளைப் பயன்படுத்தி மொபைல் தரவுகளைப் பதிவிறக்கம் செய்யக்கூடிய 9 கியாஸ்க் மென்பொருள்களை ஙடஒ நிதியிலிருந்து வழங்கக்கோரி காவல்துறை தலைமை அலுவலகத்துக்கு கருத்துரு அனுப்பப்பட்டது. இந்த கியாஸ்க் கருவி Centre for Development of Advanced Computing# (C-DAC) என்ற நிறுவனம் மூலம் தயாரிக்கப்படுகிறது. இதனை ரூ.1,98,00,000/- செலவில் கொள்முதல் செய்ய காவல்துறை தலைமை அலுவலகத்துக்கு கருத்துரு அனுப்பப்பட்டு தொடர் நடவடிக்கையில் உள்ளது. எந்த நிறுவனத்திடமும் இதுவரை ஒப்பந்தம் செய்யப்பட வில்லை என்று தெரிவித்துள்ளார்.
-(ஆர்.)